ஊழல் மோசடிக் குடும்பத்திலிருந்து வந்த ஜனாதிபதி : போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்திய முன்னாள் ஜனாதிபதியை கைது செய்கின்றார் !

ஊழல் மோசடிக் குடும்பத்திலிருந்து வந்த ஜனாதிபதி : போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்திய முன்னாள் ஜனாதிபதியை கைது செய்கின்றார் !

 

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவைத் தொடர்ந்து மணிலா விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹொங்கொங்கிலிருந்து திரும்பியவுடன் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இந்நடவடிக்கையை எடுத்தது.

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார், 2016-2022 ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய “போதைப்பொருளுக்கு எதிரான போர்” தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுட்டெர்டேவின் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 6,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால், மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கை 30,000 வரை இருக்கலாம் என கூறுகின்றன, இதில் பலர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஊழல் மோசடியாளர்களான பேர்டினன்ட் மார்க்கோஸ் – இமெல்டா மார்க்க்கோஸ் தம்பதிகள் 1980க்களில் பிலிப்பைன்ஸ் அரசியலில் இருந்து மக்களால் துரத்தியடிக்கப்பட்டனர். அமெரிக்க மற்றும் மேற்குலக ஆதரவு பெற்ற இத்தம்பதியினரின் புதல்வர் தற்போது புதிய ஜனாதிபதி ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *