அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

நீதிமன்றங்களில் புர்கா, ஹிஜாப் அணிய அவுஸ்திரேலிய நீதிமன்றம் தடை உத்தரவு

girls.jpgமுஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க வரும்போது புர்கா,ஹிஜாப் ஆகிய ஆடைகளை அணியக்கூடாதென அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை அவுஸ்திரேலியாவை பொறுத்த வரை இதுவே முதற் தடவையாகும். பாகிஸ்தானைச் சேர்ந்த தன்சிமா 36 என்ற பெண் ஏழு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்.

அண்மையில் இப்பெண் நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க வருகையில் புர்கா ஆடை அணிந்துகொண்டு வந்தார். இதை அகற்றிவிட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அப்பெண் தர்மசங்கடமான நிலைக்குள்ளானார்.

இவ்வாறானதொரு தடை அவுஸ்திரேலியாவில் பிறப்பிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். இப்பெண் சார்பாக வாதாடிய சட்டத்தரணி இதை நிராகரித்தார். 17 வயது முதல் தன்சிமா புர்கா அணிந்து வருகிறார். இதை முஸ்லிம் பெண்கள் கெளரவமான ஆடையாகக் கருதுகின்றனர். எனவே நீதிமன்றத்தின் உத்தரவு நியாயமானதல்ல எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த நீதிபதி, புர்கா மத ஆடையல்ல. அது கலாசார ஆடையே. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் புர்கா ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் நீதிமன்ற வளாகமும் ஒன்று. முகத்தை முற்றாக மூடிய நிலையில் சாட்சியமளிக்கப்படுகையில் முகத்தின் அபிநயத்தை கண்டுகொள்ள முடியாதுள்ளது. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் புர்கா ஹிஜாப் களையப்படவேண்டுமென்றார். இவ்விடயம் அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

ரோம் இலங்கை தூதரகத்தில் நிதி மோசடி; இரு அதிகாரிகள் கொழும்புக்கு

4 ரோமிலுள்ள இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக இரண்டு அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதுவர் ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். தாம் தூதரகத்தில் நிதி தொடர்பான பிரிவில் பணியாற்றியதுடன் மேலும் ஒரு அதிகாரியும் தம்முடன் பணிபுரிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி அதிகாரி தவறான முறையில் நிதியினைக் கையாண்டுள்ளதுடன் ஒரு சமயம் அவர் வெளியார் ஒருவருக்கு வட்டி க்குப் பணம் வழங்கியதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இது தொடர்பான உள்ளக விசாரணையின் போது அவர் இதுபற்றி தெரிவித்துள்ள தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

cricket.jpgஇங்கி லாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் ஆட்டத்தில் முகமது அமிர், சயீத் அஜ்மல் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இங்கிலாந்து வீரர் அலாஸ்டர் குக்கின் சதம் விழலுக்கு இறைத்த நீரானது. முன்னதாக இங்கிலாந்து பாகிஸ்தான் தங்களது முதல் இன்னிங்ஸில் முறையே 233 மற்றும் 308 ஓட்டங்கள் எடுத்திருந்தன.

இந்நிலையில், வெள்ளிக் கிழமை தனது இரண்டாவது இன்னிங் ஸைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் அலாஸ்டர் குக் மட்டும் சிறப்பாக ஆடி 110 ஓட்டங்களை குவித் தார். பீட்டர்சன் (23), டிராட் (36) ஆகியோர் குறிப்பிடும் படியான ஓட்டங்களை எடுத்தனர்.

கொலிங்வுட் (3), மோர்கன் (5), பிரையார் (5), ஸ்வான் (6), பிராட் (6) என வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தது அந்த அணிக்கு சோதனையாக முடிந்தது.

148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தனது 2 வது இன்னிங்ஸைத் தொடங்கியது பாகிஸ்தான். அந்த அணியின் சல்மான் பட் (56), இம்ரான் பர்கத் (33), முகமது யூசுப் (33) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 41.4 வது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது பாகிஸ்தான்.

இதை அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனது முதல் வெற்றியைப் பெற்றது அந்த அணி (1 – 2). 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்ட பாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகமது அமிர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு நாள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் 4 வது நாளிலேயே பாகிஸ்தான் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

புனர்வாழ்வு பெற்ற 30 பேர் 27 இல் பெற்றோரிடம் ஒப்படைப்பு – 59 குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்பு உதவிகள்

புனர்வாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 30 பேரை எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களு க்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

இம்முறை ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார் மற்றும் சுகயீனமுற்ற 30 பேரை விடுவிக்க நட வடிக்கை எடுத்திருப்பதாகவும் ஆணையாளர் கூறினார்.

மோதல்களின் போது புலி உறுப்பினர்களுடன் தொடர்புடையவர்கள் சரணடையுமாறு இராணுவத்தினர் கேட்டுக் கொண்டதற்கமைய சரணடைந்த பல்வேறு வயதிற்குட்பட்டவர்கள் வெவ் வேறு புனர்வாழ்வுநிலையங்களின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான விசாரணைகள் முடிவடைந்த பின்னர் வயதெல்லை அடிப்படையில் இவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து இதுவரையில் 3080 முன்னாள் புலி உறுப்பினர்கள் தமக்குரிய விசாரணைகள் முடிவடைந்ததையடுத்து பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். இதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளையுடைய தாய்மார் மற்றும் கடும் சுகயீனமுற்ற 30 பேரே அடுத்த கட்டமாக விடுவிக்கப்படவிருப்பதாகவும் ஆணையாளர் கூறினார்.

இதேவேளை, அன்றைய தினம் புனர்வாழ்வு நிலையத்தில் வைத்து சட்டபூர்வமாக திருமணம் செய்து வைக்கப்பட்ட 59 குடும்பத்தாருக்கு சுய தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தோட்டப் பயிர்ச் செய்கைக்கான உபகரணங்கள், மரக்கன்றுகள், களை நாசினிகள் ஆகியனவும் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு அமை ச்சுடன் இணைந்து விவசாய அமைச்சு முன்னெடுத்து வருகிறது.

அவுஸ்திரேலிய – எழுபது வருடங்களின் பின்னர் தொங்கு பாராளுமன்றம்

aus.jpgஅவுஸ்தி ரேலியாவில் சனிக்கிழமை நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெறவில்லை. ஆனால் டொனி அபொட் தலைமையிலான எதிர்க்கட்சி பிரதமர் ஜுலியட் கிலாட் தலைமையிலான ஆளும்கட்சியைவிட ஒரு ஆசனத்தைக் கூடுதலாகப் பெற்றது.

மொத்தம் 150 ஆசனங்களைத் தெரிவு செய்ய சனிக்கிழமை அவுஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் நடந்தது.  இதில் 76 ஆசனங்களைப் பெற்ற கட்சியே ஆட்சியமைக்க முடியும். ஆனால் பிரதமர் தலைமையிலான கட்சி 72 ஆசனங்களையும் எதிர்க்கட்சி 73 ஆசனங்களையும் பெற்றது. எழுபது வீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையிலே இம்முடிவுகள் வெளியாகின.

முன்னாள் பிரதமர் கெவின்ரூட்டை தண்டிக்கும் வகையில் மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் மீதமாகவுள்ள ஐந்து ஆசனங்களின் முடிவுகள் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும் எழுபது வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் தொங்கு பாராளுமன்றம் அமையுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

1932ம் ஆண்டுக்குப் பின்னர் குறுகிய கால ஆயுள் தொழிற்கட்சிக்கு கிடைத்தமை இதுவே முதற்தடவையாகும். 2007ல் நடந்த பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்று கெவின்ருட் பிரதமரானார். இரண்டு மாதங்களுக்குமுன்னர் பிரதமர் கெவின்ருட்டுக் கெதிரான எதிர்ப்புகள் கட்சிக்குள்ளும் நாட்டிலும் ஏற்பட்டது. காலநிலைமாற்றக் கொள்ளை வரிவிதிப்பு, பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கை தொடர்பாகவே பிரதமர் மீதான எதிர்ப்பு வலுப் பெற்றது. இதையடுத்து கெவின்ருட் பதவி விலகி ஜுலியட் கிலாட் பிரதமரானார். அவுஸ்திரேலியவின் பெண் பிரதமர் என்ற பெருமையையும் ஜுலியட்கிலாட் பெற்றுக் கொண்டார்.

கட்சிக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி வளர்வதற்கிடையில் மீண்டுமொரு தேர்தலை ஜுலியட் கிலாட் அறிவித்தார். இதனால் அரசாங்கத்தின் ஆயுட்காலம் இடைநடுவில் துண்டிக்கப்பட்டது. தற்போது வெளியான முடிவுகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் ஜுலியட் கிலாட் இனிவருங்காலம் மோசமானதாக இருக்கும். அரசாங்கத்தை அமைப்பதற்கான பேரம் பேசும் பேச்சுக்கள் சூடுபிடிக்கும் என்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் டொனி அபொட் கூறுகையில் என்ன வகையிலும் தொழிற்கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சவார்த்தைகளில் தனது கட்சி மும்முரமாகச் செயற்படுமென்றும் டொனி அபொட் தெரிவித்தார்.

