கோழிச் சண்டையிலிருந்து தொழில்நுட்பச் சண்டைக்கு தயாராகும் அமெரிக்கா ! 

கோழிச் சண்டையிலிருந்து தொழில்நுட்பச் சண்டைக்கு தயாராகும் அமெரிக்கா !

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் தமது கோழி பண்ணை விரிவாக்கத்தை அதிகரித்தது அமெரிக்கா. இதனால் 1963 இல் அமெரிக்காவிற்கும் பிரான்சிற்கும் இடையே “கோழிச்சண்டை” (chicken war) ஒன்று ஆரம்பமானது. ‘மலிவான’ அமெரிக்க கோழி இறக்குமதியால் பாதிப்புற்ற உள்ளூர் கோழி வளர்ப்பாளர்கள் பிரான்ஸ் அரசிற்கெதிராக போர்க் கொடி தூக்கினர். இதன் எதிர்வினையாக, ஐரோப்பிய நாடுகளால் அமெரிக்க கோழிகளுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி (tariff) அதிகரித்தது. கோபமடைந்த அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளின் வாகன இறக்குமதிகளுக்கு மேலதிக வரி விதிக்க ஆரம்பித்தது. இன்றும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்மிடையே இந்தக் கோழிச்சண்டையுள்ளது. ஐரோப்பிய ஒன்றியச் சந்தை, அமெரிக்க கோழி இறைச்சியால் நிரம்பிவிடாமல் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தர நிர்ணயக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துகின்றது.

சீனா மீது விதிக்கப்பட்டுள்ள மேலதிக ஏற்றுமதி வரி விதிப்பும், மசகு எண்ணெய் இறக்குமதியை வைத்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது மேலதிக வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்துவதும் அந்தக் காலத்து கோழிச் சண்டை மீண்டும் ஆரம்பித்துவிட்டதையே காட்டுவதாக பொருளியல் ஆய்வாளர் இதயச்சந்திரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். முன்பு கோழிக்கு அடிபட்டவர்கள் இப்போது chips (semi-conductor இற்கு மோதிக் கொள்கிறார்கள் என்கிறார் அவர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *