அரச குறுந்தகவல் செய்திச் சேவை ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

gid_mobitel_agreement.jpgஅரசாங்க தகவல் திணைக்களமும் இலங்கை டெலிகொம் மொபிடெல் நிறுவனமும் இணைந்து மொபிடெல் தொலை பேசிப் பாவனையாளருக்கு குறுந்தகவல் மூலம் செய்திகளை வழங்கும் சேவையொன்றை ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான உடன்படிக்கை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டவும் மொபிடெல் நிறுவனத்தின் தலைவி லீஷா டி சில்வா சந்திரசேனவம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஆவணங்களை கைமாறிக்கொண்டனர். அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா கையடக்கத் தெலைபேசியை இயக்கி  இந்த சேவையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

அரசாங்கம், அபிவிருத்தித்திட்டங்களின் முன்னேற்றம், அமைச்சுக்கள், திணைக்களங்கள் உட்பட அரச நிறுவனங்கள் ஆகியவற்றில் மக்களைக் கவரும் விசேட தகவல்கள் இந்தச்சேவையின் மூலம் வழங்கப்படவுள்ளன. தேசிய கையடக்க தொலைபேசி சேவையை வழங்கும் டெலிகொம் மொபிடெல் நிறுவனத்தடன் இணைந்து விசேட தகவல்களையும் தேர்தல் முடிவுகளையும் குறுத்தகவல்கள் மூலம் பாவனையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கை மகிழ்ச்சிக்குரியதென அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா தெரிவித்தார்.

இலங்கை மொபிடெல் நிறுவனத்தின் தலைவி லீஷா டி சில்வா சந்திரசேன கருத்துத் தெரிவிக்கையில்,உடனுக்குடன் செய்திகளை பாவனையாளர்களுக்கு வழங்குவதில் செயற்திறன் மிக்க சேவையாக இதனைக் குறிப்பிடலாம் எனக் கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்துடன் இணைந்து வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகள் இச்சேவையினூடாக வழங்கப்படபோது மக்களிடமிருந்து பொரும் வரவேற்புக் கிடைத்ததாகவும் இனிவரும் தேர்தல்களின்போது இந்த நடைமுறை பின்பற்றப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *