தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில் பெற்ற வெற்றியை கொண்டாடும் நீண்ட நாள் நிகழ்வுகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையின் 15 உறுப்பு நாடுகளுடனான சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வெற்றிக் களிப்பில் ஈடுபடுவதைவிட நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரினதும் வேதனைகளைப் பகிர்ந்து கொள்வதே காலத்தின் தேவையாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.