தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் நேற்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் 3 வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடியால் மறு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
அதன்படி பொள்ளாச்சி, அரக்கோணம், சேலம் தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. காலை 7மணி முதல் மாலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.