இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற தூள் வியாபாரி மும்பையில் கைது !
இலங்கையில் பல்வேறு கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்படுகின்ற போது, கடல் மார்க்கமாகத் தப்பி வெளிநாடு சென்றுவிடுகின்றனர் என்ற செய்தி சில வாரங்களுக்கு முன் தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. அவ்வாறு தப்பித்துச் சென்ற முக்கிய தூள் வியாபாரியும் பாதாள உலகத் தலைவர்களில் உருவருமான பொடி லெசி என அறியப்பட்ட ஜனித் மதுசங்க என்பவர் மும்பையில், சர்வதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் யாழ் ஆவாகுழு வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நல்லநாதன் பிரசன்னா கனடாவில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.