மட்டு பள்ளி மைதானத்தில் கொலைவெறி வாள்வெட்டு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் !

மட்டு பள்ளி மைதானத்தில் கொலைவெறி வாள்வெட்டு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் !

 

மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது 6 பேர் கொண்ட கும்பல் அண்மையில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரை எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய இருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில் இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். இதன்போது அங்கு வாள்களுடன் நுழைந்த இந்த கும்பல் விளையாடிக்கொண்டிருந்த சிலரை துரத்தி துரத்தி வாளால் வெட்டித் தாக்கியுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *