மீனவர் பிரச்சினையில் பா உ சிறிதரன்: ‘ரீல் விடுகின்றார்’ மீனவர் சங்கம் – ‘மக்களை ஏமாற்றுகின்றார்’ டக்ளஸ் தேவானந்த

மீனவர் பிரச்சினையில் பா உ சிறிதரன்: ‘ரீல் விடுகின்றார்’ மீனவர் சங்கம் – ‘மக்களை ஏமாற்றுகின்றார்’ டக்ளஸ் தேவானந்தா

மீனவர் பிரச்சினையை தமிழ்நாட்டில் நிற்கும் போது கதைக்காமல் இங்கு திரும்பி வந்தபின் நேரம் கேட்டிருக்கிறேன் கதைப்பம் என்பதெல்லாம் பகட்டு என்றும் மீனவர்களுக்கு ரீல் விட்டு வாக்குவாங்கப் பார்க்கிறார், மீனவர்களுக்கு காதுகுத்த முனைகிறார் என்பது போல் பதில் அளித்துள்ளார் யாழ் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் உப தலைவர் பிரான்ஸிஸ் ரட்ணகுமார். பா உ சிறிதரன் தமிழக முதல்வருடன் நேரத்தைப் பெற்று மீனவர் பிரச்சினையைத் தீர்த்துக் காட்டட்டும், நாங்கள் அவரை வரவேற்போம் என்றும் பிரான்ஸிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்தார். மேலும் கடல்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தங்களுடைய பிரச்சினையை தமிழக முதல்வருடன் கதைக்காததையும் ரட்ணகுமார் குறைப்பட்டுச் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீனவர்களை பா உ சிறிதரன் ஏமாற்றும் நாடகத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அயலகத் தமிழர் தின விழாவுக்கு போயிருந்த போதும் மீனவர்களுடைய பிரச்சினையைப் பற்றிப் பேசவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்தள்ளார். தான் அவ்விழாவுக்குச் சென்றிருந்தால் நிச்சயமாக மீனவர் விடயம் பற்றிப் பேசியிருப்பேன் என்பதையும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மக்கள் எதையோ நம்பி இவர்களுக்கு வாக்குபோட்டு ஏமாந்துவிட்டார்கள் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும் சட்ட விரோத மீன் பிடியைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கிழக்கு மாகாண மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகள் கழக்கு மாகாண அளுநர் ஜெயந்தலால் ரத்னசேகரவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *