சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் !

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் !

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தனது 75ஆவது வயதில் காலமானார். அச்சமற்ற செய்தி அறிக்கையிடல் மற்றும் கூர்மையான வர்ணனைக்கு பெயர் பெற்ற இவர், “ராவய” பத்திரிகை தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.

விக்டர் ஒரு புலனாய்வு பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், கோட்பாட்டாளர், சமூக ஆர்வலர் மற்றும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

1971 இளைஞர் கிளர்ச்சி தொடர்பான பிரதான நீதிமன்ற வழக்கில் அவர் 7ஆவது குற்றவாளியாக இருந்தார். சந்தேகத்துக்குரிய அனைத்து பிரதிவாதிகளிலும் மிகவும் வண்ணமயமான நபர் என்று நீதிபதிகள் குழு அவரை விவரித்தது. விசாரணையின் முடிவில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைவாசத்தினை தொடர்ந்து வன்முறைக் கோட்பாட்டை நிராகரித்த அவர், மகாத்மா காந்தி விளக்கிய அகிம்சை தத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதனை தீவிரமாகப் பின்பற்றுபவராக மாறினார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *