அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

1948 தொலைபேசி ஊடாக இலவச சுகாதார ஆலோசனை

images.jpgபுகையிலைப் பாவனை மற்றும் புகைப்பிடித்தல் பழக்கவழக்கங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக தொலைபேசி ஊடாக இலவச ஆலோசனை வழங்கும் சேவையொன்று இன்று 31ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருக்கி ன்றது.

உலக புகையிலை பாவனை எதிர்ப்பு தினத்தின் நிமித்தம் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்ற இச்சேவைக்கு நாடு சுதந்திரமடைந்த வருடமான 1948ம் ஆண்டே இலக்கமாக வழங்கப்பட்டிருப் பதாக அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

1948 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் புகையிலை பாவனை, புகைப் பிடித்தல் பழக்கவழக்கம் என்பவற்றைத் தவிர்ந்து கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.

இப்பழக்கவழக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் தெளிவு படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆலோசனைச் சேவையில் உளவள மருத்துவ நிபுணர்களும், பொதுமருத்துவ நிபுணர்களும் ஆலோசனை வழங்குவர் என்றும் அவர் கூறினார்.

வடமேல் மாகாண சபையில் இன்று சத்தியப்பிரமாணம்

வடமேல் மாகாண அமைச்சர்களான நெரஞ்சன் விக்ரமசிங்க, சாந்த பண்டார, அருந்திக பெர்னாண்டோ ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலின் போது பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து மூன்று மாகாண அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு ள்ளனர்.

விவசாய கமத்தொழில் கால் நடை அபிவிருத்தி அமைச்சராக டி.பீ. ஹேரத், பாதைகள், மின்சாரம், வீடமைப்பு, மீன்பிடித்துறை அபிவிருத்தி அமைச்சராக சனத் நிஷாந்த பெரேரா, சமூக நல அபிவிருத்தி சிறுவர் பராமரிப்பு, மகளிர் விவகார அமைச்சராக குணதாச தெஹிகம ஆகியோர் இன்று (31) வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர் பளல்ல முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர்.

முல்லை – முத்தையன்கட்டு குளத்தில் மீன்பிடிப்பதற்கு அனுமதி

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட 72 குடும்பங் களுக்கு முதற்கட்டமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இவர் களுக்கென 10 மில்லியன் செலவில் உபகரணங்கள் இவ்வாரம் வழங்கப் படவுள்ளதாக அவர் மேலும் தெரி வித்தார்.

முல்லைத்தீவில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் நலனைக் கருத் திற்கொண்டு அவர்களது வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். ஒவ்வொரு மீனவக் குடும்பங்களுக்கும் படகு, மீன்பிடி வலை, பெட்டிகள், பொருத்தப்பட்ட சைக்கி ள்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் அதிகாரங்களை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் – ஹிலாரி

hilary-gl.jpgநீண்ட காலம் நிலவிய நெருக்கடிக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்குமென அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் திருமதி ஹிலாரி கிளின்ரன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் திருமதி கிளின்ரனைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கினார்.

gl-hilary.bmpநல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாகவும் யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அரசாங்கம் நியமித்துள்ள ஆணைக்குழு, அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமெனவும், சுயாதீனமாகவும், பாரபட்சமின்றியும் செயற்படுவதற்கான அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

திருமதி கிளின்ரனுடனான சந்திப்புக்குப் பின்னர் அவருடன் இணைந்து செய் தியாளர் மாநாட்டில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கலந்து கொண்டார். அரசாங்கம் உள்ளூர் மட்டத்தில் ஆரம்பித்துள்ள இந்த விசாரணையை முன்னெடுப்பதற்கு சர்வதேச சமூகம் ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட பேராசிரியர் பீரிஸ், “ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஒளிவுமறைவின்றி வெளிப்படைத் தன்மையாக மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டும்.

நிச்சயமாக இதனை முன்னெடுக்கின்ற வேளையில், ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு தேவையென நாம் கருதினால், அந்தச் சந்தர்ப்பத்தில், ஐ.நா.வின் அனுபவங்களையும் ஆற்றல்களையும் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக உள்ளோம். ஆனால், ஆரம்பக் கட்டத்தில் ஆணைக்குழு அதன் பணிகளைச் செய் வதற்கு அனைத்துவிதத்திலும் அதற்கு ஊக்கமளிக்க வேண்டுமென நினைக்கின்றோம்” என்றார்.

யுத்த காலத்தில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால விதிகளுள் 70% பிரமாணங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், எஞ்சிய விதிகள் தேவைப்படும் காலத்திற்கு மேலதிகமாக ஒரு கணமும் நீடிக்கப்படாது எனச் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், அமெரிக்கா இலங்கை தொடர்பில் அதன் பிரஜைகளுக்கு நீண்டகாலம் விதித்து வந்த பயண எச்சரிக்கையை விலக்கிக் கொண்டுள்ளமைக்கு அமைச்சர் பீரிஸ் நன்றி தெரிவித்தார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் திருமதி ஹிலாரி கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின் நீண்டகால சிவில் யுத்தத்தின் நிறைவின் போது இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அதிகாரங்களை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

“மூன்று தசாப்த பழைமையுடைய இந்த மோதலை ஆழமாக விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் ஆஜர்படுத்தப்படும் சாட்சிகளைத் தொடர்ச்சியாக விசாரணை செய்வதற்குரிய பரந்தளவிலானதும் போதுமானதுமான சட்ட விதிகளை இக்குழு கொண்டிருக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்த ஆணைக்குழுவின் அங்கத்தவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் அவர்கள் அரசுடன் இணைந்து செயற்பட வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. குழு உறுப்பினர்கள் சுயாதீனம் நடுநிலைமை மற்றும் அதிகாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் தெரிவித்த கிளின்ரன் பாதிக்கப்பட்ட மக்களின் தேவையையும் விருப்பத்தையும் இந்த ஆணைக்குழு நிறைவேற்றுமென அமெரிக்கா நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

குவைத்திலிருந்து 100 பணிப்பெண்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைப்பு

house-maid.jpgகுவைத் நாட்டில் வேலை வாய்ப்புத் தேடிச் சென்ற சுமார் 100 பணிப்பெண்கள் நேற்று இலங்கைக்குத் திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விசா காலாவதியான நிலையிலேயே இவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

யாழ். பெரிய பள்ளி ஜும்ஆவில் நேற்று 5000 பேர் பங்கேற்பு

jaffnamosque.jpgயாழ்ப் பாணம்-பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் 20 வருடங்களின் பின்பு நேற்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டு முதலாவது ‘குத்பா’ பேருரையும் நிகழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாணம் முஸ்லிம் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த 3 மாதகாலமாக புனரமைக்கப்பட்டு வந்த இப்பள்ளிவாயல் நேற்று இடம்பெற்ற குத்பா பேருரையை அஷ்ஷெய்க் அப்துல் ஹாலித் நிகழ்த்தினார். நாட்டின் நாலாபாகங்களிலிருந்து வருகைதந்த சுமார் ஐயாயிரம் முஸ்லிம்கள் இங்கு குத்பாப் பேருரையிலும் ஜும்ஆத் தொழுகையிலும் கலந்துகொண்டதுடன் ‘கந்தூரி’யிலும் பங்கு கொண்டனர்.

பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் பெண்களும் ஜும்ஆத் தொழுகையில் ஈடுபட்டதுடன் குத்பாப் பேருரையையும் செவிமடுத்தனர். பெண்களுக்கென பிரத்தியேகமாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்குக்கு விரைவில் மாகாணசபை தேர்தல்

bazil.jpgநாட்டின் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் வடக்கு மக்களும் அனுபவிக்கும் வகையில் வடக்கில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென வடக்கு அபிவிருத்திச் செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கிளிநொச்சியில் தெரிவித்தார்.

மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ மன்னாரிலும் கிளிநொச்சியிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா கிளிநொச்சிக்கான மின்சார இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜ பக்ஷ, கிளிநொச்சி மின் இணைப்புத் திட்டத்தின் பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பயங்கரவாத சூழல் நிலவிய இருபது வருட காலத்திற்குப் பின்னர் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் நேற்று முதல் சத்திர சிகிச்சைப்பிரிவு செயற்பட ஆரம்பித்துள்ளதுடன் முதலாவது நோயாளியும் சத்திர சிகிச்சைப் பிரிவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து கிளிநொச்சி வைத்திய சாலையில் இடம்பெற்ற மாவட்ட சுகாதார அத்தியட்சகர் கெப் வாகனம் வழங்கும் வைபவத் திலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ‘ஜய்க்கா’ நிறுவனங்கள் வடக்கின் சகல மாவட்டங்களிலுமுள்ள சுகாதார அத்தியட்சகர்களுக்கு ‘கெப்’ வாகனங்களையும் ‘குரூஷர்’ வாகனங்களையும் வழங்கியதுடன் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கென 20 மோட்டார் சைக்கிள்களையும் பகிர்ந்தளித்தார்.

இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜப்பானிய ‘ஜய்க்கா’ நிறுவனப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் சரத் அமுனுகமவும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில், வடக்கு மக்களின் சகல தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன் ஆகியோரின் பங்களிப்போடு இதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும். வடக்கில் மின்சாரம், குடிநீர், வீதி அபிவிருத்தி உட்பட சகல அடிப்படை வசதிகளும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தயாராகவுள்ளன.

ஐ.தே.க. தலைவர் பதவியிலிருந்து ரணில் உடன் விலக வேண்டும். சென்னையில் காதர் எம்.பி. பேட்டி

carder.jpgஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று, தலைவர் பொறுப்பிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்று அக்கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதல் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சென்னையிலுள்ள அபுபேலஸ் ஹோட்டலில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிக சிறந்த நிர்வாகி. அத்துடன் எனது இருபதாண்டு அரசியல் அனுபவத்தில் ராஜபக்ஷவைப் போல மிகச் சிறந்த பண்பாளரை நான் சந்தித்ததில்லை. அவருடைய கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் அனைத்து விடயங்களுக்கும் மிக துல்லியமான தீர்வினை அவர் எடுத்து வருகிறார்.

அவர் எப்போதும் இஸ்லாமியர்களுக்குரிய சலுகைகளை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தி வருகிறார். இதற்குக் கடந்த அமைச்சரவையில் பதினைந்து இஸ்லாமியர்களுக்குத் தமது அமைச்சரவையில் இடமளித்திருந்தமையே சான்றாகும்.

அவருடைய நிர்வாகத்தில் இலங்கை புது பொலிவுடன் வலிமையாகவும் வளமாகவும் மாறி வருகிறது. யாழில் மக்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி வர்த்தகத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் நடைபெறும் உலக செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நிச்சயமாக நான் பங்குபற்றுவேன். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தடைப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற எம்முடைய விருப்பத்தினை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பேன்” என்றார். முன்னதாக அவர் தமிழக அரசியல் கட்சித் தலைவர் அப்துல் சமதைச் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தடம்புரண்ட ரயில் மீது நக்ஷலைட்டுக்கள் தாக்குதல்; பயணிகள் ரயில் மீது – சரக்கு ரயில் மோதி 75 பேர் பலி

naxalattack.jpgமேற்கு வங்கத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலொன்று நேற்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 75 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத்தாக்குதலுக்கு நக்ஷலைட்டுகளுக்கு சார்பான அமைப்பொன்று உரிமை கோரியுள்ளது. நேற்று நள்ளிரவு 1.35 அளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலினால் பயணிகள் ரயில் தடம்புரண்டது. இந்த வேளையில், இந்த வழியால் வந்த சரக்கு ரயில் வண்டியொன்று மோதியதிலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து மும்பை குர்லாவுக்கு நேற்றிரவு ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. நள்ளிரவு 1.35 மணிக்கு அந்த ரயில் மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் சரக்பூர் அருகே சர்திகா ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மாவோயிஸ்டுகள் ரயில் தண்டவாளத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

இதனால் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. மொத்தம் 13 பெட்டிகள் தடம் புரண்டு விழுந்தன. அந்த பெட்டிகள் அனைத்தும் அருகில் உள்ள தண்டவாளத்தின் மீது சரிந்து கிடந்தன சரக்கு ரயில், கவிழ்ந்து கிடந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கவிழ்ந்து கிடந்த பெட்டிகள் நொறுங்கின. சரக்கு ரயிலும் கவிழ்ந்தது.

கண் இமைக்கும் நேரத்துக்குள் இந்த கோர சம்பவம் நடந்தது. ரயில் பெட்டிகள் மீது சரக்கு ரயில் மோதிய போது அந்த பகுதியே குலுங்கியது. ஏற்கனவே காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகளை சரக்கு ரயில் மோதியதில் பலர் உயிரிழந்தனர். காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகள் மீட்கப்பட்டு ஹெலிகொப்டர்கள் மூலம் சரக்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிக காயம் அடைந்தவர்கள் மிட்னாபூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட பயணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரயில்வே துறை அமைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவராக அரவிந்த டி சில்வா நியமனம்

aravinda-de.jpgஇலங்கை கிரிக்கெட் அணித் தெரிவுக் குழுத் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை தெரிவுக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக அமல் சில்வா, ரஞ்சித் பெர்ணாண்டோ, அஸ்கர் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.