அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அணுசக்தி கருவிகள் வழங்கத் தடை; இந்தியாவுக்கு எதிராக ஜி-8 நாடுகள் தீர்மானம்

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அணுசக்தி உற்பத்திக்கான தொழிநுட்ப மற்றும் கருவிகளை வழங்கக் கூடாது என்று ஜி- 8 நாடுகள் மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு இருப்பதால் இந்திய அரசு திகைப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அணு மின்சார உற்பத்திக்காக அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக அணு உற்பத்திக்கான மூலப் பொருட்களை வழங்கும் என்.எஸ்.ஜி. எனப்படும் 45 நாடுகள் கூட்டமைப்பின் அனுமதியும் பெறப்பட்டது.

அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடாததால் அணு தொழில்நுட்பத்தை வழங்கக் கூடாது என்று அந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், அமெரிக்காவின் தலையீடு காரணமாக அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையழுத்து போடாவிட்டாலும் கூட இந்தியாவுக்கு மட்டும் முழு விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், அணு சக்தியை அபாயகரமாக பயன்படுத்தாது என்று இந்தியாவுக்கு நற்சான்றும் வழங்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இத்தாலியில் நடந்த ஜி-8 வளர்ந்த நாடுகள் மாநாட்டில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: அணு ஆயுத பரவலை தடுக்கும் விதமாக அணு மூலப் பொருள் (யுரேனியம்) செறிவூட்டல் மற்றும் மறுசுழற்சி தொடர்பான தொழிநுட்பங்களை பிற நாடுகளுக்கு வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். இது குறித்து என். எஸ். ஜி. விதிகளை வலுப்படுத்த வேண்டும். அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு தொழில்நுட்பம் மற்றும் கருவியை வழங்குவதில்லை என்ற ஒருமித்த முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் என். எஸ். ஜி. எட்ட வேண்டும்.

அடுத்த ஆண்டில் இருந்து இதை அமுல்படுத்த நாங்கள் (ஜி-8) ஒப்புக்கொள்கிறோம். உலகளாவிய அளவில் இந்தத் தடையை அமுலுக்குக் கொண்டு வரும் வகையில் தனது பணிகளை விரைவாக என். எஸ். ஜி. முடுக்கி விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. தீர்மானத்தில் ஜி-8 நாடுகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட எட்டு நாடுகள் கையெழுத்திட்டு இருக்கின்றன. ஜி-8 மாநாடு முடிந் ததும், தீர்மானம் குறித்த அறிக்கை வெளியானது. அப் போது ஜி-8 மற்றும் ஜி-5 மாநாடுகளில் பங்கேற்பதற்காக சென்ற இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில் அணு ஆயுத பரவல் தடைச் சட்டத் தில் கையெழுத்திடாத இந்தியா போன்ற நாடுகளுக்கு யுரேனியா செறிவூட்டல் மற்றும் மறு சுழற்சி தொழில் நுட்பத்தையும், அணுசக்தி உற்பத்திக் கருவிகளையும் வழ ங்கக் கூடாது என்று தீர்மானத்தில் அமெரிக்காவே கையெ ழுத்திட்டு இருப்பதால் இந்திய அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

மட்டக்களப்பில் யுத்த சூழ்நிலை காரணமாக வீடுகளை இழந்த 118 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

மட்டக்களப்பு செங்கலடி – பதுளை வீதியிலுள்ள கிராமங்களில் கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது இருப்பிடங்களை இழந்த குடும்பங்களுக்கு சர்வோதயத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 118 வீடுகளும் நேற்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. கித்தூள், றூகம், கோப்பாவெளி ,பெரிய புல்லுமலை,கரடியனாறு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கே சகல வசதிகளையும் உள்ளடக்கிய இவ் வீடுகள் கையளிக்கப்பட்டதோடு மேலும் 32 வீடுகள் புனரமைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன.

றூகம் சரஸ்வதி வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற வைபவத்தில் சர்வோதயத்தின் நிறைவேற்று இயக்குநர் வின்னி ஆரியரட்ன கலந்து கொண்டு இவ் வீடுகளை கையளித்தார். இந் நிகழ்வில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த 250 பாடசாலை மாணவர்களுக்கும் ,15 பால் உற்பத்தியாளர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டன. மேலும் கித்தூள் கிராமத்தில் ஒன்று கூடல் மண்டபமொன்றும் சர்வோதய நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இதே வேளை சத்துருக்கொண்டான் சர்வோதயப் பண்ணையில் தொழில் பயிற்சி முடித்துக் கொண்ட 61 பேருக்கு தொழில் உபகரணங்களை வழங்கும் மற்றுமொரு வைபவமும் நேற்று நடைபெற்றது. ஒக்.ஸ. பார்ம் நிறுவனத்தின் இலங்கைக்கா வதிவிடப் பிரதிநிதி ஜோன் பார்ம் இதில் கலந்து கொண்டு அலுமினியம் பொருள் உற்பத்தி ,தச்சு மற்றும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் போன்ற துறைகளில் தொழில் பயிறிச்சி பெற்றவர்களுக்கு இந்த உபகரணங்களை வழங்கினார்.

15 பேருடன் இந்திய சரக்குக் கப்பல் கடற்கொள்ளையரால் கடத்தல்

சோமாலியா அருகே போஸாசா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்று விட்டதாக ஆஸ்திரேலிய இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் 15 இந்தியர்கள் இருந்தனர் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது. 

இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்திய சரக்குக் கப்பல் ஒன்று 15 பேருடன் சென்று கொண்டிருந்தபோது, போஸாசா துறைமுகத்திற்கு 14 கடல் மைல் தொலைவில் கடற்கொள்ளையர்கள் அதனை மடக்கி கடத்திச் சென்று விட்டனர்.

தற்போது அந்தக் கப்பல் சட்டத்தின் ஆட்சி இல்லாத, சோமாலியாவின் வட கிழக்குப் பிராந்தியத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு ராஜ்யத்திலிருந்து இந்தக் கப்பல் சோமாலியாவிலுள்ள துறைமுகத்திற்கு வந்தது. சரக்குகளை இறக்கி விட்டுத் திரும்பும்போதே இது கடத்தப்பட்டது. சவூதி அரேபியாவுக்கும், ஆபிரிக்க நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சரக்குப் போக்குவரத்தை கையாண்டு வரும் கப்பல் இது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார தனியார் நிறுவனம் தொடர்பாக ஆராய விசாரணைக் குழு!

jhon_senevirathna.jpgஇலங்கை மின்சார தனியார் நிறுவனம் (லெகோ) தொடர்பாக ஆராய விசேட விசாரணைக் குழுவொன்றை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டப்ளியூ. டீ.ஜே.செனவிரத்ன நியமித்துள்ளார். இக்குழு உரிய விசாரணைகளை  மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்குள் அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் இணை நிறுவனமாக கிழக்கிலும் தெற்கிலும் மின்சார விநியோகம்,  அபிவிருத்தி. நுகர்வேர் சேவை  மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட   இலங்கை மின்சார தனியார் நிறுவனம் தொடர்பில் ஊடகங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இக்குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையைக் கண்டறியும் முகமாகவே ஐவர் கொண்ட விசாரணைக் குழுவை அமைச்சர் நியமித்துள்ளார். 

மீன்களை தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலை தெற்கில்- அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தகவல்

felixperera.jpgமீன்களை தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலையொன்றை தெற்கில் அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். நியுசிலாந்து நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இத்தொழிற்சாலை காலி மாவட்டத்திலுள்ள அக்மீமன என்ற இடத்தில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்துக்கு இலங்கை முதலீட்டுச் சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இலங்கையில் பயங்கரவாதம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மீன்பிடித்தடைகள் நீக்கப்பட்டதால் இப்போது மீன்பிடித்துறை அபிவிருத்தியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வேடுவப் பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்

0000.jpgவீட்டு வேலைக்காக அமர்த்தப்படுகின்ற வேடுவப் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக ஆதிவாசிகளின் வேடுவத் தலைவர் ஊருவரியகே வன்னி அத்தோ தெரிவித்தார். இன்றைய நாகரிக உலகில் எமது ஆதிவாசிகளும் தேசிய நீரோட்டத்தில் இணைவது காலத்தின் தேவை. இதனால் வனப் பிரதேசத்தில் மட்டுப்படுத்தப்பட்ட எமது சமூகத்தை வெளியுலகிற்குக் கொண்டுவருவதற்குப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றவேளை எம் இளம் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் பிரயோகிக்கப்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அண்மைக்காலமாக எமது இனத்தைச் சேர்ந்த இளம் வயதினர் கொழும்பு போன்ற தூர இடங்களுக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர். இருப்பினும் அவர்கள் தரக்குறைவாக நடத்தப்படுவது மாத்திரமல்லாது வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் இருவரைப் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து சிறுவர் நன்நடத்தைப் பிரிவினர் மீட்டெடுத்ததாகவும் அவர்கள் இருவரும் கொழும்பிலுள்ள நன்நடத்தை முகாமில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் ஊறுவரியகே வன்னி அத்தோ கடும் விசனத்துடன் தெரிவித்தார்.

சீனாவில் 6 தடவை நிலநடுக்கம் 18 ஆயிரம் வீடுகள் தரை மட்டம்

china_yunnan_.gifசீனாவில் உள்ள யுன்னன் பிராந்தியம், தென்மேற்கு சீனா ஆகிய இடங்களில் நேற்று இரவு ஆறு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6 ரிச்டர் அளவில் ஏற்பட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 600க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனரென சீனா அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியதுடன் 75 ஆயிரம் வீடுகள் சேதமடைந்ததாக ஷிங்குவா செய்திச் சேவை தெரிவித்தது.

நிலநடுக்கத்தின் பின்னர் 9 தடவைகள் சிறு அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இது மூன்று தொடக்கம் 4.1 ரிச்டர் அளவீடாக இருந்த தென அமெரிக்க பூகற்பவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இடம்பெயர்ந்தோரை தங்கவைக்கவென 5000 கூடாரங்கள் அவசியமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4000 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் சுமார் 1000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட யுன்னன் பிரதேசம் மலைப்பாங்கான தென்பதால் சுமார் 4 இலட்சம் பேரை அங்கிருந்து அகற்றி வேறு இடங்களில் தங்கவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு சிக்பொன் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 90 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும் 3 இலட்சத்து 75 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர்.

முந்தைய சேத விபரங்களை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்கிறது ஐ.நா.

110709gordon.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் வன்னியில் கடமையாற்றிய மருத்துவர்களின் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு ஏற்றவாறு பொதுமக்கள் சேதம் தொடர்பில் தாம் வெளியிட்டிருந்த விபரங்களில் மாற்றம் செய்யப்போவதில்லை என இலங்கையில் உள்ள ஐ.நா. பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

வன்னிக் களமுனையில் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயங்கள் குறித்த தமது தகவல்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதென என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் கோர்டன் வைஸ் வலியுறுத்தியுள்ளார்..

புலிகளின் அழுத்தம் காரணமாகவே தாம் சர்வதேச ஊடகங்களுக்கு மிகைப்படுத்திய தகவல்களை வழங்கியதாக வன்னி மருத்துவர்கள் அண்மையில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தனர்.