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை: விடை சொல்லிக் கொடுத்த 3 ஆசிரியர் மீது நடவடிக்கை

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் நேற்று நடைபெற்றதுடன், பரீட்சை மண்டபத்தில் விடைகளை மாணவர்களுக்கு வழங்கிய குற்றத்திற்காக மூன்று ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

கொழும்புக்கு வெளியே இவ்வாறு நடைபெற்றுள்ளதுடன் சம்பந்தப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிருந்த 2744 பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைகள் நேற்று நடைபெற்றதுடன், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் செம்டம்பர் 4ம் திகதி ஆரம்பமாகுமென குறிப்பிட்ட அவர் அதற்கான சகல ஏற்பாடுகளையும் பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ள தாகவும் தெரிவித்தார்

இலங்கை அணி வெற்றி

randiv.gifஇலங்கை இந்திய அணிகளுக்கிடையே தம்புள்ளையில் இன்று நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி 33.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

104 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 15.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்களை பெற்றது.

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 60 பில்லியன் ரூபா தேவை – அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவிப்பு

jaffna-town.jpgயாழ்.  மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை நிறைவு செய்ய 60 பில்லியன் ரூபா தேவை என யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் சியாவோ யூ. சர்வோ தலைமையிலான பிரதிநிதிகள் குழு வியாழன் மாலை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தது.

இக்குழுவினர் யாழ். செயலகத்தில் யாழ். அரச அதிகர் இமெல்டா சுகுமார் தலை மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலில் பேசிய யாழ். அரச அதிபர் கூறியதாவது,

யாழ். மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆறாவது திட்டமாக யாழ்ப்பாணம் – கிளிநொச்சிக்கிடையே யான குடிதண்ணீர் விநியோகத் திட்டத்திற்கு 20 ஆயிரம் பில்லியன் ரூபாவை ஒதுக்கி யுள்ளது. அத்துடன் அரச திணைக்கள புனரமைப்புக்கு 226 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 7 வீதிகள் புனரமைப்புக்கும் இறங்குதுறை புனரமைப்புக்கும் நிதி வழங்கி வருகிறது. நெடுந்தீவு – குறிக் கட்டுவான் இடையில் பயணிகள் சேவையிலீடுபடுத்துவதற்கான வேலைகளும் இடம்பெற்று வருகின்றன.

இதுதவிர சுகாதார சேவைகளுக்கு 160 மில்லியன் ரூபா, போதனா வைத் தியசாலைக்கு ஆயிரத்து 395.50 மில்லியன் ரூபா, விவசாயத்துறைக்கு 543.50 மில்லியன் ரூபா, சுயதொழில் கடன் தேவைகளுக்கு 100 மில்லியன் ரூபா, மின்சாரத் துறைக்கு ஆயிரத்து 123 மில்லியன் ரூபா, நீர்ப்பாசனத் துறைக்கு இரண்டாயிரத்து 810.38 மில்லியன் ரூபா, வீதி அபிவிருத்திக்கு 300 மில்லியன் ரூபா. இன்னமும் தேவைப்படுவதாக அரச அதிபர் எடுத்து விளக்கினார்.

வன்னியில் கைவிடப்பட்ட வாகனங்கள் – உரியவர்களை அடையாளம் காணும் பணி கிளிநொச்சியில் ஆரம்பம்

kilinochchi-district.jpgஇறுதிக் கட்ட யுத்தத்தில் பொதுமக்களால் கைவிடப்பட்டுப் பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்குக் கொண்டுவரப் பட்டுள்ள வாகனங்களுக்கான உரிமத்தை அடையாளம் காணும் பணிகள் நேற்று (21) மீண்டும் ஆரம்பமாகின.

இதற்கான நடமாடும் சேவை இன்று (22) ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன்  தெரிவித்தார்.

இன்றைய தினம் உரிமத்தை அடையாளம் காணும் பணியை நிறைவு செய்ய எதிர் பார்ப்பதாகவும் கூறினார். நேற்றைய தினம் 250 மோட்டார் சைக்கிள்களுக்கான உரிமையாளர்கள் தமது உரிமத்தை உறுதிப் படுத்தியுள்ளனர். வாகனப் பதிவுச் சான்றிதழ், இயந்திர இலக்கம் என்பன ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு உரிமம் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அதன் பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி மேற்கொள்ளப்படுமென்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் கணக் காளர் ஜெயராசா  தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய தேர்தலில் ஜூலியாவின் தொழிற்கட்சி ஆட்சியை இழக்கும் நிலை

அவுஸ்திரேலியாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் ஜூலியா கில்லார்ட்   தலைமையிலான தொழிற்கட்சி தோல்வியைத் தழுவும் சாத்தியம் காணப்படுகிறது.

12.5 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜூலியாவின் தொழிற்கட்சி 49.2 சதவீத வாக்குகளையும் கன்சர்வேட்டிவ் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி 50.8 சதவீத வாக்குகளையும் பெற்றிருப்பதாக அவுஸ்திரேலிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
2007 தேர்தலில் தொழிற்கட்சி பெற்றிருந்த வாக்குகளின் 3.5 சதவீதம் எதிரணிக் கூட்டணி வசம் சென்றுள்ளது. 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளால் தொழிற்கட்சி ஆட்சியை இழக்கக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகிறது.