புலி உறுப்பினர்கள் 58 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளதாக பாதுகாப்பு ஊடக மத்தியநிலையம் தெரிவித்துள்ளது. 14 வயது தொடக்கம் 18 வயதையுடைய 38 ஆண்களும், 20 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் படையினரால் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இவர்களை அம்பேபுஸ்ஸவில் உள்ள சீர்திருத்த நிலையத்திற்கு அனுப்பிவைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.