போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலத்தை நீடிக்கும் திட்டம் என்பிபி யிடம் இல்லை!

போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலத்தை நீடிக்கும் திட்டம் என்பிபி யிடம் இல்லை!

போர்க்குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைகளின் தளபதியாக இருந்த சவேந்திர சில்வாவின் பதவிக்காலத்தை நீடிக்கும் திட்டம் என்பிபி அரசு இல்லை எனத் தெரியவருகின்றது. தமிழ் தேசியத் தலைமைகளின் நண்பனாக எப்போதும் அறியப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீடித்திருந்தார். ஆனால் தற்போதைய அரசு இவருடைய பதவியை நீடிக்க மாட்டாது எனத் தெரியவருகின்றது. அதனால் ஜெனரல் சர்வேந்திர சில்வா டிசம்பர் 31 உடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம் கனடா சென்றுள்ள பா உ எஸ் சிறிதரன், கனடிய அரசு, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு தொடர்ந்து நீதி கோரி வருவதற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேற்குலகம் காஸாவில் தொடர்ந்தும் இனப்படுகொலை செய்வதை ஆதரித்துவரும் கனடா, தமிழ் மக்கள் விடயத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றது. கனடாவில் உள்ள 3,00,000 தமிழ் வாக்காளர்களுக்காக கனடா நீலிக் கண்ணீர் வடிக்கின்றதேயல்லாமல் அவர்களுக்கு மனித உரிமை பற்றி எவ்வித அக்கறை கிடையாது என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *