பஸ்க்கு காத்திருந்த தமிழ் பெண், லண்டன் ஹரோ விபத்தில் மரணம் !

பஸ்க்கு காத்திருந்த தமிழ் பெண், லண்டன் ஹரோ விபத்தில் மரணம் !
சென்ற திங்கட் கிழமை பெப்ரவரி 24 இல் லண்டன் ஹரோவில் நடந்த விபத்தில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெஸ்பரோ வீதியில் நிகழ்த இந்த விபத்தில் 46 வயதான சித்திரா வான்முகநாதன் உயிரிழந்துள்ளார். ஒரு கார், பஸ் மற்றும் பாதசாரிகள் மூவர் விபத்துக்குள்ளாகி உள்ளனர். ஒரு 30 வயதுப் பெண்ணும் ஒரு 12 வயதுச் சிறுமியும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவசர மருத்துவ வாகனம் மற்றும் முதலுதவியாளர்கள் விபத்து ஸ்தலத்திற்கு விரைந்து காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதும் சத்திரா வான்மீகநாதனைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
குற்றவியல் விசாரணை அதிகாரி சார்ஜன்ட் போல் ஜக்சன், விசாரணைகள் தொடர்வதாகவும் இதனை நேரில் பார்த்தவர்கள் அல்லது சம்பவம் ஏதாவது கமராக்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அவற்றை தந்து உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்ட கார் ஓட்டுனர், உயிராபத்தை ஏற்படுத்தும் விபத்தில் காரை ஓட்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இரவு 9: 17 அளவில் வெம்பிளியில் உள்ள தன் வீட்டுக்குச் செல்ல 395 ஆம் இலக்க பஸ்க்கு காத்திருந்த சித்திரா மற்றும் பஸ்க்கு நின்றவர்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியுள்ளது. என்எச்எஸில் வேலை செய்து வந்த இவரது திடீர் மரணம் குடும்பத்தாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *