அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

மக்களின் இறப்புக்கும், தீக்குளிப்புக்கும் சம்பந்தப்பட்ட நாடுகள் பொறுப்பு கூறவேண்டும்: த.தே.கூட்டமைப்பு

ஒரு புறத்தில் எரியும் நெருப்பில் தன்னுயிரையே உயிர் தியாகம் செய்யும் அதேவேளை, மறுபுறத்தில் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் செயலாக சில நாடுகளின் போக்கு அமைந்திருப்பது வேதனையும், கவலையும் தருகின்றது என த.தே.கூட்டமைப்பு விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வன்னி நிலப்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் எறிகணை, விமானத் தாக்குதலகளினால் ஒரு மணித்தியாலயத்திற்கு 5 தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள் அல்லது காயப்படுவது அன்றாட நிகழ்வாகியுள்ளது. இவ்வாறு அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யப்பவது நிறுத்த வேண்டுமாயின் நிரந்த போர் நிறுத்தம் மேற்கொள்வதே ஒரே வழியாகும்.இல்லையெனியில் வன்னியில் அல்லல்பட்டு அவதியுறும் ஏதிலிகள் பரிதவிக்கும் நிலையில் இலட்சக்கணக்கான மக்களை அழிவிலிருந்து எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும்.

இந்த உண்மையை உணர்ந்து உலகத் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும், அண்டைய தமிழகத்தில் உள்ள ஏழரைக் கோடி மக்களும் பேரெழுச்சியுடன் பல்வேறு போராட்டங்களையும், கவன ஈர்ப்புக்களையும் தினமும் நாடத்திய வண்ணமே இருக்கின்றார்கள். இதில் உச்சக்கட்டம் உயிர் தியாகங்களாக தமிழகத்தின் சென்னையில் முத்துக்குமார், மதுரையில் ரவி, சீர்காழியில் ரவிச்சந்திரன் மற்றும் அமசேரன், மலேசியாவில் ராஜா, தீக்குளித்து தியாகிகளாகி உயிர் நீத்துள்ளனர். தற்போது உலக மனச்சாட்சியாளர்களின் உறைவிடமாக விளங்கும் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்திற்கு முன்பாக முருகதாசன் தீக்குளித்துள்ளார்.

இத்தனை தியாகங்களும் போற்றத்தக்க விலைமதிக்க முடியாத தியாகங்களாகவே மதிக்கின்றோம். அத்துடன் தியாகிகளைப் ஈன்ற பெற்றோர், மற்றும் உறவினர்களையும், அந்நாட்டு மக்களையும் மனதார மதிக்கின்றோம். ஆனால் உலக நாடுகள் ஈழத்தமிழர் நலன் தொடர்பாக பல்வேறுபட்ட அறிக்கைகளை விட்ட போதும் சிறிலங்கா அரசுக்கு எந்த அழுத்தங்களையும் கொடுத்ததாக தெரியவில்லை.தமிழ் நாட்டில் கொந்தழித்து எழுந்துள்ள உணர்வுகளை உள்ளத்தால் வெளிக்காட்டிய ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வுகளை தற்போதைய இந்திய மத்திய அரசு மதிக்க தவறிவிட்டது.

இது ஈழத்தமிழர்க்கு ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கின்றது. எனினும் இன்னும் காலம் கடந்துவிடவில்லை. இப்போதாவது உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் அழுத்தம் கொடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் வன்னியில் தொடர்ந்து மக்கள் இறப்பதையும், தீக்குளித்து இறக்கும் செயல்களுக்கும் சம்பந்தப்பட்ட நாடுகளே பொறுப்பு கூறவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்

protestsin.jpgஇலங்கையில் விடுதலைப் புலிகளின் பகுதியில் சிக்கியிருக்கும் பொதுமக்களை விடுவிக்க பிரித்தானியாவின் பிரதமர் கார்டன் பிரவுண் அவர்கள், புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி, இலண்டனிலுள்ள சிங்கள மக்களால் ஒரு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த முப்பது ஆண்டுகளாக தீவிரவாதத்தின் காரணமாக, இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பர்கர்கள் ஆகிய அனைத்து மக்களும் பல இன்னல்களை அனுபவித்துள்ளனர் என்றும், பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நடத்திவரும் இராணுவத்துக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தினர். போர் நடக்கும் பகுதிகளில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்றும், இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திய பயங்கரவாத்த்துக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.

மேல் மாகாண சபை தேர்தலில் வாக்குகளை வாக்கு சாவடிகளிலேயே எண்ண ஏற்பாடு

sri-lanka-election.jpgமேல் மாகாண சபை தேர்தலின் போது வாக்குச் சாவடியிலேயே வாக்குகள் அனைத்தும் எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். மாலை 4.00 மணிக்கு வாக்களிப்புகள் நடைபெற்று முடிந்தவுடனேயே வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். தபால் வாக்குகள் மட்டுமே வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் வைத்து எண்ணப்படும் என்றும் கூறினார். முதல்முறையாக இந்நடவடிக்கை செய்யப்படுவதாகக் கூறிய ஆணையாளர், வடமேல், மத்திய மாகாண சபை தேர்தல்களின் போது இவ்வாறு நடைபெறமாட்டாது என்றும் கூறினார்.  மேல் மாகாண சபை கலைக்கப்பட்டு தற்போது வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இறுதி தினமான 26ம் திகதியிலிருந்து 36 முதல் 56 வரையிலான தின காலப்பகுதிக்குள் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்க ப்படும். அது ஒரு சனிக்கிழமை தினமாக இருக்கும் என் றும் கூறினார்.  2004 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி மேல் மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்தது. 2004 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யும் காலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2004 ஜூன் மாதம் 10 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது

திருகோணமலையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் வவுனியாவுக்கு மாற்றம்

trincomali.jpgஇலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதியிலிருந்து
திருகோணமலை அரசினர் பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு என்று கொண்டு வரப்பட்டோரில் 175 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஞாயிறன்று மதியவேளை மூன்று பஸ் வண்டிகள் மூலம் அவர்கள் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ சேவைகளுக்கான இணைப்பாளர் டாக்டர் ஞானகுணாளன் தெரிவித்துள்ளார்.

52 நோயாளர்கள் மேலதிக சிகிச்சை பெறும் நோக்கில் கந்தளாய் அரசினர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேநேரம் திருகோணமலை அரசினர் பொதுமருத்தவமனையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டோருக்கு இரத்தம் தேவைப்படுவதாகவும் ஆதலால் மக்கள் இரத்த தானம் செய்ய வருமாறும் மருத்துவமனை வட்டாரம் கோரியுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளாகள் இந்தக் கோரிக்கைக்கு அமைவாக ஞாயிறன்று இரத்த தானம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ – புதியஅமைப்பு

india_map_.jpgஇலங்கை யில் போர் நிறுத்தம் கொண்டு வரவும், அங்கிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கும் ‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ என்ற புதியஅமைப்பு ஒன்றே துவங்கியிருப்பதாக பாதிரியார் ஜெகத் கஸ்பார் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தவும் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் இடம் பெற்ற இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.

இதைப் பார்த்து திமுக சார்பில் இலங்கைத் தமிழர்கள் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பும், அதற்கு ஒரு துணை அமைப்பும் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து ஜெகத் கஸ்பார் கூறுகையில், இலங்கை தமிழர்களின் நலனுக்காக அரசியல் சுவடு இல்லாத ‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளோம். இலங்கை தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட அனைவரின் களமாக இந்த அமைப்பு செயல்படும்.

இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்கள்

civilians.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பொதுப்பிரதேசத்திலும், விசுவமடு பிரதேசத்திலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், இந்த மோதல்களின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலின்போது இராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் வெடிப்பொருட்களைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறியிருக்கின்றது.

இதனிடையே, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கு இதுவரையில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பதினொரு பாடசாலைகள் உட்பட உயர் கல்வி நிலையங்கள் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகப் படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, வன்னிப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளி்ன் பிரதேசத்தில் தொடர்ந்து எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் பலர் கொல்லப்படுவதுடன் காயமடையவும் நேரிட்டுள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

றுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையை தடுத்த பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதல்

university-srilanka.jpgமாத்தறை மெத்தவத்தயில் அமைந்துள்ள றுகுணு பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர் ஒருவர் படுகாயமடைந்து மாத்தறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  புதிய மாணவர்களை பழைய சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்திய போது அதனை பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்ததாகவும் இதனையடுத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாகவும் புதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

எட்டுப் பாதுகாப்பு ஊழியர்கள் அவ்விடத்திற்கு வந்த போதிலும் சிரேஷ்ட மாணவர்கள் அவர்களைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய மாணவர்கள் ஆங்கில வகுப்புக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போதே இச்சம்பவம் இடம்பெற்றது.

இத்தகராறின் போது ஒரு பாதுகாப்பு ஊழியரின் தங்கச் சங்கிலியும் கையடக்கத் தொலைபேசியும் காணாமல் போயுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவத்தையடுத்து புதிய மாணவர்களுக்கான ஆங்கில வகுப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து மாத்தறை பொலிஸார் பல்கலைக்கழகத்துக்கு வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

றுகுணு பல்கலைக்கழக நிர்வாகமும் இது தொடர்பாக விசாரணைகளை நடத்திவருகிறது. பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சில சிரேஷ்ட மாணவர்கள் அதனைச் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் உயர்கல்வி அமைச்சினால் பகிடிவதைகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் மோதல்கள் குறித்து உயர்மட்ட மாநாடும் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதத்திற்குள் இலங்கை தூதரகத்தை மூடா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்

vijayakanth.jpgஇலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் சூழ்நிலையில் இந்தியாவில் அந்நாட்டு தூதரகம் இருக்க கூடாது. அடுத்த மாதத்துக்குள் இலங்கை தூதரகத்தை மூட வேண்டும். இல்லையென்றால் படும் போராட்டம் வெடிக்கும் என்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

தேமுதிக கட்சி பிரமுகர் தட்சிணா மூர்த்தியின் மகளின் திருமணம் இன்று ராமநாதபுரத்தில் நடந்தது. அதில் கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் இலவச கணினி பயிற்சி மையத்தையும் துவக்கி வைத்தார். பின்னர் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில்,

ஈழத்தமிழர்களுக்காக பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது நடிகர்கள் உண்ணாவிரதத்தை நடத்தினேன். நான் 1983 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கை தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.

கருணாநிதி இன்று அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்கிறார். ஈழத்தமிழர்களுக்காக எம்ஜிஆர் கருப்புச் சட்டை அணிய சொன்னபோது, கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்தாரா? அப்போது அவர் ஏன் அந்த ஒற்றுமையை காட்டவில்லை. இலங்கையில் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது மத்திய அரசும், சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இலங்கை அரசு கத்தி வைத்துள்ளது. புலிகளிடம் கேடயம் தான் உள்ளது. அதை வைத்து இலங்கையின் போரை புலிகள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் கேடயத்தை போடு என்று சொன்னால் கத்தி வைத்திருப்பவன் சும்மா இருப்பானா?

இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒட்டு மொத்த உணர்வையும் காட்ட மிகப் பெரிய போராட்டம் தேவை. இதில் ஐநாவும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தலையிட வேண்டும். அவர்களுக்கு தமிழர்கள் அனைவரும் தந்திகளும், எஸ்எம்எஸ்சும் அனுப்ப வேண்டும். இரண்டு நாளில் நான் அதற்கான முகவரியை தருவேன்.

வரும் 21ம் தேதி இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒபாமா தலையிட வேண்டும் என்று கோரி அமெரிக்க தூதரகத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். அப்போது இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கும்போது இங்கே இலங்கை தூதரகம் எதற்கு? இருநாடுகளுக்கிடையே சுமுக உறவு வேண்டும் என்பதற்காக தான் தூதரகம் வேண்டும். தமிழினம் அழியும் போது இங்கு சிங்களவன் ஏசி அறையில் சொகுசாக இருப்பது தேவையா? என்று எண்ணி பார்க்க வேண்டும். மார்ச் மாதத்திற்குள் இலங்கை தூதரகத்தை மூடா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்.

பதவியை துறந்தால் தனி ஈழம் கிடைக்குமா என்று முதலமைச்சர் கேட்கிறார். இதிலிருந்தே தனிஈழம் கிடைக்காது என்று அவர் எண்ணுகிறார் என்பது தெரிகிறது. 2 மாதத்தில் முடிய போகின்ற மத்திய அரசிலில் இருந்து நாங்கள் பதவி விலகினால் என்ன ஆகப்போகிறது என்று கேட்கிறார்கள்.

இலங்கை பிரச்சனையில் பிரதிபலன் எதிர்பாராமல் அன்றிலிருந்து பாடுபடுபவர் நெடுமாறன் ஒருவர் தான். அவரை நான் பாராட்டுகிறேன். மதிக்கிறேன். மற்றவர்கள் எல்லாம் மக்களை ஏமாற்ற இலங்கை பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்கள்.

கருணாநிதி நான் உழைக்கவே பிறந்தவன் என்கிறார். ஜெயலலிதாவோ முற்றும் துறந்த துறவி என்கிறார். முற்றும் துறந்தவருக்கு முதல்வர் பதவி எதற்கு?

வடக்கில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் துரித மின் விநியோகத் திட்டம் – உலக வங்கி உதவுகின்றது

electricitypowerlinesss.jpgவடக்கில் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் மின் விநியோக நடவடிக்கைகளை உலக வங்கியின் உதவியுடன் துரிதமாக மறுசீரமைக்க மின்வலு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் மின் விநியோகத்திற்கான சகல அடித்தள வசதிகளும் மேப்படுத்தப்படும். சேதமாக்கப்பட்ட சகல மின் பிறப்பாக்கிகள் மற்றும் மின் கம்பங்கள் என்பன புதிதாக அமைக்கப்படும்.

தெற்காசிய வலய மின்சக்தி விவகார பிராந்திய முகாமையாளர்; சலமன் ஸஹீர் உட்பட உலக வங்கியின் பிரதிநிதிகள் இது தொடர்பில் மின்வலு எரிசக்தி அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

இத்திட்டத்தின்படி ஏ 9 மற்றும் ஏ 32 ஆகிய வீதிகளில் மின் விநியோக மறுசீரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்;பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகள் குழு திருமலை ஆஸ்பத்திரிக்கு நேற்று திடீர் விஜயம்

trincomali.jpgசுகாதார அமைச்சின் உயர் மட்டக் குழுவொன்று திடீர் விஜயமொன்றை மேற்கொ ண்டு நேற்று திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்தது.இங்கு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்தக்குழு முல்லைத்தீவிலிருந்து கொண்டுவரப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுக்கான மருந்து வசதிகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டது.

இதேநேரம் முல்லைத்தீவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களுக்கென இரண்டு லொறிகளில் கொண்டு வரப்பட்ட மருந்து வகைகளையும் மேற்படி குழு கையளித்தது. மேலும் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுமெனவும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.

நேற்றுக்காலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜித் மென்டிஸ், பாலிக்க மஹிபால, நிமல் ஜெயந்த, கி.மா. சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி என்.ஆர். ராஜின், சுகாதாரப் பணிப்பாளர் ளி. ஞாணகுணாளன், வைத்திய அதிகாரி திருமதி குணாளன் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.