அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரிடம் வித்தியாதரன் ஒப்படைக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் யாப்பா தெரிவிப்பு

anura_priyadarshana_yapa.jpgபுலிகள் கொழும்பில் விமானத் தாக்குதல் நடத்திய சமயம் புலிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் வித்தியாதரன் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, ஓர் ஊடகவியலாளர் என்ற ரீதியில் வித்தியாதரன் கைது செய்யப்படவில்லை. புலிகளுடன் தொலைபேசித் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே கைதானார்.

ஊடகவியலாளர்களுக்கு அரசு பூரண சுதந்திரம் வழங்கியுள்ளது. அவர் என்னிடமும் ஜனாதிபதியிடமும் கேள்விகள் கேட்டுள்ளார். எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஊடகவியலாளர்களை அரசு கௌரவத்துடன் நடத்துகின்றது. அவர் கடத்தப்பட்டதாகவும் வெள்ளை வேனில் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டவை அனைத்தும் வெறும் கற்பனைகளே.

வித்தியாதரன் நிரபராதி என விசாரணையில் தெரிய வந்தால் அவர் விடுவிக்கப்படுவார். குற்றவாளியாக இருந்தூல் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து 387 சிவிலியன்கள்கப்பல் மூலம் திருமலைக்கு

vanni-injured.gif முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் நோய்வாய்ப்பட்ட மற்றும் அநாதரவான நிலையிலிருந்த 387 பேர் நேற்றிரவு கிறீன் ஓஷன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என பாதுகாப்பு அமைச்சசு அறிவித்துள்ளது.

நோய்வாய்ப்பட்ட 57 பேரும், காயமடைந்துள்ள 87 பேரும், இரு கர்ப்பிணிகளும் மற்றும் அநாதரவான நிலையிலிருந்த 162 பேருமே இவ்வாறு திருமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அரச குறுந்தகவல் செய்திச் சேவை ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

gid_mobitel_agreement.jpgஅரசாங்க தகவல் திணைக்களமும் இலங்கை டெலிகொம் மொபிடெல் நிறுவனமும் இணைந்து மொபிடெல் தொலை பேசிப் பாவனையாளருக்கு குறுந்தகவல் மூலம் செய்திகளை வழங்கும் சேவையொன்றை ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான உடன்படிக்கை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவும் மொபிடெல் நிறுவனத்தின் தலைவி லீஷா டி சில்வா சந்திரசேனவம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஆவணங்களை கைமாறிக்கொண்டனர். அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா கையடக்கத் தெலைபேசியை இயக்கி  இந்த சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

அரசாங்கம், அபிவிருத்தித்திட்டங்களின் முன்னேற்றம், அமைச்சுக்கள், திணைக்களங்கள் உட்பட அரச நிறுவனங்கள் ஆகியவற்றில் மக்களைக் கவரும் விசேட தகவல்கள் இந்தச்சேவையின் மூலம் வழங்கப்படவுள்ளன. தேசிய கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் டெலிகொம் மொபிடெல் நிறுவனத்தடன் இணைந்து விசேட தகவல்களையும் தேர்தல் முடிவுகளையும் குறுத்தகவல்கள் மூலம் பாவனையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை மகிழ்ச்சிக்குரியதென அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இலங்கை மொபிடெல் நிறுவனத்தின் தலைவி லீஷா டி சில்வா சந்திரசேன கருத்துத் தெரிவிக்கையில்,உடனுக்குடன் செய்திகளை பாவனையாளர்களுக்கு வழங்குவதில் செயற்திறன் மிக்க சேவையாக இதனைக் குறிப்பிடலாம் எனக் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்துடன் இணைந்து வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகள் இச்சேவையினூடாக வழங்கப்படபோது மக்களிடமிருந்து பொரும் வரவேற்புக் கிடைத்ததாகவும் இனிவரும் தேர்தல்களின்போது இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

எஞ்சிய 45 ச.கி.மீ. பிரதேசத்தையும் அவதானத்துடன் மீட்க ஆலோசனை – இராணுவத் தளபதி

sarath_fonseka.jpgஇராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர் அதிகாரிகள் நேற்று வவுனியாவிலுள்ள வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். விசேட ஹெலி மூலம் வவுனியாவைச் சென்றடைந்த இராணுவத் தளபதியை வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடை பெற்ற விசேட கலந்துரையாடலின் போது வன்னியின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை இராணுவத் தளபதி கள தளபதிகளிடம் கேட்டறிந்துள்ளார். அதிகூடிய முன்னெச்சரிக்கையுடன் புலிகளிடம் எஞ்சியுள்ள 45 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் மீட்டெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதேசமயம், படையினரின் போக்குவரத்து மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக யாழ்-கண்டி ஏ-9 வீதி திறக்கப்பட்டுள்ள போதிலும் புலிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் எந்தவித தாக்குதல்களையும் நடத்தாத வகையில் அந்த வீதி ஊடாக செல்லும் படையினரின் வாகன தொடரணிக்குத் தேவையான போதிய பாதுகாப்பை வழங்குமாறு இராணுவத் தளபதி இந்த விஜயத்தின் போது உத்தரவிட்டுள்ளார்.

10ம் தேதி சென்னையில் ஜெயலலிதா உண்ணாவிரதம்

05-jayalalitha.jpgஇலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தமிழக அரசைக் கண்டித்தும் வருகிற 10ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் பல்வேரு விதங்களில் போராடி வருகின்றன. திமுக மற்றும் பாமக தலைமையிலான பல்வேறு கட்சிகள் தனித் தனியாக அமைப்புகளைத் தொடங்கி பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளன.

ஆனால் அதிமுக பெரிய அளவில் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக போராட்டம் எதையும் நடத்தாமல் அமைதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பாக சந்தேகம் – சபையில் தங்கேஸ்வரி எம்.பி.

srilanka-parliament.jpgகிழக்கு பல்கலைக்கழகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மாணவியொருவரின் மரணம் தொடர்பாக அப் பல்கலைக்கழக மாணவியர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளதால் அம்மாணவியின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டமீட்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவிகள் இருவர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். ஒருவர் 24 ஆம் திகதியும் இன்னுமொருவர் 25 ஆம் திகதியும் தற்கொலை செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இம்மாணவிகளில் ஒருவரின் தற்கொலை தொடர்பாக அப்பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்துள்ளனர். மாணவி உண்மையில் தற்கொலை செய்திருந்தால் மாணவர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும். சுருக்கில் தொங்கிய அந்த மாணவியின் கால்கள் நிலத்தில் முட்டிய படி இருப்பதாக கூறப்படுகின்றது. எனவே இது தொடர்பில் சந்தேகங்கள் எழுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவசரகால சட்டத்தின் பேரில் கடத்தல்கள், கப்பம் பெறுதல், சுற்றிவளைப்புகள், கைதுகள் தான் இடம்பெறுகின்றது. மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக அதிகரித்துள்ளன. அவசரகாலச் சட்டத்தின் தாக்கத்தை மூவின மக்களும் அனுபவிக்கின்றனர்.

கிழக்கு மீட்கப்பட்டு விட்டதாகக் அரசு கூறுகின்றது. ஆனால், அங்கு மக்களின் சுதந்திரம் இழக்கப்பட்டு விட்டது. தற்போது கிழக்கில் அபிவிருத்தி என்ற நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. வடக்கின் நிலையோ இன்னும் படுமோசம். அங்கு மக்கள் கும்பல் கும்பலாக தினமும் கொல்லப்படுகின்றனர். தென்பகுதியில் கூட காணமல் போவோர் கடத்தப்படு?வாரின் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதனை அரசினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளே உறுதிப்படுத்துகின்றன.

வித்தியாதரனை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

vithyatharan.jpgகடந்த வாரம் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் பிரதம செய்தி ஆசிரியர் என்.வித்தியாதரனை விடுதலை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாடட்த்திற்கான ஏற்பாட்டினை ஊடக அடக்கு முறைக்கு எதிரான முன்னணி மேற்கொண்டிருந்தது.எனினும் இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்த்தில் மொத்தமாக 30 ற்கும் குறைவான ஊடகவியலாளர்களே கலந்து கொண்டனர்.

முறையாக ஒழுங்கமைப்பு செய்யப்படாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்ட என்.வித்தியாதரனை விடுதலை செய்யும்படி வலியுறுத்தினர்.

கடந்த 26 ம் திகதி கல்கிஸ்ஸ மஹிந்த மலர்சாலையில் வைத்து காலை 9.40 மணியளவில் என்.வித்தியாதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து அவர் இதுவரையில் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்ட என்.வித்தியாதரன் இதுவரையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று நடைபெற்ற அமைச்சாரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடவியலாளர் மாநாட்டில் என்.வித்தியாதரன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதன் போது உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் என்.வித்தியாதரன் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் கைது செய்யப்படவில்லை எனவும் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட விமான தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டதாகவும் அரசாங்க அமைச்சரவை பேச்சாளர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அத்துடன் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகையின் பிரதம செய்தியாசிரியர் என்.வித்தியாதரன் தற்பொழுது இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநிறுத்தக் கோரி பிரிட்டனில் ஆர்ப்பாட்டம்

uk-050309.jpgஇலங்கையில் போர்நிறுத்தம் வந்து அமைதிப் பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாகும் வரை, இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து தடைசெய்ய வேண்டும் என்று பிரித்தானிய நாடளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் இலண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

லண்டனில் வாழுகின்ற சில நூறு தமிழர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிரிட்டனில் தமிழர்கள் வாழும் தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்கினார்கள்.

பொதுநலவாய அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான செயலணிக்குழுவின் மாநாடு இங்கு நடைபெறும் நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்பு அலுவலக்த்துக்கு முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு என்ற அமைப்பு செய்திருந்தது.

தமது தொகுதி மக்களின் உறவினர்கள் இலங்கையில் இன்னல்களை சந்திப்பதனாலேயே, அவர்களுக்காக குரல் கொடுக்க தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனா தெரிவித்தார்.

மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருக்கின்ற இந்த பொதுநலவாய அமைச்சர்கள்மட்ட செயலணிக்குழு உறுப்பினர்கள், பொதுநலவாய நாடுகள் எங்கிலும் மனித உரிமை நிலவரங்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை கண்காணிக்க வேண்டும் என்று என்பீல்ட் வடக்கு பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் ரையன் கூறினார்.

யாழ்தேவி ரயில் சேவை திட்டம்: கே.கே.எஸ் வரை 34 நிலையங்களை புனரமைக்க தேசிய மட்டத்தில் பங்களிப்பு.

railways-in-jaffna.jpg யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில் சேவைத் திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும். ‘உத்துறு மித்துறு’ (வடக்கு நட்பு) என்ற இந்த ரயில் சேவைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக தேசிய செயலகமொன்றையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் யோசனைகளுக்கமைய யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பிக்கவென தேசிய பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சரின் ஊடகச் செயலாளர் சுமித்சந்தன வீரசிங்க தெரிவித்தார்.

ரயில் பாதையை மீளமைப்பதற்கு நிதி உதவி வழங்க ஈரானிய அரசு முன்வந்துள்ளது. ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை ரயில் பாதையை அமைப்பதற்காக தண்டவாளத்திற்கும், சிலிப்பர் கட்டைகளுக்குமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பும் அதேநேரம், வடக்கின் கலாசாரப் பிணைப்பையும், வாழ்வியல் பண்புகளையும் ஏனைய மக்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த யாழ்தேவி ரயில்சேவை திட்டத்திற்கு மூவின மக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுமித் வீரசிங்க தெரிவித்தார்.

இதற்கிணங்க ஒன்பது மாகாணங்களிலும் மாவட்ட மட்டத்தில் பங்களிப்பை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக மக்களின் உடல் உழைப்பைப் பெற்றுக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக யாழ்ப்பாண ரயில் நிலையத்தைப் புனரமைக்கும் பணியை அம்பாந்தோட்டை மாவட்டம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த சுமித் வீரசிங்க, அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதிநிதித்துவப்படுத்தும் மாத்தறை மாவட்டம், கிளிநொச்சி ரயில் நிலையத்தைப் புனரமைக்க பொறுப்பேற்றிருப்பதாகவும் கூறினார்.

இவ்வாறு ஓமந்தையிலிருந்து யாழ். காங்கேசன்துறை வரை உள்ள 9 பிரதான ரயில் நிலையங்கள் உட்பட 34 நிலையங்களைப் புனரமைப்புச் செய்ய மாவட்ட ரீதியில் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பிரதேசத்திற்குப் பொறுப்பான அரசியல்வாதிகள் ஒருங்கிணைப்பார்கள். ஆளணிப் பங்களிப்பைத் தவிரவும், பொதுமக்கள் சிலிப்பர் கட்டைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலிப்பர் கட்டைக்கான செலவு 12,500 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வழங்க முடியாதவர்களுக்காக மாற்றுத் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தவுள்ளது.

அதாவது, கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான ரயில் அனுமதிச்சீட்டொன்றைக் கொள்வனவு செய்வதன் மூலமும் வடக்கு நட்பு ரயில் சேவை திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்ய முடியும். இந்த ரயில் அனுமதிச்சீட்டு விநியோகத்தையும் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார். இந்த அனுமதிச்சீட்டை வைத்திருந்து, யாழ்தேவி பயணத்தைத் தொடங்கியதும் அதில் யாழ்ப்பாணம் சென்றுவர முடியும் எனவும் சுமித் சந்தன வீரசிங்க தெரிவித்தார். இதேவேளை, தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள யாழ்தேவி ரயிலை எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வவுனியாவுக்கும் அப்பால் தாண்டிக்குளம் வரை கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்தேவி யாழ்ப்பாணத்திற்கான தனது கன்னிப் பயணத்தை ஆரம்பித்த நாளான 1956 ஏப்ரல் 23 ஆம் திகதியை நினைவுகூரும் வகையில், இந்தத் திகதியில் அதன் பயணத்தை வவுனியாவுக்கும் அப்பால் கொண்டுசெல்ல தீர்மானிக்கப்பட்டதாக சுமித் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து திங்கள் இரவு திருமலைக்கு அழைத்துவரப்பட்டவர்கள் விபரம்

vanni-injured.gif
67. ராசலிங்கம், புதுக்குடியிருப்பு, (வயது 66),
68. எஸ்.பரமேஸ்வரி, முல்லைத்தீவு, செல்வபுரம், (வயது44),
69. ஆர்.தங்கராணி, புதுக்குடியிருப்பு, (வயது 70),
70. எஸ்.தவமலர் முள்ளியவளை, (வயது61),
71. ஏ.முத்தையா, மாத்தளன், (வயது63),
72. எஸ்.கனகசபாபதி, யாழ்ப்பாணம், அளவெட்டி (வயது75),
73. சுஜா, முல்லைத்தீவு, பொக்கணை (வயது 12),
74. ரி.சிவபாக்கியம், முல்லைத்தீவு, பொக்கணை, (வயது57),
75. எஸ்.சிதம்பரம், கருணை நிலையம், (வயது52),
76. எஸ்.ருக்மணி, வட்டக்கச்சி, (வயது 46),
77. எம்.ராசகுகன், மாதலன், (வயது 56),
78. எஸ்.ராமு.முல்லைத்தீவு, வவுனிக்குளம், (வயது64),
79. வி.பேரின்பராணி, கிளிநொச்சி, உதயநகர், (வயது30),
80. விஜக்ஷா ராகுலன், மாதலன், (வயது03),
81. பிதுஷண, யாழ்ப்பாணம், நல்லூர், (வயது02),
82. எஸ்.ரமேஸ்குமார், யாழ்ப்பாணம், நல்லூர், (வயது38),
83. பி.நடராசா, இலுப்பைக்கடவை, (வயது85),
84. கலைவாணி, யாழ்ப்பாணம், (வயது24),
85. யதுசனன், யாழ்ப்பாணம், (வயது 7 1/2),
86. எஸ்.சீதாலட்சுமி, மாதலன், (வயது70),
87. ஆர்.சோபனா, அல்வாய் கிழக்கு, (வயது7),
88. ஆர்.கலைவாணி, அல்வாய் கிழக்கு (வயது32),
89. வனிதாதேவி, மாதலன், (வயது61),
90. விஜயராகவன், மாதலன், (வயது2.5),
91. வி.லட்சுமி, வவுனியா, (வயது60),
92. எம்.யோகதாஸ், பெரியவிளான், இளவாலை (வயது28),
93. கே.கோபாலசிங்கம், முள்ளியவளை (வயது61),
94. நந்தாவதி மெண்டிஸ், கிளிநொச்சி, (வயது44),
95. ஏ.சிவரஞ்சனி, கிளிநொச்சி, (வயது25),
96. இறப்புபெயர் தரப்படவில்லை,
97. கே.பொன்னம்மா, கிளிநொச்சி, (வயது90),
98. என்.சத்தியரூபன், வட்டக்கச்சி, (வயது13),
99. செவிப்புலன், பேசும் சக்தி அற்றவர்,
100. ஏ.ராசலிங்கம், மாங்குளம், (வயது59),
101. மகேஸ்வரி, வல்லிபுரம் (வயது51),
102. சிறிமா, கருணை நிலையம், (வயது84),
103. பௌத்தமணி, (வயது48)
104. அந்தனி, திரேஸா, கருணை நிலையம், (வயது35),
105. குழந்தை, முள்ளியவளை, (வயது74),
106. கிருஷ்ணகுமாரி, கிளிநொச்சி, (வயது15),
107. கே.முத்துவேற்பிள்ளை, திருகோணமலை, கிரியாய், (வயது56),
108. தீபா, கருணை இல்லம், (வயது12),
109. ஜே.தம்மிகா, அம்பலன், பொக்கணை, (வயது04),
110. எஸ்.ஜேயசீலன், அம்பலன், பொக்கணை, (வயது34),
111. ஹம்ஸிகா, அம்பலன், பொக்கணை, (வயது10),
112. ஜே.சுகந்தினி, அம்பலயன், (வயது33),
113. அனுஜா, அம்பலயன், (வயது29),
114. கே.ரோசா, அம்பலன், (வயது06),
115. கே.யோகராணி, அம்பலயன், (வயது54),
116. ஐ.மகேந்திரன், கிளிநொச்சி, (வயது49),
117. எஸ்.சிவசோதி, சிவபுரம், கிராஞ்சி, (வயது4),
118. பி.அருளானந்தம், முள்ளியவளை, (வயது53),
119. பி.கந்தசாமி, நீதிமன்ற வீதி, யாழ்ப்பாணம், (வயது33),
120. ஏ.யோகேஸ்வரன், கிளிநொச்சி, கணேசபுரம், (வயது72),
121. ஜே.ஜில்லிபுஷ்பா, மாதலன், (வயது61),
122. பி.மகேஸ்வரி, கிளிநொச்சி, (வயது58),
123. பி.ராணி, மாதலன், (வயது58),
124. எஸ்.சிவகுமார், யாழ்ப்பாணம், புங்குடுதீவு, (வயது45),
125. சிவகாமுகானி, மன்னார், (வயது76),
126. டி.தவராஜா, விளாங்குளம், வவுனிக்குளம், (வயது60),
127. துலக்ஷன், விளாங்குளம், வவுனிக்குளம், (வயது10),
128. வி.சகுந்தலா, வற்றாப்பழை, (வயது29),
129. வி.மதுஷா, வாற்றாப்பழை, (வயது5),
130. வரதராணி, வற்றாப்பழை, (வயது7),
131. எஸ்.பிரியா, முல்லைத்தீவு, பொக்கணை, (வயது2),
132. ஜனுஷா, முல்லைத்தீவு, பொக்கணை, (வயது6),
133. எஸ்.இராசமலர், பொக்கணை, (வயது55),
134. எஸ். நேசம்மா, மட்டக்களப்பு, (வயது61),
135. எம்.ஜெயராணி, கிளிநொச்சி, (வயது51),
136. விஜயலட்சுமி, கருணை நிலையம்,
137. வி.துரைராஜசிங்கம், உடையார்தட்டு (வயது60),
138. கமலாம்பிகை, ஆனைக்கோட்டை, (வயது78),
139. எஸ்.மயில்வாகனம், தர்மபுரம்,
140. ஜே.சரஸ்வதி, பண்டங்கண்,
141. ஏ.உதயராணி, பரந்தன் வீதி, புதுக்குடியிருப்பு(வயது34),
142. ஏ.தாரண்யா, புளியங்குளம், (வயது08),
143. ஏ. தாரகன், புளியங்குளம், (வயது10),
144. சுமித்திராதேவி, பண்டாவெளி,(வயது49),
145.கே. ராசம்மா, பண்டங்கண்டி,(வயது 57),
146. தெய்வானை/ கிளி, உருத்திரபுரம்,(வயது66),
147. கே.மதுரம்,யா/தாளையடி, (வயது51),
148. கே.சத்தியவதி,தாளையடி, (வயது 21),
149. என்.ரோபிசியா,காத்தான்குளம்,மன்னார், (வயது 36),
150. தமிழ்வினி, காத்தான்குளம்,மன்னார், (வயது 01),
151. எல்.மகேஸ்வரன், காத்தான்குளம் ,மன்னார், (வயது 35),
152. தாரணி, காத்தான்குளம் ,மன்னார், (வயது03),
153. செவிப்புலனற்றவர் கருணை இல்லம்,
154. பி.கிருபாகரன், யாழ்ப்பாணம், புளியங்கூடல்,
155. ஏ.சொக்கலிங்கம், வவுனிக்குளம், (வயது 73),
156. வள்ளிப்பிள்ளை, முரசுமோட்டை, (வயது75),
157. எஸ்.சின்னம்மா,பேராளை, பளை, (வயது69).