::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

கண்ணிவெடி அகற்றும் பதினாறு தொழிலாளர்கள் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டனர்;

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் பதித்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஐ. நா. சபை உதவி பெற்ற நிறுவனம்ஒன்று ஈடுபட்டு உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் 16 பேர் கோஸ்ட் மாநிலத்தில் இருந்து பக்டியா மாநிலத்துக்குச் செல்வதற்காக பயணம் செய்த போது கடத்திச் செல்லப்பட்டனர்.

அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கியவர்கள் தான் அவர்களை கடத்திச் சென்றனர். இந்த கடத்தல் லோகார் கார்டெஸ் சாலையில் நடந்தது. தலிபான்களின் வேலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆட்களை கடத்துவது என்பது தீவிரவாதிகளுக்கு லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. கடத்தப்பட்டவர்களை மீட்ப தற்காக பெரும் தொகையை பணயத் தொகையாக அவர்கள் பெறுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானார்கள். அல்லது காயம் அடைந்தனர். பாகிஸ் தானுக்கு அருகாமையிலுள்ள பகிற்ரா மாகாணத்திலே இக்கடத்தல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஸ்வாட் பிரதேச ராணுவ நடவடிக்கைகளில் தோல்வியை நெருங்கும் தலிபான்கள் இத்தொழிலாளர்களைக் கடத்தியுள்ளனர்.

இதனூடாக ஆப்கான் பாகிஸ்தான் அரசுகளைப் பணியவைக்கும் வேலைகளில் தலிபான்கள் ஈடுபடலாம். கடத்தப்பட்டோர் உள்ளூர் தொழிலாளர்களாகவுள்ளதால் சர்வதேச சமூகம் இக்கடத்தல் விடயத்தில் அதிக அக்கறை செலுத்தாது எனக் கருதப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானிய கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் 1800 வெளிநாட்டுப் பணியாளர்களும் எட்டாயிரம் உள்ளூர் வாசிகளும் ஈடுபட்டுள்ளனர். இது வரை மூன்றில் இரண்டு பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப் பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளன. 2001 ஆம் ஆண்டிலிருந்து இது வரை 21 வெளிநாட்டு தொழிலாளர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் களூடாக கடத்தப்பட்டோரை விடுவிக்க முயற்சிகள் செய்யப்படவுள்ளன.

இரான் தூதுரக பணியாளர்கள் விவகாரம் தொடர்கிறது

miliband_.jpgஇரானால் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு பிரிட்டிஷ் தூதரக பணியாளர்களில் ஒருவரை விடுதலைச் செய்வதற்கான ஆவணங்கள் கையொப்பமாகி விட்டதாக பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் டேவிட் மிலிபேண்ட் தெரிவித்துள்ளார்.

இரானின் செயலால் தான் கடும் கோபமுற்று இருப்பதாக கூறிய டேவிட் மிலிபேண்ட், இவ்வாறு தொடர்ந்து வம்புக்கிழுக்கும் செயலை செய்து வந்தால் இரான் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

கடந்த மாதம் இரானில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் நடைபெற்ற வன்முறையை பிரிட்டன் தூண்டி விட்டதாக இரான் குற்றம் சுமத்தி பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவை சேர்ந்த ஒன்பது பேரை கைது செய்தது.

மைக்கேல் ஜாக்சனுக்கு 25,000 டாலர் செலவில் சவப்பெட்டி

maical-jak.jpgமைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கத்தை ஆடம்பரமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஏற்பாட்டையும் கிராண்ட் ஆக செய்கின்றனர். சவப்பெட்டி மட்டும் 25 ஆயிரம் டாலர் செலவில் உருவாக்கியுள்ளனராம்.

தி புரோமெதியான் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சவப்பெட்டி தங்க முலாம் பூசப்பட்டதாகும். வெண்கலத்தால் ஆன அந்த சவப்பெட்டியின் உள்ளே வெல்வெட் விரிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆடம்பர சவப்பெட்டியை ஜாக்சனின் சொந்த மாகாணமான இன்டியானாவைச் சேர்ந்த பேட்ஸ்வில்லி காஸ்கட் கம்பெனி என்ற நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ளது.

ஜாக்சனின் உடல் அடக்கம் நாளை மறு நாள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளன.

வட கொரியா 4 ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதனை

north-korea.jpgவட கொரியா நாடு கடந்த சில மாதங்களாக ஏவுகனைகளை விண்ணில ஏவி சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாடு சுமார் 3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை ஏவி உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியது. கடந்த மே மாதம் 25ம் திகதி வடகொரியா அணு ஆயுத ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதை கண்டு கொள்ளாத வட கொரியா அடுத்தடுத்து 4 தடவை அணு ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி சோதித்துப் பார்த்தது.  இதையடுத்து அணு ஏவுகணைகளை சோதித்துப் பார்க்க வடகொரியாவுக்கு தடை விதித்து ஐ. நா. சபை தீர்மானம் கொண்டு வந்தது.

