கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வவுனியா நிவாரண கிராமங்களுக்கு வெளிநாட்டு தூதுவர்கள் விஜயம்

reg-camp.jpgவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்கியிருக்கும் நிவாரணக் கிராமங்களுக்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் குழுவொன்று நேற்று (4) விஜயம் மேற்கொண்டது. இவர்கள் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண கிராமங்கள் மற்றும் ஆஸ்பத்திரி என்பவற்றுக்குச் சென்று மக்களை சந்தித்து நலன் விசாரித்ததோடு அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்ததாக அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஏற்பாட்டில் விசேட விமானம் மூலம் இவர்கள் வவுனியாவுக்கு விஜயம் செய்தனர். இவர்களிடையே பிரான்ஸ், கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் மாலைதீவு நாட்டு தூதுவர்களும் வெளியுறவுச் செயலாளர் பாலித கொஹனவும் அடங்குவர்.

இவர்கள் மெனிக்பாம், காமினி வித்தியாலயம், காதிர்காமர் கிராமம் மற்றும் வவுனியா ஆஸ்பத்திரி என்பவற்றுக்குச் சென்று அங்குள்ள மக்களினதும் நோயாளிகளினதும் நிலைமைகளை அவதானித்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர். வன்னியில் இருந்து வந்துள்ள மாணவர்களுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் உரையாடியதோடு அவர்களின் தேவைகளை கேட்டறிந்தனர். வவுனியாவில் உள்ள அரச அதிகாரிகளையும் அவர்கள் சந்தித்து பேச்சு நடத்தினர்.

வன்னியிலிருந்து வந்துள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்கள் திருப்தி தெரிவித்ததாக அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தெரிவித்தார். வெளிநாட்டு தூதுவர்களின் விஜயத்தை முன்னிட்டு நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கையில் போரை நிறுத்த இங்கிலாந்துக்கு மனு:பழ.நெடுமாறன், வைகோ, திருமா

br-embassy-india.jpg சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதர் மைக்கார்னை, பழ.நெடு மாறன் தலைமையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சந்தித்தனர். அப்போது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்த இங்கிலாந்து தலையிட கோரி மனு ஒன்றை அளித்தனர். அப்போது இலங்கைப் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய அங்கத்தினர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உடன் இருந்தனர். இந்த மனுவை அளித்த பின்னர் நிருபர்களிடம் பழ.நெடுமாறன் கூறியதாவது :

இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்படும் இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கிலாந்து முன் வரவேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இந்த கோரிக்கை மனுவை அளித்துள்ளோம்.  அவசியம் உரிய நடவடிக்கைகளுக்குப் பரிந்துரை செய்வதாகத் தெரிவித்துள்ளதாக கூறியதைத்தொடர்ந்து பேசிய வைகோ, 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்க கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கையெழுத்து போடுகிறார்கள். அமெரிக்க அதிபர், ஐ.நா.பொது செயலாளர், ரஷ்ய அதிபர் ஆகியோருக்கு கையெழுத்துக்களை அனுப்புவோம். கட்சி எல்லைகளை கடந்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டது. எனவே அரசியல் கூட்டணிக்கும், இலங்கை தமிழர்களை காக்க போராடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்ந்து போராடுவோம். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி உரிய நேரத்தில் கூடி முடிவு செய்வோம் என்றார்.

புலிகளின் 2100 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரு விமானக் குண்டுகள் படையினரால் மீட்பு

bobobo.jpgதமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட 2100 கிலோ எடைகொண்ட வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரு விமானக் குண்டுகளை இராணுவத்தினர் கண்டு பிடித்துள்ளதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த இரு குண்டுகளையும் விமானம் மூலம் கொண்டு வந்து புறக்கோட்டைப் பிரதேசத்தில் போட்டிருந்தால் அந்தப் பிரதேசம் முற்றாக அழிந்திருக்குமெனவும் அந்தளவுக்கு இந்தக் குண்டுகள் சக்திமிக்கவையாகக் காணப்பட்டதாகவும் இராணுவத் தரப்புத் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி புஷ்ஷின் சர்வாதிகார செயற்பாடுகள் அம்பலம்

bush.jpgஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டப்ளியு. புஷ் பயங்கரவாதத்துக்கெதிரான போராட்டம் என்ற போர்வையில் முன்னெடுத்த போரின் கொடுமைகள்,அநீதிகள், பாரபட்சங்கள் என்பன தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அமெரிக்க நீதித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கைகளிலிருந்து இவை அம்பலமாகியுள்ளன. அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் முதல்முறையாக இவை வெளிச்சத்துக்கு விடப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதியின் போர் உபாயங்கள் அனைத்தும் முரண்பாடுகளை உண்டாக்கியதுடன்  மனித உரிமைகளை மீறும் செயல்களாக அமைந்திருந்ததாக அமெரிக்க நீதித் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் பராக் ஒபாமா தனது போர்த் திட்டங்களை மாற்றி அப்பாவிகள் தண்டிக்கப்படுவதையும் அமெரிக்காவுக்கெதிராக உலகளவில் வியாபித்து வரும் எதிர்ப்புக்கள்ää வெறுப்புக்களை துடைத்தெறியவும் முயற்சிக்கவுள்ளார்.

அமெரிக்க நீதித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்கா தாக்கப்பட்டதிலிருந்து ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் நடந்து வரும் அட்டூழியங்கள்ää அத்துமீறல்களை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க காங்கிரஸ் வழங்காத அதிகாரங்களை ஜோர்ஜ் புஷ் தன்னிச்சையாகப் பெற்றுக்கொண்டு போரை நடத்திய முறை தனிமனித சுதந்திரத்தை சீரழித்துள்ளதுடன் புஷ்ஷை ஒரு சர்வாதிகாரியாக்கியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001ஆம், 2002ஆம்,2003ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான இராணுவ சித்திரவதைகள், கைதுகள், தாக்குதல்கள், மற்றும் அபுகுரைப், குவான்தனாமோ சிறைகளின் துன்பங்கள்,  கொடுமைகளை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டியுள்ளதுடன் அவை அனைத்தும் சர்வதேச சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதென்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவிலுள்ள பிரபல சட்டவல்லுனர்கள், நீதிபதிகள், குற்றவியல் நிபுணர்கள் இந்த அறிக்கையைத் தயாரிக்க உதவியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவிக்கு வந்ததும் போர் உத்திகளை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள நீதித் திணைக்களத்தின் அறிக்கை ஒபாமாவின் போர்க் கொள்கையில் விரைவில் மாற்றம் ஏற்படுத்த வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் தொடர்பாடலுக்கான யூதர்கள் நிலையத்தில் பேசிய ஹோல்டர், பயங்கரவாதத்துக்கெதிரான போரில் நடந்தேறிய கொடுமைகளை என்னால் ஏற்கமுடியாது. சரிப்படுத்த இயலாது. நியாயப்படுத்தவும் முடியாது என்றார்.

குவான்தனாமோ சிறைச் சாலையிலுள்ள கைதிகள் உடனடியாக விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கான அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட வேண்டும். மேலும் அச்சிறைச்சாலை மூடப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி பராக் ஒபாமா முன்னர் கூறியிருந்தார். சுமார் 800 சிறைக்கைதிகள் ஒபாமா பதவியேற்றபின்னர் விடுதலை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

முல்லைத்தீவிலிருந்து திருமலை ஆஸ்பத்திரியில் சனிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டோர் விபரம்

vanni-injured.gifபெப்ரவரி 28 சனிக்கிழமை இரவு திருகோணமலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட (முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட) 281 பொதுமக்களின் பெயர் விபரங்கள் வருமாறு;

1.ரி.நிதர்ஸனா, மாங்குளம், (வயது9),
2.ரி.கவிப்பிரியா, மாங்குளம், (7 மாதம்),
3.ரி.சிவமணி, மாங்குளம், (வயது30),
4.ரி.சிவயாகம், மாங்குளம், (வயது4),
 5.ரி.சிதுஜா, மாங்குளம், (வயது7),
 6.ரி.ஆண்டியம்மா, மாங்குளம், (வயது39),
 7.எஸ்.சுஜோதனன், வற்றாப்பளை, (வயது14),
 8.எஸ்.வசந்தாதேவி, வற்றாப்பளை, (வயது40),
9.பி.சேதுநாயகி, முரசுமோட்டை, (வயது71),
10.கே.பஞ்சாட்சரம், முரசுமோட்டை, (வயது72),
11.எஸ்.குருசேன, மாங்குளம், (வயது21),
12.சித்திரசேன, மாங்குளம், (வயது25),
13.ஏ.பொன்னுத்துரை, மாங்குளம், (வயது75),
14.கே.ரசீன்குமார், பூநகரி, (வயது33),
15.ஏ.செல்வராசா, விசுவமடு, (வயது58),
16.சிவபாதசுந்தரம், பருத்தித்துறை, (வயது34),
17.எஸ்.செபஸ்டின், விசுவமடு, (வயது68),
18.கே.பிரபாகரன், முரசுமோட்டை, (வயது33),
19.பி.எப்ரஹாம், அக்கராயன்குளம், (வயது14),
20.ஆர்.பத்மலோஜினி, பூநகரி, (வயது23),
21.கே.அன்னபூரணம், பூநகரி, (வயது56),
 22.பி.தர்மலிங்கம், பொக்கணை, (வயது67),
23.கே.நாகநாதினி, முல்லைத்தீவு, (வயது26),
24.கே.விதுஸா, முல்லைத்தீவு, (வயது2),
25.என்.நவநீதன், வலையர்மடம், (வயது26),
26.எம்.அன்பழகன், முத்தையன்கட்டு, (வயது34),
27.பி.செல்வமதி, முத்தையன்கட்டு, (வயது33),
28.யு.குவிந்தன், இரணைப்பாலை, (வயது05),
29.யு.சித்திரா, இரணைப்பாலை, (வயது30),
30.யு.தனுஷன், இரணைப்பாலை, (வயது08),
31.பி.தவயோகராஜா, மாத்தளன், (வயது42),
32.நவரத்னம், கட்டைக்காடு, (வயது75),
33.எஸ்.மாணிக்கராசா, முல்லைத்தீவு, (வயது72),
34.என்.உமாந்தினி, கிளிநொச்சி, (வயது25),
 35.நவரசன், கிளிநொச்சி, 3மாதம்,
36.கே.மகேந்திரநாதன், கிளிநொச்சி,
37.ஆர்.சொக்கலிங்கம், பொக்கணை, (வயது64),
38.கே.ரோசம்மா, பொக்கணை, (வயது83),
39.எஸ்.தம்பையா, (வயது64),
40.என்.சண்முகநாதன், வட்டக்கச்சி, (வயது35),
41.எஸ்.சுப்பிரமணியம், பொக்கணை, (வயது71),
42.எஸ்.நஸீதா,
43.பெயர் தரப்படவில்லை,
44.வி.ராதா, கிளிநொச்சி, (வயது36),
45.வி.அஜந்தன், கிளிநொச்சி, (வயது05),
46.ஏ.மரியதாஸ், வள்ளியர்மடு, (வயது74),
47.ரி.யோகராஜா, பளை, (வயது40),
48.ஆர்.வேலாயுதம்,
49.எஸ்.நடராசா,
50.எஸ்.கோகிலாதேவி, உருத்திரபுரம், (வயது35),
51.எஸ்.கிஷாந்த், உருத்திரபுரம், (வயது09),
52.யசிதா,
53.எஸ்.பதிரதனன்,
54.என்.லெட்சுமி,
55.சி.சருபாஸ்,
56.எஸ்.துளசிங்கம்,
57.எஸ்.சாந்தி, மல்லாவி, (வயது79),
58.கே.பசுபதி, நெடுங்குளம், (வயது87),
59.எஸ்.ஜனசுந்தரி, கிளிநொச்சி, (வயது55),
60 எஸ்.அழகராணி, (வயது40),
61.ஆர்.சுந்தரலிங்கம், மல்லாவி, (வயது45)
62.ஜெகதீஸ்வரி, பளை, (வயது33),
63.சுஜந்தினி, பளை, (வயது05),
64.ஜே.துஸீபன், பளை, (வயது2),
65.என்.சுகந்திரன், புதுக்குடியிருப்பு, (வயது69),
66.எஸ்.ஆலன், புதுக்குடியிருப்பு, (வயது52),
67ஆர்.மகேஸ்வரி, வேறாவில், (வயது67),
68.எஸ்.ஜரின்சன், புதுக்குடியிருப்பு, (வயது16),
69.சகாயநாதன், புதுக்குடியிருப்பு, (வயது47),
70.ஆர்.ரேணுகா, யாழ்ப்பாணம், (வயது15),
71.ஏ.அன்னலட்சுமி, மாத்தளன், (வயது5),
72.டினோஜினி, இரணைப்பாலை, (வயது8),
73.ஆர்.நிவாதா, இரணைப்பாலை, (வயது10),
74.டி.ஜனம்மா, யாழ்ப்பாணம், (வயது60),
75.ரி.ராமேஸ்வரி, யாழ்ப்பாணம், (வயது31),
76.ரி.டிலுக்ஷன், (வயது1), 77.ரி.ஜன்ஸிலா, (வயது36),
78. ஜே. ஜெயபாலன், பொக்கணை, ( 33 வயது),
79. பிரதீஷன்,பொக்கணை, (2 மாதம்),
80. சரஸ்வதி, கிளிநொச்சி,(36 வயது),
81. யு.சிவாஜினி,முல்லைத்தீவு, (30 வயது),
82. ஜே. சிவமணி,வலையர்மடம், (50 வயது),
83. யு.கிஷாலன், வலையர்மடம்,(04 வயது),
84. மகிதா, பளை, (04 வயது),
85. சந்திரோதயம், பளை,(54 வயது),
86. பெயர்தரப்படவில்லை,
87. எஸ். மீனாட்சி, விசுவமடு, (69 வயது),
88. பி. சந்திராவதி, மாத்தளன், (32 வயது),
89. பி.அனுராசன், மாத்தளன்,(02 வயது),
90. பி. கயல்விழி, மாத்தளன், (07 வயது),
91. ஐ.மருதனார்,வன்னிக்குளம்,(73 வயது),
92. முனியாண்டி, யாழ்ப்பாணம், (71 வயது),
93.வள்ளியம்மா,வல்லிபுரம்,புதுக்குடியிருப்பு,(53 வயது),
94. என்.புவனேஸ்வரி, கிளிநொச்சி, (52 வயது),
95. ஆர். மகேஸ்வரி, பூநகரி,(67 வயது),
96. கே.ராசையா,புதுக்குடியிருப்பு, (59 வயது),
97. ரி.சிவபாக்கியம், அச்சுவேலி,(77 வயது),
98. ரி. சச்சிதானந்தம், சாவகச்சேரி,(66 வயது),
99. வை. யோகரூபன், மாங்குளம், (15 வயது),
100. எஸ்.சின்னராசா,கிளிநொச்சி, (60 வயது),
101. ஆர்.தம்பிநாதன், ஐயங்குளம், மல்லாவி,(73 வயது),
102. ரி. திலகவதி, மல்லாவி,(72 வயது),
103. லெயானியா, வட்டக்குளம் ,முள்ளியவளை, (8 வயது),
104. ரி. ஜெகதீஸ்வரி, கட்டவெளி, மல்லாவி, (39 வயது),
105. எஸ்.நாகலிங்கம்,(64 வயது),
106. வை.யோகசுகந்தினி,மாங்குளம், (10 வயது),
107. யோகதர்ஷினி, மாங்குளம்,(12 வயது),
108. எஸ். யோகநாதன்,மாங்குளம்,(51 வயது),
109. வை. யோகமதுஷன், மாங்குளம், (5 வயது),
110.எஸ். சிவதர்ஷினி, மூங்கிலாறு, (31 வயது),
111. எஸ். கலைக்குமரன்,மூங்கிலாறு , (8 மாதம்),
112. எஸ்.சின்னத்துரை, கிளிநொச்சி, (81 வயது),
113. பி. இராசையா ,திருவையாறு (65 வயது),
114. கே.ராஜா,மாத்தளன் , (33 வயது),
115. கே.பவிசா, மாதளன், (4 மாதம்),
116. ஆர். குவின்சி, பூநகரி, (28 வயது),
117. எம். சின்னமலர் , பூநகரி, (56 வயது),
118. யு.ஜெயந்தினி, கந்தரபுரம்,(36 வயது),
119. யு. சருஸன் , கந்தபுரம், (8 மாதம்),
120. கே.சர்மிளா, கந்தபுரம் (4 வயது),
121. ஜி. பிரதீபா ,மாங்குளம், ( 26 வயது),
122. ஜே.ஜெயந்த பத்மினி, கிளிநொச்சி, (53 வயது),
123. பி.பொன்னம்பலம் , மாத்தளன், (67 வயது),
124. ஜே. லோஜினி தேவி ,பொக்கணை, (25 வயது),
125. என்.சரஸ்வதி, புதுக்குடியிருப்பு, (60வயது),
126. மது,புதுக்குடியிருப்பு, (8 மாதம்),
127. ஜி.அந்தனிப்பிள்ளை,கிளிநொச்சி, (90வயது),
128.ஏ.அபிராமி, இணுவில், (29வயது),
129.ஏ.கோபிஷன், இணுவில், (4வயது),
130.ஏ.கோபிகா, இணுவில், (2வயது),
131.பி.முருகேசன், யாழ்ப்பாணம், (77வயது),
132. ஜே.சரஸ்வதி, புதுக்குடியிருப்பு, (65வயது),
133.எஸ்.வர்ஸிகா, புதுக்குடியிருப்பு, (2வயது),
134.எஸ்.மேகலா, புதுக்குடியிருப்பு, (27வயது),
135.கே.உமாதேவி, திருகோணமலை, (65வயது),
136.ஆர்.கலியுகவரதன், திருமலை, (68வயது),
137.ரி.விஸ்நவி, மாத்தளன், (1.5வயது),
138.ரி.சங்கீதா, மாத்தளன், (27வயது),
139.சோயிட், தேவிபுரம், (77வயது),
140.எஸ்.சூசைநாயகம், அடம்பன், (53வயது),
141.தேவநாயகி, மாத்தளன், (66வயது),
142.ஜே.சின்னப்பிள்ளை, கிளிநொச்சி, (73வயது),
143.எஸ்.வல்லசாமி, மன்னார், (76வயது),
144.எஸ்.நாகமணி, யாழ்ப்பாணம், (68வயது),
145.எஸ்.குகனேஸ்வரி, முள்ளியவளை, (26வயது),
146.எம்.ஜெயதுஷா, முள்ளியவளை, (25வயது),
147.ஜே.அன்னலட்சுமி, மாத்தளன், (35வயது),
148.எஸ்.விதுஜலிங்கம், பரந்தன், (92வயது),
149.யு.குகன்ஜன், வவுனியா, (22வயது),
150.ஜி.சுதர்ஸா, கிளிநொச்சி, (11வயது),
151.ஜி.சித்திரதேவி, கிளிநொச்சி, (40வயது),
152.ஜி.லக்ஸிகா, கிளிநொச்சி, (07வயது),
153.ரி.மீதோமியா, மன்னார், (84வயது),
154.எம்.மரியதாஸ், மன்னார், (78வயது),
155.அனுராஜா, பூநகரி, (18வயது),
156.எஸ்.செபமாலை, மன்னார், (69வயது),
157.அருளானந்தம், மன்னார், (85வயது),
158.ஆர்.யோகமலர், உருத்திரபுரம், (58வயது),
159. ஆர். தவச்செல்வி, உருத்திரபுரம் (வயது 33),
160. ரட்ணசிங்கம், புதுக்குடியிருப்பு, (வயது 62),
161. எஸ். கதிரேசன், பொக்கணை, (வயது 64)
162. எஸ். சந்திரதேவி, பரந்தன், (வயது 65),
163. பி.ரசக்கனிஜா, இரணைப்ப்பாலை, (வயது 52)
164. பி. பாலரஜினி, இரணைப்பாலை, (வயது 25),
165. கே. ரேஷ்வரி, முறிகண்டி, (வயது 60),
166. எஸ். தங்கமலர், துணுக்காய், (வயது 44),
167. பேபிக்கா, துணுக்காய், (வயது 14),
168. எஸ். சிறிகாந்தன், திருநகர், கிளிநொச்சி, (வயது 60),
169. வீ.செல்வதி, கோயிலடி, தம்பலகமம், (வயது 25),
170. நிலோஷன், கோயிலடி, தம்பலகமம், (வயது 1.5),
171. பி. அன்னப்பிள்ளை, காத்தார்குளம், மன்னார், (வயது 56),
172. ஏ.சியாமளா, மன்னார், (வயது 27),
173. ஏ. அபிநயா, மன்னார், (வயது 3.5),
174. கே.மலர்மதி, தம்பலகமம், (வயது 44),
175. விக்டோரியா, அடம்பன், (வயது 47),
176. ரி. கவிரேக்ஷன், கிளிநொச்சி (வயது 22),
177. அலிலன், கிளிநொச்சி (வயது 1),
178. கே. சாந்தி, இரணைப்பாளை, (வயது 29),
179. செய்துன் பீபீ, பலாங்கொட, (வயது 62),
180. காதர் முகைதீன், வன்னிக்குளம், (வயது 72),
181. அஞ்சலி லிங்கம், ஆட்காட்டிவெளி, கிளிநொச்சி (வயது 80),
182. செபஸ்டியன் பிள்ளை, பாஷையூர், (வயது 50),
183. கருணாநிதி, நல்லூர், யாழ்ப்பாணம், (வயது 68),
184. இந்திராணி, வவுனியா, (வயது 80),
185. சி.சந்திரகுமாரி, துணுக்காய், (வயது 31),
186. எஸ். தனுஷா, இரணைப்பாலை, (வயது 19),

187. சி.சந்திரசீலன், துணுக்காய், (வயது 31),
188. சி. சண்முகநாதன், இரணைப்பாலை, (வயது 50)
189. சரோஜினிதேவி, இரணைப்பாலை, (வயது 49),
190. வி. பராசக்தி, சாவகச்சேரி, (வயது 70),
191. ரி. தனுஷா, உதயநகர், கிளிநொச்சி, (வயது 33),
192. தர்ஷிகா, உதயநகர் கிளிநொச்சி, (வயது 05),
193.திலோயன், உதயநகர், கிளிநொச்சி, (வயது 03),
194. கே. புஷ்பவதி, நல்லூர், பூநகரி, (வயது 72),
195. பி.நாகம்மா, இரணைப்பாலை, (வயது 63),
196. மகிளினி, கிளிநொச்சி, (வயது 05),
197. வி.ராதிகா, கிளிநொச்சி, (வயது 40),
198. ரி. செல்வகுமார், கரவெட்டி, (வயது 21),
199. எஸ். சஜிவா, கிளிநொச்சி, (வயது 07),
200. எஸ். ஐங்கரன், கிளிநொச்சி, (வயது 09),
201. எஸ். அலைச்செல்வி, கிளிநொச்சி, (வயது 02),
202. எஸ். புஷ்பமலர், கிளிநொச்சி, (வயது 34),
203 கே. சிவதேவி, தண்ணீரூற்று, (வயது 59),
204. வி. பொன்னம்மா, முல்லைத்தீவு, (வயது 77),
205. எம். சரஸ்வதி, கல்மடு, (வயது 64),
206. வி. முத்துப்பளை, கிளிநொச்சி, (வயது 63),
207. எஸ். அன்னம்மா, காங்கேசன்துறை, (வயது 77),
208. ஜே. விஜேகுமாரி, முழங்காவில், (வயது 41),
209. ஜே.ஜெயமனோகரன், முழங்காவில், (வயது 41),
210. ரி. மல்லிகாதேவி, மும்முலமுனை, (வயது 41),
211. கே. பரமேஸ்வரி, புத்தூர், (வயது 73),
212. எஸ். அன்னம்மா, குமழமுனை, (வயது 74),
213. ஜே. வள்ளியம்மா, கிளிநொச்சி, (வயது 62),
214. கே. சேதுப்பிள்ளை, நகுலம், (வயது 79),
215. எஸ். அன்னீஸன், கிளிநொச்சி, (வயது 73),
216. எஸ். கருப்பையா, முல்லைத்தீவு, (வயது 63),
217. ஏ. புஷ்பலீலா, பளை, (வயது 59),
218. எஸ். பெருமாள், மாத்தளன், (வயது 69),
219. கே. பிரமவன், மல்லாவி, (வயது 07),
220. கே. தயாளினி, மல்லாவி, (வயது 37),
221. பாக்கியம், பளை, (வயது 57)
222. வி. சண்முகம், மன்னார், (வயது 72),
223. ரி. ஞானசேகரம், புதுக்குடியிருப்பு, (வயது 49),
224. ராஜேஸ்வரி, புதுக்குடியிருப்பு, (வயது 55),
225. எஸ். வேதநாயகம், மன்னார், (வயது 68),
226. அம்பிகாவதி, மன்னார், (வயது 62),
227. பத்திரகாளி, அடம்பன், (வயது 58),
228. சியம்பு, அடம்பன், (வயது 72),
229. எஸ். இராசதுரை, கிளிநொச்சி, கல்லாறு, (வயது 55),
230. ஏ. எலிஸபத், முழங்காவில், (வயது 74),
231. எம். ஆரோக்கியம், முழங்காவில், (வயது 72),
232. தயானந்த ராசா, பல்லவராயன்குளம், (வயது 03),
233. நிலவன், கிளிநொச்சி, (வயது 1.5),
234. சாலினி, கிளிநொச்சி, (வயது 06),
235. சர்யசன், பல்லவராயன்குளம், (வயது 03),
136. ஜெயலினி, பல்லவராயன்குளம், (வயது 09),
237. நாகேஸ்வரன், இரணைப்பாலை, (வயது 08),
238. கிருஷ்ணகுமார், இரணைப்பாலை, (வயது 32),
239. கே.தயாகரன், பளை, (வயது 30),
240. என். கண்மணி, பொக்கணை, (வயது 70),
241. கே. பரமேஸ்வரி, வவுனியா, (வயது 62),
242. ரி. பரமேஸ்வரி, முல்லைத்தீவு, (வயது 65),
243. ரி. கமலா, தண்ணீரூற்று, (வயது 60),
244. ரி. செல்லம்மா, பாரதிபுரம், (வயது 70),
245. ஆர். கண்ணிமணி, வவுனியா, (வயது 63),
246. கே.இராசையா, தர்மபுரம், (வயது 62),
247. வி. பிரதீஷ், புதுக்குடியிருப்பு, (வயது 13),
248. எஸ்.விமலநாதன், புதுக்குடியிருப்பு, (வயது41),
249. எஸ்.செல்வராசா, மாத்தளன், (வயது 65),
250. என்.யோகநாதன், யாழ்ப்பாணம், (வயது65),
251. கே.முத்தம்மா, கிளிநொச்சி, (வயது63),
252. வி.பார்வதிப்பிள்ளை, யாழ்ப்பாணம், (வயது 70),
253. இ.திலகவதி, நடுகண்ணி, (வயது 65),
254. எஸ்.சிவஞானம், நடுகண்ணி, (வயது 60),
255.கே.கண்மணி, அடம்பன், (வயது 49),
256.அவிஜின் பெரெரா, அடம்பன், (வயது 74),
257. இந்திரேஸ்வரி, வவுனியா, (வயது 60),
258. கிரிதரன், நெடுங்கேணி, வவுனியா, (வயது 49),
259.சிவகங்கை, முகமாலை, (வயது 70),
260. எஸ். சாரதாதேவி, வட்டக்கச்சி, (வயது 56),
261. ஆர். வித்திலிங்கம், குஞ்சுப்பரந்தன், (வயது 87),
262. ரி.குணசீலன், திருவையாறு, (வயது 70),
263. பெயர் தரப்படவில்லை,
264. எஸ். திருஞானக்கரசு, பளை, (வயது 60),
265. எஸ். வீரசிங்கம், மீசாலை, (வயது 82),
266. எம்.ராசம்மா, வட்டக்கச்சி, (வயது 62),
267. பி.கோணேஸ்வரி, தர்மபுரம், (வயது 35),
268. பி.சஜீவன், தர்மபுரம், (வயது 4),
269. பி.கலையரசி, தர்மபுரம், (வயது 8),
270. பி.கயல்விழி, தர்மபுரம், (வயது 8),
271. ஏ. கந்தசாமி, மாங்குளம், (வயது 73),
272. எம்.அரசம்மா, தர்மபுரம், (வயது 63),
273. ரி.நாகராணி, மன்னார், (வயது 50),
274. எஸ். வைத்தியலிங்கம், வவுனியா, (வயது 56),
275. கே.முருகையா, கிளிநொச்சி, (வயது 63),
276. ஏ.தவராசா, மன்னார், (வயது 52),
277. வை.ஷர்மிலன், மன்னார், (வயது 11),
278. ஏ.உவனீஸ், புன்னைராவி, (வயது 62),
279. எஸ்.தர்மராசா, புதுக்குடியிருப்பு, (வயது 56),
280. ரி.துரைராசா, கிளிநொச்சி, (வயது 56),
281. ரி.கந்தவனம், யாழ்ப்பாணம், (வயது 80).
 

பாக். பாதுகாப்பை உறுதிப்படுத்தியதையடுத்தே வீரர்களை அனுப்பத் தீர்மானித்தோம்

pak-2nd-test.jpg பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்திலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சபையில் கிரிக்கெட் அணியினர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் காமினி லொக்குகே விளக்கமளித்தார்.

இலங்கை வீரர்களின் நிலைகுறித்து பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், அநுரகுமார திசாநாயக்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபை முதல்வரிடம் இது தொடர்பாக விளக்கம் கோரினர். இதன்போது சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறுக்கிட்டு, பாகிஸ்தானில் இத்தகைய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சபையிலிருந்து பிரதமர் வெளியில் சென்றுள்ளார்.

அவர் வந்ததும் முழுமையான விபரங்களைத் தெரிவிக்க முடியும் என்றார். இதனையடுத்து சற்று தாமதமாக சபைக்குள் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, லாகூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு விவகாரம் சம்பந்தமாக விளக்கமளித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நேற்றுக்காலை 9.15 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எமது வீரர்கள் விளையாடுவதற்காக மைதானத்திற்குள் பிரவேசித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றல்ல. பாகிஸ்தான் அரசாங்கம் எமது வீரர்களுக்கான பூரண பாதுகாப்பை உறுதிப்படுத்தியதையடுத்தே நாம் எமது வீரர்களை அங்கு விளையாட அனுப்பத் தீர்மானித்தோம்.மேற்படி சம்பவம் பற்றி நாம் கேள்விப்பட்ட உடனேயே வெளிநாட்டமைச்சுடன் தொடர்புகொண்டு பாகிஸ்தானுடன் கலந்துரையாடினோம். அதனையடுத்து எமது வீரர்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன. பல தடவைகள் பல நாடுகளில் இதுபோன்று புலிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் இதில் குறிப்பிடத்தக்கது. எனினும் எமது வீரர்கள் தயங்காது தமது விளையாட்டுக்களை தொடர்ந்தனர்.

இம்முறை பாகிஸ்தானின் உறுதிமொழியை நாம் நம்பினோம். அத்துடன் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இலங்கைக்கு ஏனைய சர்வதேச அணிகள் விளையாடவர பின்வாங்கியபோது பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளே எமக்குக் கை கொடுத்தன. அந்த உதவிக்குப் பிரதியுபகாரமாகவே இம்முறை பாகிஸ்தானுடன் விளையாட நாம் முன்வந்தோமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது, குறுக்கிட்ட அநுரகுமார திசாநாயக்க எம்.பி பாகிஸ்தானுடன் இம்முறை இணைந்து விளையாடவிருந்த அவுஸ்திரேலிய அணி பாதுகாப்புக் காரணங்களுக்காக அத்தீர்மானத்தை மாற்றிக்கொண்டது. இத்தகைய சூழலில் பாதுகாப்பில்லை என்ற நிலையிலும் எமது அணியை அங்கு அனுப்ப முற்பட்டதேன்? எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் காமினி லொக்குகே பாகிஸ்தானின் உறுதிமொழியில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோம் என்றார்.

புதுக்குடியிருப்பு சந்தியை படையினர் கைப்பற்றியுள்ளனர்

puthukkudiyiruppu-junction.jpgமேஜர் ஜெனரல் கமால் குனரத்ன தலைமையிலான 53வது படைப்பிரிவின் படையணியான 8வது செயலணி படைப் பிரிவினரும் பிரிகேடிய சாவேன்திர சில்வா தலைமையிலான 58வது படைப்பிரிவினரும் இன்று (மார்: 03) காலை 9.30 மணியளவில் எல்ரிரிஈ இன் இறுதித் தளமான புதுக்குடியிருப்பு நகரின் சந்தியைக் கைப்பற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

58வது படைப்பிரிவினரும் 8வது செயலணிப்படையினரும் கடந்த 20ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி புலிகளின் நிலைகளை முற்றாக அழித்துக் கொண்டு இச்சந்தியை அடைந்துள்ளனர். இப்படைப்பிரிவின் படையணிகளான 12 வது கஜபா றெஜிமன்ட், முதலாவது கஜபா றெஜிமன்ட் மற்றும் 4வது விஜயபாகு படையணிகள் தற்பொழுது இச்சந்தியின் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருவதுடன் எல்ரிரிஈ இன் மீதித் தளங்களை நோக்கி முன்னேறி வருகின்றனர் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

புதுக்குடியிருப்பு நகரின் மேற்கு எல்லையில் 10வது மற்றும் 12வது கஜபா படையணிகள் நிலைகொண்டுள்ளன. 6வது, 9வது, 12து கெமுனுப் படையினர் கோம்பாவிலிருந்து புதுக்குடியிருப்பு நகருக்கு வடக்காக தாக்குதல் தொடுத்து வருகின்றனர். 7வது சிங்கப் படையினரும் 10வது, 11வது காலால்படையினரும்  எல்ரிரிஈ இன் நிலைகளை தேடி அழிப்பதிலும் ஈடுபட்டுள்ளதாக படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ-35 பாதைக்கு தெற்காக முதலாது கஜபா படையினரும் நான்காவது விஜயபாகு படையினரும் 8வது செயலணி படையனரும் தாக்குதல் நடத்தி புதுக்கடியிருப்பு சந்தியை கைபற்றியுள்ளனர். படையினர் இப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிந்திய செய்தி – பாக்கிஸ்தானில் இலங்கை டெஸ்ட் கிரிக்கற் அணி மீது துப்பாக்கிச் சூடு. ஆறு வீரர்கள் காயம்! எட்டு பொலிஸார் பலி!

20090302.jpgஇலங்கை டெஸ்ட் கிரிக்கற் அணியின் மீது இன்றுகாலை துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பாக்கிஸ்தான் லாகூர் நகரில் கடாபி விளையாட்டரங்கில் இரண்டாவது டெஸ்ட் விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று விளையாட்டில் கலந்துகொள்வதற்கென மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியின் மீதும், பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை கிரிக்கற் அணியைச் சேர்ந்த ஆறு காயமடைந்துள்ளனர்.

இதில் கிரிக்கற் வீரர்களான திலான் சமரவீர,  மற்றும் உதவிப் பயிற்சியாளர் ஆகியோர் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய நால்வருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் வைத்திய சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ளனர். கிரிக்கற் அணித் தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு காலில் சிறிய காயமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனந்தெரியாத துப்பாக்கி நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் மொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச்சேவை அறிவித்துள்ளது.

அதேநேரம் இன்று நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளது.  

காயமடைந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் இலங்கைக் கிரிக்கற் வீரர்கள் வருமாறு:-

திலான் சமரவீர,

தாரங்க பரணவித்தான,

அஜந்த மெண்டிஸ்,

சங்ககார ,

மகேல ஜெயவர்தன

சமிந்தவாஸ்

செய்திப் பின்னிணைப்பு

பாக்கிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக இலங்கைக் கிரிக்கற் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரியொருவருடன் ‘தேசம்நெற்’ தொடர்புகொண்டபோது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திலான் சமரவீரவினதும் உதவிப்பயிற்சியாளர் போல் சாபேர் ஆகியோரின் நிலைமை பாரதூரமானதல்ல எனத் தெரிவித்தார். ஏனைய கிரிக்கற் வீரர்கள் 5 வருக்கும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைப் பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

பாக்கிஸ்தான் தொலைக்காட்சிச்சேவை இது குறித்து தகவல் தெரிவிக்கையில்,  வெள்ளை நிற வாகனமொன்றில் வந்த இனந்தெரியாதவர்களாலே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தது. இறுதியாகக் கிடைக்கும் தகவல்களின்படி இத்தாக்குதலில் எட்டு பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

வீரர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதம்

பாகிஸ்தான் லாகூரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை வீரர்கள் காயமடைந்ததையடுத்து, வீரர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவசர விமானம் மூலமாக இலங்கை அணி வீரர்களை வெகு விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கிரிக்கெட் சபை பிரதம நிறைவேற்று அதிகாரி துலிப் மெண்டிஸ் தெரிவித்தார்.

அத்துடன் தோற்பட்டையில் துப்பாக்கி ரவைகள் பாய்ந்து காயமடைந்த பரணவித்தான, திலான்,துணைப் பயிற்றுவிப்பாளர் போல் ஆகியோர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும், இன்று இரவுக்குள் நாடு திரும்புவர் எனவும் துலிப் மெண்டிஸ் கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து லாகூர் கடாபி மைதானத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தமையை இட்டு தாம் அதிர்ச்சி அடைவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இலங்கை வீரர்களுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளித்த பின்னரே அவர்கள் பாகிஸ்தான் சென்றதாகவும் அர்ச்சுன ரணதுங்க சுட்டிக் காட்டினார்.

உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது முதல் தீவிரவாத தாக்குதல் 

உலக அளவில் சர்வதேச கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாத தாக்குதல் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவர் காயம்:

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு அம்பயர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாரும் அபாய கட்டத்தில் இல்லை-ஜெயசூர்யா:

இதற்கிடையே தாக்குதலில் உயிர் தப்பிய கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா அளித்துள்ள பேட்டியில், எந்த வீரரும் அபாய கட்டத்தில் இல்லை. கவலைப்படும்படியான நிலையில் எந்த வீரரும் இல்லை. இதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

அனைவரும் பாதுகாப்புடன் இருக்கிறோம். இந்த தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. முதலில் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் நாங்கள் இருந்த வேன் மீது தாக்குதல் நடத்தினர் என்று ஜெயசூர்யா கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சதிதான் இது

இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில ஆளுநர், இது தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதி.  மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் சதிதான் இது என்று தெரிவித்துள்ளார்.

cricket_pakisthan.jpg

pak-2nd-test.jpg

கட்டுநாயக்கவில் சுட்டு வீழ்த்தப்பட்ட தற்கொலை விமானத்தின் விமானி அடையாளம் காணப்பட்டுள்ளார்

ruban.jpgகட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீது தாக்குதல் நடாத்த வந்த விமானம் தரையில் உள்ள படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தது. அவ்விமானத்தை செலுத்திவந்த புலிகள் இயக்க தற்கொலைதாரி ரூபன் நீர்கொழும்பு மஜித்திரேட் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

30 வயது முருகப்பிள்ளை சிவரூபன் என அவரது உறவினரும் முன்னாள் புலிகளியக்க உறுப்பினருமான 29 வயது இளைஞர் ஒருவரால் நீர்கொழும்பு பிரேத அறையில் வைத்து அடையாளம் காட்டப்பட்டுள்ளார். சாட்சியின் தகவல்களின் படி முருகுப்பிள்ளை சிவரூபன் இடைக்காடு மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரம் வரைப் படித்தவர் எனவும் பின்னர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார் எனவும் தெரிகிறது. அவரது தகப்பனார் புற்றுநோயினால் பாதிப்புற்று வன்னியின் கிழக்குப்பகுதியில் வாழ்வதாகவும் சகோதரி ஒருவர் ஜேர்மன் நாட்டில் வாழ்வதாகவும் மேலும் தெரிய வருகின்றது.

முல்லை மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டாம்! பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்துங்கள்!!! அமெரிக்கத் தமிழ் அமைப்பு PEARL : த ஜெயபாலன்

Pearl_Logo‘முல்லைத்தீவின் யுத்த பிராந்தியத்தினுள் சிக்குண்ட மக்களை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா உதவக் கூடாது’ என People for Equality and Relief in Lanka (PEARL) என்ற அமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. ‘மாறாக பாதுகாப்பு வலயத்தை விரிவுபடுத்தவும்’ என்று அவ்வமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. இலங்கை இராணுவம் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்துள்ள பகுதிகளிலேயே தாக்குதலை மேற்கொண்டு பல நூற்றுக் கணக்கான வன்னி மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் உள்ள நிலையில் PEARL நேற்று இந்த வேண்டுகோளை விடுத்து உள்ளது.

‘U.S. Pacific Command (PACOM) முல்லைத் தீவில் சிக்குண்டுள்ள மக்களை வெளிறேற்றும் திட்டத்தில் தலைமைப் பாத்திரம் ஏற்று உள்ளதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள PEARL இத்திட்டத்தை உடனடியாகக் கைவிடும்படி கோரி உள்ளது. ‘இவ்வாறு வெளியெற்றப்படும் மக்கள் இலங்கை அரசின் திடமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாவர்கள்’ என்று கூறியுள்ள PEARL ‘எங்களின் கையில் அந்த மக்களின் குருதி வேண்டாம்’ என்று தெரிவித்து உள்ளனர். PEARL   அமெரிக்கத் தமிழர்களால் 2005ல் உருவாக்கப்பட்ட அமைப்பு. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக கவனத்திற்கொள்ளும் 1800 பெரும்பாலும் அமெரிக்கத் தமிழர்கள் அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.

தங்களுக்குக் கிடைத்தள்ள தகவல்களின் படி ‘U.S. Pacific Command (PACOM) முல்லைத்தீவில் சிக்குண்டு உள்ள மக்களை வெளியேற்றி இலங்கை அரசிடம் ஒப்படைக்க உள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளது PEARL. இந்த இலங்கை அரசு ஒப்படைக்கப்பட்ட மக்களை நாசி முகாம்கள் போன்ற முகாம்களில் (concentration-style internment camps) அடைக்க திட்டமிடுவதாகவும் PEARL குற்றம்சாட்டி உள்ளது.

இந்த மக்களை முல்லைத் தீவு பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுவதை கைவிட்டுவிட்டு பாதுகாப்பு வலயத்தை மேலும் விரிவாக்கி சர்வதேச உதவிப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோரை சுதந்திரமாக அங்கு அனுமதிப்பதன் மூலம் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என PEARL கேட்டுக்கொண்டு உள்ளது.

எல்ரிரிஈ தனது கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அனைத்தையும் இழந்த நிலையில் 14 சதுர கி.மீ பரப்பளவை தனது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளனர். அப்பிரதேசம் அங்குள்ள 200 000 மக்களினால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவர்களில் கணிசமான எல்ரிரிஈ உறுப்பினர்களது குடும்பங்களும் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் யுவதிகள் இலங்கை இராணுவத்தின் மற்றும் ஏனைய ஆயுத அமைப்புகளின் களையெடுப்பு நடவடிக்கைகளினால் பாதிக்கபடுவார்கள் என்ற நியாயமான அச்சம் அந்த மக்களிடையே உள்ளது. அவர்கள் அப்பிரதேசங்களை விட்டு வெளியேற முடியாமலிருப்பதற்கு இவை முக்கிய காரணியாக உள்ளது. ஏனையவர்கள் பெரும்பாலும் விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது பெரும்பாலான மனித உரிமைகள் அமைப்புகளாலும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

எல்ரிரிஈ தனது கடைசித் துண்டு நிலத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு இந்த 200 000 மக்கள் சிக்குண்டுள்ள நிலம் மிக அவசியம் என்பது பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதனாலேயே அனைத்து பகுதிகளிலும் பின்வாங்கிய எல்ரிரிஈ மக்கள் மிக மிகச் செறிவான பகுதியில் தங்கள் கடுமையான யுத்தத்தை நிகழ்த்துகின்றனர். இப்பகுதியை இழப்பது எல்ரிரிஈ தனது பிரதேசக் கட்டுப்பாட்டை முற்று முழுதாக இழப்பதற்கு ஒப்பானது. கிட்டத்தட்ட இரு தசாப்தங்களின் பின் எல்ரிரிஈ பிரதேசக் கட்டுப்பாட்டை கொண்டிராத ஒரு கொரில்லா அமைப்பாக மீண்டும் மாறுவதையெ இது குறிக்கும்.

அதனால் தனது பிரதேசக் கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொள்வதற்கு யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை பாதுகாப்பு வலயம் என்பன எல்ரிரிஈ க்கு மிக அவசியமானது. பயங்கரவாதத்தை அழிப்பதன் பெயரில் இலங்கை அரசு ஒட்டமொத்த தமிழ் மக்கள் மீதும் தாக்குதலை நடத்தி இன அழிப்பொன்றை மேற்கொள்வதாக பெரும்பாலான தமிழ் மக்கள் நியாயமாகவே நம்புகின்றனர். அதனால் இந்த இன அழிப்பை நிறுத்த யுத்த நிறுத்தம் அவசியமானது என்பதை சரியாகவே சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை அரசு சர்வதேச உதவியுடன் முல்லையில் சிக்குண்ட மக்களை வெளியேற்றி சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் மேற்பார்வையில் அம்மக்கள் விடப்பட்டால் இன்று யுத்தம் நடைபெறும் பிரதேசத்தின் முக்கியத்துவம் இழந்து போவதுடன் எல்ரிரிஈ தனது கடைசித்துண்டு நிலத்தையும் விட்டு கொரில்லாப் போர் முறைக்குச் சென்றுவிடும். இது எல்ரிரிஈ இன் வரலாற்றில் மிக மோசமான பின்னடைவாக அமைவது தவிர்க்க முடியாதது.

2002ல் ஒஸ்லோவில் இலங்கை அரசுக்கு சமமாக ஒரு பிரதேசக் கட்டுப்பாட்டை கொண்டு புரிந்தணர்வு ஒப்பந்த்தில் கையெழுத்திட்ட எல்ரிரிஈ ஏழு வருடங்களில் அவற்றையெல்லாம் இழந்து மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வந்துவிடும்.

அந்த நிலைக்குச் செல்வதை தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எல்ரிரிஈ மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். அதில் மக்கள் பகடைக்காய்களாக கேடயங்களாக ஆக்கப்படுவதிலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முல்லையில் உள்ள வன்னி மக்களைப் பொறுத்தவரை அவர்கள் இரண்டு இராணுவங்களின் பிடியில் சிக்குண்டு உள்ளனர். இரு இராணுவங்களுமே அந்த மக்கள் மீது தமது அதிகாரத்தை நிலைநாட்டும் தங்கள் இறுதி முயற்சியில் மிக ஆக்கிரோசமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்த யதார்த்தத்தின் பின்னணியில் தான் யுத்தம் நடைபெறும் முல்லையில் இருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் அமெரிக்காவில் உள்ள PEARL அமைப்பு அங்குள்ள மக்களை வெளியேற்ற வேண்டாம் என்ற கோரிக்கையை வைத்துள்ளது. ஹொலிவூட் படங்களில் மட்டுமே செல் அடிகளைப் பார்த்துக்  கொள்பவர்கள் கடந்த பல மாதங்களாக செல் அடிக்குள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் மக்களை யுத்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியெற்ற வேண்டாம் எனக் கேட்கின்றனர்.

PEARL அமைப்பின் கோரிக்கை முல்லையில் உள்ள வன்னி மக்களின் பாதுகாப்பு சார்ந்ததாக இருந்தால்  PEARL  பின்வரும் கோரிக்கைகளையே முன் வைத்திருக்க வேண்டும்.
வெளியெற்றப்படும் மக்களின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவும் சர்வதேசமும் பொறுப்பேற்க வேண்டும்.
வெளியேற்றப்படும் மக்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்படுவதை அமெரிக்காவும் சர்வதேசமும் உறுதிப்படுத்த வேண்டும்.
எல்ரிரிஈ உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
தற்காலிகமான முகாம்களுக்கு சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
மிக விரைவில் சில மாதங்களுக்குள் அம்மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவதை அமெரிக்காவும் சர்வதேசமும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த யுத்தத்தில் உயிரிழப்புகள், அங்கங்களை இழந்தவர்கள் உடமைகளை இழந்தவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகளே யுத்தம் நிறுத்தப்படாத பட்சத்தில் யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை அதிலிருந்து பாதுகாக்க ஒரே வழி. அதனைவிடுத்து எல்ரிரிஈ அரசியல் பேரம் பேசுவதற்கும் எல்ரிரிஈ இனதும் புலம்பெயர் தமிழர்களதும் அரசியல் அபிலாசைகளுக்காகவும் இந்த மக்களை பணயம் வைக்க முடியாது. இலங்கை அரசு இனவாத அரசு என்ற முடிவுக்கு நாம் வந்தால் வன்னி மக்களை அந்த யுத்தப் பிராந்தியத்தில் இருக்க நிர்ப்பந்திக்க முடியாது. அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வாய்ப்பு அழிப்பது அவசியம்.

வடக்கு – கிழக்கு தமிழர்களில் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மூன்றில் ஒரு பகுதியான ஒரு மில்லியன் வரையானோர் வெளிநாடுகளுக்கு வந்துவிட்டனர். மீதமுள்ளவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தெற்கில் வாழுகின்றனர். வெளிநாடுகளுக்கு வரவும் கொழும்புக்கு வரவும் வசதியற்றவர்களே பெரும்பாலும் இன்று வன்னியில் சிக்குண்டுள்ளனர். அந்த மக்களின் வறுமையைக் காரணம் காட்டி அவர்களின் தலையில் தமிழீழச் சுமையை இறக்கி வைத்துவிட்டு ‘உந்த மோட்டுச் சிங்களவன்களுக்கு பாடம் புகட்ட’ ஒற்றைக் காலில் நிற்கும் கோட் ரை கட்டும் கனவான்களும் கனவாட்டிகளும் யதார்த்தத்தை புரிந்த கொள்ள வேண்டும்.

._._._._._.

People for Equality and Relief in Lanka (PEARL)
Action Alert Archive
Take Action Now! (USA)

U.S. Troops Plan Evacuation in Sri Lanka: Sign Death Warrants for Hundreds of Thousands, Support Ethnic Cleansing
March 2, 2009

Credible reports from Colombo, Sri Lanka reveal the U.S. Pacific Command (PACOM) is planning to lead an evacuation of nearly 200,000 Tamil civilians trapped in the war-torn northern region of Sri Lanka. We urge you to stop these plans immediately, which would only serve to exacerbate the crisis for these civilians and support ethnic cleansing in this region. Instead of an evacuation, the “safe zones” these civilians are currently in should be strengthened, with full access for aid workers, journalists and human rights monitors.

These civilians have been besieged by the Sri Lankan government’s military offensive, which has raged on since September, costing the lives of over 2,000 Tamil civilians and wounding another 7,000 Tamil civilians. Reports reveal that PACOM is planning to evacuate these civilians and deliver them to the Sri Lankan government – who would then imprison them in concentration-style internment camps. Human Rights Watch and other humanitarian agencies have criticized the Sri Lankan government for its treatment of refugees: forcibly keeping them in internment camps, separated from family and secluded from international aid agencies, as they are harshly interrogated and abused.

PACOM evacuating these civilians and delivering them to the Sri Lankan government signs the death warrants of thousands of civilians, who would “disappear” upon entry into government-run camps. The Sri Lankan government has the ignoble title of having the highest rate of state-sponsored abductions in the world, according to the United Nations Working Group on Enforced and Involuntary Disappearances. The government frequently “disappears” civilians, journalists and even aid workers who they believe to be critical of their regime.

The Sri Lankan government currently estimates only 70,000 civilians inhabit the conflict area; most aid organizations including the ICRC, UN and HRW estimate 200,000 civilians. This discrepancy reflects a calculated attempt by the Sri Lankan government to underestimate the size of the population they would come to control, granting them adequate room to “disappear” thousands. These 200,000 civilians chose to live in area controlled by the Liberation Tigers of Tamil Eelam, and will therefore be treated with suspicion and brutality by the Sri Lankan government.

PACOM launching an evacuation of Tamil civilians supports the Sri Lankan government’s campaign of ethnic cleansing of this region. Tamils have been under attack by the Sri Lankan government since last September; evacuating them from Vanni and delivering them to the Sri Lankan government is equivalent to being an accomplice to genocide. As American citizens, we implore you to put an immediate stop to PACOM plans to evacuate these civilians. We do not want their blood on our hands. Instead of an evacuation, we urge the U.S. government to expand the “safe zone” these civilians are in, and strengthen their security by allowing aid workers, journalists and human rights monitors full access to the region. We also ask the U.S. government to pressure the Sri Lankan government to accept a ceasefire to provide respite to these besieged civilians.