அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்கிறது ஐரோப்பிய நாடாளுமன்றம்

eu.jpg இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வழி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது என பி.பி.ஸி. செய்தி வெளியிட்டிருந்தது..

அரசாங்க இடைத்தங்கல் முகாம்களின் நிலைமைகள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம், பொதுமக்களை வெளியேற விடாமல் விடுதலைப்புலிகள் பயமுறுத்திவருவதாக கண்டனம் செய்துள்ளது.

நிவாரண நிறுவனங்களும், ஊடகத்தினரும் போர் பகுதிக்கும், முகாம்களுக்கும் தங்குதடையின்றி சென்றுவர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் கேட்டிருக்கிறது

புதுக்குடியிருப்பு வைத்தியசாலை படையினரின் கட்டுப்பாட்டில்

puthu-hos.jpgபுலிகளின் பிடியிலிருந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை நேற்றுக் காலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கடுமையான மோதல்களுக்கு மத்தியில் முன்னேறிய பாதுகாப்புப் படையினர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையையும், அதனை அண்மித்த பிரதேசத்தையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கும் நடவடிக்கையில் கடந்த 3 தினங்களாக ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களில் புலிகளுக்கு பாரிய இழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, 53வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, எட்டாவது அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி கேணல் ரவிப்பிரிய ஆகியோர் தலைமையிலான குழுவினர் இந்த வைத்தியசாலையையும் அதன் சுற்றுப்புறத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

புதுக்குடியிருப்பு அரசாங்க வைத்தியசாலையை புலிகள் தமது பிரதான பாதுகாப்பு முகாமாகப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வைத்தியசாலை கைப்பற்றப்பட்டமை வன்னி மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றுமொரு பாரிய வெற்றியாகும் என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையில் இருந்த உபகரணங்களையும் புலிகள் வேறொரு இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளனர். கைப்பற்றப்பட்ட வைத்தியசாலையையும், அதனை அண்மித்த பிரதேசத்திலும் பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினர் புலிகளிடம் எஞ்சியுள்ள 37 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் இறுதிக்கட்ட நடிவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அப்பாவி பொதுமக்களை இந்த வைத்தியசாலையிலிருந்த கட்டில்களிலிருந்து அகற்றி காயமடைந்த புலிகளை அங்கு வைத்து சிகிச்சையளிக்க இந்த வைத்தியசாலையை புலிகள் பயன்படுத்தி வந்தனர். புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் இந்த வைத்தியசாலையில் தங்கியிருந்த படியால் அந்த வைத்தியசாலையை இராணுவத்தினர் கைப்பற்றாமல் இருப்பதற்காக படையினரை இலக்கு வைத்து இங்கிருந்து கடுமையான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டு வந்தனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை இராணுவத்தினர் தாக்கியதாக புலிகளும், அவர்களுடன் தொடர்புடைய சில அமைப்புகள் சர்வதேச கவனத்தை திசை திரும்பும் வகையில் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். கடந்த மூன்று தினங்களாக தாக்குதல் நடத்திய படையினர் வைத்தியசாலைக்கு எதுவித பாரிய சேதம் ஏற்படாத வண்ணமே கைப்பற்றியுள்ளனர் என்று இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சபேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை புதுக்குடியிருப்பு வடக்கு பிரதேசத்தின் ஒரு கிலோ மீற்றர் பரப்பை நோக்கி முன்னேறிய 58வது படைப்பிரிவினர் சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமாக அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாதுகாப்பு மதில்களையும் தகர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக படையினர் நடத்திவந்த கடுமையான தாக்குதல்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

puthu-hos.jpg

உள்விவகாரங்களில் வெளிநாடுகள் மூக்கை நுளைக்கக்கூடாது – அனுரகுமார திசாநாயக்க

anurakumara_jvp.jpgவடக்கு முழுமையாக மீட்கப்பட்டதும் அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் இந்த நிலையில் அமெரிக்காவும் இந்தியாவும் எமது நாட்டின் உள்விவகாரங்களில் மூக்கை நுளைக்கக்கூடாது என ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு இந்திய மருத்துவர்கள் குழு வந்துள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் உள்ள நட்புறவின் அடிப்படையில் இந்தியா வேண்டுமானால் மருத்துவ உபகரணங்களை அனுப்பியிருக்கலாம் அதனைவிடுத்து இந்திய மருத்துவர்கள் குழு புல்மோட்டையில் தளம் அமைத்துச் செயற்படுவதனை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்திய மருந்துவ குழுவின் பணிகள் இன்று ஆரம்பம்

indian_dr.jpgஇலங்கை யின் வடக்கே வன்னியிலிருந்து திருகோணமலைக்கு இடம்பெயர்ந்து வரும் நோயாளர்களுக்கு புல்மோட்டையில் சிகிச்சை வழங்கும் வகையில் இந்திய மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று புல்மோட்டைக்கு வருகைதந்துள்ளது.

இம்மருத்துவ நிபுணத்துவ குழுவினர் இன்று தமது மருத்துவ சிகிச்சை பணியினை ஆரம்பிக்கின்றனர்.

கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு.

election-commissioner.jpgமேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (13.03.2009) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இடம்பெறும் முதலாவது கூட்டம் இது எனத் தெரிவித்துள்ள செயலகம் இதன்போது தேர்தல் தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தேர்தல்கள் நடைபெறவுள்ள விதம் தொடர்பாக பேசப்படும் எனத் தெரிவித்துள்ளது.

கொழும்பு நகருக்குள் ‘சிட்டி லைனர்’ சொகுசு பஸ் சேவை இன்று ஆரம்பம்.

bus.jpgகொழும்பு நகருக்குள் பிரவேசிக்கம் வாகனங்களைக் குறைக்கும் நோக்கில்; ‘சிட்டி லைனர்’ சொகுசு பஸ் சேவை இன்று காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தென் பகுதியிலிருந்து கொழும்புக்குள் வரும் தனியார் வாகனங்களை மொரட்டுவ விசேட பார்க் என்ட் ரைட் வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு ‘சிட்டி லைனர’ என்ற இணைப்பு சொகுசு பஸ் சேவையூடாக கொழும்புக்குள் வரும் புதிய நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்படும்.

காலி வீதி மொரட்டுவ கட்டுபெத்த இலங்கை போக்குவரத்துச் சபை பயிற்சிக் கல்லூரிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பார்க் என்ட் ரைட் வாகன தரிப்பிடத்தையும்  இலங்கை போக்குவரத்துச் சபையில் சிட்டி லைனர்  சொகுசு பஸ் சேவையையும் இன்று காலை அமைச்சர் டளஸ் அழகபெரும திறந்து வைத்தார்.

இந்த வாகனத் தரிப்பிடத்தில் ஒரே நேரத்தில் 150 வாகனங்களைத் தரித்து வைக்கக்கூடிய வசதிகள் உள்ளன. இங்கு எவ்விதக் கட்டணங்களும் அறவிடப்படமாட்டா. இந்த  ‘சிட்டி லைனர்’ இணைப்பு சொகுசு பஸ் சேவை கொழும்புக் கோட்டைக்கும் மொரட்டுவைக்கும் இடையில் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சேவையிலீடுபடுத்தப்படும். தேவையேற்படும் பட்சத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இச்சேவையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

படையினர் மீது இரசாயனத் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்! 17 முகமூடிகள் 16 ஆடைகள் படையினரால் மீட்பு

chemical_.png
முன்னேறிவரும் படையினர் மீது  இரசாயனத் தாக்குதல் ஒன்றை நடத்த புலிகள் திட்டமிட்டமிட்டிருந்தனர் என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. உடையார் கட்டுக்குளம் வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தின் 57 ஆவது படையணியினர் கடந்த 05 ஆம் திகதி நடத்திய தேடுதலில் இரசாயயனத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் 17 முகமூடிகள் மற்றும் 16 ஆடைகள் என்பனவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
 
கடந்த இரண்டு வருட காலங்களாக புலிகள் இராசயன வாயுவை படையினருக்கு எதிராக பாவித்துள்ளபோதிலும் படையினர் அந்தச் சவாலுக்கு முகம் கொடுக்கும் முன்னேற்பாடுகளுடன் செயற்பட்டுள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறவித்துள்ளது.

விமான உதிரிப் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு.

flight-spare-parts.jpgமுல்லைத் தீவுக்கு வடக்காக அம்பலவான் பொக்கணைப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 58வது படைப்பிரிவின் படையணியான 18வது கஜபா படையினர் நேற்று (மார்:11) எல்ரிரிஈயினரின் விமான உதிரிப் பாகங்களைக் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமான உதிரிப்பாகங்கள் எண்ணெய் தாங்கிகளுக்குள் பாதுகாப்பாக வைத்து நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக படையினர் தெரிவித்தனர். விமான டயர்கள்,  பெற்றிகள்,  இன்ஜின்களின் உதிரிப்பாகங்கள், திசைகாட்டும் லைற்கள் மற்றும் பல பொருகளும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்குள் அடங்கும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு விமானத்தின் உதிரிப்பாகங்களை வளங்கி இவற்றை அமைக்க பின்புறத்தில் இருந்து செயல்படும் மூளை சாலிகள் யார் என்பதைக் கன்டுபிடிக்க உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விசாரணைகள் நடத்துவது  அவசியம் என பாதுகாப்பு அவதானிகள் தெரிவித்தனர் “எது எவ்வாறாயினும்  பயங்கரவாதிகளுக்கு பொருள் வழங்குனர்கள் மற்றும் இதன் முகவர்கள் யார் என்பதைக் கன்டுபிடிக்க பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் அனைத்து அமைப்புக்களுடன் உலகப் பொலிஸ் (இன்ரபோல்) அமைப்பும் இனைந்து செயல்பட்டால்  உலகத்திலுள்ள பயங்கரவாத பயங்கரவாத வலையமைப்பைக் கண்டுபிடிக்க முடியும். எனத்தெரிவித்த அவதானிகள் தற்பொழுது இலங்கைக்கு இதைக்கண்டுபிடிக்க அவசர உதவி தேவையாகும்” என மேலும் தெரிவித்தனர்.

30 வருடங்குக்கு மேல் எல்ரிரிஈயினர் உலகிலுள்ள மற்ற பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்துள்ளதுடன் அவர்களின் யுத்த உபாயங்கள் மற்றும் தகவல்களையும் பரிமாற்றிக் கொள்கின்றனர்.பேராபத்தை விளைவிக்கும் செயல்களான தற்கொலைத் தாக்குதலை எல்ரிரிஈயினரே அறிமுகம் செய்தனர். இதன் விளைவுதான் 9ஃ11 பயங்கரவாதத் தாக்குதலாகும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அம்பலவான்பொகணைப் பகுதியில் நேற்று (மார்:11)  கன்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு.

Air craft tire -07
Air craft spark plug boxes -06
Air craft oil filter -12
Eye goggles -03
Silk agnation harness -02
Runway end light -08
Runway light (white) -08
Taxi way light -15
Runway light panel -01
Fire extinguisher -01
Oxygen breathing equipment Cylinders -02
Oxygen Masks -06
Air field lamp halogen 10 boxes -03
Nose landing gear -02
Aero shell Greece 3 kg tin -03
Codrable engine indicator -01
BTYs -03
Air Filter -01
Portable Uriner -03
Runway light installation manual -06

மதஸ்தலங்கள் மீதான புலிகளின் தாக்குதல்களில் இதுவரை 412 பேர் பலி – அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தகவல்

anura_priyadarshana_yapa.jpg நாட்டிலுள்ள மதஸ்தலங்கள் மீது கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2009 மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை புலிகள் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக இதுவரை 412 பேர் பலியாகியுள்ளதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

மதஸ்தலங்கள் மீதான புலிகளின் முதலாவது தாக்குதல் 1985ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி இடம்பெற்றது. ஜயஸ்ரீ மஹாபோதி விகாரையில் இடம்பெற்ற இத்தாக்குதலில் 149 பேர் பலியானார்கள்.

இதனையடுத்து சோமாவதி புனிதஸ்தலம் மீது 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 6 பேரும், அதே ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி மடு தேவாலயம் மீதான தாக்குதலில் 6 பேரும்,  அரந்தலாவையில் 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 33 பௌத்த மத குருமார்களும் பலியானார்கள்.

பொலன்நறுவை, மெதிரிகிரியவிலுள்ள கொடபொத்த விகாரையைச் சூழவுள்ள 175 கிராமவாசிகளைச் சுற்றி வளைத்து மேற்கொண்ட தாக்குதலில் 9 பேர் பலியாகினர். அவ்வாறே 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் 147 பேர் பலியானார்கள்.

சம்மாந்துறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களில் 1989ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24ஆம் 29ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 14 பேர் பலியானதோடு, கண்டி, தலதா மாளிகை மீது 1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் 7 பேர் பலியாகினர். கரும்புலிகள் 4 பேர் மேற்கொண்ட இத்தாக்குதல் காரணமாக 25 பேர் காயமடைந்தனர்.

2000ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியான வெசக் தினத்தன்று மட்டக்களப்பில் மேற்கொண்ட தாக்குதலில் 25 பேர் பலியாகினர். கடந்த 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மட்டக்களப்பு சாந்த வேலியர் பிள்ளையார் கோயிலின் பிரதம குருக்களான பரமேஸ்வரன் குருக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பு, கொட்டாஞ்சேனை சிவன் கோயிலில் மேற்கொண்ட தாக்குதலில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொல்லப்பட்டார்.

இறுதியாக கடந்த 10ஆம் திகதி அக்குரஸ்ஸ, கொடபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நபிகள் நாயகத்தின் பிறந்த தின வைபவத்தில் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு மதஸ்தலங்கள் மீது தொடர்ந்தேச்சையாக புலிகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் அவர்களின் கொடூரத்தன்மை, பாசிச வெறி மற்றும் மிலேச்சத்தனம் என்பவற்றை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. மதஸ்தலங்கள் மீது அவை எந்த சமயத்தைச் சார்ந்ததாக இருந்தபோதும் புலிகள் மேற்கொண்டு வரும் இத்தகைய அநாகரிகமான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிடடார்.

புதுக்குடியிருப்பு மோதலில் புலிகளின் நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி பலி- உதய நாணயக்கார

thamilendi.jpgபுதுக்குடி யிருப்பில் நேற்று இடம்பெற்ற மோதல்களின் போது படையினரின் பீரங்கித் தாக்குதலில் புலிகளின் நிதிப் பொறுப்பாளரான தமிழேந்தி என அழைக்கப்படும் சபாரட்ணம் செல்லதுரை கொல்லப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பில் நேற்றுக் காலை படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதுடன் பெரும் எண்ணிக்கையான புலி உறுப்பினர்கள் உயிரிழந்திருப்பதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

மோதல்களில் தமிழேந்தி உயிரிழந்திருப்பதனை இராணுவத்தின் புலனாய்வுத் துறையினர் ஊர்ஜிதம் செய்திருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

பலத்த மழைக்கு மத்தியிலும் படையினர் சற்றும் தளராது தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் படையினரின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து முகம் கொடுக்க முடியாத புலிகள் காயமடைந்தவர்களையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.