கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இந்தியாவை 209 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியனானது அவுஸ்திரேலியா  அணி !

உலக டெஸ்ட் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியின் இறுதி நாள் ஆட்டத்தில் இந்தியாவை 209 ஓட்டங்களால் வீழ்த்தி அவுஸ்திரேலியா  அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணியை பணித்திருந்தது.

அந்தவகையில், தனது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 469 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

173 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அதன்பின்னர், 443 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா அணி போட்டியின் இறுதி நாளான இன்று ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் விராட் கோலி 49 ஓட்டங்களையும், ரஹானே 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் நாதன் லியோன் 4 விக்கெட்டுக்களையும், ஸ்கொட் போலன்ட் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது டெஸ்ட் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றும் அணி என்ற பெருமையை ஆஸ்திரேலிய அணி பெற்றுக்கொண்டது.

முதலாவது உலக டெஸ்ட் சம்பியன் கிண்ணத்தை நியூசிலாந்து அணி கைப்பற்றியிருந்தது.

இரண்டு தடவைகளும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு வந்து உலகக்கிண்ணத்தை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊக்கமருந்து குற்றச்சாட்டு – இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனைக்கு இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை !

ஊக்கமருந்து குற்றச்சாட்டு காரணமாக இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை நிலானி ரத்நாயக்கவுக்கு இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனைவிதிக்கப்பட்டுள்ளது.

இராணுவ மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி உட்பட பல போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை அவர் இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதநிலானி ரத்நாயக்க, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண !

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

16 வீரர்களை கொண்ட குழாமின் தலைவராக தசுன் சானக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக குசல் மெந்திஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு அணிக்கு துமித் கருணாரத்ன மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழாமில் இளம் பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடர் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடு – இலங்கை சர்வதேச ரக்பி அணியிலிருந்து இடைநிறுத்தம் !

இலங்கை ரக்பியின் ஒழுங்கற்ற நிர்வாகம் மற்றும் அரசியல் தலையீடு என்பன உலக ரக்பி விதிகளை மீறும் நிலையில், உலக ரக்பி பேரவை, இலங்கை ரக்பியை உலக ரக்பி அங்கத்துவத்திலிருந்து இடை நிறுத்தியுள்ளது.

உலக ரக்பி பேரவை மற்றும் ஆசிய ரக்பி, சர்வதேச கூட்டமைப்பு மற்றும் பிராந்திய சங்கம் என்பன இலங்கையில் ரக்பிக்கு குறைந்த பட்ச இடையூறு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து செயற்பட உடன்பட்டுள்ளதாக சர்வதேச ரக்பி பேரவை தெரிவித்துள்ளது.

நிர்வாக சிக்கல்களை தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்றுவதே உடனடி முன்னுரிமையாகும்.

எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் இலங்கை விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆசியாவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்க முடியும் என ரக்பி பேரவை குறிப்பிட்டுள்ளது.

உலக ரக்பி மற்றும் ஆசிய ரக்பி ஆகியன அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து அவசரமாக செயற்பட்டு தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கையுடன் கூட்டங்களுக்கான நிகழ்ச்சித்திட்டத்தை அமைக்கும் என்றும் பேரவை தெரிவித்துள்ளது.

இதே நேரம் இலங்கையின் கிரிக்கெட் தெரிவுக்குழுவில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அண்மையில் ஐ.சி.சி அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக 2023. ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அந்த சம்மேளனம் தெரிவித்திருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.

இலங்கை நாட்டை முடமாக்கிக்கொண்டிருப்பது அரசியல்வாதிகள் மட்டுமல்ல – அரச அதிகாரிகளும் தான் !

இலங்கை அண்மையில் எதிர்கொண்டிருந்த மிகப் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடிக்கும் – இலங்கையில் இன்னமும் மில்லியன் கணக்கிலான  மக்கள் ஏழைகளாகவே இருப்பதற்கும் இலங்கையின் அரசு நிறுவனங்கள் முறையாக இயங்காமையே முக்கியமான காரணமாகும். இதனை அண்மையில் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்ட இரண்டு விடயங்களின் ஊடாக தெளிவாக விளங்கிக் கொள்ள முடிந்தது.

01. மக்களின் பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரசினால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசி.

02. பாவிக்க கூடிய நிலையிலும் யாருக்கும் கையளிக்கப்படாத நிலையில் கிளிநொச்சியில் தேங்கி கிடக்கும் உழவு இயந்திரங்கள்.

அரிசி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசாங்கத்தின் உதவியோடு இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்பட்டிருந்தது.  எனினும் பல இடங்களில் இவை மக்களுக்கு விநியோகிக்கப்படாது பதுக்கப்பட்ட தன்மையினை காண முடிந்தது. அவ்வாறு பதுக்கப்பட்ட அரிசி புழு மொய்த்தும் வண்டுகள் நிறைந்ததாகவும் காணப்பட்ட நிலையில் பல இடங்களில் பாவனைக்கு உதவாது குப்பையில் கொட்டப்பட்டிருந்தன. இவற்றை முறையாக கண்காணித்து மக்களுக்கு கொடுக்க வேண்டிய அரசு நிறுவனங்கள் கொடுக்காதுவிட்டமையே இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்திருந்தது. வவுனியாவின் ஆசி குளம் கிராம உத்தியோகத்த பிரிவில் உள்ள அரச கட்டிடம் ஒன்றில் இருந்து தமிழ்நாடு அரசினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 1272 கிலோ அரிசி பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இதனைப் போலவே அரசு அதிகாரிகளின் அசமந்த போக்கினால் மக்களுக்கு சென்று சேர வேண்டிய அன்பளிப்புகள் முறையாக மக்களின் கைகளுக்கு போய் சேராத ஒரு நிலை இன்று வரை இலங்கையின் சாபக்கேடாக தொடர்கிறது.

நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் சமநிலை சேவைகள் நிலையம் ஒன்றில் இயங்க முடியாத நிலையில் மக்கள் பயன்பாட்டுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட உழவு இயந்திரங்கள்  இயங்க முடியாத நிலையில் கமநல சேவைகள் அறையினுள் போட்டு மூடப்பட்டிருப்பதான புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டிருந்தன.

(குறித்த சமூக வலைத்தள பதிவை காண)

https://www.facebook.com/100001431522803/posts/6435197643204556/?mibextid=QyDEvNoB73lyOOK6

குறித்த சமூக வலைதள பதிவுகளை அடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் கிளிநொச்சியில் உள்ள குறித்த கமநல சேவைகள் நிலையத்திற்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மிக விரைவில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தனர். அதுமட்டுமன்றி ஜனாதிபதி செயலகத்திலிருந்து குறித்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது இருந்தமைக்கான மேலதிக விளக்கங்கள் கோரப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

இதனை போலவே வவுனியாவில் பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து சுமார் 12 ஏக்கர் காட்டை அழிக்க துணை போன வவுனியா கட்டையர்குள பகுதி கிராம உத்தியோகத்தர் தொடர்பான விவகாரம், வடக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெறும் மண் அகழ்வை கண்டும் காணாது இருக்கும் அரசு உத்தியோகத்தர்கள் , கம்பளையில் பிரதேச அரச வைத்தியசாலையில் ஏற்கனவே எழுதப்பட்ட மருந்துச்சிட்டையினை மீள பயன்படுத்தியதால் 7 வயது குழந்தை பலியான சம்பவம் என அரச அதிகாரிகளின் அசமந்த போக்கை தினசரி இலங்கையர்கள் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காக சேவையாற்றும் சில அதிகாரிகள் உள்ளனர். ஆனால் அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் வாங்கும் சம்பளத்துக்காக சரி உண்மையாக வேலை செய்வதில்லை. காலை எட்டு மணிக்கு வேலை ஆரமப்மாகும். மக்கள் காத்திருப்பது கணக்கேயில்லாமல் சரியாக 10-11 மணிக்கிடையில் தேநீர் இடை்வேளை, சரியாக 1 மணிக்கு மதிய உணவு மதியம் 3,  4 மணிக்கு அலுவலகம் மூடப்படும். பின்பு சனி,ஞாயிறு முழுமையான விடுமுறை . இதறகிடையில் சம்பளம் போதாது – சம்பள உயர்வு வேண்டும் என போராட்டங்கள் வேறு.

மக்களுக்காக வழங்கப்படுகின்ற இந்த இலவசமான உதவி திட்டங்களை கூட மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்கின்ற அளவிற்கு இந்த அரச அதிகாரிகள் நிலை இருக்கின்றது. அலுவலகங்களில் கூட இலங்கையின் அரசு அதிகாரிகள் பெரிதாக வேலை செய்வது கிடையாது. இன்னமும் பழமையான ஆவணப்படுத்தல் முறைமைகளை கையில் வைத்துக் கொண்டு அதனை நிறைவேற்றுவதனை பெரிய ஒரு தொழிலாக அடையாளப்படுத்தி மக்களின் உழைப்பை இந்த அரசு அதிகாரிகள் சுரண்டி கொண்டிருக்கிறார்களே தவிர மக்களுக்காக இவர்கள் எதனையும் ஆக்கபூர்வமாக செய்தது கிடையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆகச் சிலரை தவிர அரசு உத்தியோகத்தினை மக்களுக்கான சேவையாக வழங்குகின்ற திணைக்களங்களின் எண்ணிக்கை கூட இலங்கையில் குறைந்துவிட்டது. சாதாரணமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழாக தகவலை கோருகின்ற மனுக்களுக்கு கூட சரியான பதில் கிடைப்பது இல்லை. சரியான பதிலை வழங்கி விட்டால் தங்களுடைய உண்மையான நிலை தெரிந்து விடுமோ என்ற அச்சம் தான் இதற்கான உண்மையான காரணம்.

அரசாங்கங்களும் – அரசியல்வாதிகளும் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை மாறிக் கொண்டிருக்க போகிறார்கள். அவர்களை நொந்து எந்தப் பயனுமே இல்லை. இந்த இலங்கை நாட்டை முடமாக்கியதில் ஆகப்பெரிய பங்களிப்பு வாழ்நாள் முழுவதும் அரசு அதிகாரிகள் என்ற பெயரில் கதிரைகளை தேய்த்துக் கொண்டிருக்கும் இந்த அரசு அதிகாரிகளுடையது. நாம் அதிக கேள்வி கேட்க வேண்டியது இந்த அரசு அதிகாரிகளை தான்.

அரச அதிகாரிகள் முறையாக செயற்படாத வரையில் இலங்கை மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே உண்மை.

பெண்கள் மீதான வன்முறையை தடுப்போம் என்ற கலந்துரையாடலில் பேச பல பெண்களை துஷ்பிரயோகம் செய்த குடுமி ஜெயாவின் சகபாடி உமா சந்திரா பிரகாஷ்க்கு அழைப்பு !

பெண்கள் சந்திப்பினூடாக Zoom இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று “மரணங்களாலும் அவதூறுகளாலும் மறைக்கப்படும் பெண்கள் மீதான சுரண்டல்கள் உரத்துப்பேசுவோம்.” என்ற தொனிப் பொருளில் 13.05.2023 அன்று  சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இன்றைய திகதிக்கு கட்டாயமாக பேசப்பட வேண்டிய ஒரு தலைப்பாக இது காணப்படுகின்றது.  அதே நேரம் இது தொடர்பில் இருக்கக்கூடிய முரணான தன்மையையும் எடுத்துக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.

“பெண்கள் மீதான வன்முறையை நிகழ்த்துபவர்களை காட்டிலும் அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற சூழலை உருவாக்குபவர்களும் குற்றவாளிகளே”

மேற்குறித்த Zoom மூலமான கலந்துரையாடலுக்கும் – இந்த மேற்கோள் வசனத்துக்குமிடையிலான தொடர்பு பற்றி நாம் அதிகமாக சிந்திக்க வேண்டியுள்ளது. காரணம் குறித்த Zoom கலந்துரையாடலில் பெண்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான உமா சந்திரபிரகாஷ் அழைக்கப்பட்டுள்ளமையாகும்.

இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்திருந்தது.  ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிந்திருந்த நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பிலும் – பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பிலும் தேசம் நெட் அதிக கவனம் செலுத்தி இருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளராக உள்ள ஜெயசந்திரன் எனும் குடுமி ஜெயா தொடர்ச்சியாக பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டவர் என்பதுடன் – சாதிய மனோநிலையில் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பாக அச்சமுதாயத்தின் பெண்களை தன்னுடைய இச்சைகளுக்காக பயன்படுத்துகின்ற ஒரு அராஜகப் போக்கில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார். பொதுவெளியில் கூட பெண்களை மிக இழிவாக தரக்குறைவாக கதைக்கக்கூடிய மனோநிலையில் உள்ள குறித்த ஜெயச்சந்திரன் என்பவரை ஆதரிக்கின்ற –  அவருடைய சக பாடிகளுள் ஒருவரே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான  உமாசந்திரா பிரகாஷ் ஆவார்.

“ஆம், தமிழ் ஒரு பொது உடமை, உலகத்தில் முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ்” என்ற வாக்கியத்தோடு முகநூலில் வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் உள்ளார். ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டு வந்ததில் இவருக்குள்ள பங்கை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தான் ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டுவரவில்லை என்றும் ஆனால் ஜெயந்திரனுடைய உறவுகள் பற்றித் தனக்குத் தெரியும் என்றும் அவருடைய சினேகிதிக்குத் தெரிவித்துள்ளார். ஜெயந்திரனுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு அரசியல் வேறு அதனால் தான் அவருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க தான் முன்வந்தாக இவர் தன்னுடைய சினேகிதிக்கு விளக்கமளித்துள்ளார். தன்னை பெண்ணியவாதியாகவும் காட்டிக்கொள்ளும் உமாசந்திர பிரகாஷ் ஜெயந்திரனின் தாய்வழி உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உமாசந்திர பிரகாஷ் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மூன்று பெண்களின்: ஜெயந்திரனின் கொடுமை தாங்காமல் விவாகரத்துக்குக் கோரி நிற்கும் இரு பிள்ளைகளின் தாய், திருமணமாகாமலேயே குழந்தையுடன் தற்போது ஜெயந்திரனின் கீழ் அடி உதை வாங்கி வாழும் ஒரு பெண் குழந்தையின் தாய், குழந்தை முகம் கலையாத தற்போது வசீகரிக்கப்பட்ட பெண் – என அனைவரின் அவலத்தையும் நன்கு அறிந்தவர். ஆனாலும் ஜெயந்திரனின் பணத்துக்காக லக்ஸ் ஹொட்டலுக்காக இவற்றை சகித்துக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகம் லக்ஸ் ஹொட்டலிலியே இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் பெண்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும் – பெண்கள் மீதான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்படுகின்ற Zoom மூலமான கலந்துரையாடலில் உமாசந்திரபிரகாஷ் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மீதான வன்முறைகளை தொடர்ச்சியாக நிகழ்த்திக் கொண்டிருக்கக் கூடிய குடுமி ஜெயா எனப்படும் ஜெயச்சந்திரன் போன்ற பல அரசியல் தலைவர்கள் என்ற போர்வையிலும் சமூகத் தலைவர்கள் என்ற போர்வையில் நம் மத்தியில் உலவி கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காட்டிலும் ஆபத்தானவர்கள் அவர்கள் செய்கின்ற வன்முறைகளை பெண்கள் மீதான அடக்குமுறைகளையும் தம் சார்ந்த கட்சி அரசியலுக்காகவும் தங்களுடைய சுயநலன்களுக்காகவும் சகித்துக் கொண்டு செல்லக்கூடிய உமாசந்திரா பிரகாஷ் போன்றவர்கள். பொதுவெளியில் தங்களை பெண்ணியவாதிகளாக காட்டிக் கொள்ளும் இவர்கள் திரை மறை பெண்கள் மீதான வன்முறைகளுக்கு ஏதோ ஒரு வகையில் துணை போகின்றார்கள் என்பதே பொருள்.

தேசம் நெட் இது தொடர்பில் பல தடவைகள் செய்திகளை பிரசுரம் செய்தும் இது பற்றிய பதில்களை ஐக்கிய மக்கள் சக்தியோ – அல்லது உமாசந்திரா பிரகாஷ் அவர்களோ பொதுவெளியில் வழங்கியிருக்கவில்லை.

இதே நேரம் குறித்த இணையவழி கலந்துரையாடலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்துள்ளது. கட்சி சார்ந்த அழுத்தங்களும் இதன் பின்னணியில் உள்ளதாக அறிய முடிகிறது.

இந்த நிலையில் குறித்த Zoom மூலமான கலந்துரையாடலில் உமாசந்திரா பிரகாஷ் அவர்கள் கலந்து கொள்ளும் பட்சத்தில் மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் – குடுமி ஜெயா தொடர்பிலும் கேள்வி எழுப்பப்படும் என்ற அச்சம் காணப்படுவதால் உமாசந்திரா அவர்கள் மேற்குறித்த இணையவழி கலந்துரையாடலில் கலந்து கொள்ள மாட்டார் என தெரியவருகிறது.

எது எவ்வாறான போதும் ஊடகங்களும் – சமூக சிந்தனையோடு இயங்குகின்ற தன்னார்வலர்களும் இப்படிப்பட்ட பெண் அடக்குமுறைக்கு துணை போக கூடிய உமாசந்திரா பிரகாஷ் போன்றவர்களை தேர்தல் காலங்களில் மக்கள் ஓரங்கட்ட முன்வர வேண்டும். அதுவே இவர்கள் போன்ற நபர்களுக்கு ஒட்டுமொத்த சமூகமாக நாம் கொடுக்கக்கூடிய பதிலடியாக இருக்கும்.

தொழில்நுட்பமும் – மனிதனுடைய சிந்தனை திறனும் மென்மேலும் உச்சநிலையை அடைந்துள்ள இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் உலகம் முழுதும் அடக்கு முறையை எதிர்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அடிப்படை பெண்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளும் பாலியல் ரீதியான கொடுமைகளும் அவர்களை மரணத்தை நோக்கி இன்னும் வேகமாக தள்ளி விடுகின்றன. இந்த நிலையில் தேசம் நெட் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் சார்ந்த செய்திகள் தொடர்பில்  தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

 

மேற்குறித்த பிரச்சனை தொடர்பில் தேசம் நெட் ஏற்கனவே பதிவு செய்திருந்த செய்தியைக் காண காண கீழே உள்ள Link ஐ Click செய்யவும்.

அன்பே சிவம் எல்லாம் குடுமி மயம்: பாரிஸில் சிவன் கோவில் வருமானத்தில், நல்லூரில் ‘காம’ விடுதி, யாழ் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் – பின்னுகிறார் சாதிமான் குடுமி ஜெயா!

 

“6 போட்டிகளில் 50 விக்கெட்டுகள்” – பிரபாத் ஜயசூரிய புதிய சாதனை !

குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய உலகின் முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை பிரபாத் ஜயசூரிய இன்று தனதாக்கியுள்ளார்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்று  வரும் போட்டியில் போல் ஸ்டேர்லினை ஆட்டமிழக்கச் செய்தபோது  தனது 50 ஆவது விக்கெட்டினை பெற்றுக்கொண்டார்.

அத்துடன் குறைந்த டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது இலங்கை வீரர் என்ற சாதனையையும் இவர் புரிந்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியை சேர்ந்த தோமஸ் டர்னர் 06 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை தனதாக்கியிருந்தார்.

எனினும் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிரபாத் ஜயசூரிய தனதாக்கிக்கொண்டுள்ளார்.

மாணவிகளிடம் ஆபாசமாக பேசும் ஆசிரியர்.! – அரசியல்வாதியின் காடழிப்பை பகிரங்கப்படுத்தியற்காக இலக்கு வைக்கப்படுகிறாரா ஆசிரியர் திருமகன்..?

கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக சமூக வலைத்தளங்களில் வவுனியாவின் தரணிக்குளம் கணேஷ் வித்யாலயத்தில் தமிழ் பாட ஆசிரியராக பணிபுரியும் திருமகன் என்பவர் பாடசாலை மாணவிகளிடம் தவறான வகையில் வாட்ஸ்அப் இல் பேசி உள்ளதாகவும் – தொடர்ச்சியாக அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இது தொடர்பான சில Screen shot தேசம் இணையதளத்துக்கும் கிடைத்திருந்தது. கிடைத்திருந்த அடிப்படை தகவல்களைக் கொண்டு தேசம் இணையதளம் இது தொடர்பான மேலதிக தகவல்களை திரட்ட ஆரம்பித்திருந்தது.

 

முதலில் அந்த ஆசிரியர் தொடர்பான விடயங்களை அலசி இருந்த நிலையில் குறித்த ஆசிரியர் கடந்த வாரம் வவுனியாவின் கட்டையர் குளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக இடம் பெற்று வந்த காடழிப்பு தொடர்பில் பல தகவல்களை பகிரங்கப்படுத்தியதுடன் இது தொடர்பான பல பிரச்சனைகளையும் தனிப்பட்ட ரீதியில் அவர் எதிர்கொண்டிருந்ததாகவும் அறிய முடிகிறது.

காடழிப்பை வெளிப்படுத்திய ஆசியருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் அவதூறு ஏற்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் நேற்றுமுன்தினம் (25.04) வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரண்டு கிராம அலுவலர்களின் துணையுடன் காடழிப்பு இடம்பெற்று வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அக் கிராம மக்களும், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் அதனை தடுத்து நிறுத்தியதுடன், இது தொடர்பில் அரச அதிபரிடமும் முறைப்பாடு செய்திருந்தனர். மேலும் இந்த காடழிப்பு  விடயத்தில் வவுனியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கு.திலீபனும் தொடர்புபட்டு உள்ளதாக அறிய முடிகிறது.

இதனையடுத்து, குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினரும், குறித்த பிரச்சினையை வெளிக் கொண்டு வந்தவருமான ஆசிரியருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய கிராம அலுவலர் ஒருவர் ஆசிரியருக்கு தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.

போலி முகநூலின் ஊடக குறித்த ஆசிரியரின் புகைப்படத்தை பதிவிட்டு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஆசிரியர் தரப்பிலும் – இது தொடர்பில் நாம் விசாரித்த வலயக்கல்வி பணிமனையை சேர்ந்த ஒரு ஆசிரியரும் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த ஆசிரியர் தொடர்பில் வலயக்கல்வி பணிமனையில் நல் அபிப்பிராயம் உள்ளதாகவும் குறித்த வலயக்கல்வி பணிமனை ஆசிரியர் நம்மிடம் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் உலாவும் தவறான செய்திகளாலும் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ஆசிரியர் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களிடம் முறையிட்டுள்ளதுடன், வவுனியா பொலிசிலும் கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதையும் அறியமுடிகிறது.

இதே நேரம் இந்த பிரச்சனையுடன் தொடர்புடைய தமிழ் பாட ஆசிரியரான திருமகன் தொடர்பில் குறித்த பாடசாலை அமைந்துள்ள பகுதியில் வசிக்கக்கூடிய சில இளைஞர்களிடம் – அவருடைய வகுப்பில் கல்வி கற்ற சில மாணவிகளிடமும் நாம் தேசத்தின் ஊடாக தொடர்பு கொண்டிருந்தோம். அவரிடம் கடந்த வருடம் கல்வி கற்று இருந்த உயர்தர மாணவி ஒருவர் எம்மிடம் குறித்து ஆசிரியர் தொடர்பில் கூறிய போது “பொதுவாகவே தமிழ் பாட ஆசிரியர்கள் என்றால் இரட்டை அர்த்தமுடைய வார்த்தைகளை வகுப்பில் பாவிப்பார்கள். ஆனால்  திருமகன் ஆசிரியர் ஒரு தடவை கூட அவ்வாறான வார்த்தைகளை பிரயோகித்ததில்லை. திடீரென கோபப்படும் சுபாவம் உடைய சேர் தான். ஆனால் நடத்தைகள் பொருட்டு எனக்கும் என்னுடைய நண்பிகளுக்கும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. நான் உறுதியாகவே சொல்கிறேன் நம்முடைய ஆசிரியர் அவ்வாறு செய்திருக்க மாட்டார்.” என குறித்த மாணவி உறுதிப்படக் கூடியிருந்தார். குறித்த ஆசிரியர் பணி புரியும் கிராமத்து இளைஞர்கள்ஜசிலரிடம் வினவிய போதும் மேற்குறித்த மாணவி கூறிய தகவல்களுடன் ஒத்த தகவல்களையே எங்களுக்கு வழங்கினர்.

இங்கு மிகப் பிரதானமான கேள்வி எங்கு என்ன நடந்தால் என்ன..? நாம் உண்டு நம்முடைய வேலை உண்டு என கடந்து செல்லும் இன்றைய அரச அதிகாரிகளிடையே தன்னுடைய பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய தலையீட்டுடன் சுமார் 12 ஏக்கர் காடு  அழிக்கப்பட்டதை அந்த ஆசிரியர் சுட்டிக் காட்டியதற்காக அவர் இவ்வாறு அவதூறு படுத்தப்படுகிறார் என்றால் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இதற்கு எதிராகவும் – குறித்த ஆசிரியருக்கு ஆதரவாகவும் அனைவரும் நிற்க வேண்டியது அவசியமாகிறது.

குறித்த ஆசிரியர் தொடர்பான அவதூறு தகவல்களை பதிவிட்டுள்ள சமூக வலைத்தளங்கள் போலியான அடையாளங்களுடன் கூடியவையாக உள்ளமையும் – அதே நேரம் அவை உறுதிப்படுத்தப்படாத நபர்களால் இயக்கப்படுவதாலும் – குறித்த ஆசிரியர் காடழிப்பு தொடர்பான பிரச்சனையை பகிரங்கப்படுத்தியதன் பின்பாகவே இந்த WhatsApp screen shot பரப்பப்பட்டுள்ளதாலும் / பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதாளுமே இது இது தொடர்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பாடசாலை ஆசிரியர்களால் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் வழங்கப்படுகிறது என்ற செய்திகள் அடிக்கடி நாம் காணும் – கடந்து போகும் செய்திகளாகியுள்ளன. கடந்த வருடம் முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தர மாணவர்களை போதைப்பொருள் பயன்பாட்டுக்கு அடிமைப்படுத்தி மாணவிகளின் நிர்வாண வீடியோக்களை எடுத்து குறித்த மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தி இருந்தார். இது போல் பல இடங்களில் பல பிரச்சனைகள் இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்த அடிப்படையில் குற்றவாளிகள் உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்த நிலையில் எப்பொழுதும் தேசம் இணையதளமானது இதற்கு எதிரானதாகவே இருக்கும். அதே நேரம் ஒரு தவறுமே செய்யாது சமூகப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த ஒருவர் பாதிக்கப்படும்போது அதனை கண்டு கொள்ளாது செல்லவும் முடியாது.

இந்த காடழிப்பு விவகாரத்திலும் – குறித்த ஆசிரியர் மீதான அவதூறு பரப்பப்பட்டதன் பின்னணியிலும் அரசியல் தலையீடு இருப்பதாகவும் – இதனால் குறித்த ஆசிரியர் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அறிய முடிகிறது. போலீசில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் போலீசாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என அறிய முடிகிறது. சட்டத்தை பாதுகாத்து –  போலீஸ் நிலையங்கள் மீதான நம்பிக்கையை மக்களுக்கு அதிகரிக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் இலங்கை உள்ளதால் போலீசார் இது தொடர்பில் விரைந்து கவனம் எடுத்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த முன் வர வேண்டும். ஆசிரியர் தவறு செய்திருப்பின் அவர் கட்டாயமாக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்திருக்காது விடின் – அவர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!

லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர், ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் குடுமி ஜெயாவை பெண்கள் நையப்புடைத்து சாணியடித்தனர்!

யாழ் நல்லூரடியில் இருந்த லக்ஸ் ஹொட்டலின் நிறுவனர் குடுமி ஜெயா என அறியப்பட்ட வெற்றிவேலு ஜெயந்திரனை அவருடன் கடந்த பத்து ஆண்டுகளாக வாழ்ந்து வருபவரும் ஜெயந்திரனின் குழந்தையின் தாயுமான தர்ஷினி தலைமையில் பத்துவரையான பெண்கள் ஹொட்டலுக்குள் புகுந்து அவருக்கு சாணித்தண்ணி கரைத்து தாக்கிய சம்பவம் நேற்று ஏப்ரல் 20 இரவு ஒன்பது முப்பது மணியளவில் இடம்பெற்றது. குடுமி ஜெயாவின் காமலீலைகள் பற்றிய பதிவுகளை யாழ் ஊடகங்கள் மூடி மறைக்க முற்பட்ட போதும் தேசம்நெற் ஆதாரங்களோடு அவற்றை அம்பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. விளிம்பு நிலையில் இருக்கும் இளம் பெண்களை தனது பணம் மற்றும் போதையூட்டி மயக்கி அவர்களது இளமையைச் சுரண்டும் குடுமி ஜெயா பிரான்ஸ் லாக்குர்னே யில் உள்ள சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த ஆலயத்தின் வருமானத்திலேயே நல்லூரில் உள்ள காமவிடுதியையும் போதைப்பொருள்களையும் பயன்படுத்தி ஜெயந்திரன் இளம்பெண்களை துஸ்பிரயோகம் செய்து வருகின்றார்.

 

இது பற்றிய மேலதிகமாக அறிய கீழுள்ள காணொளியை பாருங்கள்..!

 

“கசிப்பு காய்ச்சுபவர்களும், மண் கடத்துபவர்களுமே எமக்கு காசு தருகிறார்கள்” – நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் இன்னுமொரு பக்கம் !

“கிளிநொச்சியில் இடம்பெறும் பாரிய வன்முறை சம்பவங்களின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் இருக்கிறார்கள்” என சமத்துவ கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆன சந்திரகுமார் அவர்களுடன் அண்மையில் தேசம் திரை ஊடாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்ட போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கலந்துரையாடலின் போது ” புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் தொடர்பு தமிழ் தேசியக் கட்சிகள் அதிலும் குறிப்பாக தமிழரசு கட்சி தன்னுடைய எதிர்ப்பை இதுவரை வெளியிடவில்லை என சந்திரகுமார் அவர்கள் விசனம் வெளியிட்டிருந்தார்.
 இதன் போது கேள்வி எழுப்பிய தேசம் ஜெயபாலன் அவர்கள் தனித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பற்றி மட்டுமல்ல தமிழர் பகுதிகளில் அன்றாடம் இடம் பெற்றுக் கொண்டிருக்க கூடிய “போதைப் பொருள் பாவனை, அதிகரிக்கும் சிறுவயது திருமணங்கள், சமூக சீர்கேடுகள் இவை தொடர்பில் தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருக்கும் எந்த கட்சிகளும் மறந்தும் வாய் திறப்பதில்லையே ஏன்  என கேட்ட போது.
பதில் அளித்த சந்திரகுமார் அவர்கள்
 “சமூக கட்டமைப்பை பலப்படுத்தி வைத்திருக்க கூடிய அளவுக்கு தமிழரசு கட்சியினுடைய அங்கத்தவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை என குறிப்பிட்டார். மேலும் சமூக மாற்றத்திற்காக அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தென் இலங்கையுடன் ஒப்பிடுகின்ற போது நாம் வாழும் வடக்கு – கிழக்கு இலங்கையில் போதைப்பொருள் பாவனையும் சமூக வன்முறைகளும் அதிகமாகவே காணப்படுகின்றன. வட இலங்கையில் கையை வெட்டுவதற்கு ஒரு தொகை பணம் , காலை வெட்டுவதற்கு ஒரு தொகை பணம்,  பெட்ரோல் குண்டு வீசுவதற்கு ஒரு தொகை பணம் என எங்களுடைய பகுதிகளில் பல வன்முறைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தில் உள்ளவர்கள் இதனை கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வட – கிழக்கு இலங்கையில் பல இளைஞர்கள் தொழில் வாய்ப்புற்றவர்களாக காணப்படுகின்றார்கள். இதுவே சமூக பிரச்சனைகளுக்கு மிக முக்கியமான காரணம் என குறிப்பிட்ட சந்திரகுமார் அவர்கள்,  கிளிநொச்சியின் பளை பிரதேசத்தில் ஒரு வசதி குறைந்த குடும்பம் ஒரு காணியில் வசிக்கிறது. அவுதிரேலியாவில் இருக்கக்கூடிய ஒரு புலம்பெயர்ந்த தமிழர் அந்தக் காணியை அபகரிக்கும் நோக்குடன் ஒரு வன்முறை கும்பலை இறக்கி அந்த ஏழை குடும்பத்தின் குடிசை வீட்டை எரித்ததுடன் – விசுவமடு பகுதியிலிருந்து வன்முறை கும்பலை இறக்கி அவர்களை தாக்கியுள்ளார். பின்பு மேலதிக விசாரணைகளின் போது அந்த ஆஸ்திரேலியாவில் வசிக்கக்கூடிய நபரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேறு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட அந்த ஏழை குடும்பம் தொடர்பில் யாரும் கணக்கெடுக்கவில்லை. இதுபோல வெளிநாட்டில் இருக்கக்கூடிய புலம்பெயர்ந்தவர்களால் இங்கு பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இப்படி ஆபத்தான ஒரு நிலை எங்களுடைய வடக்கில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குடும்பப் பகைமை காணிப்பிரச்சனை இவற்றை தீர்ப்பதற்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்த வன்முறை கும்பலை பயன்படுத்துகிறார்கள்.
கிளிநொச்சியில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் இவை தொடர்பு என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதே தெரியவில்லை. அவர் தொடர்பு பிரச்சனைகள் இடம்பெறக்கூடிய பகுதி மக்களிடம் தொடர்பு கொண்ட போது அவர் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு மட்டுமே வருடத்திற்கு ஒரு தடவை அங்கு பயணம் செய்வதாக மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற வகையிலும் மக்கள் அமைப்பினுடைய தலைவர் என்ற வகையிலும் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்..? என தேசம் ஜெயபாலன் வினவிய போது..
இந்தப் பிரச்சனையும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்தாலும் கூட அந்த வன்முறையில் ஈடுபட்டவர்களிடமே போலீசார் யார் இது தொடர்பில் தகவல் கொடுத்தவர்கள் என்பதையும் தெரிவித்து விடுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் சிறையில் இருந்து வெளியேறியதும் தகவல் கொடுத்தவர்கள் மீது தங்களுடைய வன்முறைத்தனத்தை காட்டுகின்றனர்  இது நிறுத்தப்பட வேண்டும். இதனால்தான் சமூகத்தில் மிகப்பெரிய வன்முறை சீர்கேடுகள் உருவாகி கொண்டிருக்கின்றன.
மிகக் கவலையுடன் சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த வன்முறையாளர்கள் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது மிக முக்கியமான விடயம். கிளிநொச்சி மாவட்டத்தில் மண் கடத்தலாக இருக்கலாம் அல்லது போதைப் பொருள் விற்பனையாக இருக்கலாம் கசிப்பு காச்சுவதாக இருக்கலாம் இவற்றில் ஈடுபடுபவர்கள் எல்லாம் முக்கியமான அரசியல் கட்சிகளின் மத்திய உறுப்பினர்களாக இருப்பதனால் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. குறிப்பாக தமிழரசு கட்சியினுடைய பல அமைப்பாளர்கள் கிளிநொச்சியில் இடம் பெறக்கூடிய சமூக வன்முறை சம்பவங்களின் பின்னணியில் இருக்கிறார்கள்.
இது தொடர்பில் கிளிநொச்சியின் முக்கியமான பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களிடம் அவருடைய கட்சியின் நேர்மையான உறுப்பினர் ஒருவர் சென்று இவ்வாறான சமூக பிரச்சினைகளின் பின்னணியில் உங்களுடைய கட்சியின் முக்கியமான அங்கத்தவர்கள் இருக்கிறார்கள் எனக் கூறிய போது பதில் அளித்த சிவஞானம் ஸ்ரீதரன் “இவர்களைப் பகைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. தேர்தல் காலங்களில் இவர்கள்தான் அதிகமாக செலவழிக்கிறார்கள்.” எனக் கூறியிருக்கிறார். எனவே இந்த அரசியலும் இந்த சட்ட விரோதமான செயற்பாடுகளும் ஒன்றுக்கொன்று பிண்ணிக் கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்வது. தமிழரசு கட்சிக்கும் கிளிநொச்சியில் நடைபெறக்கூடிய வன்முறை சம்பவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது  என்பது தொடர்பில் என்னிடம் நிறைவான ஆதாரங்கள் உள்ளன.
திருவையாறு அமைப்பாளர் ஒருவர் இரணைமடு குளத்தின் ஒரு பகுதியில் இருந்து மண்ணை அள்ளிக்கொண்டு சென்றுள்ளார். பின்பு நாங்கள் சுற்றுச்சூழல் அமைப்பிடம் பேசி பிரச்சினைகளை கட்டுப்படுத்தியுள்ளோம். எனவும் சந்திரகுமார் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் கிளிநொச்சி செல்வா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்று வரக்கூடிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் எங்களுடைய தேசம் திரை மூலமாக ஒரு ஆவணக் காணொளி ஒன்றை தயாரிப்பதற்காக நாம் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது மேலே கிளிநொச்சி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் கூறியது போல இந்த சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்பது தொடர்பில் விளங்குவதற்காக அவருடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தின் மூலமாக அவரை தொடர்பு கொண்டோம். இதன் போதும் பல தடவைகள் அவருக்கு அழைப்பை மேற்கொண்டு இறுதியாக ஒரே ஒரு தடவை அவர் எங்களுடன் பேசினார். அப்போது கூட நான் கோயில் திருவிழா ஒன்றில் நிற்கிறேன். பிறகு போல பேசுகிறேன் எனக்கூறி அழைப்பை துண்டித்து விட்டார். அதன் பின்பும் பல தடவைகள் தேசம் இணையதளத்தில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர் எந்த பதிலுமே எங்களுக்கு அளிக்கவில்லை.
இவ்வளவுதான் கிளிநொச்சி மக்கள் அதிக வாக்குகள் கொடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் மக்கள் பற்று.
மக்கள் இது தொடர்பில் விழிப்படைந்து கொள்ள வேண்டும்.  பாராளுமன்றத்தில் மட்டும் தமிழ் தேசியம் , தலைவர் பிரபாகரன்,  வீரவணக்கம் , நினைவஞ்சலி என முழக்கமிட்டு விட்டு தனிப்பட்ட ரீதியில் தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்கின்ற ஒரு மனோ நிலையிலேயே ஸ்ரீதரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியம் பேசுகின்ற பல அரசியல் தலைவர்கள் செயற்பட்டு கொண்டிருக்கின்றனர். இவர்கள் தமிழ் தேசியம் பேசிப்பேசி தமிழர்கள் கண்டது ஒன்றுமில்லை என்பதை இறுதி.
எனவே மக்கள் தமக்காக இயங்காத ஒவ்வொரு அரசியல் தலைவர்களையும் அடுத்தடுத்து வரக்கூடிய ஜனநாயக தேர்தல்களில் புறக்கணித்து தங்களுக்காக பணியாற்ற கூடிய தலைவர்களை இனம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பளிப்பதே இந்த தமிழ் சமுதாயம் முன்னோக்கி நகர்வதற்கான அடித்தளத்தை உருவாக்கும்.
மேற்குறித்த காணொளியை காண்பதற்கு..;
https://youtu.be/T_3QDT5Tb8g