பருத்தித்துறையில் கள்ளமணல் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு !
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கள்ள மணல் ஏற்றிச் சென்ற டிப்பரை பொலிஸார் சோதனைக்காக மறித்தனர். கட்டளையை மதிக்காது டிப்பர் தொடர்ந்து பயணித்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பருத்தித்துறை பொன்னாலை வீதியில் நேற்று March 02 ஆம் திகதி காலையில் இடம்பெற்றுள்ளது. டிப்பரில் பயணித்த ஒருவர் காயமடைந்து பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னுமொருவர் தப்பியோடி விட்டார். தப்பியோடியவர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார். சம்பந்தப்பட்ட டிப்பர் தர்மபுரத்தில் வழமையாக கள்ள மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ஊழல் ஒழிப்பு அணி வன்னி சமீபத்தில் தர்மபுரம் கிளிநொச்சி கனிய வள மோசடியில் ஈடுபடுவதாக சில பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மீதும் தொழில் அதிபர் பெருமாள் கபில்ராஜ் மீதும் அவரின் குழுவினர் மீதும் புகார் புகார் கூறியிருந்தனர். இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டியது பொலிஸாரின் கடமை. வெறுமனே சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அவதூறாக கடந்து செல்லக் கூடாது. அதற்கமைய பிடிப்பட்டிருக்கின்ற டிப்பர் மூலம் மணல் மாபியாக்களை வெளிக் கொணரலாம். சில மணல் மாபியாக்கள் தமிழ் அரசியல் வாதிகளின் பின்னால் ஒழிந்துள்ளார்கள் எனவும் குற்றம் சாட்டுகிறார்கள்.