அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

புலிகளுக்காக நிதி சேகரிக்கும் கட்டமைப்பு குலையவில்லை – இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை

160909narayanan.jpgஇலங்கை இராணுவம் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையினால் புலிகள் தலைமைத்துவம் அழித்தொழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால்,  பயங்கரமான அந்த இயக்கத்தின் அச்சுறுத்தல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடில்லியில் நடைபெற்ற பொலிஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். நாராயணன் மேலும் கூறியதாவது:

புலிகளுக்கு நிதியளித்துவரும் பிரதான மூலமான விசாலமாக பரந்திருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவியினால் அந்த இயக்கம் புத்துயிர் பெற்று மீண்டும் தலைதூக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை நிராகரிக்க முடியாது.

அந்த இயக்கத்திற்கு நிதியளிக்கும் கட்டமைப்பில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. உலகெங்கிலும் அதிருப்தியுடன் இருந்துவரும் புலம்பெயர் தமிழர்கள் இந்த பயங்கரவாத இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற்று ஆயுதம் தூக்க உதவுவார்கள். இத்தகைய அச்சுறுத்தலை அவதானித்து அதனை எதிர்கொள்ளத் அனைவரும் தயாராக இருக்கவேண்டும் என்றார்.

இந்தியா-பன்றி காய்ச்சல் பலி 200ஐ தாண்டியது

16-swine-flu.jpgபன்றி காய்ச்சல் நோய்க்கு காரணமாக 8 பேர் இறந்ததை அடுத்து இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. அதேநேரத்தில் நேற்று மட்டும் மேலும் 229 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,588 ஆக உயர்ந்துள்ளது.

மெக்சிகோவை முந்திவிடும்…

இந்தியாவில் பலி எண்ணிக்கை இதே வேகத்தில் தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் இந்தியா, இந்த பன்றி காய்ச்சல் தோன்றிய மெக்சிகோவை முந்திவிடும் என கூறப்படுகிறது.

நேற்று வரை மெக்சிகோவில் 23 ஆயிரத்து 245 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுத்தி, அதில் 215 பேர் பலியாகியுள்ளனர். அதாவது இந்தியாவை விட சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை இரு நாடுகளிலும் ஒரே போல் தான் உள்ளது.

உலக அளவில் இந்த நோய் பிரேசிலில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு இதுவரை 884 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 641 பேரும், அர்ஜென்டினாவில் 514 பேரும் இறந்துள்ளனர்.

நாட்டுக்கு எதிரான தலைவராகவே ரணில் விக்கிரமசிங்க செயற்படுகிறார் – அலரி மாளிகை நிகழ்வில் ஜனாதிபதி

slpr080909.jpgபாராளு மன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவராக அல்லாமல் நாட்டிற்கு எதிரான தலைவராகவே ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவரும் நாட்டை ஆதரிக்கும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டைக் காட்டிக் கொடுத்து நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதில் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படும் இதுபோன்ற ஒரு எதிர்க்கட்சித் தலைவரா இந்நாட்டுக்குத் தேவை? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் கலந்துகொண்ட நிகழ்வொன்று நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; தென் மாகாணத் தேர்தலை முழு நாடும் அவதானித்துக்கொண்டிருக்கின்றது. அதுமட்டுமன்றி சர்வதேசமும் இத்தேர்தலை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருகின்றது. குறிப்பாக அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

இந்நாட்டிற்கு ஜனாதிபதி ஒருவரை உருவாக்கித் தந்தமை தொடர்பிலேயே இம்மாவட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இம்மாவட்டத்தில் மூன்று இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்ட வாக்குகள் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தன.

நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் நடாத்தப்படும் இரண்டாவது தேர்தல் இது. முதலாவது ஊவா மாகாண சபைத் தேர்தலும் இரண்டாவதாக தற்போது தென் மாகாண சபைத் தேர்தலும் இடம்பெறப்போகிறது. முப்பது வருடகால பயங்கரவாதம் முழு மையாக ஒழிக்கப்பட்டு அபிவிருத்தியில் நாடு கட்டியெழுப்பப்படும் இன்றைய சூழலில் சர்வதேச நாடுகளில் எமது நாட்டை விற்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

எமது எதிர்க் கட்சித் தலைவர் பாராளுமன்றத்துக்கு எதிர்க் கட்சித் தலைவராக இல்லாமல் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு நாட்டுக்கு எதிர்க் கட்சித் தலைவராகச் செயற்படுகிறார். இப்படியொரு எதிர்க் கட்சித் தலைவர் இந்நாட்டுக்குத் தேவையா? நாட்டைக் காட்டிக்கொடுக்கும் அவருக்கு மக்கள் சிறந்த பதில் கொடுக்கும் யுகம் தற் போது உருவாகியுள்ளது.

தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கன்றி இரண்டாவது இடத்தையாவது தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சி செய்கிறது.

முப்பது வருடகால பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் நாம் இல்லாதொழித்துள்ளோம். புலிகள் ஸ்ரீமாபோதி மீதும், தலதா மாளிகை மீதும் தாக்குதல் நடத்தியதை நாம் சாதாரணமாக நினைக்க முடியாது. இது முழு இனத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றே நாம் கருதவேண்டும். எமது அடையாளத்தையே அவர்கள் அழிக்கத் துணிந்தார்கள்.

அப்பாவித் தாய்மார், குழந்தைகள், மதத் துறவிகள் என சகலரையும் கொன்றுகுவித்த அவர்கள் கொழும்பில் மட்டுமன்றி தென் மாகாணத்தில் அக்குறஸ்ஸவிற்கும் வந்து குண்டுத் தாக்குதலை நடத்தும் அளவுக்கு முன்னேறிச் சென்றனர். அத்தகைய பயங்கர வாதம் ஒன்றையே நாம் ஒழித்துள்ளோம்.

பாரிய அபிவிருத்திப் பயணமொன்றை முன்னெடுக்கும் இவ்வேளையில் மக்களின் பூரண ஆதரவு எமக்குத் தேவை. அம்பாந் தோட்டை மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்த்துவைப்பதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் பிரேரணையொன்றை பாராளுமன்றத்திற்கு முன்வைத்து அதனை நிறைவேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எமது எதிர்கால சந்ததியினர் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதற் கான பொறுப்பும் எமக்குள்ளது. இவற்றிற் கெல்லாம் சிறந்த தலைமைத்துவம் அவசியம். அதற்கு அம்பாந்தோட்டை மக்களின் பூரண ஆதரவு அவசியம். தென் மாகாணத்தில் வன்முறை இல்லாத தேர்தல் இடம்பெறவேண்டும்.
எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

தங்கத்தை விற்று நிதி தேடும் அவசியம் அரசுக்கு கிடையாது – ரணிலுக்கு அமைச்சர் யாப்பா பதில்

anura_priyadarshana_yapa.jpg
எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறுவதைப் போல், மத்திய வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று நிதி தேட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்குக் கிடையாதென்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

அரசியல் லாபம் கருதி, நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் முயற்சிப்பது கவலைக்குரியதாகுமெனத் தெரிவித்துள்ள அமைச்சர் யாப்பா, அவர் வகிக்கும் பொறுப்பான பதவிக்கும் பொருத்தமில்லாத செயலாகுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று நிதியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் செயற்படுவதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கூற்றுக்குப் பதில் அளித்து, விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-

மத்திய வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்று நிதி தேடவேண்டிய அவசியம் அரசாங்கத்திற்குக் கிடையாது. அவ்வாறான தீர்மானமொன்றை அரசாங்கமோ, மத்திய வங்கியோ மேற்கொள்ளவில்லை. எனவே, எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் முற்றிலும் பொய்யானதாகும். இது வரை அரசாங்கத்தின் கையிருப்பில் உள்ள நிதியின் பெறுமதி நான்காயிரம் அமெரிக்க டொலர்களையும் தாண்டியுள்ளது.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள அபிவிருத் தித் திட்டங்களுக்கும் எந்தக் குறைபாடும் இல்லாமல் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கும் பயன்படுத்து வதற்குத் தேவையான நிதி அரசாங்கத்திடம் உண்டு.

பெற்ற கடனை உரிய காலத்தில் செலுத்தும் நாடு என்ற பெருமையை இல ங்கை தக்க வைத்துக்கொண்டுள்ளது- உண்மையிலேயே நாட்டின் தங்கக் கையிருப்பை விற்றுப் பணம் தேடியது எப்போதென்றால் ஓர் அபிவிருத்தியைக் கூட மேற்கொள்ளப் படாத, ஒருவருக்குக் கூட தொழில் வழங் காத 2003 – 2004 ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் என்பதை அவருக்கு ஞாபகமூட்ட விரும்புகின்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு நாட்டுக்கும் தலைவணங்காத நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும் – அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

maithripalasirisena.jpgஉலகில் வேறு எந்த நாட்டுக்கும் தலைவணங்காத கெளரவமிக்க நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஓரிரு வருடங்களில் இது சாத்தியமாகுமென தெரிவித்த அமைச்சர், புதிய அரசியல் பரிமாணமொன்றைக் கட்டியெழுப்பி வருவதாகவும் தெரிவித்தார். தென்மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.பி.பி.யினர் வெற்றியை எதிர்பார்க்க மாட்டார்கள். தாம் வெற்றிபெறப் போவதில்லை என்பதை அவர்களே புரிந்து கொண்டுள்ளார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தென் மாகாண சபையில் போட்டியிடும் அபேட்சகர்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-

தென்மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை 80 வீத மேலதிக வாக்குகளால் வெற்றிபெறச் செய்வது அம்பாந்தோட்டை மாவட்ட மக்களின் பொறுப்பாகும். அம்பாந்தோட்டை மாவட்டம் பல வரலாற்று வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ள மாவட்டமாகும். இம்மாவட்டம் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த யுகமொன்றும் வரலாற்றில் இருந்துள்ளது. சர்வதேச ரீதியிலும் பல நாடுகள் சிதைந்துபோன வரலாறுகள் உள்ளன. இதற்குக் காரணம் சிறந்த தலைமைத்துவம் இல்லாமையே ஆகும்.

பயங்கரவாதத்தினால் எமது நாடு ஒரு துன்ப வரலாற்றை சந்திக்க நேர்ந்தது. அது நாடு துண்டாடப்பட்டதொரு யுகம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அத்தகையதொரு யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கு தெற்கு மக்களின் பூரண பங்களிப்பும் முக்கிய காரணமாகும். புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு தெற்கு மக்களின் பூரண பங்களிப்பு அவசியம்.  இதன் மூலமே சர்வதேச எதிரிகளுக்கும் எம்மால் பதில்கொடுக்க முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்நிகழ்வில் உரையாற்றுகையில், அமெரிக்க ஜனாதிபதிகளினால் செய்ய முடியாத பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி கொண்டதால் உலக நாடுகள் அனைத்தும் அவரைப் புகழ்கின்றன.

தென் மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி.யினரின் விமர்சனங்கள் வெறும் புஸ்வானமே. அவர்களால் எதையும் சாதிக்க முடியாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று புத்தளம் நகர சபையின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

150909puttalam-wab.jpgபுத்தளம் நகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  ஆசிய பவுண்டேசனின் அனுசரணையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் புத்தளம் நகர சபையின் உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.எம்.முஹ்ஸி தலைமையில் புத்தளம் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

புத்தளம் நகர சபையின் பணிகள் குறித்து மக்களுக்கும், உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கவனத்திற்கும் கொண்டு வருவதே இதன் முக்கிய நோக்கம்.

‘puttalamucp@yahoo.com’ என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு புத்தளம் நகர சபையின் விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மஹிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளையை சந்தித்துள்ளார்

150909navifora.jpgமனிதவு ரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதன் பிள்ளையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
 
இதன்போது, இடம்பெயர்ந்தோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கையாளும் முறைகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
 
அதேவேளை, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முனைப்புகள் குறித்து அவர் இதன்போது, நவனீதம்பிள்ளைக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தநிலையில், சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகள் நடத்தியது குறித்து அதை தாம் வரவேற்பதாக நவனீதம்பிள்ளை வெளியிட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நடிகை அனார்கலிக்குக் கொலை அச்சுறுத்தல்

150909anarkali.jpgசுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் தென் மாகாண சபை தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நடிகை அனார்கலிக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அவர் காலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்கு சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் இன்னொரு வேட்பாளரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார் 

242 கிலோ வெடிமருந்துகள், 6733 துப்பாக்கிரவைகள் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpg242 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள், 56 கிலோ எடையுள்ள 11 கிளேமோர் குண்டுகள், 6733 பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு கிழக்கு மற்றும் தாராவிக்குளம் பிரதேசத்திலிருந்தே இந்த வெடிமருந்துகள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

கிழக்கில் தேடுதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் 232 வது படையணியினர் தாராவிக்குளம் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பிரதேசத்திலிருந்து ஒவ்வொன்றும் 27.5 கிலோ எடையுள்ள சி-4 ரக அதிசக்திவாய்ந்த வெடிமருந்துகள் 04 (இதன் மொத்தத் தொகை 110 கிலோ) ரி-56 ரக ரவைகள் – 2250, வெடிக்கவைக்கும் கருவிகள் – 4000 மற்றும் உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் புலிகளால் கைவிடப் பட்ட நிலையில் காணப்பட்ட பெருந்தொ கையான ஆயுதங்களை இராணுவத்தின் எட்டாவது அதிரடிப் படையினர் மீட்டெ டுத்துள்ளனர்.

132 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள், 10 கிலோ எடை யுள்ள வெடிமருந்து தூள்கள், 16 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் – 02, 5 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் – 02, 2 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள் -07 (இதன் மொத்தத் தொகை 56 கிலோ) வாகனங்களுக்கு பொருத்தக் கூடிய தற்கொலை குண்டுகள் – 19, தற் கொலை அங்கிகள் – 57, 9 மி.மீ. பிஸ்டல் ரவைகள் – 4409, வெடிக்கவைக்கும் கரு விகள் – 1219, 82 மி. மீ. மோட்டர் குண்டு கள் – 132 மற்றும் உபகரணங்களை மீட்டெ டுத்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும் : பெப்ரல்

தேர்தல்களில் பேட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி, பொது, மாகாணசபை மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது கட்சிகள், கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,  “உடல் அழகு அல்லது பண செல்வாக்கைக் கொண்டு தேர்தல்களில் வெற்றியீட்ட எடுக்கப்படும் முனைப்புக்கள் ஆரோக்கியமானவை அல்ல.

பொருளாதார ரீதியில் வலுவிழந்த ஒரு வேட்பாளர் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத நிலைமை தற்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது. தேர்தல்களில் போட்டியிடுவதற்கு குறைந்த பட்ச தகுதி நிர்ணயிக்கப்படும் வரையில் அரசியலில் இந்த ஏற்றத் தாழ்வு தொடரவே செய்யும். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போன்ற பிரதான கட்சிகள் உடல் வசீகரம், பண பலம், பிரபல்யம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்கின்றன.

சில நாடுகளில் தேர்தல் பிரசாரங்களுக்காகச் செலவிடப்பட வேண்டிய தொகை கூட வரையறுக்கப்பட்டே உள்ளது. பங்களாதேஷில் பொதுத் தேர்தல் ஒன்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் பத்து டாக்காக்களை மட்டுமே செலவிட முடியும் என வரையறுக்கப்பட்டுள்ளது”