கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

மானாட மயிலாடா : ஜெயராஜா (பிரான்ஸ் – தேசம்நெற் வாசகர்)

maanada_mayiladaஇது என்னடா தலையங்கம் வித்தியாசமாய் இருக்குதென்று யோசிக்காதையுங்கோ. புலம்பெயர் மக்களிடம் வட்டுக்கோட்டையிலும் பார்க்க முள்ளிவாய்க்காலிலும் பார்க்க இதுதான் பொப்பியூலர். விடயத்திற்கு வருவம்.

பிரபாகரனோடை முடிந்தது இராணுவ மாயை மட்டும்தான். அரசியல் இன்னும் சாகவில்லை. ஆனால் அவர்கள் சிங்கள முற்போக்கு சக்திகளைப் பிரித்தார்கள், இந்தியாவைப் பிரித்தார்கள், உலக நாடுகளைப் பிரித்தார்கள் எம் மக்களிடமிருந்து. இதிலிருந்து தமிழ் சமூகத்தை விடுவிக்க வேண்டுமாயின் முதலில் அறிவு ஜீவிகள் தொடக்கம் பத்திரிகைகள் வானொலிகள் ரிவீக்கள் இன்ரநெற்றுகள் வரை உண்மையை பேசுவோம். உண்மையை எழுதுவோம். மனித உரிமைகளை மதிப்போம். சகிப்புத் தன்மையை வளர்ப்போம். அரசியல் நாகரீகத்தை வளர்ப்போம். விமர்சனங்களை செய்வோம். ஆக்கபூர்வமாக தற்போதைய சூழ்நிலையில் துப்பாக்கி இல்லாமல் எதைப்பற்றியும் கதைப்போம். யாருடனும் கதைப்போம். இதைத்தானே நாங்கள் எதிர்பார்த்தது. இதனை வீணடிக்காமல் பயன்படுத்துவோம்.

நிமிர்ந்து வாழ்ந்த சமுதாயம் பிச்சைக்கார நிலையில் இருக்கிறது. அவர்களுக்கு உடனடித்தேவை பசித்த வயிற்றுக்கு உணவு, இருக்க இடம், வேலை, பிள்ளைகளின் கல்வி இதை புலம்பெயர் தமிழர்கள் உணருவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கும் இவர்களுக்கும் நீண்ட இடைவெளி கொண்டதான உறவு உண்டாகியுள்ளது. யதார்த்தத்தை புரியாமல் தேவையற்ற ஒன்றுகூடல், மறியல்ப் போராட்டம், கவனயீர்ப்புப் போராட்டம், வட்டுக்கோட்டைத் தேர்தல் இவற்றால் அம்மக்களுக்கு என்னத்தைச் செய்யப் போகிறோம்.

முகாமில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்தான் அதில் யாவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் உண்மையில் பல மக்களுக்க போக இடமில்லை. வேலை இல்லை பணம் இல்லை, அவர்கள் எங்கே போவார்கள். எப்படிச் சாப்பிடுவார்கள். அங்குள்ள சிலருடன் கதைக்கையில் முகாமில் உணவும் தங்க இடமாவது கிடைக்குதே என்ற நிலையில் இருக்கிறார்கள். இது தொடர வேண்டும் என்பதல்ல உண்மைநிலை. எப்படித் தீர்ப்பது என்பதுதான் உணரப்பட வேண்டியது.

மகிந்தா மீது நாம் தற்சமயம் நம்பிக்கை வைத்துத்தான் ஆகவேண்டியது அவசியம். இதுவரை யாருமே செய்யாத அதிரடி மாற்றங்கள் புலிகளில் இருந்து பாதாளக் கோஷ்டிவரை அடக்குகிறார்தான். முன்பிருந்த தலைவர்களுடன் ஒப்பிட்டால் இது சாதனைதான். ஓத்துக் கொள்ளத்தான் வேணும். அரசியல் தீர்வுகள் வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையிலும் இருக்கினம். அப்படி இல்லையாயின் உலகின் சந்தேகப் பார்வை அரசின் மீது விழும். இதனை மழுங்கடிக்காமல் அவர்கள் கையில் பந்தைக் கொடுப்போம். அதை விட்டுவிட்டு ஈழநாடு பாலச்சந்திரனும் ஜிரிவியும் லங்காசிறீயும் ஜபிசியும் தங்களையே விக்கிற மாதிரி கட்டுரையும் செய்தியும் எழுதித் தள்ளுகிறார்கள். ஆரம்ப காலங்களில் பாலச்சந்திரன் நாட்டுப் பற்றுள்ளவர்தான். இயக்க பேரணிகளுக்கு உதவி செய்தவர்தான். ஆனால் இப்ப சீமானை மிஞ்சி கட்டுரை எழுதி தன்னையே விற்கக் கூடாது. ஜெகனும் தான் படித்த நல்ல கல்லூரியை நாறடிக்காமல் நடந்தால் நல்லது.

எல்லாவற்றையும் மீறி தமிழக சஞ்சிகைகள் (உதாரணமாக ஆனந்தவிகடன்) பத்திரிகை விற்பதற்காக பிரபாகரன் போய் இப்ப பொட்டு வாறாராம் மாவீரர் உரைக்கு. இதற்கு பேட்டி வேற. பொட்டருக்கு ஏன் பொட்டு பெயர் வந்ததென்றே தெரியாத இவர்கள் அடேல் புத்தகத்தை சாட்சிக்கு வைத்து கதை விடுகிறார்கள். பழைய கூட்டணிகாரருக்கு கையை வெட்டி இரத்தப் பொட்டு வைத்ததால்தான் அவருக்கு பொட்டு பெயர்.

இதைவிட வேடிக்கை வடபகுதி பத்திரிகையாளர்கள் யு என் பி கூட்டணி கூட்டாக முடிவெடுக்க இருக்கினமாம். இதில் உதயன் பத்திரிகை இந்தியாவையும் கருணாநிதியையும் தாழ்த்தி எழுதி எதைச் சாதிக்கப் போகிறார்கள். இவர்களால் 100 கோடி ரூபாய் கொடுக்க முடியுமா திரும்பத் திரும்ப ஏனைய்யா இடைவெளியைக் கூட்டிறியள். பார்ப்பதற்கு செய்தியா இல்லை. இலங்கையில் R K Hottelல் வடிவேலு வடை சுட்டார் என்று எழுதுகிற உதயன் ஏதும் ஆரோக்கியமாய் எழுதலாமே. கருத்து அறிவுப் பஞ்ஞமென்றால் நீங்கள் தேனீயிலிருந்து தேசம்வரை போய்ப் பாருங்களேன்.

எல்லோரையும் அரவணைப்பது என்பதை விட்டுவிட்டு விஜய் ராகுலோட கதைத்தா குற்றம் சூர்யா சிங்களப் படத்தில் நடித்தா குற்றம். (ஆனால் ஆங்கிலப் படம் நடிக்கலாம்.) அவர்கள் எல்லாம் எங்கள்பால் அக்கறை கொண்டவர்கள்தான் இந்த சீமான் நெடுமாறன் வைகோவிலும் பார்க்க. இந்த மூன்று பேரும் இந்தியாவில் ஒரு பிரச்சினைகளும் இல்லாத மாதிரியும் சேரியில் சனங்கள் சந்தோசமாக வாழ்கின்ற மாதிரியும் ஏனய்யா எங்களிட்டை வந்து எங்கடை பிரச்சினைகளுக்குள் தலையிடுகிறீர்கள்.

பத்திரிகைகள் மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்பட வேண்டும், எழுத வேண்டும். உதாரணமாக தற்போதைய சூழலில் டக்ளஸ் என்ன செய்கிறார் என்ன செய்ய வேணும் என்ன பிழை செய்கிறார் எப்படி அணுக வேண்டும் என்று எழுதலாமே, விமர்சனங்களை செய்யலாமே. புலத்தில் இருந்து அந்த மக்களுக்கு நாங்கள் தலைமை தாங்க முடியாது. அந்த மக்கள்தான் தங்களுக்கான தலைமையை தெரிவுசெய்ய வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் தங்களாலான பங்களிப்பை செய்யலாம். தற்போதைய நிலையில் சூளைமேட்டு டக்ளஸ் அல்ல இப்ப இருக்கும் டக்ளஸ். 25 வருட அனுபவம் பாதிப்புக்கள் 13 தடவைகள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பியது மட்டுமல்லாது பங்கருக்குள் வாழவில்லை. தன்னால் முடிந்தவற்றை அங்குள்ளோரிலும் பார்க்க ஏதோ செய்கிறார். நேடியாக யாரும் கதைக்க முடிகிறது. பிரபாகரனையோ பொட்டரையோ அன்ரன் பாலசிங்கத்துடனோ நாங்கள் அணுகத்தான் முடிந்ததா. கனடா பாரிஸ் சுவிஸ் லண்டன் போன்ற நாடுகளில் இருந்து அவர்களுக்கு வேண்டியவர்கள் போய் கைத்தொலைபேசியில் படம் எடுத்து இங்குவந்து புலுடா விட்டார்கள். இதைத்தானே இவ்வளவு காலமும் பார்த்தோம்.

லங்காசிறீக்கு செய்தி இல்லாட்டி (புதினம் இல்லைத்தான்) நிருபமாக்கு நாலு பேர் கொடி கட்டினார்கள், கடல்கன்னி கண்டுபிடிப்பு, மாவடிவேம்பு கிராமத்தில் அதிசயம் உங்களுக்கு சொரணையே இல்லையா. தயவுசெய்து இனியாவது மனச்சாட்சிப்படி உண்மையை எழுதுங்கள். உண்மையைப் பேசுங்கள்.

அந்த மக்களை மீண்டும் முகாமுக்குள் கொண்டுபோய் அடைக்காதேங்கோ. அவர்களும் சந்தோசமாக இருக்கட்டுமே. அவர்கள் பிள்ளைகளும் எங்கள் பிள்ளைகள் மாதிரி படிக்கட்டுமே. அவர்களும் மானாட மயிலாட பார்க்கட்டுமே. நாங்களும் அதைப் பார்த்த பின்புதானே ஏதோவெல்லாம் எழுதித் தள்ளுறம்.

எங்களுக்கு வட்டுக்கோட்டையும் வேண்டாம். முள்ளிவாய்க்காலும் வேண்டாம். முதலில் கொசுவுக்கு மருந்தடிப்போம். பிறகு கொசோவா பற்றிக் கதைப்போம்.

முஸ்லிம் சமூகத்தை ஏளனம் செய்த பொன்சேகா வெட்டும் குழியில் எவரும் வீழ்ந்து விடவேண்டாம் அலவி மௌலானா கோரிக்கை

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை உல்லாசப் பயணிகள் என்றும் நாட்டின் நிருவாகத்தில் எதனையும் பெற அருகதையற்றவர்கள் என்று முஸ்லிம் சமூகத்தை அவமதித்து ஏளனம் செய்தவர் ஜெனரல் சரத் பொன்சேகா என கண்டனம் தெரிவித்திருக்கும் மேல்மாகாண ஆளுநர் அலவிமௌலானா அவரால் வெட்டப்படும் குழியில் எவரும் விழுந்து விடக் கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.

தற்போது உருவாகியுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் முஸ்லிம் மக்களின் கவனத்துக்கென ஆளுநர் அலவிமௌலானா ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது நமது நாட்டில் நடந்து முடிந்துள்ள யுத்தத்தினாலும், பல்வேறுபட்ட பொருளாதாரச் சிக்கல்களினாலும் திணறிக்கொண்டிருக்கும் எமது மக்கள் இன்று படிப்படியான முன்னேற்றங்களை கண்டு வருகின்றனர். சமூகங்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் இனவாத வித்துக்களைக் களைந்து ஒரே நாடு ஒரே மக்கள் என்ற விழிப்புணர்விற்கான செயற்திட்டங்களை அரசு முனைப்புடன் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் முன்னேற்றத்தில் சிந்தித்தேனும் அக்கறை கொள்ளாத சக்திகள் மீண்டும் மக்களை குழப்பி சதிசெய்து, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றக் கனவு கண்டு கொண்டிருக்கிறது. மக்களாகிய நீங்கள் இந்த சதி வலையில் சிக்கிக் கொள்ளாது சதிகாரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய சந்தர்ப்பம் மீண்டும் உங்கள் வசம் மிக விரைவில் வந்தடையும்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறிது காலத்துக்கு முன்பு வெளியிட்ட கருத்து சிறுபான்மை மக்களிடையே பெரும் மனக் கிலேசத்தினை ஏற்படுத்தியதை நாம் மறந்து விடமுடியாது. அவர் படைத் தளபதியாக இருந்த காலத்தில் சிறுபான்மை முஸ்லிம்களை உல்லாசப் பயணிகள் என்று ஏழ்மை செய்தார். அவர்கள் நிர்வாகத்தில் எதனையும் பெற அருகதையற்றவர்கள் என்றும் அவதூறு செய்தார். இவர் வெட்டிய குழியில் எவரும் விழுந்து விடக்கூடாது.

ஐக்கிய தேசியக் கட்சி சின்னத்தில் வெற்றி பெற்ற ரவூப் ஹக்கீம், மனோகணேசன் போன்றவர்களும் அதிருப்தி அடைந்தவர்களாக அன்று காட்டமான அறிக்கைகளை விட்டிருந்தனர் என்பதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமூக ஒற்றுமைக்குமான ஆக்கபூர்வமான கருத்துகளை இவர்களினாலும் இன்னும் முன்வைக்க முடியாமல் உள்ளது. எவ்வழியிலேனும் அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டால் போதும் என்ற மனப்பான்மையை எதிர்க்கட்சிகளிலும், சுயநலத் தலைவர்களிடத்தும் மேலோங்கி இருப்பதை அறிவு சார்ந்த மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு,மேற்கு என்ற புவியியல் கோடுகளை களைந்து நாம் இலங்கையர் என்று பெருமையுடன் கூறும் காலம் உதயமாகியுள்ளது. சுதந்திர இலங்கையில் சமூகங்களுக்கு இடையேயான ஒற்றுமையை வலுப்பெறச் செய்வதற்கும் நாடு எவரிடமும் தங்கி நிற்காது. பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைவதற்கும் நாட்டின் அனைத்து மக்களும் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற மனப்பான்மையோடு செயல்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

2001 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசினால் பேசப்பட்ட போலி சமாதானத்தில் முஸ்லிம் சமூகத்தை மோசமாகக் கையாண்டதில் சிறுபான்மை மக்களிடையே பெருமளவிலான எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பை சமாளிக்கத் தக்க வகையில் முஸ்லிம் தரப்பை மூன்றாம் தரப்பாக்கி, ரவூப் ஹக்கீமை பேச்சு மேசைக்கு ஓட்டிச் சென்றதை ரவூப் ஹக்கீம் மறந்தே போய்விட்டார்.

புலிகளினால் முஸ்லிம் சமூகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த காலத்தில், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் நியாயத்தினை முதன்மைப்படுத்தி மர்ஹும் அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், ரணிலின் தலைமையை ஏற்றுக் கொள்ளவோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டுக்குள்ளோ செல்லவேயில்லை. அவ்வாறு மர்ஹும் அஷ்ரப்பினால் ஒதுக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டில் ஹக்கீம் சங்கமமாவதால் முஸ்லிம் சமூகம் என்ன நன்மையடையப் போகிறது? என்பதை ஹக்கீம் இதுவரை முஸ்லிம் சமூகத்திற்கு சொல்லாதிருப்பது ஏன் என்பதை முஸ்லிம் மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

முஸ்லிம் சமூகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் நன்மைகளை விட திரைமறைவில் மோசமான கழுத்தறுப்புகள் நடத்தப்பட்டதை இங்கு பட்டியலிடலாம். துயரம் என்னவென்றால் ஹக்கீம் கோடரிக் காம்பாகி இருப்பதுடன் தனது சுயநல அரசியலுக்காக முஸ்லிம்களை கறிவேப்பிலையாக்கிக் கொண்டிருப்பதேயாகும்.

சியோனிசக் கதிரையில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் அரசியல் பேசிக் கொண்டிருப்பவர்களை இன்று முஸ்லிம்கள் நன்கு இனம் கண்டு வைத்துள்ளனர். வரலாறு இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்பதை இவர்கள் மறந்து விடக்கூடாது.

நாளை நடப்பதை யார் அறிவார்? பிரதமராவது பற்றி ராகுல் காந்தி கருத்து

19rahul.jpgவருங்கால பிரதமராக தன்னை நினைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் என்ன நிகழும் என்று எவராலும் கணிக்க முடியாது. அப்படியிருக்க வருங்கால பிரதமராக எப்படி என்னை நினைக்கிறீர்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். விஜயவாடாவில் புதன்கிழமை கல்லூரி விழாவில் பங்கேற்ற ராகுல், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

நாட்டின் பிரதமராக யார் வேண்டுமானாலும் வரலாம். அப்படியிருக்கையில் தயவுசெய்து என்னை எதிர்கால பிரதமராக நினைக்க வேண்டாம் என்றார். தற்போது பிரதமராக உள்ள மன்மோகன் சிங் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார். சிறந்த பிரதமர் நிறைவேற்ற வேண்டிய அனைத்துப் பணிகளையும் அவர் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்” என்றார்

இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை அணி முன்னிலையில் – மஹேல இரட்டை சதம்

mahela-jayawardene.jpgஇலங்கை – இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 591 ஓட்டங்களைப் பெற்று மூன்றாவது நாள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

ஸ்கோர் விபரம் வருமாறு

Sri Lanka in India Test series – 1st Test
India 426
Sri Lanka 591/5 (160.0 ov)
Stumps – Day 3

Sri Lanka 1st innings R M B 4s 6s SR
TM Dilshan  c Dravid b Khan  112 
 NT Paranavitana  c †Dhoni b Sharma  35 
 KC Sangakkara*  c Tendulkar b Khan  31 
 DPMD Jayawardene  not out  204 
 TT Samaraweera  c Yuvraj Singh b Sharma  70 
 AD Mathews  c Gambhir b Harbhajan Singh  17 
 HAPW Jayawardene†  not out  84  
 Extras (b 5, lb 13, w 3, nb 17) 38     
      
Total (5 wickets; 160 overs) 591 (3.69 runs per over)
To bat KTGD Prasad, HMRKB Herath, M Muralitharan, UWMBCA Welegedara 
Fall of wickets1-74 (Paranavitana, 16.5 ov), 2-189 (Dilshan, 43.1 ov), 3-194 (Sangakkara, 45.3 ov), 4-332 (Samaraweera, 86.4 ov), 5-375 (Mathews, 96.2 ov) 
        
 Bowling
 Z Khan 30 4 93 2 
 I Sharma 28 0 108 2
Harbhajan Singh 39 3 151 1
 A Mishra 43 6 152 0 3. 
 Yuvraj Singh 13 1 49 0 
 SR Tendulkar 7 0 20 0

முதலில் ஜனாதிபதி தேர்தல். உத்தியோகபூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை வெளிவரலாம்.

srilanka.jpgஎதிர் வரும் ஜனவரி இறுதிப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படலாமென தேசம் நெற்றிட்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. நாளை 19 ஆம் திகதி ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் 4 வருடங்கள் நிறைவடைகின்றது எனவே நாளையின் பின்பு ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவரலாம். முன் கூட்டியே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவேண்டுமானால் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் நான்கு வருடங்களைப் பூர்த்தி செய்த பின்னரே அதற்கான அறிவிப்பை விடுக்கமுடியும். அனேகமாக எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவருமென எதிர்பார்கப்படுகின்றது. 

கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் தேசிய தேர்தல்கள் தொடர்பாகவே பேசப்படுகிறது. கடந்த வாரம் வரை பல்வேறுபட்ட ஊகங்களையும் ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாநாட்டில் முதலில் எந்தத் தேர்தல் எப்போது நடைபெறுமென ஜனாதிபதி அறிவிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட போதும் அந்த மாநாட்டில் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பை தவிர்த்துக் கொண்டார். நான்கு வருடங்களை நிறைவு செய்யாமல் இது குறித்த முடிவை அவரால் அறிவிக்கமுடியாது என்பதாலேயே அன்று அதிலிருந்து ஜனாதிபதி தவிர்த்துக் கொண்டதாகத் தெரியவருகிறது. அன்றைய மாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுதந்திரக்கட்சி உயர்பீடக்கூட்டத்தில் ஆராய்ந்து விரைவில் அறிவிப்பதாக மட்டுமே தெரிவித்திருந்தார். நேற்றைய தினம் சுதந்திரக்கட்சியின் உயர் மட்ட அங்கத்தவர்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு ஜனவரி 22 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாமென ஊகங்கள் தெரிவிக்கின்றன.

பொலிவியாவில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்: உடன் நடவடிக்கை வேண்டுமென்கிறது யுனிசெப்

பொலிவியாவில் இடம் பெறும் சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு யுனிசெப் அந்நாட்டு அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

இவ்வாறான அநியாயங்களில் ஈடுபடும் குற்றவாளிகளில் பெருமளவானோர் சட்டத்தின் முன் கொண்டுவரப்படாதுள்ளதை சுட்டிக்காட்டிய யுனிசெப் அமைப்பு பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடு வோரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தெரிவித்துள்ளது.

தென்னமெரிக்க நாடுகளில் மிக மோசமான பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம் பெறும் நாடாக பொலிவியா உள்ளது. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ள போதும் பொலிவியாவில் அதிகரித்துவரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களையிட்டு யுனிசெப் கடும் கவனம் செலுத்தியுள்ளது.

தலைநகர் லாபாஸிலுள்ள யுனிசெப் அதிகாரி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பாலியல் துஷ்பிரயோகங்களுக்கெதிராக பொலிவிய மக்கள் கிளர்ந்தெழவேண்டும். இதற்கான காரணங்களைக் கண்டறிந்து இந் நிலையை மாற்ற வேண்டும். எதிர் கால இளைஞர்கள், சிறுவர்களுக்கு வள மான வாழ்வை வழங்க வேண்டுமானால் அவசரமாக இப் பணியைச் செய்து முடிக்க வேண்டுமென்றார்.

பாலியல் வல்லுறவுக்குள்ளான சிறுவர்கள், இளைஞர்கள் உடல், உள ரீதியாகப் பாதிக் கப்படுகின்றனர். இதனால் வாழ்க்கையில் நம்பிகையிழக்கும் நிலைக்கும் சில சிறு வர்கள் செல்கின்றனர். பொலிவியாவிலுள்ள சகல தரப்பினரும் இப் பிரச்சினையைத் தீர்க்க ஒன்றுபட்டு உழைக்க வேண்டு மென்றும் யுனிசெப் அழைப்பு விடுத்து ள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

hri_Logoதமிழ் பேசும் கட்சிகள் – தமிழ் மற்றும் இஸ்லாமியக் கட்சிகளின் மாநாடு நவம்பர் 19, 20, 21ம் திகதிகளில் சூரிச்சில் இடம்பெறுகிறது. இம்மாநாடு தமிழ் பேசும் கட்சிகளிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு என்று சொல்லப்பட்ட போதும் அவர்கள் எட்ட நினைக்கும் புரிந்துணர்வு தமிழ் பேசும் கட்சிகளிடையேயானதல்ல என்ற சந்தேகங்கள் எழ ஆரம்பித்து உள்ளது. இம்மாநாடு நவம்பர் 12ல் லண்டனில் நடாத்த திட்டமிட்டு இருந்த போதிலும் பின்னர் சூரிச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இம்மாநாட்டில் ஓரிரு கட்சிகளின் தலைவர்கள் தவிர ஏனைய 20 தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரியவருகிறது.

இம்மாநாட்டுக்கு இன்னமும் ஒரு சில தினங்களேயே உள்ள நிலையில் இம்மாநாடு யாரால் நடத்தப்படுகின்றது என்பது பற்றியோ அதன் நோக்கம் பற்றியோ எவ்விதமான உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அழைக்கப்பட்ட கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களுக்குமே தெரியாமல் இம்மாநாடு பற்றிய விபரம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டுக்கு முன்னணியில் நின்று அழைப்புவிட்டவர்களின் விபரம் தற்போது ஓரளவு தெரியவந்துள்ளது. இம்மாநாட்டை சட்டத்தரணி மனோகரன் என்பவரே ஏற்பாடு செய்வதாக சொல்லப்பட்டு வந்தது. ஈஎன்டிஎல்எப் அமைப்பைச் சேர்ந்த இவர் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ரிஎம்விபி அமைப்புடன் இணைந்து செய்ற்பட்டவர் எனத் தெரியவருகின்றது. பெரும்பாலும் அழைப்புகள் சட்டத்தரணி மனோகரனூடாகவே விடுக்கப்பட்டும் இருந்தது. சட்டத்தரணி மனோகரனுக்குப் பின்னணியில் மற்றுமொரு ரிஎம்விபி முக்கியஸ்தரான கிருஸ்ணன் பின்னணியிலுள்ளர். ஆனால் இந்த மாநாட்டில் மனோகரனுக்கு வழங்கப்பட்ட பொறுப்பையே மனோகரன் மேற்கொண்டதாகவும் ஏனைய விடயங்களில் அவர் ஈடுபட்டு இருக்கவில்லை என்றும் தெரியவருகின்றது. இம்மாநாட்டின் பின்னணயில் தமிழர் தகவல் நடுவம் இருப்பதாக இந்நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ள முஸ்லிம் கட்சி ஒன்றின் பிரதிநிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இம்மாநாட்டு ஏற்பாட்டில் தமிழர் தகவல் நடுவம் முக்கிய பங்கு வகிப்பதாக லண்டனில் உள்ள தமிழ் அரசியல் கட்சிவட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது. மேலும் மனோகரன் தமிழர் தகவல் நடுவம் இந்தியாவில் செயற்பட்ட வேளையில் அதனுடன் அங்கு தொடர்புபட்டு இருந்துள்ளார். மனோகரனுடைய கடந்தகால அரசியல் செயற்பாடுகள் பற்றி பல்வேறு விமர்சனங்களும் உள்ளது.

இம்மாநாட்டில் கட்சியின் தலைவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற கடுமையான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளதாக இதில் கலந்துகொள்ள உள்ளவொரு கட்சிப் பிரதிநிதி தேசம்நெற்க்கு தெரிவித்தார். இலங்கையில் இருந்து வரவுள்ள கட்சிகளின் தலைவர்களின் பயணச் செலவு ஒரு வாரகாலம் தங்குவதற்கான செலவு என்பனவற்றை மாநாட்டு ஏற்பாட்டாளர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர். அண்ணளவாக இம்மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கு 100 000 பவுண்கள் வரை ஆகும் என மதிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கான பொருளாதார பலமும் அரசியல் பலமும் இலங்கை இந்திய அரசுகளுக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரிஎப் போன்ற புலி ஆதரவு அமைப்புகளுக்குமே உள்ளது. ஆனால் இம்மாநாட்டு ஏற்பாடுகளில் தமிழர் தகவல் நடுவத்தின் ஈடுபாடும் இலங்கையின் ஆளும் கட்சி வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களும் இலங்கை அரசு இம்மாநாட்டின் பின்னணியில் இல்லை என்பதை தெளிவாக்குகின்றது.

இங்கு வரவுள்ள கட்சிகளின் லண்டன் அமைப்பாளர்கள் சிலருடன் உரையாடியதில் இந்திய அரசும் இம்மாநாட்டின் பின்னணியில் இல்லையென உறுதியாகத் தெரிவிக்கின்றனர். இந்த மாநாட்டை ஒழுங்கு செய்யக் கூடியவர்கள் பொருளாதார பலமுடைய பிரிஎப் ம் அரசியல் ஆளுமையைக் கொண்ட தமிழர் தகவல் நடுவமும், மட்டுமே. ஆனால் தங்களுக்கென்று ஒரு தலைமைத்துவ ஆளுமையைக் கொண்டிராமல் தலைமறைவாக இருந்து அவர்களின் பினாமிகளால் வழிநடாத்தப்படும் அமைப்பு 100 000 பவுண் செலவில் இம்மாநாட்டை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே. மேலும் பிரிஎப் பின்னணியில் ஏற்பாடு செய்யும் ஒரு கூட்டத்திற்கு இத்தமிழ் பேசும் தலைமைகள் அழைப்பையேற்று வர முற்படாது.

ஆக இந்த மாநாட்டின் பின்னணியில் தமிழர் தகவல் நடுவம் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. ஆனால் இவ்வாறான ஒரு பாரிய செலவில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்கின்ற வல்லமை தமிழர் தகவல் நடுவத்திற்கு இல்லை என்பதும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்பாகக் கருதப்படும் தமிழர் தகவல் நடுவத்தின், அதன் தலைவர் ஆர் வரதகுமாரின் அழைப்பையேற்று இந்த தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் வரமாட்டார்கள் என்பதும் உறுதியானது. ஆகையால் தமிழர் தகவல் நடுவத்திற்குப் பின்னணியில் உள்ளவர்களே இம்மாநாட்டை ஏற்பாடு செய்கின்றனர் என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகின்றது.

அந்த வகையிலும் மேலதிகமாக தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்களும் மேற்கு நாடுகள் குறிப்பாக பிரித்தானிய அரசு இம்மாநாட்டின் பின்னணியில் இருப்பதாக தெரிவிக்கின்றன. அதனாலேயே ஆரம்பத்தில் லண்டனில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பின்னர் பிரித்தானிய அரசின் ஈடுபாடு வெளிப்படாமல் தவிர்க்கப்படுவதற்காக சூரிச்ற்கு இம்மாநாடு இடமாற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

மாநாட்டின் திரைக்குப் பின்னால் உள்ளவர்கள் யார்?

International Working Group on Sri Lanka என்ற அமைப்பே இம்மாநாட்டை ஒழுங்கு செய்வதாகவும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy, தமிழர் தகவல் நடுவம் ஆகியனவே இம்மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரியவருகின்றது.

International Working Group on Sri Lanka என்ற அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்ற அமைப்பு. அதன் தலைவராக Richard Reoch என்பவர் இருந்துள்ளார். அதன் பொதுச் செயலாளராக Peter Bowling என்பவர் இருந்துள்ளார். இவ்வமைப்பு இலங்கை மனித உரிமைகள் விடயம் தொடர்பாக மேற்கு நாட்டு அரசுகளுக்கு தகவல்களை பரிமாறியுள்ளனர். ஒரு சில அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் மிகமோசமான மனித உரிமைகளை மீறிய இறுதி யுத்தம் தொடர்பாக இவ்வமைப்பு மௌனமாகவே இருந்துள்ளது. இவ்வமைப்புப் பற்றி டிசம்பர் 11 1998ல் அமெரிக்க கொங்கிரஸ்ற்கு அதன் தலைவர் Richard Reoch பின்வருமாறு கூறுகிறார் ‘The International Working Group on Sri Lanka is an independent, non-partisan network of organisations and individuals concerned with the promotion of human rights, development and peace in Sri Lanka. It has a management board in London and an international network that currently comprises humanitarian and advocacy groups in Asia, Australasia, Canada, Europe and the USA as well as Sri Lankan organisations working in the fields of development, peace and human rights.” இவ்வமைப்பின் சார்பில் Richard Reoch யை பிரித்தானிய அரசின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் (Department for International Development of the UK Government) இரு வார வேலைத் திட்டத்தில் இலங்கைக்கு அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தகவல் நடுவத்துடன் இம்மாநாட்டின் ஏற்பாடுகளைக் கவனிக்கும் Initative on Conflict Prevention through Quiet Diplomacy அமைப்பு கனடாவைத் தளமாகக் கொண்டு செயற்படுகின்ற Human Rights Internet அமைப்பின் ஒரு பிரிவாகும். 2007ல் இவ்வமைப்பு ஒரு மில்லியன் டொலர் நிதித் திட்டத்தைக் கொண்டிருந்தது.  இவ்வமைப்பிற்கு கனடிய சர்வதேச அபிவிருத்தி முகவரகம் நோர்வே வெளிநாட்டு அமைச்சு உட்பட பல நிறுவனங்கள் நிதி வழங்குகின்றன. இவ்வமைப்புகள் நிதியுதவிக்காக அழைப்பிதழில் சேர்க்கப்பட்டது என்று தங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக அழைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பிரமுகர் தேசம்நெற்க்கு தெரிவித்தார். Human Rights Internet அமைப்பு பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://www.hri.ca/pdfs/HRI%20Annual%20Report%202006-2007.pdf

Human Rights Internet அமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒன்றான Initative on Conflict Prevention through Quiet Diplomacyஅமைப்பு செயற்படுகின்றது. இதன் ஆலோசணைக் குழுவில் பல்வேறு நர்டுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளனர். பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் டொக்டர் பெர்னாட் கோச்னர், இந்தியாவில் இந்திர் குமார் குஸ்ரால், முன்னால் இலங்கை ஜனாதிபதி சத்திரிகா குமாரதுங்க ஆகியோர் அவர்களில் சிலர். இவ்வமைப்பின் வேலைத்திட்டங்களில் தமிழ் முஸ்லீம் தேசியக் கட்சிகளை இயக்கங்களை வன்முறையற்ற வழிகளில் பலப்படுத்துவதும் ஒன்றாக உள்ளது. மேலும் சர்வதேசத் தொடர்புகளை ஏற்படுத்தி பேச்சுவார்த்தைகளில் சர்வதேச தொடர்பை பேணுவதும் அதன் வேலைத்திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

ஆனால் இப்பின்னணிகள் பற்றியெல்லாம் முழுமையான இருட்டடிப்பைச் செய்து இம்மாநாடு ஒழுங்கு செய்யப்படுவதன் நோக்கம் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இம்மாநாட்டில் பங்குகொள்ளும் கட்சிகளுக்கே இவை பற்றிய முழுமையான விபரங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லீம் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று புரிந்துணர்வை ஏற்படுத்தி பொதுக்கூட்டமைப்பை உருவாக்கவே என்று மட்டும் சொல்லப்பட்டே அனைத்து தமிழ், முஸ்லீம் கட்சிகளும் அழைக்கப்பட்டு உள்ளன.

கட்சித் தலைவர்களுக்குள் மட்டும் ஏற்படுத்தப்படும் புரிந்தணர்வு இலங்கையில் நீண்டகாலம் புரையோடிப் போயுள்ள இன முரண்பாட்டைத் தீர்க்க எவ்வாறு உதவும். தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் முஸ்லீம் தேசியக் கட்சிகளுக்கும் சிங்கள தேசியக் கட்சிகளுக்கும் ஏற்கனவே காலத்திற்குக் காலம் புரிந்துணர்வும் பொது உடன்பாடும் ஏற்பட்டு வந்திருக்கின்றது. அடுத்து வருகின்ற தேர்தலிலும் அந்தப் புரிந்தணர்வும் பொது உடன்பாடும் ஏற்படும். ஆனால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மட்டும் எப்போதும் தீர்வு எட்டப்படுவதில்லை. அதற்கு சுவிஸ் சொக்லேட் கொடுத்து திரைமறைவில் இன்னுமொரு மாநாடு எதற்கு என்ற கேள்வியை எழுப்பியே ஆக வேண்டியுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு மேற்குலகுக்கு எதிரான அணியில் அணிவகுத்து நிற்பதாலும் மேற்குலகின் ராஜதந்திரங்களுக்கு ஏற்பட்ட தோல்வியினாலும் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றதா என்ற கேள்வி எழுப்பப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ஓய்வுபெறப் போகின்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை அமெரிக்க உள்ளக பாதுகாப்பு அதிகாரிகள் அவரை ஒரு சந்திப்பிற்கு அழைத்து இருந்தனர். ஆனால் இச்சந்திப்பு போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைக்கானது என்ற அடிப்படையில் செய்திகள் வெளியாகின. ஆனால் இச்சந்திப்பு சரத் பொன்சேகாவை மகிந்த சகோதரர்களுக்கு எதிராக கொம்பு சீவிவிடும் ஒரு யுக்தியாக இருக்கலாம் என்றும் கருத இடமுண்டு.

எப்போதும் திறந்த பொருளாதாரக் கொள்கைகொண்ட மேற்குலகுக்கு உவப்பான ஒரு கட்சி ஐக்கிய தேசியக் கட்சி. ஆளுமையான தலைவரில்லாமல் உள்ள அக்கட்சிக்கு இன்று ஜனாதிபதி மகிந்தவை எதிர்க்கின்ற ஆளுமையை உடையவராக வரக்கூடியவர் சரத்பொன்சேகாவே என்ற வகையில் அமெரிக்க உள்ளக பாதுகாப்பு அதிகாரிகளின் சந்திப்பு குறிப்பிடத்தக்கது. இவற்றின் பின்னணியிலேயே தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களின் மாநாடும் நோக்கப்பட வேண்டும். இன்று மேற்குலகு இலங்கையில் ஒரு ரெஜிம் சேன்ஜ்யை எதிர்பார்க்கின்றது. புலித் தேசியமும் ரெஜிம் சேன்ஜ் ஒன்றை செய்வதன் மூலம் தனது மனதை ஆற்றிக் கொள்ளத் துடிக்கின்றது.

புரஜக்ற் பீக்கன் திட்டத்தை சர்வதேச நாடுகள் மகிந்த ராஜபக்ச அரசோடும் இந்தியாவுடனும் இணைந்து வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளன. Initative on Conflict Prevention through Quiet Diplomacy யின் மொழியில் சொல்வதானால் தமிழ் தேசியவாதத்தை வன்முறையற்ற வழிக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. அடுத்து மகிந்த ராஜபக்சவின் ரெஜிமைச் சேஞ் பண்ணுவதை நோக்கி நகர்கின்றன.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்ற கணக்கில் தமிழ் தலைமைகள் சரத்பொன்சேகாவின் கீழ் அணிதிரள காரணங்களைக் கண்டுபிடிக்க ஆரம்பித்துள்ளனர். முஸ்லீம் காங்கிரஸ் ஏற்கனவே யுஎன்பி அணியில் அணிவகுத்து ஏனைய தமிழ் கட்சிகளையும் சிறுபான்மைக் கட்சிகள் என்ற ஸ்லோகத்தில் அணிவகுப்பதற்கான அடுக்குகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. புலித் தேசியம் பேசிய கட்சிகளுக்கும் நபர்களுக்கும் சர்தபொன்சேக்காவை ஏற்றுக் கொள்வதில் சற்றுத் தயக்கம் இருக்கும். ஆனாலும் மேலக மலையக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் ஏற்கனவே சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடித்துள்ளார். மனோ கணேசனுடன் தோளுக்குத் தோள் கொடுத்த சிறிதுங்க ஜெயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் நின்றாலும் மனோ கணேசன் சரத் பொன்சேகாவின் அணியிலேயே நிற்கப் போகின்றார். ஏனையவர்கள் பலரும் தங்களுக்கான காரணங்களைத் தேடத் தொடங்கி உள்ளனர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்கும்படி கேட்கும் தமிழ் கட்சிகள் அந்த சுயநிர்ணய உரிமையை வழங்க முன்வருபவர்களுக்கு வாக்களிக்கும்படி எப்போதும் கோரியதில்லை. இப்போதும் அவ்வாறு கோரப் போவதில்லை என்ற நிலையே தென்படுகின்றது.

இலங்கையில் இனமுரண்பாடுகளை கூர்மைப்படுத்தி தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதில் முக்கிய பங்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் உண்டு. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கு உண்டு. ஆனாலும் தமிழ் தேசியவாதிகள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பின்னேயே அணிதிரண்டனர். தற்போதும் சரத் பொன்சேகா, கோதபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக மனித உரிமை மீறல், யுத்தக் குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்களை வைத்த தமிழ் தேசியம், சரத்பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் நின்றவுடன் அவருக்கு பாவ மன்னிப்பு வழங்கி அவரின் கீழ் அணி திரளத் தயாராகின்றனர்.

சாதாரணமாகவே பேரினவாதக் கட்சிகளில் தொங்கிக் கொள்ளும் இலங்கை சிறுபான்மையினக் கட்சிகளுக்கு, தமிழ் பேசும் இனங்களின் கட்சிகளுக்கு இப்போது சூவிஸ் சொக்லேட்டு தருவதாக மேற்குலகம் சமிஞ்சை செய்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. காலம்காலமாக இருந்துவருகின்ற பேரினவாத நடவடிக்கைகள் இன்னமும் தொடரவே செய்கின்றது. இவை தமிழ் மக்களின் உள்ளங்களையும் இதயங்களையும் வென்றெடுப்பதற்கு மாறாக அவர்களை இலங்கை அரசியலில் நம்பிக்கை அற்றவர்களாக்கி உள்ளது. இந்த நம்பகமற்ற சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கி தமிழ் மக்களின் வாக்கு வங்கியை வைத்து பேரம் பேசுவதற்கு தமிழ்த் தேசிய சக்திகள் தயாராக உள்ளன.

சரத்பொன்சேகா என்ன கோத்தபாய ராஜபக்சவே வந்து ஐக்கிய தேசியக் கட்சியில் நின்றாலும் அவர்கள் தங்கள் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றால் யாருக்கும் வாக்களிக்கும்படி கோருவார்கள். தமிழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் என்றைக்காவது எண்ணி இருந்தால் எப்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களிக்கும்படி கோரியிருக்க முடியும்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள கட்சிகளும் அதன் தலைவர்களும் :

இம்மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (ரிஎம்விபி), தமிழரசுக் கட்சித் தலைவர் சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், மலையக மக்கள் முன்னணித் தலைவர் பொ சந்திரசேகரன், மேல்மாகாண மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் உட்பட 22 தமிழ் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

பேரியல் அஸ்ரப் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது. ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இம்மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பவில்லை என்றும் அக்கட்சியின் மற்றுமொரு உறுப்பினரே கலந்துகொள்வதாகவும் மேலும் தெரியவருகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஜேவிபி பா உ சந்திரசேகரன் ஆகியோர் எந்தவொரு கட்சியின் தலைவராகவும் இல்லாததால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரியவருகின்றது.

இலங்கை – இந்திய முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்

sachin.jpgஇலங்கை – இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆமதாபாத்தில் துவங்குகிறது. இதில் சச்சின் 39 ஓட்டங்கள் எடுக்கும் பட்சத்தில் ஒரு நாள் டெஸ்ட் “டுவென்டி-20” போட்டிகளில் சேர்த்து 30 ஆயிரம் ஓட்டங்களை எடுத்து சாதிக்கலாம்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்று துவங்குகிறது.

முதல் டெஸ்டில் பங்கேற்க இந்தியா, இலங்கை வீரர்கள் நேற்று முன்தினம் ஆமதாபாத் வந்தனர். இவர்களுக்கு ஆமதாபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

துடுப்பாட்ட வீரர் இந்திய சச்சின், கிரிக்கெட் அரங்கில் தனது 20 வது ஆண்டை பூர்த்தி செய்துள்ளார். இதுவரை இவர் 159 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 12,773 ஓட்டங்கள் எடுத்துள்ளார். தவிர, ஒரு நாள் அரங்கில் 436 போட்டிகளில் விளையாடி 17,178 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இருபதுக்கு-20 போட்டியில் இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். இதில் 10 ஓட்டங்கள் எடுத்த சச்சின் இருபதுக்கு-20 போட்டிகளை புறக்கணித்து வருகிறார்.

இன்று இலங்கை அணிக்கு எதிராக ஆமதாபாத்தில் நடக்கும் முதல் டெஸ்டில் சச்சின் 39 ஓட்டங்கள் எடுக்கும் பட்சத்தில் கிரிக்கெட் அரங்கில் 30 ஆயிரம் ஓட்டங்களை (12,773+17,178+10=29961+39=30,000) பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

பொங்கலுக்கு கேப்டன் டிவி

images-tv.jpgநடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் புதிய தொலைக்காட்சி சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளார். கேப்டன் டிவி என்ற இந்த தொலைக்காட்சி எதிர்வரும் பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பை ஆரம்பிக்கவுள்ளது.

இந்தத் தொலைக்காட்சிக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என பெரிய விளம்பரமெல்லாம் கொடுத்திருக்கிறார் விஜய்காந்த்.

இந்த தொலைக்காட்சி மட்டுமல்லாமல், புதிய பத்திரிகையும் ஆரம்பிக்கவுள்ளாராம். இது வாரப் பத்திரிகையாக முதலில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாளிதழாக மாறும் என்கிறது தேமுதிக வட்டாரம். ஏற்கெனவே மூன்று இணையதளங்களைத் ஆரம்பித்துள்ளார் விஜய்காந்த்.

இராணுவத்தினர் மீதான புகார்களை பிரிட்டன் மறுத்துள்ளது

britishtroops.jpgஇராக்கிலே பிரிட்டிஷ் இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் புதிய புகார்கள் பெரும் எண்ணிக்கையில் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுவதை பிரிட்டிஷ் ஆயுதப் படைகளுக்கான அமைச்சக அதிகாரி பில் ரம்மெல் மறுத்துள்ளார். புதிதாக முப்பது புகார்கள் வெளிவந்துள்ளதாக முன்னதாக வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர். அமெரிக்க துருப்பினர் கைகொண்டதாக வெளிவந்திருந்த பாலியல் துன்புறுத்தல் வழிவகைகள் போன்றவையும் புதிய புகார்களிலே பலவற்றில் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்தப் புகார்களில் பல புதியவையே அல்ல என்று கூறியுள்ள அதிகாரி ரம்மெல், புகார்களில் தெரிவிக்கப்பட்டிருப்பவைதான் நடந்த விஷயங்கள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார். பிரிட்டிஷ் துருப்புகளைப் பொறுத்தவரை அவர்கள் பரவலாகவே துஷ்பிரயோகம் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் கிடையாது; ஆனால் புகார்கள் ஒழுங்காக விசாரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.