பெரும்பான்மையின முதலாளித்துவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு இருக்கும் ஈரம் தமிழ் தேசியவாதிகளிடம் இல்லை காணவில்லை !

பெரும்பான்மையின முதலாளித்துவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு இருக்கும் ஈரம் தமிழ் தேசியவாதிகளிடம் இல்லை காணவில்லை !

ரோஹிங்கியா அகதிகளை உடனடியாக நாடு கடத்தும் மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபடுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இதற்கு பதிலளித்த பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தமது அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து மியான்மர் அதிகாரிகளுடன் விவாதிக்கத் தொடங்கி உள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகளின் பின்னரே நாடு கடத்துவது சாத்தியமாகும் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த முடிவு ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது, SJB இன் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ACMC தலைவர் ரிஷாத் பதியுதீன் உட்பட பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசாங்கம் அதன் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளனர். இந்த விடயத்தில் தமிழ் மக்களின் மனித உரிமைகள் பற்றிப் பேசும் தமிழ் தேசியக் கட்சிளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மௌனம் காத்தனர். உலகின் எப்பாகத்திலும் ஒடுக்கப்பட்ட மகளுக்காக குரல்கள் எழும்புகின்ற போது ஏனோ தானோ என்று தங்களுக்கு சம்பந்தமேயில்லாத விடயமாகவே இவர்கள் நடந்துகொள்கின்றனர் தமிழ் தேசியக் கட்சிகள்.

ரோஹிங்கியா அகதிகள் விடயத்தில் தமிழ் மக்களும் ஒரு அகதிச் சமூகம் என்ற வகையில் எங்களுக்கு ஒரு தாரடமீகக் கடமைப்பாடு இருப்பது இந்த அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை. இவர்கள் தமிழ் மக்கள் விடயத்தில் வலிந்து குரல் எழுப்புவது கனடிய வெள்ளையின பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக மனித உரிமை பேசுவது போன்றது. காஸா இனப்படுகொலை பற்றி கனடியர்களும் வாய்திறக்கமாட்டார்கள். தமிழ் தேசியக் கட்சிகளும் வாய் திறக்கமாட்டார்கள். பெரும்பான்மை முதலாளித்துவக் கட்சிக்கு இருக்கின்ற ஈரம் கூட தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் இல்லாது போனது தமிழ் மக்களின் சாபக்கேடு.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *