இரான் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்றிய இரானைச் சேர்ந்த ஊழியர்கள் மூன்று பேர் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டின் அரசு சார்பு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறையில் இவர்களுக்கு பங்கு இருந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இவர்களுடன் கைது செய்யப்பட்ட மற்றுமொரு பிரிட்டிஷ் தூதரக பணியாளர் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வார முற்பகுதியில் மற்ற ஐந்து இரானிய பணியாளர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்