சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் தென் மாகாண சபை தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நடிகை அனார்கலிக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக அவர் காலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனக்கு சுதந்திர ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிடும் இன்னொரு வேட்பாளரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்