இதையும் வடகொரியா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து ஏவுகணை ஆய்வில் அந்த நாடு ஈடு பட்டுள்ளது. நேற்று முன்தினம் திடீரென 4 குறுகிய தூர ஏவுகணைகளை வடகொரியா விண்ணில் ஏவியது. இந்த ஏவுகணைகள் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் சக்தி கொண்டவை.

இந்த சோதனை அண்டை நாடான தென்கொரியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அடுத்து நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதித்துப் பார்க்க தயாராகி வருவதாக ஜப்பான் உளவுத் துறை கூறி யுள்ளது. தற்போது வட கொரியாவிடம் உள்ள ஏவுகணைகள் சுமார் 6,700 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடியவை. அடுத்த கட்டமாக 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் அதி நவீன ஏவுகணையை வட கொரியா தயாரித்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களை இந்த ஏவுகணைகளால் தகர்க்க முடியும்.

பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் மீது வழக்கு தொடர இரான் எண்ணம்

iran-br.gifஇரானின் அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நடந்த போராட்டங்களில் பங்கேற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், தெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் சில பணியாளர்கள் மீது வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று இரானின் அதிசக்தி மிக்க தேச பாதுகாவலர் சபையின் தலைவர் அயதுல்லா அகமது ஜன்னதி கூறியுள்ளார்.

தடுத்துவைக்கப்பட்ட அந்த இரானிய பிரஜைகள் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக, வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் உரையாற்றியபோது அயதுல்லா ஜன்னதி கூறியுள்ளார்.

அயதுல்லாவின் இந்த கருத்து குறித்து தாம் அவசர விளக்கம் கேட்டிருப்பதாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் கூறியுள்ளார். பிரிட்டிஷ் தூதரக பணியாளர்களில் 7 பேர் விடுவிக்கப்பட்டதை அடுத்து இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் இருவர் குறித்து தாம் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் தூதரகத்தின் மூன்று பணியாளர்களை விடுவித்ததாக இரான் அறிவிப்பு

iraq-br.jpgஇரான் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்றிய இரானைச் சேர்ந்த ஊழியர்கள் மூன்று பேர் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டின் அரசு சார்பு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறையில் இவர்களுக்கு பங்கு இருந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இவர்களுடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு பிரிட்டிஷ் தூதரக பணியாளர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வார முற்பகுதியில் மற்ற ஐந்து இரானிய பணியாளர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்

விமான விபத்தில் உயிர்தப்பிய சிறுமியின் உடல் நிலையில் முன்னேற்றம்

image-air-team.jpgஇந்து சமுத்திரத்தின் எல்லையில் விபத்துக்குள்ளான யெமன் விமானத்திலிருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பிய 14 வயது சிறுமியின் உடல் நிலை கவலைப்படுமளவிற்கு இல்லையென வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியர்கள் கூறினர்.

நேற்று முன்தினம் யெமனிலிருந்து கெமரூன் நோக்கிப் பறந்த விமானம் இந்து சமுத்திரத்தில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 152 பேரில் 14 வயதுச் சிறுமி மாத்திரம் உயிர் தப்பினார். ஏனையோர் உயிரிழந்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்தோரை மீட்கவும் விமானத்தைக் கரை சேர்க்கவும் மீட்பு பணியாளர்கள் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர். விமான உதிரிப்பாகங்கள், சடலங்கள் என்பன விபத்து நடந்த பகுதியில் கிடப்பதாக தேடுதல் பணியில் ஈடுபட்டோர் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் எண்ணெய்க் கசிவு வெளிவருவதால் விமானத்தின் எரிபொருள் தாங்கி உடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை மீட்ட பணியாளர் பிரான்ஸ் வானொலிக்கு சம்பவத்தை விவரித்தார். சிறுமியொருவர் தண்ணீரில் நீந்தியவாறு தள்ளாடினார்.

சிதைந்த விமானத்தின் பாகங்கள் உருக்குலைந்த உடல்களுக்கு மத்தியில் அச்சிறுமி நீந்தியவாறு உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். உடனே தண்ணீரில் மிதக்கும் பொருளொன்றை வீசினோம். அச்சிறுமியால் அதைப் பிடிக்க முடியவில்லை.

பின்னர் தண்ணீரில் குதித்து அச்சிறுமியைக் காப்பாற்றினேன். அவர் என்னுடன் கைகுலுக்கினார். சூடான தேனீரை சிறுமிக்கு கொடுத்தோம். பின்னர் பெயரையும் ஊரையும் கேட்டுத் தெரிந்து கொண்டோம் என விவரித்தார். எஞ்சியுள்ள உடல்கள், விமானப் பாகங்களை மீட்டெடுக்க தேடும் பணிகள் தொடரவுள்ளன. பிரான்ஸ்ஸைச் சேர்ந்த இச்சிறுமி தனது பெற்றோருடன் கெமரூன் நோக்கிச் சென்றபோது விமானம் விபத்துக்குள்ளானது.

முசாவி மீது வழக்கு தொடருமாறு கோருகிறது இரானிய இராணுவம்

hossein_mousavi_.jpgசர்ச்சைக் குள்ளான இரானின் அதிபர் தேர்தலுக்குப் பிறகு அங்கு நடந்த ஆர்பாட்டங்களில், அந்த தேர்தலில் தோற்ற வேட்பாளரான மிர் ஹொசைன் முசாவி ஆற்றிய பங்கு குறித்து அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்று இரானின் அரசாங்க இராணுவம் கோரியுள்ளது.

இரானின் தேசிய பாதுகாப்பை குலைப்பதிலும், அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கும் முசாவி துணை போனதாக குற்றம் சாட்டும் பஸ்ஜி இராணுவத்தின் கடிதத்தை, இரானின் ஓரளவு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான பார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் தலைமையிலான புதிய அரசாங்கம் சட்ட அங்கீகாரமற்ற அரசு என்று தாம் கருதுவதாக முசாவி தமது இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். ஆர்பாட்டங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

‘ போதை மருந்துக்காக கெஞ்சினார் மைக்கேல் ஜாக்சன் ‘

maical-jak.jpgதனது கடைசி காலத்தில் தூக்கமின்மையால் தவித்த மைக்கேல் ஜாக்சன் , தூக்கத்திற்காக தன்னிடம் போதை மருந்து கேட்டு கெஞ்சினார் என்று அவரது உணவு ஆலோசகர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 25 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்த மைக்கேல் ஜாக்சன்,இறப்பதற்கு முன்னர் பல்வேறு நோய் மற்றும் காயங்களால் அவதிப்பட்டு வந்தார்.

அதிலும் வலி நிவாரணியாக அவர் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்ட போதை மருந்துதான் அவரது உயிரை பறிக்கும் எமனாக அமைந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது உண்மைதான் என நிரூபிப்பது போன்று ஜாக்சனுக்கு உணவு ஆலோசகராக பணியாற்றிய செரிலின் லீ என்ற பெண், கடுமையான வலி மற்றும் அதனால் ஏற்பட்ட தூக்கமின்மையால் ஜாக்சன் தனது கடைசி காலத்தில் மிகவும் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் வலியை மறந்து தூங்கக்கூடிய போதை மருந்தை கேட்டு தம்மிடம் அவர் கெஞ்சியதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவ்வாறு தூக்கத்திற்காக போதை மருந்து எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் கெடுதலை ஏற்படுத்தும் என்று எச்சரித்து, அவரது கோரிக்கையை தாம் ஏற்கவில்லை என்றும் லீ கூறியுள்ளார்.

ஜாக்சன் இறப்பதற்கு 4 தினங்களுக்கு முன்னர், அதாவது ஜூன் 21 ஆம் தேதியன்று அவரது உதவியாளர் மூலம் தம்மை தொடர்பு கொண்டபோது, அவர் எப்படியோ தூக்கத்திற்காக ‘ டிப்ரிவான் ‘ அல்லது வேறு ஏதோ ஒரு போதை மருந்தை எடுத்திருக்கிறார் என்பதை அறிந்து தாம் மிகவும் அச்சமுற்றதாகவும் லீ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது :

” ஜூன் 21 ஆம் தேதியன்று ஜாக்சனின் பணியாளர் ஒருவர் மிகுந்த பதற்றத்துடன் என்னை தொடர்பு கொண்டு , மைக்கேல் இப்போதே என்னை பார்க்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். நான் என்ன ஆயிற்று ? என்று கேட்டேன்.அப்போது மைக்கேல் அவரது உதவியாளருக்கு அருகிலிருந்து பேசுவதை கேட்க முடிந்தது.தனது உடலின் ஒரு பாதி எரிவதாகவும், மறுபாதி குளிர்ச்சியாக இருப்பதாகவும் மைக்கேல் கூறினார்.

உடனே நான் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினேன்.அதே சமயம் அவருக்கு யாரோ எதையோ கொடுத்துவிட்டார்கள் என்பதையும், அது அவரது மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்துள்ளது என்பதையும் உணர்ந்து கொண்டேன். இருப்பினும் ஜாக்சன் எனது அறிவுரைப்படி மருத்துவமனைக்கு செல்லாமலேயே ஜூன் 25 ஆம் தேதியன்று மரணமடைந்துவிட்டார்.

அவருக்கு அங்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை; ஆனால் ஜாக்சன் தூக்கத்திற்காக போதை மருந்தை எடுத்துக் கொள்வதில் பிடிவாதமாக இருந்தார் என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும் ” என்று லீ மேலும் கூறியுள்ளார். 

மைக்கேல் ஜாக்சன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

maical-jak.jpgமறைந்த பாப் பாடகர் மை‌க்கேல் ஜாக்சனின் உடலை அவரது பண்ணையில்  தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஜாக்சனின் தந்தை முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில்  பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்காக ஜாக்சனின் உடல் லாஸ்ஏ‌ஞ்சல்ஸில் இருந்து கலிபோர்னியாவில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு ‌கொண்டு வரப் பட உள்ளது.