வடக்கு முழுமையாக மீட்கப்பட்டதும் அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் இந்த நிலையில் அமெரிக்காவும் இந்தியாவும் எமது நாட்டின் உள்விவகாரங்களில் மூக்கை நுளைக்கக்கூடாது என ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இந்திய மருத்துவர்கள் குழு வந்துள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் உள்ள நட்புறவின் அடிப்படையில் இந்தியா வேண்டுமானால் மருத்துவ உபகரணங்களை அனுப்பியிருக்கலாம் அதனைவிடுத்து இந்திய மருத்துவர்கள் குழு புல்மோட்டையில் தளம் அமைத்துச் செயற்படுவதனை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.