இடம் பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களுக்கு அனைத்துக்கட்சி குழுவினர் செல்ல அனுமதிக்கப்படவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நோர்வே சென்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் உள்ளிட்ட பிரதிகளை சந்தித்து கலந்துரையாடியதையடுத்து, இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பது தமது கட்சியின் நிலைப்பாடெனக் கூறிய ரணில் விக்கிரமசிங்க, எனினும், தற்போதைய நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். வெளிநாட்டுப் பிரதிநிதிகளை முகாம்களுக்கு அழைத்துச்செல்லும் இலங்கை அரசாங்கம், தமது பாராளுமன்ற உறுப்பினர்களை ஏன் அழைத்துச்செல்லவில்லையெனவும் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பினார்.