பார்த்துப் பார்த்து செலவு செய்கிறோம் ஜனாதிபதி அநுர உருக்கம் !
இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை அரசாங்கம் வழங்கும். சர்வதேச தூதுவர்களை ஒருங்கிணைக்கும் செயல்முறையின் மூலம் உலக சந்தையில் தொழில் முயற்சியாளர்கள் பிரவேசிப்பதற்கான வலுவான திட்டத்தையும் அரசாங்கம் கொண்டுள்ளது என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஷங்கரி-லா ஹோட்டலில் நடைபெற்ற இளம் இலங்கை தொழில்முனைவோர் மன்றத்தின் 26வது ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு கணிசமான அளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. முதலீட்டாளர்கள் எந்தவிதமான தரகுப்பணமும் செலுத்தாமல் முதலீடு செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும் மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பயன்படுத்தும் போது கடவுளின் பணியாகக் கருதி பயன்படுத்தப்படுவதை தனது அரசாங்கம் உறுதி செய்வதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.