யாழ்ப் பாணம் மயிலிட்டி பகுதியில் படையினரின் ஆயுதக் கிடங்கு தீப்பற்றியுள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்தாகவும் அவர் மேலும் கூறினார்.
அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
“ஆயுதங்களைக் களைந்து விட்டு முழுமையான ஜனநாயக அரசியலில் ஈடுபட்டுள்ள தமது கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான அறவன் என அழைக்கப்படும் இராமலிங்கம் ஜெயக்குமார் மட்டக்களப்பு புதுநகரில் நேற்று முன் தினமிரவு இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் தமது கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“வன்முறைக் கலாசாரத்தை கைவிட்டு ஜனநாயக அரசியல் செயற்பாடுகளில் முழுநம்பிக்கை கொண்டு மக்களுக்கு சேவையாற்ற வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் நாட்டின் எப்பாகத்திலும் இடம் பெறக்கூடாது என்பதே சகல மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.
கட்சியின் உறுப்பினர்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற இருக்கும் நிலையில், அவர்கள் மிகவும் ஈனத்தனமாக படுகொலை செய்யப்படுவதால் எதிர்காலத்தில் மக்களுக்கான அரசியல் சார்ந்த சேவைகளை ஆற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் சீர்குலைந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது. அதுமட்டுமல்ல, பொது மக்கள் மத்தியிலும் ஒருவகை அச்சமும் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அறவான் படுகொலையானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. இவ்வாறான படுகொலைகளை, கட்சி பேதங்களை மறந்து உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும்.
பயங்கரவாதம் இலங்கையின் ஜனாதிபதியால் அடியோடு வேரறுக்கப்பட்டு நாட்டில் சமாதானமும் அபிவிருத்திக்கான வாய்ப்புகளும் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் ஆயுதக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் தீயசக்திகளின் பின்புலத்தைக் கண்டுபிடிக்க, ஜனநாயகத்தை நாட்டில் ஸ்தாபிக்க விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது ஒத்துழைப்பினை காவல்துறையினருக்கு வழங்க வேண்டும்.
கட்சி உறுப்பினர்கள் சுதந்திரமாக தமது பணியை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்குக் காவல் துறையினர் பாதுகாப்பளிக்க வேண்டும். நாம் எப்போதும் காவல் துறையினரின் பாதுகாப்பையே முழுமையாக நம்புகின்றோம்” என்றார்.
நீதி, சட்ட மறுசீரமைப்பு பதில் அமைச்சர் வீ. புத் திரசிகாமணியின், அழைப்பின் பேரில் இன்று தம்புள்ள நீதவான் நீதிமன்றம் காலை 9.30 மணிக்கு பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவினால் திறந்து வைக்கப்படவிருக்கி ன்றது.
பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பங்கு கொள்ளும் உத்தியோகபூர்வ இறுதி நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில் பெற்ற வெற்றியை கொண்டாடும் நீண்ட நாள் நிகழ்வுகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் 15 உறுப்பு நாடுகளுடனான சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வெற்றிக் களிப்பில் ஈடுபடுவதைவிட நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரினதும் வேதனைகளைப் பகிர்ந்து கொள்வதே காலத்தின் தேவையாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
சங்க மித்த பிக்குனி வெள்ளரசு மரக்கிளையுடன் வந்திறங்கிய யாழ்ப்பாணம், வடமராட்சியிலுள்ள தம்பகொலபட்டுன என்றழைக்கப்படும் பகுதிக்கு ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ் நேற்று விஜயம் செய்தார்.
அங்குள்ள தம்பகொலபட்டுன விகாரையில் சங்கமித்த பிக்குனியின் உருவச் சிலையொன்றையும் ஜனாதிபதியின் பாரியார் பிரதிஷ்டை செய்தார். இப்பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் பாரியார் மற்றும் அவர் தலைமையிலான குழுவினரை வட்டுக்கோட்டைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாதகல், பொன்னாலை, காரைநகர் பிரதேசவாசிகளின் பிள்ளைகள் கோலாகலமாக வரவேற்றனர்.
இப்பிரதேச வாசிகளுக்கு ஜனாதிபதியின் பாரியார் தலைமையில் இயங்கும் சிறிலிய சவிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னூறு (300) உலர் உணவுப் பொதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
“இப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் வசதிகளையும், உட்கட்டமைப்பு துறையையும் மேம்படுத்தத் துரித நடவ டிக்கை எடுக்கப்படும்” என்று இளைஞர்களுக்கு நாளை அமைப்பின் ஸ்தாபகர் நாமல் ராஜபக்ஷ இச்சமயம் உறுதியளித்தார்.
இவ்வைபவங்களில் ஜனாதிபதியின் பாரியாருடன், பிரதமரின் பாரியார் குசும் விக்கிரமநாயக்கா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, திருமதி கரன்னாகொட உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். நயினாதீவு விகாராதிபதி நவந்தகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரோ பெளத்த வழிபாடுகளை முன்னின்று நடத்தினார்.
அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல என்ற உண்மையை ஒவ்வொரு பெரும்பான்மையின மக்களும் உணரும் வகையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இரா.தங்கவேல் தெரிவித்தார்.
