தைப்பூசத்திலிருந்து திக்கம் வடிசாலை இயங்கும் – அமைச்சர் சந்திரசேகரன் 

தைப்பூசத்திலிருந்து திக்கம் வடிசாலை இயங்கும் – அமைச்சர் சந்திரசேகரன்

யாழ்ப்பாணம்-வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும் என பனை அபிவிருத்தி சபை தலைவர் சகாதேவன், மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

திக்கம் வடிசாலையை மீள இயங்குவது தொடர்பான கலந்துரையாடலானது திக்கம் வடிசாலையில் பனை தென்னை வள கூட்டுறவு சங்க கொத்தணி தலைவர் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது அவர்கள் தெரிவித்துள்ளதாவது, இறுதியாக பனை அபிவிருத்தி சபை தலைவராகவிருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபர் பல கோடி ரூபா பணத்தை கையூட்டாக பெற்று தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளார்.

அந்த குத்தகை இரத்து செய்யப்படும். பனை அபிவிருத்தி சபை இவ்வாண்டு முதல் பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களிடம் கையளிக்கப்படும். அங்கு இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *