தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாதத்தில் தீர்ப்பார்களாம் – சிவசேனை சவால் !

தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாதத்தில் தீர்ப்பார்களாம் – சிவசேனை சவால் !

தையிட்டி விகாரை பிரச்சினையை நாங்கள் ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் பேசிய பின்னர் விகாராதிபதியுடனும் பௌத்த மத தலைவர்களுடனும் பேசி, இந்தப் பிரச்சினையை முடிவுறுத்துவோம். அதற்கு எமக்கு குறைந்தது ஆறு மாத காலமாவது தேவை. அதற்குள் அரசியல் செய்ய முயன்று யாரும் குழப்ப வேண்டாம் என கோருகிறோம் என்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *