கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஜி 20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் பலி

g-20-landon.jpgலண்டனில் இன்று ஆரம்பமான ஜி 20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் லண்டன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தின் போது லண்டன் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் கலந்துகொண்ட 63 ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள உலக பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்க ஜனாதிபதி உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் லண்டனின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு மட்டக்களப்பில் “வார உரைகல்” பத்திரிகை ஆசிரியர் மீது தாக்குதல்

vaarauraika.jpgகாத்தான்குடி பிரதேசத்தில் டீன் வீதியில் இருந்து வெளிவரும் ‘வார உரைகல்’ வார இதழின் ஆசிரியர் புவி ரஹ்மத்துல்லா இனந்தெரியாத ஆயுதக்குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதுடன் அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.  நேற்று புதன்கிழமை இரவு 10.30மணியளவில் இவரது வீட்டுக்கு முகத்தை மூடியநிலையில் வந்த ஆயுதக்குழுவினர் இவர் மீது சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன் அவரது வீட்டுடன் இணைந்ததாகவுள்ள அலுவலகத்துக்குள்ளும் நுழைந்த ஆயுதக்குழுவினர் அங்கிருந்த கணணி உட்பட அலுவலக ஆவணங்களை தீயிட்டு கொளுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பச்சப்புல்மூடை படையினரின் கட்டுப்பாட்டில் – பாதுகாப்பு அமைச்சு தகவல்

armyvictory.gifபுதுக் குடியிருப்புக்கு கிழக்காக அமைந்துள்ள பச்சப்புல்மூடை பிரதேசத்தை இராணுவத்தினர் நேற்றுக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பிரதேசத்தில் புலிகளுக்கெதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவினர் பயங்கரவாதிகளுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தி நேற்றுப் பிற்பகல் பச்சப்புல்மூடையை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

படையினரின் தாக்குதல்களுக்கு முகம்கொடுக்க முடியாத புலிகள் இறந்த தமது சகாக்களின் உடல்களையும் விட்டுவிட்டு இங்கிருந்து தப்பிச்சென்றதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் படையினர் நடத்திய தேடுதலின்போது 19 எல்.ரீ.ரீ.ஈ.யினரின் உடல்களையும் 19 ரி-56 ரக துப்பாக்கிகள் உட்பட சில ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

10 ஆயிரம் ரூபாவுக்கான புலமைப் பரிசில் – படை வீரர்களின் 250 குழந்தைகளுக்கு

wanni-operations.jpgஉயிர் நீத்த மற்றும் வலது குறைந்த நிலைக்குள்ளாக்கப்பட்ட படை வீரர்களின் 250 குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கான புலமைப் பரிசில்களை வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தூதுக் குழுவொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து இந்த புலமைப் பரிசில்களை கையளித்தது.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் இயங்கும் முஸ்லிம் நலன்புரி அமைப்புக்களை ஒன்றிணைத்து இயங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், இலங்கையில் படை வீரர்கள் அடைந்துவரும் வெற்றிகளைப் பாராட்டும் நோக்கில் சகல முஸ்லிம்கள் சார்பாகவும் இந்த அன்பளிப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.

யுத்த நிறுத்தத்துக்கு அரசு தயாரில்லை; மோதல் தவிர்ப்புகளே சாத்தியம்

krambukkela.bmp

புலிகள் அமைப்புடன் எந்த விதத்திலும் யுத்த நிறுத்தம் ஒன்றை மேற் கொள்ள அரசாங்கம் தயார் இல்லை என்றும், பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு அவ்வப்போது மோதல் தவிர்ப்புக்களே மேற் கொள்ளப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

யுத்த நிறுத்தம், மோதல் தவிர்ப்பு ஆகிய இரண்டும் வெவ்வேறானவை. இந்தச் சொற்பிரயோகங்ளின் வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளாத சில வெளிநாட்டு ஊடகங்கள் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆயுதங்களைக் கீழே வைத்து பாதுகாப்புப் படையினரிடம் சரணடைதல், அல்லது தங்களின் பிடியிலுள்ள பொதுமக்களை விடுவித்தல் ஆகிய இரு மாற்று வழிகள் மாத்திரம் தற்பொழுது புலிகளுக்கு உள்ளது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட் டினார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடை பெற்றது.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்:- புலிகளைக் காப்பாற்றும் முயற்சியாக உடனடி யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டு வர சர்வதேச ரீதியில் பல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

இராணுவ ரீதியில் புலிகள் 99 சத வீதம் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதனை தற்பொழுது முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தற்பொழுது நாம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளோம்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் பிடியில் சிக்கி அவதிப்படும் அப்பாவி பொது மக்களை வெளியேற அனுமதித்தாலே போதும். ஆயுதங்களை கீழே வைக்கும் விடயத்தையும், சரணடைய வைப்பதையும் எமது பாதுகாப்பு படையினர் கவனித்துக் கொள்வார்கள்.

புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவது தொடர்பாக தகவல்கள் எமக்குக் கிடைக்கும் பட்சத்தில் படையினர் உடனடியாக அந்தப் பிரதேசத்தில் மேற் கொள்ளும் தாக்குதல் நடவடிக்கையை தற்காலிகமாக தவிர்த்துவிட்டு, வரும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

கடந்த சில மாதங்களாக இதுபோன்ற தற்காலிக மோதல் தவிர்ப்புக்கள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொது மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கருத்திற் கொண்டு முப்படைகளின் தளபதியான, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 48 மணிநேர மோதல் தவிர்ப்பு ஒன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.

நாங்கள் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள் வதன் காரணமாக இதுவரை 62157 பொது மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து பாதுகாப்பு படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட் டார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¤லுகல்லே, இரா ணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார, கடற்படையின் பதில் பேச்சாளர் கொமாண்டர் மஹேஷ் கருணாரட்ண, பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகி யோர் கலந்து கொண்டனர்.

ஜி20 நாடுகளின் மாநாடு இன்று லண்டனில் ஆரம்பம்

g-20.jpgலண்டன், எக்ஸல் மையத்தில் இன்று ஜி20 நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. நான்கு நாட்கள் இடம்பெறவுள்ள ஜி20 நாடுகளின் மாநாட்டில் உலக பொருளாதார நெருக்கடி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டன் வந்துள்ளார்.இதன் போது பிரித்தானிய ஜனாதிபதி கோடன் பிரவுணை 10 டவுனிங் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பராக் ஒபாமா முதன்முறையாக லண்டன் வந்துள்ளது இதுவே முதற் தடவையாகும்.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய உயர் மட்டக் குழு லண்டன் சென்றுள்ளது. இந்தியக் குழுவில் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா, வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.தனது பயணத்தின்போது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார் மன்மோகன் சிங். 

‘உலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்’- இந்தியப் பிரதமர்

manmohan.jpgஉலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் என்று இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் வர்ணித்துள்ளார்.

பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த செவ்வியில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்று கூறியுள்ள பிரதமர் மன் மோகன் சிங், பயங்கரவாத அமைப்பான லஷ்கர் அமைப்பை கட்டுப்படுத்த விரும்பாமல் அல்லது கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் உள்ளதாக கூறியுள்ளார்.

மும்பையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கு லஷ்கர் மீது இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இத்தாக்குதலில் 170 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

ஐபிஎல் 20-20 ஆட்டம் 10 நிமிடம் அதிகரிப்பு

_ipl_graphic_.jpgஇந்த ஆண்டுக்கான ஐபிஎல் 20 20 வரும் 18ம் தேதி தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாக தொடங்குகிறது.  வழக்கமாக 20 20 ஆட்டங்கள் 3 மணி நேரம் நடைபெறும். இதில் 15 நிமிட இடைவேளையும் அடங்கும். இந்நிலையில் விளம்பர வருமானத்திற்காக போட்டியின் இடைவேளை நேரத்தை 10 நிமிடம் அதிகரிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஐபிஎல்லும் போட்டி ஒளிபரப்பாகும் சோனி டிவியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதன்படி ஒவ்வொரு அணிக்கும் 10 ஓவர்கள் முடிந்ததும் 5 நிமிட இடைவேளை வழங்கப்படும். இந்த நேரத்தில் கேப்டன் சக வீரர்களுடன் ஆலோசனை நடத்திக்கொள்ளலாம் என ஐபிஎல் தெரிவித்துள்ளது. மேலும் டிவி நிறுவனங்கள் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது.

மேல் மாகாண சபை தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும்

மேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (02) நாளையும் (03) இடம்பெற உள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதற்கான சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள தோடு வாக்களிப்பு நடைபெறும் அரச நிறுவனங்களுக்கு அருகில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிரி தெரிவித்தார்.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு 35,915 பேர் தகுதி பெற்றுள்ளனர். 5,379 விண்ணப்பங்கள் திணைக்கள த்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தன. இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 15,789 பேரும், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 10,926 பேரும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 8,699 பேரும் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை தேர்தலுக்கான வாக்களார் அட்டைகள் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட உள்ளன.

பிரிட்டனில் வெளிநாட்டு “மாணவர் விசா” புதிய நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகம்

flag_uk.jpgஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகளின் மாணவர்களுக்கான புதிய விசா நடைமுறையொன்றை பிரிட்டிஷ் அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகப்படுத்தியிருக்கிறது. குடிவரவை கட்டுப்படுத்துவதும் மோசடிகளைத் தடுப்பதுமே இந்த புதிய நடைமுறைக்கான நோக்கமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புள்ளி அடிப்படையிலான விசா வழங்கும்திட்டத்தின் நான்காவது படிமுறையின் ஒரு அங்கமாக கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய ஏற்பாடுகள் விசா வழங்கும் செயன்முறைகளை எளிதாக்கும் என்பதுடன் கூடுதலான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடையதாகவும் குடிவரவு முறைமை துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதாகவும் அமையும் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஜாக்குயி சிமித் கூறியிருக்கிறார்.

வெளிநாட்டு மாணவர்களை ஆட்திரட்டும் பிரிட்டனில் உள்ள சகல கல்வி வழங்கும் நிறுவனங்களும் ( பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்) நேற்றுமுதல் பிரிட்டனின் எல்லை பாதுகாப்பு அமைப்பிடம் (UK Border Agancy) தங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும். அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனுசரணையாளர்களாகுவதற்காக (Licensed Sponsors) 2,100 க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களும் சுயாதீன பாடசாலைகளும் கல்லூரிகளும் விண்ணப்பம் செய்திருக்கின்றன.

பிரிட்டனில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய விசா நிபந்தனைகளுக்கு இசைவாக நடப்பதை உறுதிசெய்துகொள்ளும் பொறுப்பு இனிமேல் இந்தக்கல்வி நிறுவனங்களினுடையதே. எந்தவொரு மாணவரும் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனமொன்றிடமிருந்து நிபந்தனையற்ற முறையில் தனக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

தனது கற்கை நெறிக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பிரிட்டனில் தங்கியிருந்து கல்விகற்கும் காலகட்டத்தில் தனது வாழ்க்கைச் செலவுக்கும் போதுமான நிதி தன்னிடம் இருப்பதை மாணவர்கள் சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

குறிப்பிட்ட ஒரு கல்வி நிறுவனத்தில் கல்வி கற்பதற்கான விசாவே வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேலான கற்கைநெறி என்றால் அதைப் பூர்த்தி செய்வதற்கான முழுக்காலகட்டத்துக்கும் விசா வழங்கப்படும்.

பிரிட்டனில் கல்வி கற்பதற்கு செல்கின்ற வெளிநாட்டு மாணவர்களும் அவர்களைக் கற்பிப்பவர்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதை புதிய நடைமுறை உறுதிசெய்யும். பிரிட்டனில் கல்விகற்பதற்கு உண்மையில் யார் வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் போலி கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் புதிய விசா நடைமுறை அனுமதியளிக்கிறது என்று உள்துறை அமைச்சர் சிமித் தெரிவித்திருக்கிறார்.