கட்டபுலாத் தோட்டக் கீழ்ப்பிரிவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
அரசாங்கம் பயங்கரவாதத்தை அடக்கி ஒடுக்கி விட்டதாக அமைச்சர்கள் மார்தட்டி மகிழ்ச்சியில் குதூகலித்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் தலைவர்களையும் மிஞ்சும் வகையில் அதிகாரிகள் எதிர்க்கட்சியினர் மீது குற்றஞ் சுமத்துவதில் ஈடுபட்டுள்ளனர். ஏதோ ஒரு வழியில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. ஆனால் அந்த வெற்றியை காரணங்காட்டி காலத்தையும் நேரத்தையும் வீணடிப்பது விவேகமற்ற செயல். அத்துடன் தூர நோக்கின்றி கேளிக்கைகளை முன்னெடுப்பது பாமர மக்கள் மத்தியில் நச்சு விதைகளை விதைப்பது போன்றது. இது ஆரோக்கியமானதாக அமையாது. மாறாகப் பாரதூரமான விளைவுகளுக்கே வழிவகுக்கும்.
அரசாங்கம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த இந்த வேளையில் இந்நாட்டில் இன மோதல்கள், பாரிய யுத்தம், ஆயுதக் கலாசாரம் என்பன ஏற்பட ஆணிவேராக அமைந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப உடனடி அரசியல் தீர்வு காண வேண்டியது தலையாய கடமை.
அந்தக் கடமையிலிருந்து தவறி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் வகையில் செயற்படின் முன்னொருபோதும் ஏற்படாத அளவில் பாரிய இனப்பிரச்சினை வெடித்து இந்நாட்டில் ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதியையும் கூடப் பறிகொடுக்க நேரிடும்.
இன்று சாதாரண தமிழ், முஸ்லிம் மக்கள் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போதும் அன்றாட அலுவல்களுக்காக வெளியில் நடமாடும் போதும் மானசீகமாக எதிர்நோக்குகின்ற தொல்லைகளும் துயர்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. 1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இந்நாட்டில் விதைத்த இனத்துவேச விதைகளினையே அண்மைக் காலத்தில் அறுவடை செய்யப்பட்டது என்ற உண்மையை ஆட்சியாளர்கள் நெஞ்சில் நிலைநிறுத்தி மீட்டிப் பார்த்து தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக நடமாடும் வகையில் கௌரவமான அரசியல் தீர்வைக் காணவேண்டும்.
அத்துடன், பேரினவாதிகள் சந்தர்ப்பத்தைச் சாதகமாகக் கொண்டு இனவெறியைத் தூண்டும் வ?யில் தமிழ் மக்களை அவமதித்து அவதூறு செய்கின்ற அருவருக்கத்தக்க அனைத்துச் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல என்ற உண்மையை ஒவ்வொரு பெரும்பான்மையின மக்களும் உணரும் வகையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கொழும் பிலிருந்து தாண்டிக்குளம் வரையிலான யாழ் தேவி ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வவுனியா வரை மட்டுப்பட்டிருந்த இந்த ரயில் சேவை கடந்த 20 வருடங்களுக்கு பின்னர் வட பகுதியான தாண்டிக்குளம் வரையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் இதன் ஆரம்ப வைபவத்தில் அமைச்சர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்
இடம் பெயர்ந்த மக்களின் நலன்பேண மியன்மார் அரசாங்கம் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முடிவு செய்துள்ளது.
இதற்கமைய 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை முதற்கட்டமாக நன்கொடை யாக வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக மியன்மார் தூதரகம் அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ளவ ர்களின் நலன்களுக்கே இந்த நன்கொடை பயன்படுத்தப் படவுள்ளதாகவும் தூதரகம் தெரிவித்தது.
இலங் கையில் அரசுப் படையினரும், விடுதலைப் புலிகளும் செய்த போர்க் குற்றங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியை தமிழ் மக்களின் தோல்வி என கருதி இலங்கை அரசு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று பான் கி மூன் பேசினார். இலங்கை விவகாரம் குறித்து அவர் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில் நீடித்து நடந்த இனப் போரின்போது இரு தரப்பும் போர்க் குற்றங்கள் செய்திருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே இதுகுறித்து விரிவான போர்க் குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்
சர்வதேச அளவில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும். எப்படிப்பட்ட முறையில் இது அமைய வேண்டும் என்பதை நான் விவரிக்க விரும்பவில்லை. இருப்பினும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள், மனித உரிமை நியதிகள் மீறல் உள்ளிட்டவை குறித்த முக்கியமான புகார்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
எந்த விசாரணையாக இருந்தாலும் அது அர்த்தப்பூர்வமாக இருக்க வேண்டும். ஐ.நா. உறுப்பினர்களின் ஆதரவுடன் அது நடைபெற வேண்டும். பாரபட்சமில்லாமலும் அந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் பான்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது செயலிழந்து போன ஒரு இயக்கம் என்பதனாலும் சிறிலங்கா அரசாங்கத்தின் கூற்றின் படி அந்த இயக்கத்தின் அனைத்து தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டமையாலும் – அமெரிக்காவும் ஏனைய மேற்குலக அரசுகளும் விடுதலைப் புலிகளை தமது பயங்கரவாதப் பட்டியல்களில் இருந்து நீக்க வேண்டும் என ‘ஒபாமாவுக்கான தமிழர்கள்’ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.