கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

தென்னிந்தியாவில் மழையால் 200 க்கும் அதிகமானவர்கள் பலி

051009andhra.jpgதென்னிந் தியாவில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இதுவரையில் 200 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தாங்கள் எண்ணுவதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிராமங்கள் முற்றாக அடித்து செல்லப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கானவர்கள் வீடின்றி தவித்து வருகின்றனர். ஆந்திர பிரதேசத்தில் மட்டும் சுமார் இரண்டரை லட்சம் பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

பெருமளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியிருப்பதால் பயிர்கள் நாசமாகியுள்ளன. மீட்கட்டமைப்புக்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் தேவையாக இருக்கும் என மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரானின் இரண்டாவது அணு செறிவூட்டல் ஆலையை ஆய்வாளர்கள் பார்வையிடுகின்றனர்

051009nuclearsite.jpgஇரான் சமீபத்தில் அறிவித்த குவாமில் இருக்கின்ற இரண்டாவது அணு செறிவாக்கும் ஆலையை சர்வதேச அணுசக்தி அமைப்பின் ஆய்வாளர்கள் அக்டோபர் 25 ம் தேதி அன்று பார்வையிடுவார்கள் என்று அந்த அமைப்பின் தலைவர் மொஹமது எல்பராடி கூறியுள்ளார்.

தெஹ்ரானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் கருத்து தெரிவித்த மொஹமது எல்பராடி, இரானுடனான உறவு குறித்து சாதகமாக பேசினார். தாங்கள் மோதல் நிலையில் இருந்து இப்போது ஒளிவுமறைவற்றதன்மை, புரிந்துணர்வு என்ற நிலைக்கு செல்வதாகவும், இருந்தாலும் ஒரு சில கவலைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது அணு செறிவூட்டல் ஆலை குறித்த செய்தி மேற்கத்தைய நாடுகள் இடையே இரானின் அணுசக்தி குறிக்கோள்கள் குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் மற்ற அணுசக்தி திட்டங்களை போல இந்த ஆலையும் அமைதி பயன்பாட்டிற்கு மட்டுமே என இரான் கூறிவருகிறது.

இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் விண்ணப்பங்கள் கையளிப்பு

ramadan-mosque.jpgவட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக தகவல் திரட்டும் வகையில் வடமாகாண முஸ்லிம்களிடமிருந்து திரட்டப்பட்ட 7000 (ஆயிரம்) விண்ணப்பப் படிவங்களை இலங்கை முஸ்லிம்களின் சம்மேளனம் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் நேற்று அமைச்சில் வைத்து கையளித்தது.

சாம்பியன் கிண்ணம் இறுதியாட்டத்திற்கு அவுஸ்திரேலியா நியுசிலாந்து அணிகள் தெரிவு.

270909n-s.bmpசாம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றிகொண்ட அவுஸ்திரேலிய அணியும் நேற்று இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாக்கிஸ்தானை வெற்றிகொண்ட நியுசிலாந்து அணியும் நாளை நடைபெறும் ஐ.ஸி.ஸி. சாம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

நேற்று பாக்கிஸ்தான் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 233 ஓட்டங்களை தனது இனிங்சில் பெற்றது. நேற்றைய போட்டியில் பாக்கிஸ்தானின் துடுப்பாட்டம் மிகவும் மந்கரமாகவே காணப்பட்டதென கிரிக்கட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். நியுசிலாந்து அணி இப்போட்டியில் 5 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்து இறுதிப்போட்டிக்குத் தெரிவானது. பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் டெனியல் விட்டோரி மிகவும் சிறப்பாக பணியாற்றினார். ஆட்டநாயகனாக தெரிவானார்.

நாளை தினம் அவுஸ்திரேலியா நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மிகவும் விருவிருப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அவதானிக்கும் கிரிக்கட் விமர்சகர்கள் நியுசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமென தெரிவிக்கின்றனர். ஆனால், கிரிக்கட் ஆட்டத்தில் வெற்றி தோல்வியை ஹேஸ்யத்தின் மூலம் தெரிவிக்க முடியாது. அச்சந்தர்ப்பத்தில் காலநிலை மைதான நிலை நாணய சுழற்சியில் வெற்றி தோல்வி ஆகியனவே வெற்றியை தீர்மானிப்பதாக அமையுமென எதிர்பார்க்கலாம்.

நேற்றைய ஆட்டத்தில் அணிகள் பெற்ற ஓட்ட விபரங்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

ICC Champions Trophy – 2nd semi final
New Zealand v Pakistan
New Zealand won by 5 wickets (with 13 balls remaining)
       
 Pakistan innings (50 overs maximum)
 Imran Nazir  c Taylor b Bond  28 
 Kamran Akmal†  c Redmond b Butler  24
 Shoaib Malik  c Taylor b Butler  2 
 Younis Khan*  c Taylor b Vettori  15
 Mohammad Yousuf  b Mills  45
 Umar Akmal  lbw b Vettori  55 
 Shahid Afridi  c †McCullum b Butler  4 
 Naved-ul-Hasan  c Guptill b Vettori  8 
 Umar Gul  c Broom b Butler  6 
 Mohammad Aamer  not out  19
 Saeed Ajmal  not out  14  
 Extras (lb 6, w 5, nb 2) 13     
      
 Total (9 wickets; 50 overs) 233 (4.66 runs per over)
Fall of wickets1-46 (Imran Nazir, 9.4 ov), 2-61 (Shoaib Malik, 12.5 ov), 3-69 (Kamran Akmal, 14.2 ov), 4-86 (Younis Khan, 20.5 ov), 5-166 (Mohammad Yousuf, 38.6 ov), 6-181 (Umar Akmal, 40.5 ov), 7-183 (Shahid Afridi, 41.2 ov), 8-192 (Umar Gul, 43.3 ov), 9-198 (Naved-ul-Hasan, 44.2 ov) 
        
 Bowling   
 KD Mills 10 0 46 1
 SE Bond 10 1 54 1
IG Butler 10 0 44 4 8
JEC Franklin 8 0 33 0  
 DL Vettori 10 2 43 3
 GD Elliott 2 0 7 0  
 
 New Zealand innings (target: 234 runs from 50 overs)
 BB McCullum†  c Shahid Afridi b Mohammad Aamer  17 
 AJ Redmond  c & b Saeed Ajmal  31 
 MJ Guptill  c Naved-ul-Hasan b Umar Gul  11 
 LRPL Taylor  b Shahid Afridi  38 
 GD Elliott  not out  75  
 DL Vettori*  st †Kamran Akmal b Saeed Ajmal  41 
 NT Broom  not out  3
 
 Extras (b 2, lb 6, w 6, nb 4) 18     
      
 Total (5 wickets; 47.5 overs) 234 (4.89 runs per over)
Did not bat JEC Franklin, KD Mills, IG Butler, SE Bond 
Fall of wickets1-22 (McCullum, 4.3 ov), 2-43 (Guptill, 9.1 ov), 3-71 (Redmond, 16.4 ov), 4-126 (Taylor, 29.5 ov), 5-230 (Vettori, 46.6 ov) 
        
 Bowling  
 Mohammad Aamer 10 2 32 1
 Naved-ul-Hasan 8 0 57 0
 Umar Gul 8.5 0 48 1
 Saeed Ajmal 8 0 39 2
 Shahid Afridi 10 0 41 1 
 Shoaib Malik 3 0 9 0
 
Player of the match DL Vettori (New Zealand)

சம்பியன் கிண்ணம் – இன்று இரண்டாவது அரையிறுதிப்போட்டி New Zealand won by 5 wickets

270909n-s.bmpசம்பியன் கிண்ணத்துக்கான இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று பாக்கிஸ்தான் நிவுசிலாந்து அணிகளுக்கிடையில் இரவு பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெரும் அணி 5ஆம் திகதி நடைபெறும் ICCசம்பியன் கிண்ணம் இறுதியாட்டத்துக்கு தெரிவாகும்.

இன்றைய போட்டியில் பாக்கிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டுமென்ற இலக்குடன் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம்,  நிவுசிலாந்து அணியும் இறுதியாட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் முனைப்பாக விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போட்டியின் ஸ்கோர் விபரங்களை தொகுத்துத்தர தேசம்நெற் விசேட ஒழங்குகளை மேற்கொண்டுள்ளது. இன்றைய போட்டி இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது.

Pakistan won the toss and elected to bat
ICC Champions Trophy – 2nd Semi-Final
ODI no. 2906 | 2009/10 season
Played at New Wanderers Stadium, Johannesburg (neutral venue)
3 October 2009 – day/night (50-over match)
Umpires IJ Gould (England) and SJA Taufel (Australia)
TV umpire DJ Harper (Australia)
Match referee J Srinath (India)
Reserve umpire SJ Davis (Australia)

Pakistan 233/9 (50.0 ov)

Pakistan innings (50 overs maximum)
 Imran Nazir  c Taylor b Bond  28 
 Kamran Akmal†  c Redmond b Butler  24 
 Shoaib Malik  c Taylor b Butler  2 
 Younis Khan*  c Taylor b Vettori  15 
 Mohammad Yousuf  b Mills  45 
 Umar Akmal  lbw b Vettori  55
 Shahid Afridi  c †McCullum b Butler  4
 Naved-ul-Hasan  c Guptill b Vettori  8 
 Umar Gul  c Broom b Butler  6 
 Mohammad Aamer  not out  19
 Saeed Ajmal  not out  14  
 Extras (lb 6, w 5, nb 2) 13     
      
Total (9 wickets; 50 overs) 233 (4.66 runs per over)
Fall of wickets1-46 (Imran Nazir, 9.4 ov), 2-61 (Shoaib Malik, 12.5 ov), 3-69 (Kamran Akmal, 14.2 ov), 4-86 (Younis Khan, 20.5 ov), 5-166 (Mohammad Yousuf, 38.6 ov), 6-181 (Umar Akmal, 40.5 ov), 7-183 (Shahid Afridi, 41.2 ov), 8-192 (Umar Gul, 43.3 ov), 9-198 (Naved-ul-Hasan, 44.2 ov) 
        
 Bowling 
 KD Mills 10 0 46 1 
 SE Bond 10 1 54 1
 IG Butler 10 0 44 4 
 JEC Franklin 8 0 33 0
 DL Vettori 10 2 43 3
 GD Elliott 2 0 7 0  
   
New Zealand team    
BB McCullum†, AJ Redmond, MJ Guptill, LRPL Taylor, GD Elliott, NT Broom, JEC Franklin, DL Vettori*, KD Mills, IG Butler, SE Bond 

ஐ.சி.சி. விருது – தலைசிறந்த வீரர் டோனி, டெஸ்ட் வீரர் காம்பீர் 20 ஓவர் போட்டி வீரர் டில்சான்,

tmdil.jpgசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி) ஆண்டுதோறும் சிறந்த வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. ‘கிரிக்கெட் வீரர்களின் ஆஸ்கார்’ என்று அழைக்கப்படும் இவ்விருதுக்கு இந்த ஆண்டு நிறைய வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. ஓராண்டு காலம் (2008ம் ஆண்டு ஆகஸ்டு 13 ந் திகதி முதல் 2009 ம் ஆண்டு ஆகஸ்டு 24 ந் திகதி வரை) வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் விருதுக்கு தகுதியானவர்கள் கருத்தில் கொள்ளப்பட்டனர்.

இதன் பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 6 வது ஐ. சி. சி. விருதுகளை பெறும் வீரர்கள் யார் – யார்? என்ற விவரம் நேற்று முன்தினமிரவு ஜோகனஸ்பர்க்கில் நடந்த கோலாகலமான விழாவில் அறிவிக்கப்பட்டன.

இதன்படி ஆண்டின் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான விருதை இலங்கை அணி டில்ஷான் பெற்றார். சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதியில் மே. தீவுக்கு எதிராக 57 பந்துகளில் 96 ஓட்டங்கள் விளாசியது அவருக்கு இந்த விருதை பெற்றுத்தந்தது. வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு அவுஸ்திரேலியாவின் 24 வயதான வேகப்பந்து வீச்சாளர் பீட்டல் சிடில் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன சிடில் 12 டெஸ்ட் ஆடி 49 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தலைசிறந்த வீரருக்கான ஐ. சி. சி. விருதுக்கு இந்திய வீரர்கள் டோனியும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு கவுதம் காம்பீரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மேலும்  விளையாட்டு உணர்வுடன் ஆடியதற்கான உத்வேக அணிக்கான விருதுக்கு நியூசிலாந்து அணியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

செம்பியன் கிண்ணம் இறுதியாட்டத்துக்கு அவுஸ்திரேலியா தெரிவு

021009untitled.bmpசாம்பி யன்ஸ் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்று இரவு பகல் ஆட்டமாக  சென்சூரியனில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 257 ஓட்டங்களை தனது இனிங்சில் பெற்றது. சென்சூரியன் மைதானம் துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமான மைதானமாகும். இங்கிலாந்து அணி 5.56 ஓட்ட வீதத்தைப் பேணியும் கூட மைதானத்தைப் பொறுத்தமட்டில் இது குறைவான ஓட்டமென்றே கிரிக்கட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர். நேற்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா பந்து வீச்சில் களத்தடுப்பும் மிகவும் உயரிய மட்டத்திலே காணப்பட்டது.

அவுஸ்திரேலியா அணி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த வேளையில் மைதானத்தின் புற்றீசல்கள் அதிகமாக இருந்ததினால் ஆட்டம் சற்று தாமதித்தே ஆரம்பமானது. புற்றீசல்களை அகற்ற மைதான ஊழியர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டனர்.

பின்பு இப்போட்டியில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி தனது முதல் விக்கட்டை 6 ஓட்டங்கள் பெற்ற நிலையில் இழந்தது. தொடர்ந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் வொட்சனும் ரிக்கி பொன்டினும் மிகவும் அவதானமாக போட்டிநேரம் முடியும் வரை ஆடுகளத்திலே ஆட்டமிக்காமல் நிதானமாக ஆடி அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களைப் பெற்ற வொட்சன் ஆட்ட நாயகனாக தெரிவானார்.

இதன் மூலம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள சம்பியன் கிண்ண இறுதியாட்டத்துக்கு அவுஸ்திரேலியா அணி தெரிவு செய்யப்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தின் களத்தடுப்பும் பந்து வீச்சும் கிரிக்கட் விமர்சகர்களின் விமர்சனத்துக்கு உட்பட்டிருந்தது.

இன்று இப்போட்டியின் இரண்டாவது இறுதிப்போட்;டி நிவுசிலாந்து பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.

England won the toss and elected to bat

England innings

 AJ Strauss*  c Hopes b Siddle  14
 JL Denly  not out  21 
 OA Shah  c †Paine b Lee  0
 PD Collingwood  c †Paine b Johnson  34  
 EJG Morgan c †Paine b Watson 9
 SM Davies† b Watson 5
 LJ Wright  c †Paine b Siddle  48
 TT Bresnan  b Lee  80
 GP Swann  run out (Hauritz/†Paine)  18
 JM Anderson  not out  5
 G Onions  run out (Ferguson/†Paine)  1
 
 Extras (w 6, nb 1) 7    
     
Total (all out; 47.4 overs) 257 (5.39 runs per over)
Fall of wickets1-15 (Strauss, 1.6 ov), 2-16 (Shah, 2.4 ov), 3-71 (Collingwood, 11.2 ov), 4-91 (Denly, 17.2 ov), 5-100 (Davies, 18.5 ov), 6-101 (Morgan, 20.2 ov), 7-208 (Wright, 39.6 ov), 8-245 (Swann, 45.1 ov), 9-251 (Bresnan, 46.2 ov), 10-257 (Onions, 47.4 ov)
       
 Bowling 
 B Lee 9 0 46 2
 PM Siddle 10 0 55 3
 JR Hopes 4 0 28 0 
 MG Johnson 10 1 61 1
 SR Watson 8.4 1 35 2
 NM Hauritz 6 0 32 0 5.33 

 Australia innings

 SR Watson  not out  136 
 TD Paine†  c †Davies b Onions  4
 RT Ponting*  not out  111
 Extras (lb 2, w 5) 7    
     
 Total (1 wicket; 41.5 overs; 176 mins) 258 (6.16 runs per over)
Did not bat MEK Hussey, CL White, CJ Ferguson, JR Hopes, MG Johnson, B Lee, NM Hauritz, PM Siddle
Fall of wickets1-6 (Paine, 1.3 ov)

Bowling
 JM Anderson 8.5 0 48
 G Onions 8 0 47 1
 TT Bresnan 8 0 51 0
 PD Collingwood 8 0 50 0
 GP Swann 5 0 31 0
 LJ Wright 3 0 18 0 
 OA Shah 1 0 11 0 

Player of the match SR Watson (Australia)

”300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் : த ஜெயபாலன்

David_Milliband_LP_Conferenceஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 300 000 பேரை முகாம்களில் தடுத்து வைத்திருப்பது மனிதத்துவமற்ற செயல்” பிரித்தானிய தொழிற்கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒக்ரோபர் 1ல் நிறைவுபெற்ற தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் உள்ள பிரதான கட்சிகளின் வருடாந்த மாநாடு நடைபெற்று வருகின்றது. அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் இம்மாநாடுகள் மிகவும் முக்கியத்துவமானவையாக உள்ளது. குறிப்பாக தொழிற்கட்சி கடந்த மூன்று தேர்தல்களிலும் ஆட்சியைத் தக்க வைத்துள்ள நிலையில் இத்தேர்தலில் கடுமையான போட்டியைச் சந்திக்க வேண்டியுள்ளது. பிரித்தானிய பொருளாதாரம் மட்டுமல்ல சர்வதேசப் பொருளாதாரமே வீழ்ச்சி கண்டுள்ளதுடன் ஏற்கனவே 12 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆட்சியினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் மாற்றம் அவசியம் என்ற சிந்தனையை பிரித்தானிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

”இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் சிவில் யுத்தம் உயிர்களையும் உரிமைகளையும் பறித்துள்ளது” எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ”அரசாங்கங்கள் பிரஜைகளின் சிவில் சமூக அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

பிறைற்றனில் இடம்பெற்ற இம்மாநாட்டில் குரொய்டன் மிச்சம் பகுதி பா உ சியொபெய்ன் மக்டொனா பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட சட்டத்திற்குப் புறம்பான கொலைகளைச் சுட்டிக்காட்டி இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்து இருந்தார்.

இந்த விவாதங்களின் இறுதியில் இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசு வழங்கிய 180 நாள் காலக்கெடுவிற்கு இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் இக்கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளமை இலங்கை அரசு முகாம்களில் உள்ள மக்களை விடுவிப்பதற்கான அழுத்தத்தை மேலும் வலியுறுத்தி உள்ளதாகவே கணிக்கப்படுகிறது.

இலங்கை அரசு முட்கம்பி வேலிக்குள் வன்னி மக்களை அடைத்து வைத்து மீண்டும் மீண்டும் தன் முகத்திரையைக் கிழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அமெரிக்க உள்துறை அமைச்சுச் செயலர் கிலரி கிளின்டன் இலங்கை பர்மா பல்கன் நாடுகள் பாலியல் பலாத்காரத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டி உள்ளார். சர்வதேச அரங்கில் இலங்கை தனது மனிதவுரிமை விடயங்கள் தொடர்பில் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருகின்றது. கிலரி கிளின்டனின் குற்றச்சாட்டு தொழிற்கட்சியின் தீர்மானம் என்பன சர்வதேச அரங்கில் இலங்கையை மதிப்பிழக்கச் செய்து வருகின்றது.

தொழிற்கட்சியின் மாநாட்டுக்கு முன்னதாக லிபிரல் கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெற்றது. அங்கு இலங்கை தொடர்பான குறிப்பான கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக உள்ள பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சவேடிவ்கட்சியின் மாநாட்டில் இலங்கை தொடர்பான குறிப்பான விவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிற்கட்சியுடன் ஒப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான நிலைப்பாட்டைடேயே எடுத்து வருகின்றது. தமிழ் மக்கள் செறிவாக உள்ள பகுதிகளில் உள்ள ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர கொன்சவேடிவ் கட்சி அரசு சார்பான போக்கையே கொண்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் லண்டனில் தமிழர்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் வல்லமையைக் கொண்டிருந்த போதும் அவ்வாக்குகள் முழுமையாக ஒரு குறிப்பிட்ட கட்சியை நோக்கிச் செல்லும் நிலையில்லை. இத்தேர்தலில் தொழிற்கட்சியின் கோர்டன் பிரவுணா? கொன்சவேடிவ் கட்சியின் டேவிட் கமரூனா? “நந்திக் கடலில்” கரையொதுங்குவார்கள் என்பதனை பிரித்தானிய மக்கள் இன்னும் சில மாதங்களில் தீர்மானிப்பார்கள்.

தமிழ்மணி அரங்க முருகையன் : என் செல்வராஜா (நூலகவியலாளர்)

லண்டனில் எம்மிடையே நீண்டகாலமாக வாழ்ந்து அண்மையில் 13.09.2009 அன்று மறைந்துவிட்ட தமிழ்மணி அரங்க முருகையன் அவர்களை அறியாத தமிழ் இலக்கிய ஆர்வலர்களோ, கல்விசார் சமூக அமைப்புகளோ இருக்க முடியாது.

தமிழ்நாடு கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அரங்க முருகையன் 1932ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி பிறந்தவர். தனது உயர்நிலை மற்றும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பினை தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் பெற்றுக்கொண்டவர். இவரது துணைவியார் சுசீலா (சுசேதா) அம்மையாரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு போராளியின் மகளாவார். தன் கணவனுக்கு ஈடுகொடுக்கும் தமிழறிவு மிக்கவர். தமிழ்மணி அரங்க முருகையன் அவர்கள் தமிழகத்தில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் சிங்கப்பூருக்கு வந்து அங்கு வெளிவந்த மலாயா நண்பன் நாளிதழில் சில காலம் துணை ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

பின்னாளில் பிரித்தானிய வான்படையின் எழுதுவினைஞராக (clerk) தேர்வுபெற்று சுமார் இருபது ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றித் தரம் உயர்ந்து பின்னாளில் தலைமை எழுதுவினைஞராகவிருந்து, 1972இல் பிரித்தானிய படைக்கலைப்பின்போது தனது பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

அதன் பின்னர் தமிழகத்திற்குத் திரும்பிச்சென்று சிலகாலம் வணிகத்துறையில் ஈடுபட்டுவந்தார். இக்காலப்பகுதியில் நித்திலம் என்னும் தனித்தமிழ் மாத இதழொன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். சிறிது காலத்தின் பின்னர் அதனை பண்ணாய்வாளர் குடந்தை ப.சுந்தரேசனாரிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பத்தினருடன் மீண்டும் ஐரோப்பிய மண்ணில் வந்து வாழத்தொடங்கினார்.

மீண்டும் லண்டன் வந்த அரங்க முரகையன் அங்கு விமான நிலைய பண்டகசாலைப் பொறுப்பாளராகப் (Store keeper) பணியாற்றினார். தமிழ் அபிமானம் காரணமாக லண்டனில் வெளிவந்துகொண்டிருந்த இலண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய பத்திரிகைகளில் சிறப்பாசிரியராகவும் இவர் பணியாற்றித் தமிழ் வளர்த்தார்.

அரங்க முருகையன் செந்தமிழைப் பேச்சுவழக்கிலும் பாவிக்கவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்து வந்தவர் மட்டுமல்ல அவ்வாறே வாழ்ந்தும் காட்டியவர். அவருடன் தொடர்புகொண்ட எவரும் இதனை எளிதிலேயே புரிந்துகொள்வார்கள். முடிந்தவரையில் தனது தொடர்பாடல்களில் செந்தமிழைக் கலப்பில்லாது பேசும் ஆற்றல் கொண்டவர். அவரது தமிழ் அபிமானம் தீவிரமானது.

ஆரம்பகாலத்தில் லண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தேர்வாளராகவும் பணியாற்றிய அமரர் அரங்க முருகையன் பின்னாளில் 1978இல் லண்டன், கிறீன்போர்ட் என்னுமிடத்தில் இயங்கிவரும் மேற்கு லண்டன் தமிழ்ப்பள்ளியின் மொழித்துறைத் தலைவராகவும், மேனிலைப் பயிற்றாசிரியராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர். அரங்க முருகையன் அவர்கள் தமிழ் மாணவர்களுக்கென பல நூல்களை எழுதியிருக்கின்றார். இவற்றில் ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் விதந்து கூறப்படுகின்றது. ஆறுமுகநாவலர் எழுதிய இந்நூலை எளிய தமிழில் பலரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அரங்க முருகையன் ஆக்கியுள்ளார். புகலிடச் சிறார்களின் நன்மை கருதி இலண்டன் தமிழ் வாசகம் என்ற பள்ளிப் பாடநூலை 3 பகுதிகளாக வெளியிட்டிருந்தார். பிரித்தானியப் பள்ளிகளின் ஒன்றியப் பாடநூல் வரிசையில் தமிழறிவு என்ற நூல் 1முதல் 7ஆவது தரம் வரை இவரால் எழுதப்பட்டன.

உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார். இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய பல நூறு கதை, கவிதை, கட்டுரைகள் பரவலாகத் தமிழகத்திலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் உள்ள ஊடகங்களில் பிரசுரமாகியுள்ளன. அரங்க முருகையன் எழுதிய மூன்று நாடகங்கள் சிங்கப்பூர் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கோயில்களின் பணியும், வழிபாட்டு முறையும் என்ற இவரது நூல், சைவ உலகம் என்ற காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையொன்றின் நூலுருவாகும். மேலைத்தேய வாழ்வியலில் கோயில்களின் பணிகள் பற்றிய தமிழ்மணி அரங்க முருகையனின் கருத்துக்கள் இந்நூலில் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் பதிவாகியுள்ளன. கோயில்கள் பழங்காலத்திலே இயங்கியதைப் போன்று தான் சார்ந்த சமூக வாழ்வியலுடன் ஒன்றிணைந்து வளரவேண்டும் என்று அரங்க முருகையன் இந்நூலில் ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார். கோவில்கள், சமூக மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும், அமைதியாக வழிபாடு செய்யவும், வயிற்றுப் பசியாறும் அறச்சாலையாகவும், மக்களுக்கு எழுத்தறிவிக்கும் கல்விக் கூடமாகவும், நுண்கலைகளைப் பயிலும் கலைக்கூடமாகவும், அக்கலைகளை அரங்கேற்றும் மண்டபமாகவும் இன்றைய நவீன ஆலயங்கள் சமூகத்துடன் ஒன்றிணைந்து இயங்கவேண்டும் என்று அரங்க முருகையன் அவர்கள் இந்நூலில் குறிப்பிடுகி;ன்றார்.

அரங்க முருகையனின் நாவலான தொடர்வண்டித் தூது ஒரு தூயதமிழ் நாவலாகும். சிக்கலற்ற ஒரு காதல் கதையின் பின்னணியில் இலண்டன் வாழ்க்கையை நூலாசிரியர் அரங்க முருகையன் அவர்கள் இனிய தமிழில் இந்நாவலில் கூறியிருக்கின்றார். மேலை நாடு ஒன்றுக்குரிய இயல்பான மேற்கத்தைய கலாச்சாரத்திலே வாழ்ந்தபோதிலும் தமது பாரம்பரியங்களைப் பேணி வாழ்கின்ற இரு தமிழ்க் குடும்பங்களினால் சீரிய முறையிலே வளர்க்கப்பட்ட இரண்டு இளம் நெஞ்சங்களை ஓர் தொடர்வண்டிப் பயணம் இணைத்துவிடுகிறது. மெல்ல அரும்பும் காதல் வேட்கை வளர்ந்து இரண்டு உள்ளங்களையும் பற்றிக்கொண்டு விடுகின்றது. ஆனால் வெறியிலும் நெறி என்பது போலக் கண்ணியத்தின் வரம்புகளுக்குட்பட்டு எவ்வாறு அந்த இரண்டு நெஞ்சங்களும் காதலில் வெற்றி பெறுகின்றன என்பதோடு தத்தம் குடும்பத்தவரின் ஆசியுடன் கடிமணம் புரிந்து கொள்கின்றன என்பதுதான் இந்த நெடுங்கதையின் கருவாகும்.

இலண்டனில் உள்ள ஈழத்தமிழருடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ள அரங்க முருகையன் அவர்கள் லண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இவர் ஈழத்தமிழர்பாற்கொண்ட பற்றின் ஆழத்தை தமிழீழம் கோரி ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தில் முழக்கம் என்ற தலைப்பில் இவர் 1980இல் கும்பகோணத்தில் எழுதி வெளியிட்ட முதலாவது நூலே சான்றாகும். சோழர் வெற்றி என்ற இவரது மற்றொரு நூலும் தமிழரின் வரலாற்றின் செழுமைமிகு காலகட்டத்தினைப் பதிவுக்கு உள்ளாக்கியுள்ளது.

அமரர் அரங்க முருகையன் லண்டனில் இயங்கிய திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் தேர்வாளராகவும் இங்கு இயங்கியுள்ளார். 1978ம் ஆண்டு முதல் கிரீன்போர்ட்டிலுள்ள மேற்கு லண்டன் தமிழ்ப் பள்ளியில் மொழித்துறைத் தலைவர் பணியில் ஈடுபட்டுழைத்துவந்தார். உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகவும் இவர் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரர் அரங்க முருகையன் எழுதி வெளியாகிய இறுதி நூலாக பழந்தமிழரின் வியத்தகு நிலத்திணை உயிர் நுண்ணறிவு என்ற நூல் அமைகின்றது. மரம் செடி கொடிகள் பற்றிய தமிழரின் மூலிகை அறிவினை விதந்து கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. தன் வாழ்விலும் கனவிலும் தமிழ் இனத்தையும், மொழியையும், அதன் சிறப்பையும் மட்டுமே உயிராகக்கொண்டு வாழ்ந்த அந்தப் பெருமனிதன் 13 செப்டெம்பர் 2009 அன்று தனக்கு ஏற்பட்ட முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவரது மரணம் உலகத்தமிழ் அறிஞர்களுக்கு ஓர் பேரிழப்பாகும்.

மத்திய மாகாண சாகித்திய விழாவில் தமிழக பேராசிரியர் அப்துல் காதர்

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் சிறப்புப் பேச்சாளராக தமிழ் நாட்டை சேர்ந்த வாணியம் பாடி பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் அப்துல் காதர் அழைக்கப்பட்டுள்ளார். தமிழ் சாகித்திய விழா என்பது தனியே தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்குமான சாகித்திய விழா என மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாத்தளை மாநகரில் ஒக்டோபர் 10ம், 11ம் திகதி நடைபெறவுள்ள தமிழ் சாகித்திய விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே வே.இராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் பிரத்தியேக செயலாளர் துரை. மதியுகராஜாவும் கலந்துகொண்டார்.

மாத்தளை மாநகரில் 2002ம் ஆண்டிற்குப் பின் நடக்கும் மத்திய மாகாண சாகித்திய விழாவில் முதல் நாள் காலை 9 மணிக்கு கலாசார ஊர்வலத்துடன் ஆரம்பமாகும். இவ் ஊர்வலம் பாக்கியா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகும். இதல் ஆளுநர் மத்திய மாகாண முதலமைச்சர் அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்.

2ம் நாள் நிகழ்வில் சாகித்திய விருதுகள் வழங்கப்படவுள்ளன. கட்சி சார்பின்றி கல்விமான்களை கொண்ட குழு இவர்களை தெரிவு செய்யும். இலக்கிய படைப்புகளுக்கான விருதுகளும், பணமுடிப்புகளும் வழங்கப்படவுள்ளன. என்றார்.