யாழில் ஜஸ் போதையுடன் போதை மாத்திரையும் சேர்ந்தது
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவரை யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 1600 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களை வழிமறித்து சோதனையிட்ட போது அவர்களிடம் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டது.
இருவரையும் பொலிஸார் கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில் பாடசாலை மாணவர்கள், மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும். பாடசாலைகள் இவ்விடயத்தில் சிறப்பு செயல்த்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.