ஊர்காவற்துறை முதல் மாத்தளை வரை 24 கொள்ளைகள் 4 யாழ் இளைஞர்கள் கண்டியில் கைது!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கடந்த நான்கு வருடங்களாக கொளையடித்து வாழ்ந்துள்ளனர். 19 வயதுமுதல் 26 வயதுவரையுடைய இவர்கள் வடக்கில் யாழ் ஊர்காவற்துறை முதல் மத்திய மலைநாடுவரை சென்று 21 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கோடிக்கணக்கில் கொளையடித்த இவர்கள் அதனைச் செலவிழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். யாழ் அடகு கடையொன்றில் திருடிய நகைகள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் மீது 24 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்பான பதிவுகள் உள்ளது. யாழில் மட்டும் 9 பிடியாணைகள் இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. 21 வீடுகளிலும் கோயில்களிலும் இவர்கள் திருடியுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் கொழும்பில் இருந்து கணவன் மனைவியாக வந்து திருட்டில் ஈடுபட்ட கணவன் சிலவாரங்களுக்கு முன் கோப்பாய் பகுதியில் கைது செய்யப்பட்டமை தெரிந்ததே. சோம்பேறித்தனமாகவும் இரவோடு இரவாக லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறான திருட்டுத் தனங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கொள்ளை மட்டுமல்லாமல் கொள்ளைக்கா சில கொலைகளும் இடம்பெற்றுள்ளது. அத்தோடு மண் கடத்தல், மரம் கடத்தல், போதைவஸ்து கடத்தல் என இளைஞர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவுக்குப் பின் காலையில் நடக்கின்ற டிப்பர் விபத்துக்கள் கள்ள மண் ஏற்றுபவர்களினாலேயே பெருமளவு இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது.