கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

2169 சிவிலியன்கள் இராணுவத்திடம் தஞ்சம்

lankadisplaced.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த 2169 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

1983 பொதுமக்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள இராணுவத்தினரிடமும், 131 பொதுமக்கள் முனை பகுதியிலுள்ள கடற்படையி னரிடமும் தஞ்சமடைந்துள் ளனர். புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவினரிடம் தஞ்சமடைந்த 1983 பொதுமக்களில் 524 சிறுமிகள், 393 சிறுவர்கள், 534 ஆண்கள் மற்றும் 532 பெண்களும் அடங்குவர். புதுமாத்தளனிலிருந்து படகுகள் மூலம் தப்பி சுண்டிக்குளம் கடற்பரப்பின் ஊடாக முனை பிரதேசத்திற்கு 131 பொதுமக்கள் வருகைதந்துள்ளனர்.

அவர்களில் 66 சிறார்களும், 37 ஆண்களும், 28 பெண்களும் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்

ஒபாமாவின் கருத்தை இரான் வரவேற்றுள்ளது

obma-iran.jpgஅமெரிக்கா-  இரான் இடையிலான முப்பது ஆண்டுகால பகைமை மற்றும் நம்பிக்கையின்மையை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ள கருத்தை இரானிய அதிபரின் ஆலோசகர் ஒருவர் வரவேற்றுள்ளார்.

”ஆனால் வாஷிங்டனின் நிலைப்பாட்டு மாற்றம் வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடாமல் நீடிக்கவேண்டும், தம்முடைய கடந்தகால தவறுகளை அது அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்கா அப்படிச் செய்யும் பட்சத்தில் இரான் தனது முகத்தைத் திருப்பிக்கொள்ளாது” என்று அலி அக்பர் ஜவான்ஃபகிர் கூறியுள்ளார்.

இரானிய புத்தாண்டை முன்னிட்டு அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்துச் செய்தியில், இரானுடன் நேர்மையாகவும் பரஸ்பரம் மரியாதையுடனும் உறவுகளை முன்னெடுக்க தான் விரும்புவதாகக் கூறியிருந்தார்.

முல்லைத்தீவில் இருந்து இன்று 483 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

navy_civilians.jpgமுல்லைத் தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருந்து காயமடைந்த பொதுமக்களில் 483 பேர் இன்று புல்மோட்டைக்கு கப்பலில் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
செஞ்சிலுவை சங்கத்தின் கப்பலில் அழைத்து வரப்பட்டுள்ளவர்களை இந்திய வைத்தியர்களின் கள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அழைத்து செல்லும் முகமாக அவர்களை கப்பலில் இருந்து இறக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 11 தடவைகளில் புதமாத்தளனில் இருந்து இதுவரை  நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் திருகோணமலைக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது

கலாபூஷணம் முத்தழகு அவர்களின் பெயர் காலத்தால் அழிந்துவிடாது. – முதலமைச்சர் அனுதாபம்.

cm-ep.jpg இலங்கையின் மூத்த கலை இலக்கிய கலைஞர்களில் ஒருவரான மட்டுநகர் வி. முத்தழகு  (மார். 19) காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 77.  மிக நீண்ட காலமாக இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இவரின் `தாகமாய் இருக்கிறேன்` சிறுகதைத் தொகுதி பல விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் அரசியல், கலை, இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் அண்ணன் முத்தழகு. இவர் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினராக, நகைக்கடை வர்த்தக சங்கத்தின் தலைவராக, ஒரு சிறந்த கவிஞராக, சிறந்த எழுத்தாளனாக எமது மக்களுக்கு ஆற்றியுள்ள சேவைகள் காலத்தால் அழிந்துவிட முடியாதவை. தமிழ் இனம் வாழும்வரை அண்ணன் முத்தழகுவின் பெயர் நிலைத்து நிற்கும். அன்னாரின் மறைவினால் கலை உலகத்திற்கு ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

அன்னார் எமது தாய் நாட்டில் மாத்திரம் அல்ல தென் இந்தியாவிலும் தனது பெயரை நிலைநிறுத்தியவர். அரச உயர் விருதான கலாபூஷணம் விருதினைப் பெற்று எமது பிரதேசத்திற்குப் பெருமை தேடித்தந்தவர். அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், மற்றும் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்..

புலி ஆதரவாளர்களை கட்டுப்படுத்த சுவாமி நடவடிக்கை.

subramanian_swamy.jpg தமிழ் நாட்டிலுள்ள புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி இந்திய உயர் நீதிமன்றத்தில் உதவியை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதியின் ஆட்சியின்கீழ் புலி ஆதரவாளர்கள் சட்ட திட்டங்களை உதாசீனம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 17ம் திகதி நீதிமன்றத்தில் வைத்து புலி ஆதரவுச் சட்டதரணிகளினால் சுப்பிரமணிய சுவாமி தாக்கப்பட்டார் நீதிபதி மற்றும் பொலிஸார் முன்னிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் இவ்வாறு எதிர்வரும் காலங்களில் இடம்பெறாது தடுப்பதற்கு இந்திய உயர் நீதிமன்றத்தின் உதவியினை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசார இணையத்தளம்

upfa-website.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசார இணையத்தளம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது தொடர்பான வைபவம் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழு அறை பீ யில் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.

(www.sandanaya.lk) எனும் பெயரிலான இந்த இணையத்தளத்தை வீடியோ கொன்பரன்ஸ் ஊடாக ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.இந்த வைபவத்தில் அமைச்சர்களான மைத்திறிபால சிறிசேன, டளஸ் அழகப்பெரும, சுசில் பிரேம்ஜயந்த மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் புலிகளின் கொடிகளை வைத்திருந்தமை சட்டத்திற்கு முரணானதல்ல -கனடியப் பொலிஸார் தெரிவிப்பு

ltte_flag.jpg
விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கனடா தடைசெய்திருக்கின்ற நிலையில் இந்த வாரம் ரொரொன்ரோவில் தமிழ் சமூகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பொது புலிகளின் கொடிகளை வைத்திருந்தமை சட்டரீதியானதென கனடியப் பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை ரொரொன்ரோவில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர் . இலங்கை யுத்தம் தொடர்பாக கவனத்தை ஈர்க்கும் வகையிலும் யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசுக்கு கனடிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுமே இந்த மனிதச்சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புலிகளின் கொடிகளை ஏந்தியிருந்தனர். அவ்வாறு கொடிகளை வைத்திருந்தமை கனடாவின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு முரணானதா என்பது குறித்து கனடாவின் சட்டத்திணைக்களம் ஆராய்ந்து வருவதாக நகரப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தனர். ஆனால், அது சட்டவிரோதமானதல்ல என்ற கருத்தை பொலிஸ் படை வழக்கறிஞர்கள் கொண்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மார்க்புகாஷ் கூறியுள்ளார்.

“எந்தவொரு சட்டத்திற்கும் முரணானதாக இது இல்லை’ என்ற கருத்தை எமது வழக்கறிஞர்களிடமிருந்து கிடைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசு புலிகளை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டதையடுத்து புலிகள் அமைப்பிற்கு அங்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது

ஃபிரிட்சலுக்கு ஆயுள் தண்டனை

austria_incest.jpg
ஆஸ்திரியாவில் தனது மகளை இருபது ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் சிறைவைத்து, அவரை பலமுறை பாலியல்
வல்லுறவுக்கு உள்ளாக்கி, அவர் மூலம் 7 குழந்தைகளையும் பெற்றுக்கொண்ட ஜோசெப் ஃபிரிட்சல் என்பவருக்கு ஆயுட்சிறை கிடைத்துள்ளது.

இந்த சிறைவாசத்தை அவர் ஒரு மனநல காப்பகத்தில் கழிப்பார்.

பாலியல் வல்லுறவு, குடும்பத்துக்குள் தகாத உறவு வைத்திருத்தல், சிறைவைத்தல், தனது மகளை சிறை வைத்த காலத்தில் பிறந்த ஒரு குழந்தையை அலட்சியத்தின் காரணமாக கொலை செய்தமை ஆகியவை உட்பட ஒரு தொடரான குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக ஏகமனதாக காணப்பட்டார்.

விசாரணைகளின் போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட அந்த குற்றவாளி, தான் தனது குற்றங்கள் அனைத்தையும் உணர்ந்து வருந்துவதாகவும் கூறினார். தனது மகள் வீடியோ மூலம் வழங்கிய வாக்குமூலத்தை கேட்டபின்னர் தனது கட்சிக்காரர் தனது மனதை மாற்றிக்கொண்டதாக குற்றவாளியின் தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள மக்களை விடுவிக்க படையினரின் இறுதித்தாக்குதல் ஆரம்பம்

wanni-war.jpg சிவிலியன்களை மீட்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு வலயத்துக்கு மேற்காக இராணுவத் தாக்குதல் படையணிகள் சுற்றிவளைத்துள்ளதாக களநிலைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

களநிலையில் மிக உக்கிரத் தாக்குதல்களில் ஈடுபட்டுவரும் 58வது டிவிசன் படையினர் நேற்று (மார்:19) புலிகளின் தடைநிலைகள் மீது கடும் தாக்குல் நடத்தி அவர்களுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.  இப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட 9வது கெமுனுப் படையணியினர் 11 எல்ரிரிஈயினரின் உடல்கள் 17 ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 26 கைக்குண்டுகள் என்பனவற்றைக் கைபற்றியுள்ளனர்.

இதேவேளை இரணப்பாலைப் பகுதியில் படைநடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 7வது சிங்கப் படையினர் 3 உயர் நவீன தொடர்புசானங்கள் இரு பிரதான நிலைய தொடர்பு சாதனங்கள் மற்றும் இரு கொண்டு செல்லக்கூடிய தொடர்பு சாதனங்கள் என்பனவற்றையும் கைபற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இப்பகுதியில் நிலைகொன்டுள்ள 58 வது டிவிசன் படைப்பிரிவின் ஸ்ணைபர் படையினர் 13 புலிகளை கொன்றுள்ளனர். மேலும் படையினர் புதுக்குடியிருப்புக்கு கிழக்காக புலிகளால் கைவிடப்பட்ட கடற்புலிகளின் முகாமைக் கைபற்றியுள்ளதுடன் இம்முகாமிலிருந்த உயர் நவீன தொடர்புசாதனங்கள், செய்மதி அன்ரனாக்கள், வடிவமைக்கப்பட்ட படகுகள், சிறிய நீர்மூள்கி இயந்திரம், கொம்பியூட்டர்கள் என்பனவற்றையும் கைபற்றியுள்ளனர். புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 1983 சிவிலியன்கள் பாதுகாப்புத் தேடி 58வது டிவிசன் படையினரிடம் நேற்று சரணடைந்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

வருண் காந்தியை கைது செய்ய இடைக்காலத் தடை

20-varun-ganthi.jpgஉத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வருண் காந்தி அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில், முஸ்லிம்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். முஸ்லீம்களின் தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று பேசினார்.

இது குறித்து தேர்தல் கமிஷனின் உத்தரவின் பேரில், வருண் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றதில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதே போல தான் கைது செய்யப்படுவதைத் தவி்ர்க்க முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம் அவரைக் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது