வடக்கில் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களில் மின் விநியோக நடவடிக்கைகளை உலக வங்கியின் உதவியுடன் துரிதமாக மறுசீரமைக்க மின்வலு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ் மின் விநியோகத்திற்கான சகல அடித்தள வசதிகளும் மேப்படுத்தப்படும். சேதமாக்கப்பட்ட சகல மின் பிறப்பாக்கிகள் மற்றும் மின் கம்பங்கள் என்பன புதிதாக அமைக்கப்படும்.
தெற்காசிய வலய மின்சக்தி விவகார பிராந்திய முகாமையாளர்; சலமன் ஸஹீர் உட்பட உலக வங்கியின் பிரதிநிதிகள் இது தொடர்பில் மின்வலு எரிசக்தி அமைச்சுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
இத்திட்டத்தின்படி ஏ 9 மற்றும் ஏ 32 ஆகிய வீதிகளில் மின் விநியோக மறுசீரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்;பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.