கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

குஜராத்தில் திடீரென பரவிய ஹெபடைடிஸ்- பி

aep-hl-hepatitis.jpgஇந்தியா வின் குஜராத் மாநிலத்தில் மொடாஸா மாவட்டத்தில் ஹெபடைடிஸ் – பி ரக வைரஸ் திடீரென பரவியதால் பலர் பாதிக்கப்பட்டனர். அது, அஹமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது. அந்த வைரஸ் காரணமாக இதுவரை, 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மருத்துவமனைகளில் மருந்துகள் செலுத்தப் பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் எனப்படும் ஊசிக்குழல்களை மீண்டும் பயன்படுத்தியதே, ஹெபடைடிஸ் – பி வேகமாகப் பரவக் காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த ஊசிக்குழல்களை, தனியார் மருத்துவமனைகளில் இருந்து வாங்கி, மொத்தமாக விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதுபோன்ற ஊசிகளைப் பயன்படுத்திய தனியார் மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் நடத்திய சோதனையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான ஊசிக்குழல்கள் கைப்பற்றப்பட்டன.

முல்லைத்தீவிலிருந்து 59 சிவிலியன்கள் கடல்வழியாக நேற்று வருகை

police_spokperson.jpgமுல்லைத் தீவு பழைய மாத்தலன் பகுதியிலிருந்து 59 பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை கடல் மார்க்கமாக வந்து கடற் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களைக் கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இவர்கள் 59 பேரும் 5 டிங்கி படகுகள் மூலம் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்துள்ளதாகவும் இவர்களில் 11 சிறுவர்களும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு நேற்று முன்தினம் 120 பேர் வருகைதந்துள்ளனர். இவர்களில் 47 பெண்களும், 23 சிறுவர்களும், 25 சிறுமிகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இவர்கள் 120 பேரும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளிலிருந்து ஓமந்தைக்கு வந்துசேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பீரங்கிகளால் அவர்கள் மீதே தாக்குதல்!

wanni-operations.jpgபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளின் கனரக பீரங்கிகள் நேற்று முதல் புலிகளுக்கெதிரான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாக படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பிரிகேடியர் கமல் குணரத்ன தலைமையிலான இராணுவத்தின் 53ஆம் படையணியினர் சில தினங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 130 மி.மி. கனரக பீரங்கி இரண்டைக் கண்டுபிடித்திருந்தனர். 27 கிலோ மீற்றர் சுடுதூரத்தைக் கொண்ட இந்த பீரங்கிகள் நேற்று முதல் புலிகளுக்கு எதிராக வன்னியில் குண்டுகளை ஏவி வருகின்றன.

இது தொடர்பாக களமுனையில் உள்ள படை வீரர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், வன்னிப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றும் நோக்குடன் நாம் மேற்கொண்டுவரும் இந்நடவடிக்கையில் பல வெற்றிகளை ஈட்டியுள்ளோம். புலிகளின் இந்த கனரக பீரங்கிகள் கைப்பற்றப்பட்டமை வியக்கத்தக்க வெற்றியாகும். இந்தப் பீரங்கிகளினூடாக நாம் இன்று எமது எதிரியை தாக்கி வருகின்றோம் எனக்கூறினார். 

விமானப்படையினரின் விமானம் தாக்குதலிற்கு இலக்காகவில்லை- விமானப் படை பேச்சாளர்

jet-1301.jpgஇலங்கை விமானப்ப்டையினரின் எவ் விமானங்களும் இன்று விடுதலை புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை, அத்துடன் விமானப்படையினர் இன்று வான் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை இது பொய்யான தகவல்” என அவர் தெரிவித்தார் 

வேலூர் தேமுதிக தொண்டர் தீக்குளிப்பு

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி வேலூர் மாவட்டம் வானியம்பாடியில், தேமுதிக செயலாளர் தீக்குளித்தார். படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வாணிம்பாடி அருகே உள்ளது வள்ளிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் தேமுதிக கிளை செயலாளாராக இருப்பவர் சீனிவாசன் .இவருக்கு அம்மு என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து போன சீனிவாசன் இது குறித்து அடிக்கடி தனது நண்பர்களுடன் உணர்ச்சி பிளம்பாக பேசுவாராம். இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வீட்டில் இருந்த அவர் மண்ணெண்ணையை திடீரென உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் உடல் பாதி எறிந்தது. இருப்பினும் அவரை காப்பாற்றி வாணிம்பாடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு சீனிவாசன் மாற்றப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் வாணிம்பாடி சீனிவாசனிடம் தீக்குளிப்புக்கான காரணத்தை வாக்குமூலமாக பெற்றுள்ளனர்.

பொட்டம்மானும் களத்தில்! பாதுகாப்பு தரப்பினர்

pottu.jpgஎல்.ரீ.ரீ.ஈ.  அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் போர்க் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புலிகளின் புலனாய்வு பிரிவின் பொறுப்பாளர் பொட்டம்மான் நேற்று முன்தினம் இரவு முதல் 58 வது படைப்பிரிவினருக்கு எதிரான போரை வழி நடத்த ஆரம்பித்துள்ளதாக புலிகளின் தொலைத் தொடர்புகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் படையினரின் முன்நகர்வுகளைத் தடுத்து நிறுத்த புலித் தலைமைத்துவத்தினால் முடியாமல் போயுள்ள நிலையில் பொட்டம்மான் முதல் தடவையாக களத்தில் போரிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக படையினர் நம்புகின்றனர்.

கடந்த 19 வருடங்களாக நடைபெற்று வரும் யுத்த நடவடிக்கைகளில் எந்த ஒரு களமுனைக்கும் சென்றிராத பொட்டம்மான் தற்போது களமிறக்கப்பட்டுள்ளமை புலிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளமைக்கு தெளிவான சான்றாகுமென  இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் பேனர் அகற்றம் – 6 பேர் தீக்குளிக்க முயற்சி

tamilnadu.jpgபுதுக் கோட்டை அருகே விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பேனர்களை அகற்ற போலீசார் முயற்சி செய்ததால் 6 பேர் தீக்குளிக்க முயன்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வடகாடு பகுதியில் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் இயக்குநர் மணிவண்ணன், காளிமுத்து, வழக்கறிஞர் புரட்சி கவிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது. இந்த நிலையில் அந்த பகுதி முழுவதும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உருவம் பொறித்த படத்தை டிஜிட்டல் பேனர்களாக வைத்திருந்தனர். தகவல் அறிந்த எஸ்.பி மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த டிஜிட்டல் பேனர்களை அகற்ற முன்றனர்.

இதற்கு கூட்டத்த்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், விஜய், கோபி, சரவணன், திருப்பதி, ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் திடீரன உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தீக்குளிப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

வேலை இழந்து நாடு திரும்பிய 20,000 இந்தியர்கள்

rajya-sabha.jpgவெளி நாடுகளில் வேலை செய்து வந்த சுமார் 20,000 இந்தியர்கள், உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை இழந்து நாடு திரும்பியுள்ளனர்.பணிக்கான விசா காலத்தைப் புதுப்பிக்க மறுத்துவிட்ட நிறுவனங்கள், அனைவரையும திருப்பி அனுப்பிவிட்டனவாம். இத் தகவலை, வெளிநாடு வாழ் இந்தியர் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,  இப்போது நாடு திரும்பியுள்ளோர் அனைவரின் விசாக்களை அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் புதுப்பிக்காமல் விட்டுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் நாம் எதுவும் செய்வதற்கில்லை. பல நாடுகளில் நிலைமை மோசமாக உள்ளதால் நாடு திரும்புவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

முல்லைத்தீவிலிருந்து செவ்வாய் இரவு கப்பலில் திருமலைக்கு அழைத்து வரப்பட்டோர் விபரம். நேற்றைய தொடர்ச்சி……

vanni-injured.gifநேற்றைய தொடர்ச்சி……
233. சத்தியன்குமார், பூநகர், கிளிநொச்சி, (வயது 54),
234. ஜெதுஅம்மா, கிளிநொச்சி, (வயது 80),
235. குமரன், 236. குமரன், மாதலை, முல்லைத்தீவு, (வயது 08),
237. பெயர்தரப்படவில்லை,
238. பிரிசிலியா, மாத்தளன், (வயது 73),
239. ரி. நாகேஸ்வரி, வட்டக்கச்சி, (வயது 63),
240. றொபர்ட், முல்லைத்தீவு, (வயது 12),
241. ஆர். விவேகானந்தராசா, வவுனியா, (வயது 46),
242. எம். தர்சனி, கிளிநொச்சி, (வயது 07),
243. பரம்சோதி, கிளிநொச்சி, (வயது 43),
244. எஸ். பார்த்திமா, முல்லியவளை, உடையார்கட்டு, (வயது 61),
245. ஆர். லெட்சுமி, ராமநாதபுரம், கிளிநொச்சி, (வயது 68),
246. ஜே. கணேஷ், கிளிநொச்சி, (வயது 70),
247. எஸ். தவம், வெள்ளவராயன்கட்டு, (வயது 32),
248. சங்கீஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 24)),
249. அளகிதன், யாழ்ப்பாணம், (வயது 1.5),
250. எஸ். ரஞ்சினி, மாங்குளம், (வயது 24),
251. கபிதன், மாங்குளம், (24 நாள்),
252. ஏ. அந்தனிப்பிள்ளை, கிளிநொச்சி, (வயது 74),
253. ஏ.தவராசா, யோகபுரம், முல்லியவளை,
254. ஆர். கந்தையா, இராமநாதபுரம், கிளிநொச்சி, (வயது 75),
255. செந்தூரன், கிளிநொச்சி, (வயது 21),
256. கே. மங்களேஸ்வரி, யோகபுரம், (வயது 57).
257. என். குருகுலசிங்கம், ஒட்டுசுட்டான், (வயது 61),
258. கே. விக்னேஸ்வரராஜா, உடையார்கட்டு, கிளிநொச்சி, (வயது 36),
259. எஸ். இராஜேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது 62),
260. பத்மலோஜினி, கிளிநொச்சி, (வயது 60),
261. அப்பாத்துரை, முல்லைத்தீவு, (வயது 66),
262. பேபிகமலா, வவுனிக்குளம், முல்லைத்தீவு, (வயது 61),
263. பி. நந்தகுமார், முல்லைத்தீவு, (வயது 48),
264. ஜே. சரூஜன், கிளிநொச்சி, (வயது 01),
265. ஜெயானி, கிளிநொச்சி, (வயது 25),
266. முருகேசு, யாழ்ப்பாணம், (வயது 42),
267. ரி. தயானந்தன், யாழ்ப்பாணம், (வயது 55),
268. செல்வநாயகமூர்த்தி, யாழ்ப்பாணம், (வயது 60),
269. கமலாதேவி, முல்லைத்தீவு, (வயது 71),
270. பி. ஆறுமுகம், முல்லைத்தீவு, (வயது 74),
271. எஸ். செபஸ்தியன், உடையார்கட்டு, (வயது 66),
272. எஸ். ஆறுமுகம், கிளிநொச்சி, (வயது 64),
273. என். நாகேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 60),
274. திஷாந்தினி, கிளிநொச்சி, (வயது 41),
275. டிலாக்ஷினி, கிளிநொச்சி, (வயது 41),
276. ரி. சரவணமுத்து, மன்னார், (வயது 69).
277. எஸ். மனோன்மணி, மன்னார், (வயது 61).
278. பி. அருள்தாஸ், முல்லைத்தீவு, (வயது 13),
279. எம். தங்கம்மா, முல்லைத்தீவு, (வயது 17),
280. எம். அழகம்மா, முல்லைத்தீவு, (வயது 47),
281. எஸ். மொடிஸன், முல்லைத்தீவு, (வயது 10),
282. விதுஷா, (வயது 08),
283. அருளானந்தம், முல்லைத்தீவு, (வயது 85),
284. வி. தனுஷா, (வயது 02).
285. வி.தர்மலட்சுமி, முல்லைத்தீவு, (வயது 65),
286. வாசுகி, கிளிநொச்சி, (வயது 44),
287. ஏ.ராமசாமி, கிளிநொச்சி, (வயது 64),
288. கே. பூச்சோலை, முல்லைத்தீவு, (வயது 56),
289. புஷ்பராணி, முல்லைத்தீவு, (வயது57),
290. வை. அபிநயா, கிளிநொச்சி, (வயது 08),
291. எம். சாந்தகுமாரி, கிளிநொச்சி, (வயது 34),
292. எம். சத்யா, கிளிநொச்சி, (வயது 01),
293. ஏ. மகேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 72),
294. வை. யமுனாயினி, கிளிநொச்சி, (வயது 30),
295. ஆர். யாகம்மா, யாழ்ப்பாணம், (வயது 60),
296. எஸ். சரஸ்வதி, முல்லைத்தீவு, (வயது 57),
297. ஆர்.கிருஸ்ணசாமி, முல்லைத்தீவு, (வயது 68),
298. ஜே. ஜேமிஸ், கிளிநொச்சி, (வயது 82),
299. எஸ். சுனிதா, கிளிநொச்சி, (வயது 29),
300. எஸ். கோபிதா, கிளிநொச்சி, (வயது 10),
301. எஸ். மகாலட்சுமி, யாழ்ப்பாணம், (வயது 52),
302. தர்ஷன், மன்னார், (வயது 10),
303. ரேணுகா, கிளிநொச்சி, (வயது 42),
304. மலர், கிளிநொச்சி, (வயது 02),
305. கலாஜோதி, மன்னார், (வயது 39),
306. அபிஷேக், மன்னார், (வயது 1.6),
307. எஸ். அன்ரனிதாஜ், யோகபுரம், மல்லாவி, (வயது 79),
308. சோதி, மட்டுவில், (வயது 60),
309. கே. மார்க்கண்டன், முல்லைத்தீவு, (வயது 66),
310. வள்ளிப்பிள்ளை, பொக்கணை, (வயது 61),
311. கஜேந்தினி, தர்மபுரம், (வயது 21),
312. ஜே. ராசமணி, திருநகர், கிளிநொச்சி, (வயது 78),
313. சுகித்ரா, ஜோகபுரம், மல்லாவி, (வயது 26),
314. மலரினியன், ஜோகபுரம், மல்லாவி, (வயது 1.5),
315. ஏ. தர்ஷணி, முல்லைத்தீவு, (வயது 29),
316. ஏ. அந்தோனி, முல்லைத்தீவு, (வயது 02),
317. அருள்ஞானக்குஞ்சி, முல்லைத்தீவு, (வயது 33),
318. அபினயா, முல்லைத்தீவு, (வயது 07),
319. அபிஷா, முல்லைத்தீவு, (வயது 02),
320. அருண், முல்லைத்தீவு (வயது 08),
321. எமில்டா, முல்லைத்தீவு, (வயது 07)
322. பி. செல்வநாயகம், ஆண்டாங்குளம், அடம்பன், (வயது 29),
323. எஸ். செல்லன், கதிர்காமர், யோகபுரம், (வயது 49),
324. எம். கௌஷா, முல்லைத்தீவு, (வயது 28),
325. கிருத்திகா, முல்லைத்தீவு, (வயது 02),
326. சாரதாம்பாள், யாழ்ப்பாணம், (வயது 67),
327. எம். இராசம்மா, முல்லைத்தீவு, (வயது 80),
328. எஸ். டிலுக்ஷன், மானிப்பாய், (வயது 13),
329. முத்தம்மா, முழங்காவில், மன்னார், (வயது 75),
330. செல்வநாயகி, யாழ்ப்பாணம், (வயது 62),
331. பிரதீஷன், புதுக்குடியிருப்பு, (வயது 25),
332. செல்வரத்தினம், யாழ்ப்பாணம், (வயது 75),
333. எஸ். கமலாம்பிகை, வட்டக்கச்சி, (வயது 65),
334. ஜே. மேரி யோசபைன், கிளிநொச்சி, (வயது 73),
335. தேவநாயகபிள்ளை, பொக்கணை, (வயது 74),
336. எஸ். தயாத்ரியன், மல்லாவி, (வயது 06),
307. ஆச்சிமுத்து, மல்லாவி, (வயது 74),
338. செல்லம்மா, தாலியங்குளம், (வயது 79),
339. அகஸ்டின், கிளிநொச்சி, (வயது 63),
340. சோதிராசா, அரியாலை, யாழ்ப்பாணம், (வயது 67),
341. தம்பிராசா, மல்லாவி, (வயது 76),
342. வில்லுதேவன், மன்னார், (வயது 74),
343. மயூரதி, யாழ்ப்பாணம், (வயது 28),
344. நரசிங்கம், வேலணை, (வயது 76),
345. கே. நந்தகுமார், வவுனிக்குளம், (வயது 56),
346. பெயர் தரப்படவில்லை,
347. பி.லட்சுமி, கந்தனை, (வயது77),
348. கே. அரள்மணி, புதுக்குடியிருப்பு, (வயது 58),
349. சுபாஜினி, மருதங்கேணி, (வயது 32),
350. மோஹனதாஸ், கிளிநொச்சி, (வயது 32),
351. தேவராணி, மருதங்கேணி, (வயது 51),
352. பெயர் தரப்படவில்லை. 353. சுபத்ரா, முல்லைத்தீவு, (வயது 06),
354. என். நவமலசேகரி, முல்லைத்தீவு, (வயது 38),
355. என். அபிஷேக், முல்லைத்தீவு, (வயது 10),
356. ஏ. இராசேந்திரன், கிளிநொச்சி, (வயது 49),
357. அமராவதி, கிளிநொச்சி, (வயது 73),
358. ஹெலன் மேரி, இரணைபாலை, (வயது 38),
359. என். கமலேஸ்வரி, இரணைபாலை, (வயது 59),
360. கிரிஷாந்தினி, ஆண்டான்குளம், (வயது 08),
361. ஜெயலெட்சுமி, ஆண்டான்குளம், (வயது 30),
362. விதுஷன், ஆண்டான்குளம், (வயது 03),
363. விதுஷியா, ஆண்டான்குளம், (வயது 01),
364. என். நவமலசேகரி, கிளிநொச்சி, (வயது 41),
365. எஸ். பவிஷாத், கிளிநொச்சி, (வயது 25),
366. கே. பிரஷாந், முல்லைத்தீவு, (வயது 02),
367. ஜதுஷா, முல்லைத்தீவு, (வயது 08 1/2),
368. எஸ். குணசீலன், முல்லைத்தீவு, (வயது 29),
369. எஸ். குகணேஸ்வரி, விஸ்வமடு, (வயது 63),
370. இ. பாலமணி, விஸ்வமடு, (வயது 66),
371. கே. சூரியகுமார், புதுக்குடியிருப்பு, (வயது 40),
372. கந்தையா, யாழ்ப்பாணம், (வயது 75),
373. ரி. சந்திரலதா, மாங்குளம், (வயது 90),
374. கேதுஜா, மாங்குளம், (வயது 10)),
375. சிவக்கொளுந்து, மாங்குளம், (வயது 84),
376. எஸ். தர்மராஜா, மாங்குளம், (வயது 46),
377. சங்கவி, மாங்குளம், (வயது 04),
378. பார்வதி, அக்கராயன்குளம், (வயது 48),
379. புஷ்பராணி, புதுக்குடியிருப்பு, (வயது 56),
380. அன்ரன் யோசப், வவுனியா, (வயது 50),
381. ரி. சின்னத்தம்பி, வட்டக்கச்சி, (வயது 81),
382. எஸ். ஜனனி, முல்லைத்தீவு, (வயது 34),
383. றோஸரி, முல்லைத்தீவு, (வயது 06),
384. சரோஜன், முல்லைத்தீவு, (வயது 04),
385. வினோஜா, கிளிநொச்சி, (வயது 28),
386. வினோஜன், கிளிநொச்சி, (வயது 3.1/2),
 

இலங்கைக்கு மருத்துவக் குழுக்களை அனுப்புகிறது இந்தியா

vanni-injured.gifஇலங்கை யில் போரினால் காயமடைந்த பொதுமக்களுக்கு உதவ, மருத்துவக் குழுக்களையும், தேவையான மருந்து மற்றும் உபகரணங்களையும் உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத் தகவலைத் தெரிவித்துள்ளார் என பி.பி.ஸி. தமிழோசை செய்தி வெளியிட்டிருந்தது. 

இலங்கையின் வடக்கே போர் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கும் பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வரும் நடைமுறைகளுக்கும் உதவத் தயாராக இருப்பதாக இந்தியா ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தது.

அவர்களுக்குத் தேவையான மனிதாபிமான மற்றும் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும் இந்தியா கூறியிருந்தது. அதுதொடர்பான நடைமுறைகள் குறித்து இலங்கை அரசுடன் விவாதித்ததாக இந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் அவசர மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற இரு நாட்டு அரசுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்தியா உடனடியாக அவசரகால மருத்துவக் குழுவை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப உள்ளது. அந்த மருத்துவக் குழுவில், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் இடம்பெற்றிருப்பார்கள்.

அத்துடன், தேவையான மருத்துவ உபகரணங்களும், மருந்துகளும் இருக்கும். தேவையைப் பொறுத்து, அது மேலும் அதிகரிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளிலும் இலங்கை அரசுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.