தவிர, லண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிகையில், போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான வவுனியா நிவாரண முகாம்களில் ஒரு வாரத்துக்கு 1400 பேர்கள் இறக்கிறார்கள் என்ற மதிப்பீட்டுடன் தாங்கள் உடன்படவில்லை என்றும் கோர்டன் வைஸ் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மாணவரின் உயர் கல்வி மேம்பாட்டுக்கு விசேட திட்டம் – சார்க் சிறுவர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து பிரதமர் தகவல்

pmsrilaka.jpgஇடம் பெயர்ந்த மாணவர்களின் உயர் கல்வி மேம்பாட்டுக்கென 1058 மில்லியன் ரூபா செலவில் திட்டமொன்றை அரசாங்கம் வகுத்துள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். சார்க் பிராந்திய நாடுகளிலுள்ள 18 வயதுக்குக் கீழ்பட்ட 50 கோடி சிறுவர்களின் எதிர்கால கனவுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியது எமது பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) சிறுவர்கள் தொடர்பான அமைச்சர்கள் மட்ட நான்காவது மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

இலங்கை சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் திருமதி சுமேதா ஜி. ஜயசேனவின் தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிதமர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் மூலம் எமது நாட்டின் சிறுவர்களுக்கு சிறந்ததோர் எதிர்காலம் குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக அவர்கள் கண்டு வந்த வன்முறைகளுக்கும், அழிவுகளுக்கும் இப்போது முடிவு கட்டப்பட்டுள்ளது. எமது தேசத்தை கட்டியெழுப்பும் விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் பல தியாகங்களுக்கு மத்தியில் எமது படைவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி அர்த்தமுள்ளதாகும்.

பயங்கரவாதம் காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு வடக்கின் வசந்தம் என்ற புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மாணவர்களின் உயர் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கு 1058 மில்லியன் ரூபா செலவில் திட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.

சார்க் பிராந்தியத்தின் சிறுவர்கள் குறித்த இந்த 4வது மாநாட்டில் ஒரு முக்கிய விடயத்தை நாம் மறந்துவிட முடியாது. தெற்காசியாவின் சனத் தொகையில் 40 வீத மானவர்கள் 18 வயதுக்கு கீழ்பட்டவர்கள் என்பதை நான் நினைவுபடுத்திக் கொள்கின்றேன். இது எண்ணிக்கை அடிப் படையில் சுமார் 50 கோடியாகும்.

50 கோடி சிறுவர்களின் சிறந்த எதிர்கால கனவுகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். இன்று நாம் எந்தளவுக்கு எமது கடமைகளை நிறைவேற்றுகின்றோமோ அதைப் பொறுத்துத்தான் எமது எதிர்கால சந்ததியின் அபிவிருத்தியும் வளர்ச்சியும் அமைந்திருக்கும்.

சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம் அனைத்து சார்க் நாடுகளாளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுவர்களுக்கான எமது வேலைத்திட்டங்கள், கொள்கைகள், விளக்கங்கள் என்பனவற்றை வடிவமைத்துக் கொள்ள நல்லதோர் களம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்களில் எமது மக்களுக்கான வறுமை ஒழிப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார்.

இன்றும், நாளையும் வவுனியாவில் நடமாடும் சேவை

வவுனியாவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள மக்கள் நடமாடும் சேவையில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சும் பங்கு பற்றி மக்களுக்கு சேவையாற்ற உள்ளது.

இவ்வமைச்சினால் கையாளப்படும் விடயங்கள் சம்பந்தமாக பொது மக்களிடமி ருந்து கிடைக்கும் கோரிக்கைகள், முறைப்பாடுகள் என்பன கவனத்திற்கு எடுக்கப்பட்டு அவை சம்பந்தமாக உடனடி நிவாரணங்கள் வழங்கமுடியுமாயின் அவை வழங்கப்படும்.

தபால் மற்றும் தொலைத் தொடர்பு பிரதி அமைச்சர் எம். எஸ். செல்லச்சாமியின் தலைமையில் அவரது பிரத்தியேக செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் தபால் மா அதிபர் அவரது உதவியாளர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.