கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

‘இடர்படும் மக்களின் துயர் துடைப்போம்’ – அமைச்சர் டக்ளஸ் அவசர கோரிக்கை

Douglas Devananda வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளைச் செய்யுமாறு சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டு கோள்விடுத்துள்ளார். இடர்படும் மக்களின் துயர் துடைப்போம் என்ற தொனிப் பொருளின் கீழ் நிவாரண உதவிகளை வழ ங்க முன்வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கமும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கான உதவிப் பணிகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும், எதிர்பாராத அளவில் பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் இந்த மக்களுடைய அவசர உதவிகளை உடனடியாக முன்வந்து செய்யுமாறு மனிதாபிமான உள்ளம் கொண்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவர்களுக்கான அவசர உதவிப் பொருள்களான பிஸ்கட் வகைகள், போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர், பிற அனைத்து வகை உணவுப் பொருள்கள் மற்றும் உடு புடவைகள், பாய், தலையணை போன்றவற்றை, இல. 61 இசிபத்தான மாவத்தை, கொழும்பு 5 இல் அமைந்துள்ள, சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சகல அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களும் நிவாரண சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

2011 உலகக்கோப்பை: இலங்கையில் 12 போட்டிகள்

28icc.jpg2011ல் நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவில் 8 இடங்களில் 29 போட்டிகள் நடைபெற உள்ளன. இலங்கையில் மூன்று இடங்களில் 12 போட்டிகள் நடைபெற உள்ளன. சரத்பவார் தலைமையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலகக்கோப்பை ஏற்பாட்டுக் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற உள்ள போட்டிகளில் ஓர் அரையிறுதி ஆட்டமும், இறுதி ஆட்டமும் அடங்கும். இலங்கையில் மற்றொரு அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. உலகக்கோப்பை தொடக்கவிழா வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இரு இடங்களில் எட்டு போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற உள்ளன. இதுபற்றிய அறிவிப்பை ஏற்பாட்டுக் குழுக் கூட்டத்துக்குப் பின்னர் ஐசிசி தலைமை நிர்வாகி ஹாரூண் லார்கத் வெளியிட்டார்.

பாகிஸ்தானில் இலங்கை அணி வீரர்கள் மீது மார்ச் 3ந்தேதி தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து பாதுகாப்புக் காரணங்களுக்காக அங்கு போட்டிகளை நடத்துவதில்லை என ஐசிசி நிர்வாகக் குழு தீர்மானித்தது. இதையடுத்து அங்கு நடைபெறவிருந்த போட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில் நடைபெறுகின்றன.

கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லை என்ற உறுதிமொழியை அரசு நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் – ஜோன் ஹோம்ஸ் தெரிவிப்பு

john_holmes.jpgவடக்கில் மோதல்கள் இடம்பெறும் பகுதியிலுள்ள பொதுமக்கள் உயிராபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லையென்ற புதிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நடைமுறையில் செய்து காட்ட வேண்டுமென ஐ.நா. தெரிவித்துள்ளது.

வன்னியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கையில் கனரக ஆயுதங்கள் பாவிக்கமாட்டோம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருப்பது தொடர்பிலேயே மனிதாபிமான விடயங்களுக்கான ஐ.நா. வின் உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் நேற்று திங்கட்கிழமை இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

முன்னரை போன்ற நிலைமை ஏற்பட்டு விடக் கூடாதென்றே நான் அஞ்சுகிறேன். கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லையென்ற யோசனையை நேர்மையாக மதித்து செயற்படுவார்களென நான் நம்புகிறேன் என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.  அரசாங்கம் கூறியதை தற்போது மதிக்கிறதா என்பது இதில் மிகவும் முக்கியமானதென்றும் அவர் கூறியிருக்கிறார்.

இரு நாட்கள் விஜயமாக இலங்கை வந்திருந்த ஜோன் ஹோம்ஸ் வவுனியா முகாம்களுக்குச் சென்று திரும்பியதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசியிருந்தார். இதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே ஹோம்ஸ் மேற்கண்ட கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

இவற்றுக்கமைய களத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கூறியது நடைபெற்றால் மோதல் நிலைமைகள் வெகுவாக குறைவடையும் என நான் நம்புகிறேன் என்று ஹோமஸ் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் வன்னியிலிருந்து பெருந்தொகை மக்கள் அரச கட்டுப்பட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததையடுத்து அங்கு 20 ஆயிரத்திற்கும் குறைவான மக்களே எஞ்சியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் அரச கட்டுப்பாடற்ற பகுதியில் இன்னும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் எஞ்சியிருக்கின்றனர் என்பதே ஐ.நா.வின் மதிப்பீடென்று ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்கத்தினது புள்ளி விபரங்களிலும் பார்க்க எமது புள்ளிவிபரங்கள் சரியானவை? என்று கூறியிருக்கும் அவர், 70 ஆயிரத்துக்கும் குறைவான மக்களே அங்கு இருப்பதாக பெப்ரவரி மாத நடுப்பகுதியில் கொழும்பு தெரிவித்திருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன், இந்த மக்கள் உயிராபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறியிருகிறார்.

இதேநேரம், ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்ற போதிலும், ஐ.நா.புள்ளிவிபரங்களென ஜனவரி மாத இறுதியிலிருந்து 6,500 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்த அவர் மறுத்து விட்டதாகவும் ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. அத்துடன், அது ஐ.நா.வின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களென கூற போதிய தெளிவான தகவல்கள் இல்லையென்றும் ஹோம்ஸ் இதன்போது கூறியிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுடான பேச்சுக்கள் பயனுடையதாக அமையவில்லை. நான் தொடர்பு கொண்டிருந்த போது, பொது மக்களை விடுவிப்பது பற்றியோ அல்லது ஆயுதங்களை கீழே வைப்பது பற்றியோ அவர்கள் உரிய பதிலெதுவும் அளிக்கவில்லை. தப்பிச் செல்ல முயற்சிக்கும் மக்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும், ஏனையவர்களை பலவந்தமாக படைக்கு சேர்ப்பதாகவும் பல்வேறு சாட்சியங்கள் தெரிவிக்கின்ற போதிலும், மக்கள் அவர்களது தெரிவின் பேரிலேயே தங்களுடன் இருப்பதாக புலிகள் கூறுகின்றனர்.

இதேநேரம், மோதல் இடம்பெறும் பகுதிகளுக்கு ஐ.நா.மனிதாபிமான அணியொன்றை அனுமதிக்க வேண்டுமென கடந்த வாரம் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் விடுத்த வேண்டுகோள் தொடர்பாகவோ, அகதி முகாமிலுள்ள ஐ.நா.வின் உள்நாட்டு பணியாளர்களை விடுவிப்பது குறித்தோ எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் ஜோன் ஹோம்ஸ் இதன்போது மேலும் தெரிவித்திருப்பதாக ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இன்று ஏப்ரல் 29 ; உலக நடன தினம் (World Dance Day) – புன்னியாமீன்

world-dance-day.jpgஇன்று ஏப்ரல் 29 – உலக நடன தினமாகும். International Dance Day (World Dance Day)

இந்திய, இலங்கை போன்ற நாடுகளில் நடனக்கலை முக்கியத்துவம் பெற்ற ஒரு கலையாகவும்,  சில சந்தர்ப்பங்களில் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு கலையாக விளங்குகின்ற போதிலும் கூட உலக நடன தினம்  (World Dance Day) என்ற அடிப்படையில் ஏனைய உலக தினங்களைப் போல இத்தினம் ஒரு முக்கியத்துவம் பெற்ற தினமாக அனுட்டிக்கப் படுவதில்லை. உலக நடன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 29ம் திகதி சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது.

நடனம் (Dance ) எனும் போது நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுவதை அவதானிக்கலாம். உதாரணமாக பரதம் தென்னிந்தியாவுக்குரிய,  குறிப்பாக  தமிழ்நாட்டுக்குரிய நடனமாகக் கருதப்படுகின்றது. இது மிகத் தொன்மைவாய்ந்ததும்,  இந்தியாவிலும்,  வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் ‘பரதம்’ என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல்  ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம். ஆனால் மேற்கத்தேய நாடுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ள பாலே (மேற்கத்திய மரபு நடனம்), டிஸ்கோ, சல்சா, போல்கா, லம்பாடா, லிம்போ  போன்ற நடனங்களில் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளைக் காண்பது அரிது.

பரத நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட,  நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் ‘தாண்டவம்’ என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் ‘ஆனந்த தாண்டவம்’ என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் ‘ருத்ர தாண்டவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் ‘லாஸ்யா’ என்று அழைக்கப்படுகிறது.

உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது ‘அடவு’ என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது ‘ஜதி’ எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல்,  வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க,  நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார்.  நடனம் ஆடுபவர்,  நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.

இதேபோல இந்தியாவில் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் நடனக் கலை வேறுபட்ட வகைகளின் பிரபல்யம் அடைந்து காணப்படுகின்றது. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட நடனம் சிறப்பாக இருக்கிறது. உதாரணமாக கீழே மாநில வாரியாக புகழ் பெற்ற நடனங்களை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம். 

தமிழ்நாட்டில் – பரதநாட்டியம்,  கோலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து, கேரளாவில் -சாக்கியார் கூத்து,  கதகளி, மோகினிஆட்டம், ஓட்டம் துள்ளல், தாசி ஆட்டம், கூடி ஆட்டம், கிருஷ்ணா ஆட்டம்: ஆந்திராவில் – குச்சுப்பிடி, கோட்டம், வீதி பகவதம்: கர்நாடகாவில்; – யக்ஷகானம்: ஒரிசாவில் – ஒடிசி: மணிப்பூரில் – மணிப்புரி, லாய்-ஹரோபா: பஞ்சாப்பில் – பாங்ரா, கிட்டா: பீகாரில் – பிதேஷியா, ஜட்டா-ஜட்டின், லாகூய்,  நாச்சாரி: அஸ்ஸாமில்- பிகு : ஜம்மு-காஷ்மீரில் – சக்ரி, ரூக்ப் என்றவாறு அமைந்துள்ளன.

அதேபோல நடனக்கலையின் முக்கியத்துவம் கருதி இந்திய பாரம்பரிய நடனங்களை பின்வருமாறு சுருக்கமாக வகுக்கலாம். பரத நாட்டியம், குச்சிப்புடி, கதகளி, மோகினியாட்டம், ஒடிசி, மணிப்புரி. 

இந்தியாவின் கிராமிய நடனங்களை பின்வருமாறு பிரித்தாரயலாம்.

தென்னிந்தியக் கிராமிய நடனங்கள் – தேவராட்டம், தொல்லு குனிதா, தண்டரியா, கரகம், கும்மி, கூட்டியாட்டம், படையணி, கோலம் (நடனம்)  இலவா, நிக்கோபாரிய நடனம்
வடஇந்தியக் கிராமிய நடனங்கள் – டும்ஹால் இரூவ்ப், லாமா நடனம், பங்கி நடனம், பங்காரா, ராஸ், கிட்டா, தம்யால் டுப், லகூர், துராங், மாலி நடனம், தேரா தலி .

கிழக்கிந்தியக் கிராமிய நடனங்கள்  நாகா நடனம், ஹஸாகிரி, மூங்கில் நடனம், நொங்கிறேம், பிகு, தங்-டா, கர்மா, பொனுங், பிரிதா ஓர் வ்ரிதா, ஹுர்க்கா பாவுல், காளி நாச், கண்ட பட்டுவா, பைக், தல்காய் . மேற்கிந்திய நடனங்கள்  கெண்டி, பகோரியா நடனம், ஜாவார் இகர்பா, தாண்டியா, காலா டிண்டி, மண்டோ

இனி உலக நடன தினம் பற்றி சற்று நோக்குவோம்.

பொது மக்களிடையே நடனத்தின் முக்கியத்துவம் பற்றிய அறிவினை அதிகரிக்கச் செய்வதுடன் ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள அரசாங்கங்கள் நடனத்திற்குரிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதுடன் முறையான நடனக்கல்வியை நாடுகளின் ஆரம்பக்கல்வியிலிருந்து உயர்கல்வி வரை வழங்குவதற்குத் தூண்டுவதும் அவற்றின் அவசியத்தை வலிறுறுத்துவதும் சர்வதேச நடனதினத்தின் முக்கிய இலக்காகும்.

1982ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாசார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபை International Dance Council (CID) ஏற்படுத்தப்பட்டது. இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003ம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. 2003ம் ஆண்டு நடன தினம் பற்றிய செய்தியை வெளியிட்ட சர்வதேச நடன சபையின் International Dance Council (CID),  தலைவர் பேராசிரியர் அல்கீஸ் ராப்டிஸ் Prof. Alkis Raftis அவர்கள் ‘உலகிலுள்ள இருநூறு நாடுகளின் அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகளில் நடனத்திற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை. பொதுவாக அரசாங்கங்கள் வரவு செலவு திட்டத்தில் நடனக்கலையை ஊக்குவிக்கும் வகையில் எத்தகைய நிதி ஒதுக்கீடுகளையும் செய்யப்படுவதுமில்லை. மேலும் தனிப்பட்ட அல்லது நிறுவன ரீதியான நடனக்கல்விக்கு அரச நிதி உதவிகள் கிடைப்பதில்லை”  என்றார்.

2005ம் ஆண்டில் நடன தினத்தின் கவனம் ஆரம்பக் கல்வியின் ஊடாக நடனத்தைப் போதிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தனிப்பட்ட நடனப்பயிற்சியாளர்கள்,  நடன நிறுவனங்கள் தமது பிரேரனைகளுடன் தத்தமது நாடுகளின் கல்வி, கலாசார அமைச்சுகளை தொடர்பு கொண்டு பாடசாலைகளில் நடன தின விழாவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் நடனம் பற்றிய கட்டுரைகள் எழுதுதல்,  நடனம் பற்றிய புகைப்படங்களை காட்சிப் படுத்துதல்,  வீதி நடனங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்தல். நடனம் பற்றிய கருத்தரங்குகள் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தல் போன்றன இத்தினத்தில் எதிர்பார்க்கப்பட்டது. 

2006ம் ஆண்டில் சர்வதேச நடன சபையின்  International Dance Council (CID),  தலைவர் தனது நடன தின உரையில் குறிப்பிட்ட விடயம் இங்கு கவணத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது ‘நடனக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் நிறுவன ரீதியில் ஒன்றுபடாமையும்> இது விடயமாக அக்கரை செலுத்தாமல் இருப்பதுமே சர்வதேச ரீதியில் நடனக்கலை அங்கிகரிக்கப்படாமைக்கான காரணங்கள் என்றும் இதற்காக நடனக்கலைஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டு”மென அழைப்பு விடுத்திருந்தார்.

2007ம் ஆண்டில் நடன தினம் பிள்ளைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

2008ம் ஆண்டில் நடன தினத்தின் போது மேற்குறித்த விடயங்களை சுட்டிக்கட்டி அரசாங்கங்களும், அனுசரனையாளர்களும், ஊடகங்களும் இது விடயமாக ஈடுபடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 2009ம் ஆண்டிலும் நடனக் கலையை பிரபல்யப்படுத்துவதற்கு ஊடகங்களின் பங்களிப்பு வேண்டப்பட்டுள்ளது.

நடனதினத்துடன் இணைந்த வகையில் இது விடயமாக விழிப்புணச்சியை ஏற்படுத்து முகமாக ஐக்கிய அமெரிக்காவில் தேசிய நடன வாரத்தை National Dance Week (NDW)  பிரகடனப்படுத்தி நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 1981ல் நடனத்திற்கு முறையான அங்கிகாரத்தப் பெறுவதற்காக வேண்டி நடனங்கள் தொடர்பான ஒரு நிறுவனம் தேசிய நடனவாரத்திற்கான கூட்டு ஒன்றியமொன்றினை Coalition for National Dance Week  உருவாக்கியுள்ளனர்.

இந்திய இலங்கை போன்ற நாடுகளில் வாழும் நடனக் கலைஞர்கள்,  பயிற்சியாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், நடன அமைப்புகள் இவ்விடயத்தை எதிர்காலத்திலாவது கவனத்தில் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

பிரச்சாரம் ஓய்ந்தது

advani.jpgமக்களவை தேர்தலில் 3ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 107 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை இந்த 3ம் கட்ட தேர்தல் நிர்ணயிக்க உள்ளது. 

வன்னி மக்களுக்காக பௌத்த பிக்குகள் பாத யாத்திரை

buddhist.jpgவன்னி மக்களுக்காக பௌத்த பிக்குகள் பாத யாத்திரையொன்றை நாளை கல்கிஸ்சையிலிருந்து ஹங்குலான வரை மேற்கொள்ளவுள்ளனர். இந்த பாத யாத்திரையில் 200 பௌத்த பிக்குகள் கலந்து கொள்ளவுள்ளனர். இடம்பெயர்ந்து வந்துள்ள வன்னி மக்களுக்காக நிவாரண உதவி சேகரிப்பதே பௌத்த பிக்குகளின் பாத யாத்திரையின் நோக்கமாகும்.

பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்குகின்றது இராணுவத்தின் 58 ஆவது படையணி?

images-army.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிடத்தை இராணுவத்தின் 58 ஆவது படையணி நெருங்கியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

புலிகளின் பிடியிலுள்ள பொது மக்களை மீட்கும் மனிதநேய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 53 ஆம் 58 ஆம் படையணியினர் கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியை நோக்கி முன்னேறியுள்ளனர். பிரபாகரனின் மறைவிடத்திலிருந்து 3.5 கிலோ மீற்றர் தொலைவில் இராணுவத்தின் 58 ஆவது படையணி இப்போது நிலைகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரபாகரனும் அவரது மிக நம்பிக்கைக்கு உரியவர்களான பொட்டு, சுசை, பானு என்போர் வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் மிகப் பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் இருப்பதாக பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி வந்து இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை விமானப் படையின் ஆளில்லா விமானம் விடுவிக்கப்படாத பகுதியை மிக நுணுக்கமாக அவதானித்து வருகிறது. அதேவேளை கடற்படையினரும் வலைஞர் மடத்தில் இருந்து வட்டுவாகல் பகுதியில் உள்ள 7 கி.மீ கடற் பிராந்தியத்தை இடைவிடாது கண்காணித்து வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈழம் தமிழர்களின் அன்னை பூமி – அங்கு தனி ஈழத்தை அமைத்தே தீருவேன்: ஜெயலலிதா

j-j-j.jpgஇலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமானதல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதே தேச விரோதமாகிவிடுமா என்று காங்கிரஸ் கட்சியைக் கேட்கிறார் அதிமுக தலைவர் ஜெயலலிதா.

 “வாழ வழியின்றித் தவிக்கும் தமிழர்கள் இலங்கையிலேயே கெüரவமாக வாழ, வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமிழ் ஈழத்தை அமைத்துக் கொடுப்பதுதான் இனி ஒரே வழி” என்று ஜெயலலிதா பேசியிருந்தார். அது சட்ட விரோதம் என்று மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தில்லியில் கண்டித்திருக்கிறார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஜெயலலிதா கூறியிருப்பதாவது:

 “இந்தியாவிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து தனி நாடு தாருங்கள் என்று நான் கேட்கவில்லை; இந்த நாட்டின் மீது அளவில்லாத பற்றும் பாசமும் உள்ளவள் நான். இலங்கையில் சம உரிமைகள் மறுக்கப்பட்ட, இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படும் தமிழ் மக்கள் வாழ தனி ஈழம் வேண்டும் என்று கோருகிறேன். இலங்கையிலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து தனி ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது எப்படி தேச விரோதச் செயலாகிவிடும்?

 விடுதலைப் போருக்கான போராட்டம் என்று கூறி பயங்கரவாதச் செயலில் யார் ஈடுபட்டாலும் அதைக் கண்டித்து வருகிறேன்; தீவிரவாதத்தை நான் எப்போதுமே ஆதரித்ததில்லை. அதே சமயம், அரசின் அடக்குமுறையால் மக்களில் கணிசமானவர்கள் பாதிக்கப்படுவதையும் என்னால் கண்டிக்காமல் இருக்க முடியாது.

 இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்கள் கட்டுக்காவல் மிகுந்த சிறைச்சாலைகளைவிட மோசமான நிலையில் இருக்கின்றன. அங்குள்ளவர்கள் வெளியில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாதபடி கண்காணிப்பு நிலவுகிறது. குடும்பங்களையும் உறவினர்களையும் பிரிந்து அவர்களைத் தொடர்பு கொள்ளவும் வழி இல்லாமல், அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லாத நிலையில் தமிழர்கள் விலங்குகளைப்போல நடத்தப்படுகிறார்கள். அப்படிப்பட்ட முகாம்களுக்குப் போக வேண்டாம் என்ற உறுதியோடு வெட்ட வெளியில் தங்குகிறவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

 இருதரப்பும் சண்டையை நிறுத்த வேண்டும், தமிழர்கள் பாரம்பரியமாக வசித்துவரும் பகுதிகள் தனியே பிரித்து அடையாளம் காணப்பட்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களைப் போலவே அனைத்து உரிமைகளும் சமமாக வழங்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அதை ஏற்க முடியாது என்கிறது இலங்கை அரசு. அப்படிப்பட்ட நிலையில் இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி ஈழம் கேட்பது தவறா?

 தமிழர்கள் மட்டும் அல்ல, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற மேலை நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் போரை நிறுத்திவிட்டு அரசியல் தீர்வுகாண பேச்சு நடத்துங்கள் என்று விடுத்த வேண்டுகோளையும் மதிக்க முடியாது என்று மறுக்கிறது இலங்கை அரசு. இந்த நிலையில் தமிழர்கள் மானத்தோடும், உரிமையோடும், பாதுகாப்போடும் வாழ ஒரே வழி தமிழ் ஈழம்தான்.

 லட்சக்கணக்கான தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் தரும் ஒரு கோரிக்கை எப்படி இந்திய சட்டங்களுக்கு எதிரானதாக இருக்கும்? இதை எப்படி சட்ட விரோதமான பேச்சு என்று காங்கிரஸ்காரர்கள் கண்டிக்கிறார்கள்?’ என்று வினவுகிறார் ஜெயலலிதா.

திருப்பூர் மற்றும் பொள்ளாச்சியில் நேற்று ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரமாண்டமாக திரண்டிருந்த கூட்டங்களில் அவர் பேசினார். திருப்பூரில் அவர் பேசியதாவது..

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய ராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற? உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார். என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை?.எல்லாவற்றையும் செய்தது இந்தியாதான்…

இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே, இந்திய ராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய ராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்கு கொடுத்தது.

வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை ராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை ராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை. இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை ராணுவம் இந்திய ராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை ராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய ராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை.

இந்தியாவில் இலங்கை ராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்சே. இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது.

பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் ராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் ராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?. இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே! ஏன்?.

வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை? போரை நடத்துவதே இவர்கள் தானே! எனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம். இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான்.

தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம்.

மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை. சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது.

மாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும். இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது கோத்தபாய கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார்.

ஈழம் தமிழர்களின் உரிமை பூமி – அன்னை பூமி…

இலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கூறி இருக்கிறார். ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான கபில் சிபல், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார். நான் சொன்னது எப்படி தேச விரோத கருத்து..

கபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது? இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே! இலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது.

கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன். தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது.

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்த மாட்டார்களாம். பெரிய பீரங்கிகளை பயன்படுத்த மாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டார்களாம்.

இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்து விட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம்? இது என்ன கேலிக்கூத்து? இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும்? இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார் ஜெயலலிதா

உலக நாடுகளில் தமிழர்கள் அனைவரும் உடனடியாக வீதியில் இறங்கி போராடுங்கள்! பா. நடேசன் அவசர வேண்டுகோள்

nadesan-10.jpgபாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை சிறிலங்கா படையினர் இன்று தொடங்கியிருக்கின்றனர்.  இந்த பெரும் இன அழிவைத் தடுத்து நிறுத்த புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளை பாகு வேறுபாடு இன்றியும் வயது வேறுபாடு இன்றியும் வீதியில் இறங்கி உடனடியாக போராடுங்கள் எனவும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

teelamanavar.jpgபுலம்பெயர் நாடுகளில் உள்ள எம் உறவுகளே! ஒன்று குவிந்து தமிழர் பலத்தையும், தமிழ் இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்: இலங்கைத் தழிழ் மாணவர் ஒன்றியம்

புலம் பெயர் தமிழர்களே!

இளையோர்கள!

இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள். என இலங்கை தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
சர்வதேச அன்புற்கினிய உறவுகளே !…

இளையோர்களே !…

சர்வதேசத்திலே தழிழர் போராட்டம் சார்பாக சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அது உங்களால் ஏற்படுத்தப்பட்டவை.

தழிழர் வரலாற்றை சிங்கள பயங்கரவாதம் அழித்தொழிக்கும் இறுதிக்கட்டத்தில் நிற்கின்றோம். இது சிங்கள பயங்கரவாதம் தழிழர் மீது செய்கின்ற மாபெரும் இன அழிப்பாய் காட்சியழிக்கின்றது.

இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 29ம் திகதிக்கு முன்னர் தழிழர் போராட்டத்தையும், தழிழ் இனத்தையும் அழித்து விடுவேன் என்று மகிந்த கம்பனியின் கதாநாயகன் கங்கணம் கட்டி நிற்கின்றார்.

ஈழத்திலே எதிர்வரும் சில தினங்கள் தழிழர் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய தினங்களாய் இருக்கின்றது. தமது தாயக மண்ணிலே உணவில்லாமல், உறக்கம் இல்லாமல், காய்ந்து, கறுத்து, மெலிந்து, எமது உரிமையை பாதுகாக்க தங்கள் உயிரை துட்சமாய் நினைத்து எமது விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒட்டுமொத்த தழிழ் இனத்துக்காயும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் புதைகுழிகளுக்கு எதிராயும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

குருதியில் துவைந்து நின்று சிங்கள் எதிரிக்கெதிராய்போரிடுகின்றனர். எமது உறவுகளே இன்னும் சில நாட்களுக்கு உலகின் அனைத்து நாடுகளிலும் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள்.

இயலுமானவரை உங்களது வழமை நடவடிக்கைகளை நிறுத்தி, தங்கள், தங்கள் நாடுகளில் ஒன்று குவிந்து தழிழர் பலத்தையும், தழிழர் மீதான இன அழிப்பையும் வெளிக்காட்டுங்கள்.

புலம் பெயர் தழிழாகளே !….

இளையோர்களே !….

உங்களது நாடுகளில் நடத்தப்படும் போராட்டத்தில் அன்னாட்டை சேர்ந்த ஒரு தழிழரேனும் குறையாமல் உங்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யுங்கள் சிங்கள பயங்கரவாதத்திடமிருந்து எமது உயிரையும், உரிமையையும் பாதுகாக்க ஒன்று திரளுங்கள்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கல் – சர்வதேச நாடுகளிடமிருந்து நிதியுதவிபெற அரசு முடிவு

flee0009.jpgஇடம் பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஐ. நா. வின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாடுகளிடம் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளதாக இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இலங்கை வந்துள்ள ஐ. நா. பிரதிநிதி இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார். தாம் ஐ. நா. வின் மனித உரிமைத் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்சுடன் இது பற்றி விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான பிரதிச் செயலாளர் நாயகம் சேர் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியாவிற்கு சென்று நிலைமைகளை நேரில் அவதானித்துள்ளார்.

கொழும்பிலிருந்து நேற்று விசேட விமானம் மூலம் வவுனியாவுக்குச் சென்ற அவர் வவுனியாவிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் ஓமந்தை மெனிக்பாம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று இடம்பெயர்ந்த மக்களை நேரில் சந்தித்துள்ளார்.

அமைச்சர் ரிசாட் பதியுதீன், வவுனியா அரச அதிபர், பாதுகாப்புப் படை அதிகாரிகள் சகிதம் இடம்பெயர்ந்தோர் தற்காலிகக் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்ற அவர் அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். இதன்போது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் வசதிகள் சம்பந்தமாக அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் அவருக்கு விளக்கியுள்ளனர்.

யுத்தப் பிரதேசத்திலிருந்து அரச பாதுகாப்புப் பிரதேசத்துக்கு வரும் மக்கள் ஓமந்தை இடைத்தங்கல் முகாமில் தம்மைப் பதிவு செய்தே நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இப்பதிவு நடவடிக்கைகளையும் ஜோன் ஹோம்ஸ் அவதானித்துள்ளார்.