பரீட்சை மீள்மதிப்பீட்டு விண்ணப்பம் பல்கலை நுழைவை பாதிக்காது – பாராளுமன்றில் அமைச்சர் சுசில் தெரிவிப்பு

susil1111.jpgக.பொ.த.  உயர்தரப் பரீட்சைன் “இஸட்” புள்ளி பெறு பேறுகளின் அடிப்டையிலேயே பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்களென கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

2008ம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்று மீளாய்வு காரணமாக எந்த மாணவருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது தொடர்பாக எமக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது குறித்து நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். ஜே.வி.பி. எம்.பி அனுரகுமார திஸாநாயக்க நேற்று சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்த கவனயீர்ப்புக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது: 2008ம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி வெளியிடப்பட்டது. இந்த பெறுபேறுகள் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் ‘இஸட்’ புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் மிகக் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டன. முதலாவது மதிப்பீடு செய்வதற்கு நான்கு மாதங்களும் ஒன்பது நாட்களுமே எடுத்துக் கொள்ளப்பட்டன. இப்பெறுபேறுகளில் திருப்தியடையாத மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட மீள் மதிப்பீட்டு கோரிக்கையின் அடிப் படையில் மேற்கொள்ளப்பட்ட மீள் மதிப்பீடு காரணமாக 1.28 சதவீத பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பப் பத்திரங்களுக்குரிய விடைத்தாள்களே மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

ஆகவே சகல பெறுபேறுகளிலும் பாரிய மாற்றங்கள் இடம்பெற வாய்ப்பில்லை. முதலாவது மதிப்பீட்டு க்குட்பட்ட பெறுபேறு மீள்பரிசீலினையின்போது திருத்தப் படுமாயின் புள்ளிகளிலும் மாற்றம் ஏற்பட்டு மாணவர்கள் பெறுகின்ற தரங்களிலும் வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இது ஏனைய மாணவர்கள் பெற்றிருக்கும் தரங்களில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *