மத்திய மாகாண சாகித்திய விழாவில் தமிழக பேராசிரியர் அப்துல் காதர்

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் சிறப்புப் பேச்சாளராக தமிழ் நாட்டை சேர்ந்த வாணியம் பாடி பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் அப்துல் காதர் அழைக்கப்பட்டுள்ளார். தமிழ் சாகித்திய விழா என்பது தனியே தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்குமான சாகித்திய விழா என மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாத்தளை மாநகரில் ஒக்டோபர் 10ம், 11ம் திகதி நடைபெறவுள்ள தமிழ் சாகித்திய விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே வே.இராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் பிரத்தியேக செயலாளர் துரை. மதியுகராஜாவும் கலந்துகொண்டார்.

மாத்தளை மாநகரில் 2002ம் ஆண்டிற்குப் பின் நடக்கும் மத்திய மாகாண சாகித்திய விழாவில் முதல் நாள் காலை 9 மணிக்கு கலாசார ஊர்வலத்துடன் ஆரம்பமாகும். இவ் ஊர்வலம் பாக்கியா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகும். இதல் ஆளுநர் மத்திய மாகாண முதலமைச்சர் அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்.

2ம் நாள் நிகழ்வில் சாகித்திய விருதுகள் வழங்கப்படவுள்ளன. கட்சி சார்பின்றி கல்விமான்களை கொண்ட குழு இவர்களை தெரிவு செய்யும். இலக்கிய படைப்புகளுக்கான விருதுகளும், பணமுடிப்புகளும் வழங்கப்படவுள்ளன. என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *