இன்றும், நாளையும் வவுனியாவில் நடமாடும் சேவை

வவுனியாவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள மக்கள் நடமாடும் சேவையில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சும் பங்கு பற்றி மக்களுக்கு சேவையாற்ற உள்ளது.

இவ்வமைச்சினால் கையாளப்படும் விடயங்கள் சம்பந்தமாக பொது மக்களிடமி ருந்து கிடைக்கும் கோரிக்கைகள், முறைப்பாடுகள் என்பன கவனத்திற்கு எடுக்கப்பட்டு அவை சம்பந்தமாக உடனடி நிவாரணங்கள் வழங்கமுடியுமாயின் அவை வழங்கப்படும்.

தபால் மற்றும் தொலைத் தொடர்பு பிரதி அமைச்சர் எம். எஸ். செல்லச்சாமியின் தலைமையில் அவரது பிரத்தியேக செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் தபால் மா அதிபர் அவரது உதவியாளர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *