கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தென்மராட்சியில் தற்காலிக பாடசாலைகள்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தென்மராட்சி நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக தென்மராட்சியில் தற்காலிக பாடசாலைகள் அமைக்கப்படுகின்றன. யாழ். அரச அதிபர் மற்றும் தென்மராட்சிக் கல்வி வலய அதிகாரிகளின் ஏற்பாட்டிலேயே இந்தப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்பாடசாலைகளுக்கான ஆசிரிய வளம் ஓரளவு இருக்கின்ற போதிலும் தளபாடங்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் யாழ். மாவட்டத்திலுள்ள வலயக் கல்வி அலுவலகங்கள் தளபாடங்களை வழங்கி உதவ வேண்டுமெனவும் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கைதடி சைவச் சிறுவர் இல்லம், கைதடி பல்கலைக்கழக மாணவர் விடுதி மற்றும் கைதடி பனைவள ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 600 வரையான மாணவர்களின் கல்விக்காக கைதடி அரச மருந்தகத்தில் ஒரு தற்காலிக பாடசாலை அமைக்கப்படுகிறது. மிருசுவில் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஏறக்குறைய 500 வரையான மாணவர்களின் கல்விக்காக இந்த நலன்புரி நிலையத்திற்கு அண்மையிலுள்ள தனியார் வீடொன்றிலும் தற்காலிக பாடசாலையொன்று அமைக்கப்படுகின்றது.

40 சடலங்களும் அடக்கம் செய்யப்படும்

வவுனியா பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள 40 சடலங்களையும் அரச செலவில் அடக்கம் செய்ய மாவட்ட நீதிவானின் அனுமதி பெறப்பட்டுள்ளது. பூந்தோட்டம் பொது மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை வைத்தியசாலை நிர்வாகமும் பொலிஸாரும் மேற்கொண்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டு உறவினர்களினால் எடுத்துச் செல்லப்படாததும் அடையாளம் காணப்படாததுமான சடலங்கள் சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தன. இட நெருக்கடியும் சடலங்கள் பழுதடைந்து துர்நாற்றம் வீசுவதாலும் இவற்றை அரச செலவில் அடக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், சடலங்கள் பொலித்தீன் பைகளில் போடப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

ஹொங்கொங் பரவியது பன்றிக் காய்ச்சல்

swine-flue.jpg மெக்ஸிகோவில் இருந்து ஹொங்கொங்குக்கு வந்த மெக்ஸிகோ நாட்டு பிரஜை ஒருவரில் பன்றிக்காய்ச்சல் வைரஸ் காணப்பட்டதாக, ஹொங்கொங்குக்கான தலைமை அதிகாரி டொனால்ட் சாங் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகோவில் 160க்கும் அதிகமானோர் பலியாகக் காரணமான நோய்க்கிருமி என்று சந்தேகிக்கப்படும் இந்த வைரஸ், ஆசியாவுக்கு வந்த ஒருவரிலும் காணப்பட்டமை உறுதிசெய்யப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.

சாங்காய் ஊடாக வந்த அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும், அவர் தங்கியிருந்த விடுதி பொதுமக்களுக்கு தடுக்கப்பட்டுள்ளதாகவும் சாங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சிகிச்சை வழங்கிய தாதிக்கும் இந்த நோய் தொற்றியுள்ளதாக, ஜேர்மனி கூறுகிறது. அவர் தற்போது உடல்நிலை தேறிவருகின்றார்.
 

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள மடல்

Wanni_War_Bombed_Safe-Zone01.05.2009

மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ஷ,
ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு – 03

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,

வன்னியில் எஞ்சியுள்ள இடம் பெயர்ந்தோரை காப்பாற்றுங்கள்

இலங்கை ஓர் தேசமாக தனது நாணயத்தைக் இழக்காது காப்பாற்றக் கூடிய வகையில் தங்களில் உடன் நடவடிக்கைக்காக நான் கவலையடையும் சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறேன். நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தங்கள் நடவடிக்கைகளுக்கு எனது உயிருக்கு பெரும் அச்சுறுததல் இருந்தும் கூட எனது முழு ஒத்துழைப்பை தங்களுக்கு நல்கி தங்களை தப்பாக என்றும் நான் வழி நடத்தவில்லை. நான் ஆதாரமற்று கேள்விப்படுவனவற்றையோ, அல்லது பிறர் கூறும் அனைத்தையுமோ முற்று முழுதாக நம்புகிறவன் அல்ல.

இன்றும் வன்னியில் அகப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்துக்கு மேல் இருக்கின்றனர் என்று நம்பகமான செய்தி கிடைத்திருக்கின்ற போதும் நிச்சயமாக ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றனர் என்பதை நான் நம்புகின்றேன். முன்பு ஒரு சந்தர்பத்தில் எனது எண்ணிக்கை சரியானதென நிரூபணமானதை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். துரதிஷ்டவசமாக விமானத்தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் கடந்த மூன்று நாட்கள் தொடர்ந்து செல், ஆட்டிலறி தாக்குதல்கள் தொடர்கின்றன. அவற்றை உடன் நிறுத்தி அப்பாவி பொது மக்களை காப்பாற்றுங்கள்.

நான் சுட்டிக்காட்ட விரும்பும் ஒரு விடயம் யாதெனில் யுத்த நடவடிக்கைகள் பல இடம்பெயர்ந்தோரை கடும் பாதிப்புக்குள்ளாக்கும் அதேவேளையில் நலன்புரி நிலையங்களுக்கு தப்பி வந்துள்ளவர்களை பெரும் பயத்துக்கும் பீதிக்கும் உள்ளாக்குவதோடு அவர்களின் உறவுகள் பலர் இன்னும் வன்னியில் இருப்பதால் அவர்களுக்கு பெரும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தும். ஓவ்வொரு உயிரும் பெறுமதிமிக்கதால் அப்பாவி மக்களின் உயிர்களை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாக்க வேண்டிய பாரிய கடமை தங்களுக்குண்டு. நான் முன்பு தங்களுக்கு எழுதியது போல சில விடயங்கள் வெளியுலகுக்கு தெரியவரும் போது நம் நாடு சர்வதேச சமூகத்தால் பெரும் கண்டனத்துக்குள்ளாகும்.

வன்னியில் பெரும் உணவுத் தட்டுப்பாடு மக்கள் பட்டினியால் வாடுமளவுக்கு ஏற்பட்டுள்ளது. சித்திரை மாதம் 2ம் திகதி 1100 மெற்றிக் தொன் உணவு அங்கே அனுப்பப்பட்டதன் பின் 28ம், 29ம் திகதிகளில் தினம் 30 மெற்றிக் தொன் உணவே சென்றுள்ளது. இந்த இரு நாட்களிலும் அவர்களுக்கு தினம் கிடைத்துள்ள சீனி 1000 கிலோ கிறாம் மட்டுமே. ஆகவே தயது செய்து உடன் தேவைப்படும் உணவு, மருந்து வகைகளை அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இக் கடைசி நேரத்திலும் கூட நான் கூறும் ஆலோசனை தங்களுக்கு ஏற்புடையதாயின் அதை அமுல்ப்படுத்த முயற்சியுங்கள். எனது ஆலோசனை யாதெனில் அரசுக்கு ஏற்புடையதான ஓர் சர்வதேச அமைப்பை வன்னிக்கு அனுப்பி மக்களை விடுவிக்குமாறும், ஆயுதங்களுடன் சரணடைபவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பதாகவும் கூறி அனுப்பி வையுங்கள். இதற்குத் தேவையான இருவார காலக்கெடுவும் கொடுக்கலாம். பொது மக்களை வெளியில் கொண்டுவர அத்தகையதோர் ஏற்பாடு செய்யத் தவறின் முடிவில் நாட்டின் நற்பெயரை நாசம் செய்யும் ஓர் பாரிய அனர்த்தம் தேசிய ரீதியில் ஏற்படவும் கூடும்

நன்றி

வீ. ஆனந்தசங்கரி
தலைவர் – த.வி.கூ

மோதல் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

sri-lanka-flags.jpgவிடுவிக் கப்படாத பகுதியில் எஞ்சியிருக்கும் மக்களை வெளியேறுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டு கோளடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வான் மார்க்கமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. “புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக நீங்கள் தொடர்ச்சியான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், நீங்கள் மனிதக் கேடயங்களாகவும் வைக்கப்பட்டுள்ளீர்கள். எனவே, உங்கள் பாதுகாப்புக்காக அங்கிருந்து வெளியேறி வாருங்கள்” என ஜனாதிபதி விடுத்தவேண்டுகோள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வான் மார்க்கமாக வீசப்பட்டுள்ளன.

இதுவரை பெருமளவான மக்கள் அரச கட்டுப்பாட்டிற்கு வருகை

mahinda-samarasinha.jpgபுலிகளின் பிடியில் இருந்து இதுவரை 1,88,535 மக்கள் அரச கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் வழித்துணையுடன் 12,393 பொதுமக்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு பிரமுகர்களின் விஜயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் மாநாடு நேற்று (30.04.2009) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்குள்ள மக்களின் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது. இடம் பெயாந்து வந்தமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு மேலும் பல முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரண்

ltte_.jpgபுலி உறுப்பினர்கள் 58 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. 14 வயது தொடக்கம் 18 வயதையுடைய 38 ஆண்களும், 20 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் படையினரால் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இவர்களை அம்பேபுஸ்ஸவில் உள்ள சீர்திருத்த நிலையத்திற்கு அனுப்பிவைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்போம்: வைகோ

vaiko00001.jpgதேர்தலுக்குப் பிறகு மத்தியில் புதிய ஆட்சி ஏற்பட்டவுடன், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார். சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனுக்கு ஆதரவாக பேசிய வைகோ,

இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்கு காரணம் இந்திய அரசு தான். உலகமே போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி வரும் வேளையில், சோனியாவும், மன்மோகன் சிங்கும் மௌனம் காக்கின்றனர். மேலும், முதல்வர் கருணாநிதியோ அண்ணா சமாதியில் படுத்துக்கொண்டு உண்ணாவிரத நாடகமாடுகிறார்.

அடுத்த மாதம் மத்தியில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, ஜெயலலிதா சொன்னது போல் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்றார்.

ஈழத்தமிழர்களுக்காக ரூ.10 ஆயிரம் கோடி மானியம்: ஜெ. உறுதி

j-j-j.jpgஇடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார். மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து கீழவீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவில் தமிழகம் புதிய வரலாறு படைக்கும். தமிழகத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். இந்தியா அமைதிப்பூங்காவாக மாறி பொருளாதார வளர்ச்சி பெறும்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வழி செய்யப்படும். தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு ரூ. 10 ஆயிரம் கோடி மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பை தங்கள் வசம் ஒப்படைக்க ஜே.வி.பி. கோரிக்கை

sri-lankan-jvp.jpgஇடம் பெயர்ந்துள்ள மக்களின் உளப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருப்பதால் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை தங்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கான பலமும் அனுபவமும் தங்களிடம் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரது உறுப்பினர்களையும் முற்றாக அழிக்கும் வரை யுத்தத்தில் வெற்றிபெற்றுவிட்டதாக அரசு கூறமுடியாதெனவும் தெரிவித்துள்ள ஜே.வி.பி., அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை அரசு தனது அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாதெனவும் வலியுறுத்தியுள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஜே.வி.பி. நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் பாராளுமன்ற குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது;

அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பெருமளவான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ள நிலையில் அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புலிகளிடமிருந்து அம்மக்களை எமது இராணுவத்தினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், இம்மக்களின் தேவைகளை தொடர்ந்து அவர்களால் செய்வது சிரமமென்ற முறையில் அரசாங்கம் அம்மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி வருகின்றது. இதில் சிக்கலையும் அது எதிர்கொண்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் கண்ணுக்கெட்டிய அல்லது தெரிகின்ற பிரச்சினைகளை தேவைகளை நிறைவு செய்தால் போதாது. அவர்களது உளப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். இந்நிலையில் இதனை செய்வதற்கு சிறந்த முகாமைத்துவம் கொண்ட கட்டமைப்புத் தேவை. அதனை எமது செந்தாரகை நிவாரண இயக்கம் செய்யத் தயாராகவுள்ளது.

எனவே, இம்முகாம்களை அவ்வியக்கத்திடம் கையளிக்குமாறு நாம் கேட்கின்றோம். யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அரசு கூறுகின்றது. உண்மையில் புலிகளின் தலைவரையும் அவர்களது உறுப்பினர்கள் அனைவரையும் அழிப்பதன் மூலமே யுத்த வெற்றியை ஈட்ட முடியுமே தவிர நிலப்பரப்பை விடுவிப்பதனால் வெற்றி வந்துவிடாது. இவ்வாறு தலைவரையும் உறுப்பினர்களையும் அழியாதுவிட்டால் அவர்கள் கெரில்லா வழிமுறைக்கு சென்றுவிடுவர்.

அரசாங்கம் மக்களுக்கு, சர்வதேச அழுத்தத்துக்கு கட்டுப்பட வில்லையென காட்ட சுவிடன் தூதுவரின் விஜயத்தை தடுத்ததாக காண்பித்தது. சுவிடனிலுள்ள இலங்கை தூதர், அவர் இதற்காக விஸா விண்ணப்பிக்கவில்லையென தெரிவிக்கின்ற அதேநேரத்தில் ஒரே நேரத்தில் பல தூதர்களை கவனிப்பது சிரமம், எனவே, வேறு ஒரு தடவை சந்தர்ப்பமளிப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இதனை பத்திரிகைகள் தெரிவித்தன. தாம் தேசப்பற்றாளர்களென காட்ட முற்படுகின்றனர்.  யுத்தத்தின் போது கனரக ஆயுதம் பாவிப்பதா இல்லையா என்பதை படை நடவடிக்கையை மேற்கொள்பவரான தளபதியே தீர்மானிப்பார். இந்நிலையில் கனரக ஆயுதம் பாவிக்கப்பட மாட்டாதென அரசு கூறுகின்றது. இவ்வாறு செல்வதற்கு சர்வதேச அழுத்தமே காரணம்.