9,000 பேர் நத்தார் தினத்தன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டியுள்ளனர் !

9,000 பேர் நத்தார் தினத்தன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டியுள்ளனர் !

நத்தார் தினம் பிறந்த காலை 7:30 கிளிநொச்சியில் டிப்பர் ஓட்டியவர் குடித்துவிட்டு மது போதையிலேயே வாகனத்தை ஓட்டியுள்ளார். இவரைவிட இன்னும் 250 பேர் நேற்றைய தினம் குடிபோதை மயக்கத்துடன் வாகனத்தைச் செலுத்தியுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றது. மொத்தமாக 9,000 குடித்துவிட்டு வாகனம் ஓட்டியுள்ளனர் என்றும் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டில் தினமும் 7 விபத்து மரணங்கள் இடம்பெறுகின்றது. பலர் காயமடைகின்றனர் ஊனமடைகின்றனர். நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயதுக் குழந்தை உயிரிழந்ததுடன், தாயார் ஆபத்தான நிலையில் யாழ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் மக்கள் விகிதாசாரத்திற்கு அதிகமாக மதுபானசாலைகள் இருப்பதைக் கண்டித்து டிசம்பர் 24இல் மக்கள் போராட்டம் நடத்தி இருந்தனர். போராட்டம் நடைபெற்று மறுநாள் இவ்விபத்து ஒரு குடும்பத்தை புரட்டிப் போட்டவிட்டது.

அரசு மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை அவர்களுடைய மூச்சை சோதணை செய்து உறுதிப்படுத்துவதற்காக 1,500 சுவாசத்தை சோதித்து மது அருந்தியுள்ளாரா என்பதை உறுதிப்படுத்தும் சாதனத்தை ஒவ்வொரு பொலிஸ் நிலையத்துக்கும் வழங்கியுள்ளது. மேலும் பொலிஸாருக்கு கமரா பொருத்தப்பட்ட மேலங்கிகளும் வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் மற்றும் பொலிஸார் மக்களோடு எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதையும் இக்கமராக்கள் பதிவு செய்யும். இருந்தாலும் கமராக்களை நிறுத்திவிட்டு பொலிஸார் தம் இஸ்டத்திற்கு நடந்துகொள்வது பிரித்தானியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. மேலும் வேகத்தடைக் கமராக்களையும் பொலிஸார் அறிமுகப்படுத்துவது பொருத்தமானதாக அமையும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு தண்டப்பணத்தை அதிகரித்து அதனை போக்குவரத்தை மேம்படுத்து நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *