மேல் மாகாண சபை தேர்தலின் போது வாக்குச் சாவடியிலேயே வாக்குகள் அனைத்தும் எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். மாலை 4.00 மணிக்கு வாக்களிப்புகள் நடைபெற்று முடிந்தவுடனேயே வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். தபால் வாக்குகள் மட்டுமே வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்தில் வைத்து எண்ணப்படும் என்றும் கூறினார். முதல்முறையாக இந்நடவடிக்கை செய்யப்படுவதாகக் கூறிய ஆணையாளர், வடமேல், மத்திய மாகாண சபை தேர்தல்களின் போது இவ்வாறு நடைபெறமாட்டாது என்றும் கூறினார். மேல் மாகாண சபை கலைக்கப்பட்டு தற்போது வேட்பு மனுக்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இறுதி தினமான 26ம் திகதியிலிருந்து 36 முதல் 56 வரையிலான தின காலப்பகுதிக்குள் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்க ப்படும். அது ஒரு சனிக்கிழமை தினமாக இருக்கும் என் றும் கூறினார். 2004 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி மேல் மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்தது. 2004 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யும் காலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2004 ஜூன் மாதம் 10 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது