மீனவர்களுக்கான உதவித்திட்டம் தொடர்பாக ஐ.நா அதிகாரியும் கடற்றொழில் அமைச்சரும் கலந்துரையாடல்!
ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகள் பிரிவின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் சார்லஸ் கெலனன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருடன் நேற்றையதினம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
அப்போது இலங்கையில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பொறிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும் கடற்றொழிலாளர்களுக்குரிய திட்டங்கள் மற்றும் அதற்கான ஐநாவின் பங்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்பட்டது