அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

74 புத்தர் சிலைகளை அமெரிக்காவுக்கு அனுப்ப முயன்ற சுவீடிஷ் பிரஜை கைது

74 புத்தர் சிலைகளை அமெரிக்காவுக்கு அனுப்ப முயன்ற சுவீடிஷ் பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீர்கொழும்பு நீதிவான் ஜயகிடி அல்விஸ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் இவர் நடத்திவரும் பௌத்த கலரிக்கு இவற்றை அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாடுகளுக்கு பொதிகளை அனுப்பும் நிறுவனத்திடம் இவர் இந்த சிலைகளை அனுப்புவதற்கு ஒப்படைத்திருந்தார்.

இந்த புத்தர் சிலைகள் பொதியை சுங்க அதிகாரிகள் பரிசோதித்த போது இவை கண்டுபிடிக்கப்பட்டன.  இவரின் பௌத்த கலரி இணையத் தளத்தின் மூலம் அங்குள்ள புத்தர் சிலைகளை பார்த்தபோது அவை இதற்கு முன்னரும் இவரால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடல்கோள் அனர்த்தங்களின் போது இலங்கைக்கு வந்திருந்தார் எனவும் நீர்கொழும்பில் ஏத்துக்கால் பகுதியில் பெண் ஒருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. றொனால்ட் அல்வ்ரன் காரன்ஸ் (58 வயது) என்பவரே அந்த சுவீடிஷ் பிரஜையாவார்.

போரை நிறுத்த சர்வதேசம் அழுத்தம் கொடுத்தாலும் அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை:லக்ஷ்மன் அபயவர்தன

laxman_yapa_abeywardena.jpgஇலங்கையின் வடக்கே இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும், யுத்த நிறுத்தமொன்றுக்கு பல்வேறு நாடுகள் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கின்ற போதிலும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் அபயவர்தன தெரிவித்தார்.

விடுதலை புலிகளின் இலக்குகளை நோக்கிப் பாதுகாப்பு படையினர் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இன்று வியாழக்கிழமை 1000 பொதுமக்கள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிவந்து இராணுவத்தின் 59 ஆம் படையணியிடம் சரணடைந்துள்ளதாகவும், இவர்கள் மீது விடுதலை புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, “பல நூற்றுக்கணக்கான உயிர்களையும், மருத்துவமனைகளையும் பலிகொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அத்துடன் மோதல் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கான உதவிகளை வழங்க வேண்டும்” என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒபாமா அறிக்கை விடுத்து சில மணிநேரத்தில் இடம்பெற்ற ஷெல்வீச்சில் மோதல் பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்று தாக்குதலுக்கு இலக்கானதுடன்,50 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக ஏ.பி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆர்ட்டிலறி ஷெல்கள் பிற்பகல் 1.00 மணியளவில் வைத்தியசாலை மீது வீழ்ந்ததாகவும், இதில் பலர் காயமடைந்துமுள்ளதாக டாக்டர் வீ.சண்முகராஜா தொலைபேசி வாயிலாக தமக்குத் தெரிவித்துள்ளதாக அசோசியேட் பிரஸ், செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், “அரசாங்க டாக்டர் சண்முகராஜா என்பவரை மேற்கோள்காட்டியே சர்வதேச ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.டாக்டர் சண்முகராஜா புலிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாக இவ்வாறு பேசியிருக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? இதனை ஏன் சர்வதேச ஊடகங்களும் ஐ.நா. பேச்சாளரும் புரிந்துகொள்ளவில்லை?” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொது மக்கள் கொலை தொடர்பில் அரசாங்கம் நேர்மையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்: எதிர்க்கட்சிகள் கூட்டுத்தீர்மானம்

manig.jpgஅரசாங்கத்தின் எறிகனை தாக்குதல்களினால், பாதுகாப்பு வலயத்தில் 400க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக கூறப்படுவது தொடர்பில் நேர்மையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை ஒன்றிலேயே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கைக்கு, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதன் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் மற்றும் சிறிலங்கா சுதந்தி கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்தின் மீது இவ்வாறானதொரு குற்றச் சாட்டினை முன்வைக்கும் போது, அதில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதன் பொருட்டு அரசாங்கம் ஒரு நேர்மையான விசாரணையை நடத்தி, தம்மீது குற்றம் இல்லை என்றால் அதனை உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.இவ்வாறான குற்றச் சுமத்தல்கள் மூலம், சர்வதேச ரீதியாக இலங்கையை தலைகுனிய செய்ய முனையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக பிரசாரங்களை முறியடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

வருண்காந்தி மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து: உச்சநீதிமன்றம்

varun.jpgஉச்ச நீதிமன்றம் வருண்காந்தி மீதான தேசிய பாதுôகாபபு சட்டத்தை ரத்து செய்தது . வருண்காந்திக்கு தேர்தல் பிரசாரத்தின்போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனால் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். பரோலில் வெளியே வந்துதான் தேர்தல் பிரசாரம் செய்தார்.

பா.ஜ., வேட்பாளர் வருண் காந்திக்கு அளிக்கப்பட்ட பரோல் நீட்டிப்பு இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், வருண் காந்தி சுப்ரீம் கோர்ட்டில், தன் மீதான தே.பா. சட்டம் ரத்து செய்யவேண்டும் என்ற உ.பி. ஆலோசனை குழு பரிந்துரைத்தது படி அது விரைவில் அமல் படுத்தப்பட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தா. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வருண் மீதான தே.ப., சட்டத்தை நீக்கி உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் 3இடங்களில் நாளை மறுவாக்குப்பதிவு

india-elc.jpgதமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் நேற்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.  இதில் 3 வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடியால்  மறு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

அதன்படி பொள்ளாச்சி, அரக்கோணம், சேலம் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. காலை 7மணி முதல் மாலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முகாம்களுக்கு அனைத்துக்கட்சி குழுவினர் செல்ல அனுமதிக்கப்படவேண்டும்: ரணில் விக்கிரமசிங்க

ranil-wickramasinghe.jpgஇடம் பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களுக்கு அனைத்துக்கட்சி குழுவினர் செல்ல அனுமதிக்கப்படவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
 
நோர்வே சென்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட பிரதிகளை சந்தித்து கலந்துரையாடியதையடுத்து, இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பது தமது கட்சியின் நிலைப்பாடெனக் கூறிய ரணில் விக்கிரமசிங்க, எனினும், தற்போதைய நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். வெளிநாட்டுப் பிரதிநிதிகளை முகாம்களுக்கு அழைத்துச்செல்லும் இலங்கை அரசாங்கம், தமது பாராளுமன்ற உறுப்பினர்களை ஏன் அழைத்துச்செல்லவில்லையெனவும் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பினார்.

இலங்கையின் நிலைவரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எரிக் சொல்ஹெய்ம்

eric-solheim.jpg இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை நிலைவரம் குறித்து அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை கலந்துரையாடியிருந்த நிலையிலேயிலேயே எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான்கீமூனின் இலங்கை விஜயம் உட்பட, அனைத்து மட்டத்திலும் ஐக்கிய நாடுகள் சபையின் முனைப்புக்கள் அவசியமெனவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.

ஜோர்தான் குயீன் ஆலியா விமானநிலையத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு

g-11-mahi.jpgஜோர்தானில் இன்று ஆரம்பமாகவுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களைப் பெறும் நாடுகளின் ஜீ-11 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ள  ஜனாதிபதிக்கு ஜோர்தான் குயீன் ஆலியா விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜோர்தானின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அமீர் ஹதீதி ஜனாதிபதியை வரவேற்றார். அதன் பின்னர் ஜனாதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

 மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள ஜனாதிபதி மத்திய கிழக்கின் பொருளாதாரம் தொடர்பாக ஆராயும் மாநாட்டிலும் கலந்துகொள்வார்.

பாகிஸ்தான், மோரோக்கோ, எல்சல்வடோர், ஜோர்ஜியா, குரோசியா, ஹொண்டுராஸ், பெரகுவே, ஈக்குவாடோர், இந்தோனேசியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து உரையாடுவார். பொருளாதார வர்த்தக மற்றும் கலாசார கூட்டுறவு தொடர்பான ஓர் உடன்படிக்கையில் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் சகல நாடுகளும் கைச்சாத்திடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் சரணடையவேண்டும் – கோஹன

palitha_koahana.jpgவிடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றாவது புலிகள் ஆயுதங்களை களைந்து சரணடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெளியிட்டுள்ள கருத்துக்கள் தொடர்பிலேயே பாலித்த கோஹன இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடையவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல சர்வதேச நாடுகளும் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடையவேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றன. இலங்கை அரசாங்கமும் இந்த கோரிக்கையையே முன்வைத்துவருகின்றது.

தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் கடுமையான தொனியில் புலிகளுக்கு அழுத்தம் தெரிவித்து வருகின்றது. எனவே சர்வதேசத்தின் கோரிக்கைக்கு தற்போதைய நிலைமையிலாவது புலிகள் இணங்கி அரசாங்கப் படையினரிடம் சரணடையவேண்டும் என்றார்.

2400 க்கு மேற்பட்ட மக்கள் இராணுவம் விடுவித்த பிரதேசத்துக்குள் வருகை

mullivaikaal-01.jpgமுள்ளி வாய்க்கால் பகுதியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களை விடுவிக்கும் மனிதாபிமான மீட்டுப் பணியின் இறுதி அத்தியாயத்தில் படையினர் இறங்கியுள்ளனர். கரையாமுள்ளி வாய்க்காயைத் தாண்டி வெள்ளமுள்ளி வாய்க்கால், பகுதிகளை நோக்கி இரு திசைகளிலும் இராணுவம் இன்று ( மே 14) முன்னேறி, புதிய பாதுகாப்பு வலயத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுசனத்தில் 2400க்கு மேற்பட்ட மக்கள், பாதுகாப்பாக வெளியேறக் கூடிய சூழலை ஏற்படுத்தினர் என தெரிய வருகிறது.

புதிய பாதுகாப்பு வலயத்தை நோக்கிய இராணுவத்தின் வருகையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி  அதிகமான மக்கள் களப்புக் கடல் ஊடாக வெளியேறிவருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

mullivaikaal-02.jpg