பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் ! சஜித் பிரேமதாஸா கண்டனம் – அவரின் யாழ் அமைப்பாளர் பாலியல் சுரண்டல் செய்கின்றார் !
அநுராதபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் மருத்துவர் கடமை முடிந்து மார்ச் 10 ஆம் திகதி மாலை 6:30 மணியளவில் தனது விடுதிக்கு திரும்பியிருந்தார். அப்பொழுது இனந்தெரியாத ஆண் ஒருவர் விடுதிக்குள் நுழைந்துள்ளார். அந்த நபர் மருத்துவரை கத்தியை காட்டி பயமுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட 32 வயதான பெண் மருத்துவர் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்யக் கோரி அநுராதபுர வைத்தியசாலை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயத்தில் மருத்துவமனை நிர்வாகமும் அசிரந்தையாக இருந்துள்ளது. மருத்துவர்கள் தங்கும் விடுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமை மருத்துவமனை நிர்வாகத்தின் தவறாகும்.
கொல்கத்தாவில் 31 வயதான பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இந்தியாவையே உலுக்கியுள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமையை புரிந்த நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேமாதிரி கடந்த வருடம் இந்தியாவில் கல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் தேவை என நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் வலியுறுத்தப்பட்டிருந்தது. சஜித் பிரேமதாசாவின் யாழ் மாவட்ட பிரதம அமைப்பாளரே ஒரு பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நபர். பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் வெற்றிவேலு ஜெயேந்திரனுடன் தைப்பொங்கல் விழா கொண்டாடும் சஜித் பிரதேமதாசவின் இரட்டை வேடம் நகைப்பிற்கிடமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பிரதான சந்தேக நபரான முன்னாள் இராணுவச் சிப்பாயை கைது செய்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது என வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹெவா புத்திரன தெரிவித்தார்.
இலங்கையில் அண்மை காலங்களில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுக் கலாச்சாரம் மற்றும் சட்டவிரோத சாராய உற்பத்தி , பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பாதாள உலக குழுக்களின் தாக்குதல்கள் என பல சமூக விரோத செயற்பாடுகளில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய இராணுவ வீரர்கள் தொடர்புபட்டிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை எழுநூறுக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் கவனிக்கத்தக்கது.